Saturday, December 26, 2009

பொம்மை கதை

http://www.carwale.com/images/RoadTests/ChevroletSpark%5CChevrolet%20Spark%20Front%20Dynamic.jpg


என்னங்க..நிஜமாத்தான் சொல்றீங்களா?
லோன் சேங்ஷன் ஆகிடுச்சா?
ஓ..காட்..என்னால நினைச்சுகூட பார்க்க
முடியல..

எப்போ பணம் வருமாம்..?
......
மனைவியின் துள்ளலில் எனக்கு எரிச்சலாய் இருந்தாலும்..
குடும்ப கவுரவம் என்பதற்காக இதை செய்யவேண்டியதாய் போனது.
அதுதான் கார் வாங்குவது.

சுசிக்கு ஏனோ..எதிர்வீட்டுகாரர் காரின் மீது அப்படி ஒரு கண்.
அதே போல நிறம் மட்டும் வேறு நிறத்தில் ஒரு கார் வாங்கியே ஆக வேண்டும்
என்று என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

இது சகஜம் என்றுதான் இருந்தேன்..ஆனால் என்னையும் குழந்தைகளையும்
பட்டினி போடும் அளவுக்கு அவளுக்கு வெறியேறிவிட்டது.

நண்பனிடம் சொன்னேன்.
போனா போகுது..வாங்கிடேன் என்று தனக்கு தெரிந்த
கார் டீலரை அணுக சொன்னான்.

இப்போது பேங்கில் லோன் போட்டு, பணம் வர இருக்கிறது.
......
ஏங்க..உங்களைத்தான் கேக்குறேன்..எப்போ பணம் வருமாம்?

இன்னும் ரெண்டு நாளில் வந்துடும் சுசி.

..ஓ..நல்லது..அதுக்குள்ள நாம என்ன கார் வாங்குறதுன்னு முடிவு பண்ணிடலாம்..

ம்ம்..சரி..

வார்த்தைகள் முடிப்பதற்குள் வந்து விழுந்தது முத்தம்.


10 நாட்கள் கழித்து..

நன்றி சார்..வரோம்..
தன் புதிய செவ்ரோலெட் ஸ்பார்க்கில் ஏறி அமர்ந்தபோது..
சங்கர் மகிழத்தான் செய்தான்.

சுசிக்கும், குமார்,அனு மூவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..
வேகம் எடுத்தால் அலறுகிறார்கள்..மிதுவாய் சென்றால் சினுங்கினார்கள்..

இந்தா..நீயாச்சு காராச்சு..என்று சுசி கையில் காரை கொடுத்துவிட்டால் என்ன என்றுகூட
இருந்தது..

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

மாலை கோவிலுக்கு சென்று திரும்பி வந்தோம்.

மகள் அனு அழும் சத்தம் கேட்டது..
”என்னடா ஆச்சு..”என்று எழுந்து ஓடினேன்.

”ம்ம்..வேணும்..அதுதான் வேணும்..” என்று சுசியுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள் அனு.

”ஹேய்..அனு என்ன இது அடம் பிடிச்சிகிட்டு..என்ன வேணும் உனக்கு இப்போ? ”

எங்க க்ளாஸ் பொண்ணு ஒருத்தி ஒரு கார் பொம்மை வெச்சிருக்கா..

அதே மாதிரி எனக்கும் வேணும்பா..வாங்கி தர சொல்லுங்கப்பா..

கெஞ்சினாள் அனு.

”சுசி..பொம்மைதானே..வாங்கிகுடு
த்திருக்கலாம்ல..”என்றேன் மனைவியிடம்.

”ஏங்க..நீங்களும் புரியாம பேசுறீங்க..அது விலை 1200 ரூபாய்.

அதில்லாம அதே கலர்ல இருக்க கூடாதாம் வேற கலர்-ல வேணுமாம்.

இந்த வயசில இப்படி அடம்பிடிச்சா எதிர்காலத்துல ரொம்ப சிரமப்படுவா..!!

நீங்கதான் கண்டிக்கறதே இல்லை..அதான் நான் கண்டிச்சேன்.” என்றாள்..

உண்மைதான்..நான் அவளை மட்டுமல்ல..உன்னையும் கண்டிக்க தவறி இருக்கிறேன்.

அன்று இரவு டைரியில் எழுதினேன்:

வாழ்க்கை என்பது எப்போதும் பொம்மை விளையாட்டுதான்.
சிறு வயதில் பொம்மைகள் நம் கைக்குள் அடங்கி இருந்தது.
பெரியவர் ஆனதும் அவை நம்மை கைக்குள் அடக்கிவிடுகிறது.
சில பொம்மைகள் உயிரற்றவை என் புதிய காரை போல,
சில பொம்மைகள் உயிருள்ளவை..
என் சுசியை போல!!!

Thursday, December 17, 2009

அறிவு [திருக்குறள் கதைகள்- 1]

வரேன் சார்...!!

ஆங்..வாங்க..!!

பணத்தை கட்டிவிட்டு நடந்தார் ராம்சுந்தர்.
இவ்வளவு பெரிய பெயர்பெற்ற பள்ளியில் தன் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிறைவோடு.

இவர் மகன் கோபால்.இதே பள்ளியில் பளஸ் ஒன் படிக்கிறான்.

