குழந்தை தொழில்!! :

இந்தா கொழந்தெ நேரா பாரு...
ஆங்..,,இப்போ லேசா தலைய சாயி..
அட..எரும மாடே.. எதுக்கு இப்போ அதை கீழே போட்டே..!!
கைத்தவறி விழுந்திடுச்சு சாமி... அழுதாள் பானு.
பளாரென அறைந்தார் முதுகில்..மீண்டும் ஒரு அடி.
செங்கல் சட்டியை மீண்டும் தலையில் ஏற்றினார்.
ம்ம்.. இப்போ ஒழுங்கா பிடி..
நேரா பாரு..
நட..
ம்ம்.. சரி...போதும்..போய் காச வாங்கிக்க..
கிளம்பினார் ராமு.
குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பற்றிய விளம்பரத்திற்கு
படங்கள் தயார் செய்துவிட்டார்.
பானு மதிய உணவுக்கு காசு சேர்த்துவிட்டாள்.
-----------------------
நேரம் சரியில்லை!! :

அப்பா..ப்ளீஸ் பா..
என்னடா குமார்?
அப்பா..வாங்கி குடுங்கப்பா..
ம்ம்..பார்க்கலாம்..
பா..ப்ளீஸ்ப்பா.. இன்னிக்கே வேணும்..
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் இருக்கு.
எனக்கும் ஒண்ணு வேணும்பா..
சரிடா.. அதான் வாங்கிதரேன்னு சொல்றேன்ல..
இதுக்கு மேல பேசினா அடிதான் விழும்..
நீ அடிச்சாலும் பரவால்ல..வாங்கி தரேன்னு சொன்னாதான்
விடுவேன்..
ஏய்..சொல்லிட்டே இருக்கேன்..
குமார் , அம்மாஆஆஆ....!!
குமாரை லேசாக தள்ள ..தள்ளிய வேகத்தில் அவன் கீழே படிகளில் சரிந்து விழுகிறான்.
ச்சை..இதெல்லாம் ஒரு புள்ளை.. ஒரே நச்சரிப்பு..
நீயும் உன் புள்ளையும்...
அடிப்பட்ட மகனை கவனிக்காமல் ஆபிஸ் கிளம்பி போகிறார்.
அவரை கண்ணீரோடு முறைக்கிறாள் சிவகாமி.
...
ஆபீஸில் வேலையே ஓடவில்லை.
எதோ பெரிய தவறு செய்ததாய் உணர்கிறார்.
..
மாலை..
டேய்.. குமார்.. இங்க பாரு.
அப்பா என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..
நீ கேட்ட ரிஸ்ட் வாச்..
..எங்கடா இருக்க..குமார்..குமார்..
குரல் கேட்டு வெளியே சிவகாமி வர..
ஏய்..குமார் எங்கடி?
உள்ளதான் இருக்கான் போங்க..
புன்னகையோடு உள்ளே போகிறார்..
குமார்..இந்தா நீ கேட்ட ரிஸ்ட் வாட்ச்..
அப்படியே அதிர்ந்து போனார்...கண் கலங்கினார்.
குமாரின் இடது கையில் பெரிய கட்டு.
வலது கையில் மணிக்கட்டு வரை சிராய்ப்புகள்.
(பி.கு).
குழந்தைகள் நம் நாட்டின் வீட்டின் எதிர்கால தூண்கள்.
நாம் இந்த பூமிக்கு வந்தோம் என்பதற்கு அவர்கள் தான் சாட்சி.
உங்களால் முடிந்தால் ஒரு குழந்தைகான கல்வி செலவை ஏற்றுகொள்ளுங்கள்.
வலிமை இல்லாதவர்களிடமும், குழந்தைகளிடமும் தன் வலிமையை கோபத்தை காட்டுபவன் மிருகமாக கருதப்படுவான்- திருக்குறள்.