Saturday, November 19, 2011

நாமும், நமது வாழ்க்கையும்..!!








வாழ்க்கை..சிலர் என்னிடம் என்னடா வாழ்க்கை இது ? என்கிறார்கள்.
சிலர் என்னவொரு வாழ்க்கை அடடா!! என்கிறார்கள்.

இப்போது இவர்களில் யாரை நான் நம்புவது.? வாழ்க்கை கொடுமையும்
கசப்புமானதா? அல்லது இனிமையும் நிறைவுமானாதா? இப்படி
வாழ்க்கை எதன் பக்கம் என்று எண்ணிகொண்டிருந்த போது..

பட்டென மனதில் பட்டது ஒரு பொறி..வாழ்க்கை வெறுமனே வாழ்க்கை
மட்டுமே.. நம் மனத்தை கொண்டு அதை நல்லது என்றும் புகழ்ந்து பாடலாம்
..மோசம்..சுத்த மோசம் என்று ஏசவும் செய்யலாம்.

ஆனால்..போற்றுவார் போற்றட்டும்..தூற்றுவார் தூற்றட்டும் என்று
வாழ்க்கை அதன் வழியை பார்த்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமென்றால்.. பொதுவாக நம்மில் பலர்
கல்லை இடித்துவிட்டு, ”என் காலில் கல் இடித்துவிட்டது” என்று சொல்லும் ஆட்கள் தான்.
வெகு வெகு சிலரால் மட்டும்.. “தெரியாமல் நானே போய் இடித்துகொண்டேன்” என்று
நிதானித்து சொல்ல முடியும்.

ஆனால் கல் உங்களை இடிப்பதற்காகத்தான் அங்கே இருந்தாதா?
இல்லை கல்லில் இடிப்படுவதுதான்
உங்கள் நோக்கமா? இரண்டுமே இல்லை.
கல்லில் கால் மோதி கொண்டு வலியெடுக்கிறது. அதற்கு நம் மனதின்
விளக்கமே இடித்துவிட்டது என்பதும்..இடித்துகொண்டேன் என்பதும்.

நான் சொல்லவருவது மூன்றாவது வழி. வெறுமனே கால் கல்லில் இடித்துவிட்டது. அவ்வளவே..!!
Fact. Thats all. அதை நான் இடித்துகொண்டேன் என்றாலும், அது இடித்துவிட்டது என்றாலும்..
கல்லில் கால் மோதிகொண்டது என்பது மட்டுமே Fact.

வாழ்க்கையும் அப்படித்தான்.. உங்களை குஷிப்படுத்தவும் அது இங்கே இல்லை..உங்களை அழவைக்கவும்
அது இங்கே இல்லை. நீங்களே குஷியாகிகொள்கிறீர்கள்..நீங்களே வருத்தப்படவும் செய்கிறீர்கள்..மற்றபடி..
ரங்கராஜனுக்கோ, ஒபாமாவுக்கோ, பில்கேட்ஸுக்கோ, என் தெருவோர பிச்சைக்காரருக்கோ அது எந்த வகையிலும்
Commit ஆகவில்லை..ஆகப்போவதும் இல்லை.

நாளை காலை மனித இனமே இல்லாமல் போய்விட்டாலும்.. சூரியன் உதிக்கத்தான் போகிறது, நதிகள் ஓடத்தான்
போகிறது..கடலலைகள் கரைத்தொட்டு விளையாடத்தான் போகின்றன..நாம் ஒரு (.) புள்ளி அளவுக்குக்கூட இந்த பூமிக்கோ,
சூரியக்குடும்பத்திற்கோ முக்கியமானவர்கள் அல்ல. நாமும் ஒரு Accidental உயிரனங்கள் தான்.

அதனால், வாழ்க்கை அப்படி, வாழ்க்கை இப்படி என்று ஓவராக அலட்டிகொள்ளாமல், வந்த வாழ்க்கை நிறைவாய், அன்பாய்,இந்த
கட்டுரையை படித்துமுடிக்கும்வரை + அதற்கு மேலும் நம்மை உயிரோடு வைத்திருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லி நலமாய் வாழுங்கள்..!!