Thursday, February 26, 2009

ஓவியத்தின் ஒரு சொல்!!!





கொஞ்சம் பொறு கிளியே,
பூத்து குலுங்கும் பூமி
புதிதாய் புதுக்கவிதை புனைந்திருக்கிறது.

காற்று காகிதத்தில்
மழைத்துளி மையில்
புல்லின் நுனியை;
புது பேனாவாக்கி...

அழகு என்னும் அற்புத தலைப்பிட்டு
அகிலம் எனும் கவிதை படைத்திருக்கிறது.

கனத்தில் பார்க்கையில்
ஓர்
கற்பனைக்கெட்டா ஓவியம்;

களிப்புற பார்க்கையில்
ஓர்
கண்காணா காவியம்;

நெஞ்செல்லாம் பூரிப்பில்;
செல்களெல்லாம் சிலிர்ப்பில்;
சிறகைப் பெற்ற முதற் மனிதனாய்...

விண்ணில் பறந்தேன்!!
இயற்கை தாயே! உன் மடியில் நிறைந்தேன்!!!

Monday, February 23, 2009

ஓவியம்- காந்தியடிகள்


என்னால் முடிந்த அளவு செய்துள்ளேன்...
பாத்துட்டு கருத்தினை சொல்லிட்டு போங்க...!!!


Sunday, February 22, 2009

பேனா

அன்புள்ள விமலா,
என்று நீ என்னை சந்தித்தாயோ அன்று முதல் இன்று வரை நான்
உன்னை மனமார நேசிக்கத்தான் செய்கிறேன்.
ஆனால், அன்று நீ என்னை அந்த பெண்ணோடு தொடர்ப்படுத்தி
சந்தேகித்தப் போது கூட எனக்கு துளியும் வருத்தம் இல்லை.
அன்று சமாதானம் செய்ய வந்த என்னை உன் வார்த்தைகள் வதைத்துவிட்டன.
இனியும் உனக்காக வாழ்க்கையை செலவிடவேண்டுமா ? என்ற எண்ணம் என் மனதில் ஓடுகிறது.
இது சரி வருமா என யோசித்து நம் இருவருக்கும் வலிக்காத ஒரு முடிவைத் தருகிறேன்.
'நாம் பிரிந்துவிடலாம்'. இதை விட சிறப்பான வழி எனக்கு தெரியவில்லை.
இதுவே நான் உனக்கு எழுதும் கடைசி கடிதம். ..

-நன்றி- மகேஷ்.

************************************************************************************
மகேஷ் மெல்ல எழுந்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் கடிதத்தை மடித்து அவள் ஹாஸ்டல் முகவரியை
எழுத எத்தனிக்கையில். பேனா எழுத மறுத்தது.
"நல்லாத்தானே எழுதிச்சு... என்ன ஆச்சு...?"
மீண்டும் முயன்றான்... எழுதவில்லை...

"ச்சே".. கோபத்துடன் பேனாவை விட்டெறிந்தான்...
எங்கே தேடியும் வேறு பேனா கிடைக்கவில்லை...

"ஒ... இங்க இருக்கானு பார்ப்போம்.. " அலமாரியில் முதல் அடுக்கில் துழாவினான்...
ஒரு பேனா.. கிடைத்தது.....

உடனே முகவரியை எழுதி முடித்தான்..

தபால் பெட்டி பக்கத்தில் தான் இருந்தது...
நாலு எட்டில்.. அதை அடைந்தான்...
கடிதத்தை.. உள்ளே நுழைத்தான்...
சத்தமில்லாமல் உள்ளே விழுந்தது...

மனபாரம் குறையும் என எதிர்ப்பார்த்தான்..
ஆனால்.. அது இன்னும் அதிகமானதே தவிர.. குறையவில்லை..
சரியாக தூங்கவோ.. சாப்பிடவோ.. முடியவில்லை...

"காதலில் விழுந்த முதல் நாள் பட்ட பாடுகளை இப்போதும் படுகிறேன்....
..... ம்... சரியாகிவிடும்... "
என்று சமாதானம் செய்துகொண்டான்...

