Wednesday, July 6, 2011

காதலிக்க நேரமில்லை...!



நீ தொட்டுசென்ற பிறகுதான்
துவங்குகிறது என் நாள்..

நீ சுவைத்த மிச்சமே
தேனீராய் கிடைக்கிற்து தினமும்..

நீ உப்பை சரிப்பார்த்தபின்தான் 
நான் சாப்பிடவே அமர்கிறேன்..

தண்ணீர் பாட்டிலின் வாயில்
உந்தன் உதடுகளின் தடம் தினந்தோறும்..

நீ மிச்சம்வைத்த உணவை
மிச்சமில்லாமல் முடிக்கிறேன் மதியம்..

நீ ஓட்டிப்பார்த்ததால் மென்மைகண்டன
என் பைக்கின் கைப்பிடிகள்..

நீ அனுப்பியதாய் சொல்லிதான்
தொட்டுபோகிறது மாலைக்காற்று..

நீ போட்ட கோலமதனால்
தள்ளியே நிறுத்திகிறேன் வாகனத்தை..

வந்தவனை அள்ளிகொண்டு
வாஞ்சையாய் காபி தர..

உனக்கு என்று கேட்டதும்
உனக்குதான் முதலில் என்கிறாய்..

நான் என்னடி செய்தேன் 
என்றே உன்னை கேட்க..

நீ புத்தன் நான் யசோதரை
உன் சேவை என் தேவை..
உன் காதல் என் கூலி..
என்றாயே பார்க்கலாம்..

இப்படி நீயே எங்கும்
என்னை சூழ
காதலின் கடலின் 
நான் மூழ்கியே வாழ


இனி காதலிக்க தனியாய் 
ஏது நேரம்..

காதலிக்கே மொத்தமாய் வாழும் போது..!!