***********************************************************************************

இரண்டாவ்து நாள்...
அவனின்.. செல்போன்.. சினுங்கியது...
"புதிய நம்பரா இருக்கே... யாரா இருக்கும்...?"
"ஹலோ"
எதிர்முனையில்..
"சார்.. நீங்க மகேஷ் தானே.. ?" பெண்குரல்...
"ஆமாம்.. நீங்க ?"
" இந்திரா வுமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்து பேசறேன்..
விமலாவோட தோழி நான்..."
"ம்... சொல்லுங்க.."
"நேத்து விமலா பாய்சன் சாப்பிட்டுடாங்க..." குரல் தளுதளுத்தது...

"எ... என்ன.. நிஜமாவா..?.." அப்படியெ அதிர்ந்துபோனான்...
"ஆமாம் சார்.. இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.."
"சீரியஸ் கண்டிஷன் தான்.. நீங்க வரமுடியுமா..?..ப்ளீஸ்"

"எந்த ஹாஸ்பிடல் மேடம்.. ?"

"வி.கே. தாஸ்.... ஐ.சி.யூ.ல.."

"தோ.. வரேன்.."
உடனே சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினான்...
அந்த புதிய பேனா.. கீழே விழுந்தது...
எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்..
பைக்.. சீறியது...

**********************************************************************************

"ஐ.சி.யூ.. விமலான்னு ஒரு பேஷண்ட்.. "

"நேரா போய்.. லெஃப்ட் சைட் சார்.. "

"தேங்கஸ்"

ஓட்டமும் நடையுமாக விரைந்தான்....
ஐ.சி.யூ.. தெரிந்தது..

"மகேஷ்.. ?" போனில் பேசியவள்...
"ஹான்.. நான்தான்"

"சாரி... அவ.. நோ மோர்..:" சொல்லும்போதே வெடித்து அழுதாள்...
இவன் கண்கள் பனித்தது...
"நா அவள பாக்கனும்.."
"சாரி.. மிஸ்டர்.. இது டைம் இல்ல" ஒரு பெண் டாக்டர் கையமர்த்தினார்...
மெல்ல அமர்ந்தான்..
குனியும்போது..சட்டையில் அவன் பேனா தென்பட்டது...
.. வெளியே எடுத்தான்..
"இந்த பேனா இருக்கும்வரைக்கும் நம் காதலும் இருக்கும்.. நானும் இருப்பேன் உனக்காக"
"இது உன் காதலியின் முதல் பரிசு"ஆடிப்போனான்..

"அழுது முடிச்சாச்சா? போய் விமலாவ எழுப்பி கூட்டிட்டு வாங்க... "
"என்ன ஒளர்றீங்க... அவ இறந்துட்டான்னு சொல்றேன்... நம்பாம ஒளராதீங்க.."
"வேணும்-னா உள்ள போய் பாருங்க... "

"ம்.... கண்டிப்பா..."

*********************************************************************************

மூன்று.. நாட்கள் கழித்து...




"எப்டிடா.. எப்படி தெரியும் உனக்கு...
செ.. போடா.. எவ்ளோ யோசிச்சோம் தெரியுமா..!!!"

"தோ.. இந்த பேனா சொல்லிச்சு..."

"இன்னும் இருக்கா உன்கிட்ட.. வாவ்.."

"நீ இருக்கற வரைக்கும் இதுவும் இருக்கும்"


"போதும் பேசுனது..."

Friday, February 20, 2009

எங்கே சென்றாய் நீ.....?


எங்கே சென்றாய் நீ...
என்னை விட்டுவிட்டு...
என்று எங்கெங்கோ தேடினேன்..
மலையின் பாதங்களில்;
கடலின் ஆழங்களில்;
மழையின் துளிகளில்;
"இங்கே தான் இருக்கிறேன்!!" என்றாய்..

"என் இதயத்தில் நீ.."
...