பள்ளி கேட் வழியே மாணவிகள் வந்த வண்ணம் இருக்க..

அந்த பக்கம் நின்றிருந்த சில மாணவர்கள் “ஃபிகர்..ஃபிகர் “என்று பேசிகொண்டு இருப்பதை கவனித்தார்.

அவர்களை கண்டிப்பதற்காக அருகில் சென்ற அவருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் அவன் மகனும் இருந்தான். கடும் கோபம் .

அவர் மகனை வெளியே இழுத்து வந்து கன்னங்களில் அறை விட்டார்.

அரண்டு போனான் கோபால். மற்ற மாணவர்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர்.

“சார் ஏன் சார் கோபாலை அடிக்கறீங்க..என்ன தப்பு பண்ணிட்டான் ?” என்றான் ஒரு மாணவன்.

“ஏண்டா..படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா..போற வர பொண்ணுங்களை ஃபிகர்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா?..
இதுல எப்படிடா நீயும் சேர்ந்த..”என்று கோபாலை முறைத்தார்.

“சார் ..இங்க பாருங்க..”
என்று தன் க்ராப் நோட்டை காட்டினான் ஒரு மாணவன்.

”இதுல ஒரு சில படங்கள், அதாவது..ஃபிகர்ஸ் சரியா வரலைன்னு பேசிகிட்டு இருந்தோம்..
நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு அவனை அடிச்சிட்டீங்க.”.என்றான் .

மகனை அடித்த வேதனையும்..அவனை பொது இடத்தில் அவமானபடுத்தியதையும் நினைத்து வருந்தியபடி கிளம்பினார் ராம்சுந்தர்.

குறள் : எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

Wednesday, December 9, 2009

யோசித்தேன்..எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ-3

பேருந்து

http://varnajaalam.files.wordpress.com/2007/07/patient_bus.jpg

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

http://www.indolinks.com/websights/diwali/crackers1.jpg

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************

குடிநீர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs137ZygRRf4ILwcQMUu3odywCl4M0D4NuwR5DXqaIBGwepqx45anp6TffibseAPv3Y6OkHdY8tJeKJBxgrTWdmN86iRblzInSFlBAELKfdl0p4ROfHDinetcznI-KK0QbNPpYUUSJqFw/s320/Chennai_water.jpg

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************

பணம்

http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************

கண்டுபிடிப்பு

http://www.northcoastjournal.com/media/issues/062509/06-25-09-NCJ-Water-on-Moon.jpg

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************

தாய்பால்

http://www.stockphotopro.com/photo-thumbs-2/AWT2TY.jpg

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************

மகிழ்ச்சி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc9rcu85ZiEZRYir6Nb5sN98YP16aVrDluqYAtr_RUvAl_wd6PflLcAPg5mj7arazBPkDlX1Lb8p4Go28TROGYzQgfevo6D-05gtyIfhBMhifuCWpMfVCCwkLK8Ycpojvm2JbpiOBH_eE/s220/jaipurfoot-zambia1.jpg

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************

முத்துசரம்


http://www.thepearloutlet.com/buypearls_images/South_Sea_pearl_necklace.jpg
அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************

தமிழரசி

http://4.bp.blogspot.com/_QyOswGA6pnY/Stqv6Twyn_I/AAAAAAAAAzk/HR6Fx2IU4eY/S220/DETA-127.jpg

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!

Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!

Monday, December 7, 2009

கண்ணாமூச்சி..!!



அம்மா..ஒரே ஒரு தடவை மா..ப்ளீஸ் மா!!..

என்னடா இப்படி நச்சு பண்ற..என்ன வேணும் உனக்கு இப்போ?

கண்ணாமூச்சி ஆடணும்..மா..

இங்கயா? இந்த குடிசைல கண்ணாமூச்சி ஒண்ணுதான் குறைச்சல்…
சரி.. போ..போய் ஒளிஞ்சிக்கோ..!!

ஹையா ஜாலி..அம்மா திரும்பி நில்லு..

ம்ம்..சரிங்க துரை..!

முருகன் ஓடிப்போய் அருகில் இருந்த மரப்பலகை பின்னால் ஒளிந்துகொண்டான்.

முருகா..எங்கடா போய்ட..அச்சச்சோ..முருகனை காணலையே..டேய் திருட்டுபயலே..எங்கடா போய்ட..பொய்யாக தேடினாள் கண்ணம்மா.

களுக்கென்று வெட்கத்தோடு சிரிப்பு வந்தது முருகனுக்கு..

அம்மா நான் இங்கே இருக்கேன் என்று எழுந்து நின்றான்..

அடப்பாவி..அங்க போய் ஒளிஞ்சிகிட்டியா..கில்லாடிடா நீ..

ஹப்பா..இவனுக்கு எவ்வளவு சந்தோஷம்..இவளுக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிகொண்டது. அணைத்துகொண்டாள் மகனை.

கண்ணம்மா..!! ஓங்கி ஒலித்தது ஒரு ஆண் குரல்.
சிடுசிடுப்பான முகம். கோபப் பார்வை. கலைந்த தலை. கசங்கிய சட்டை.
குடிசைக்குள்ளே நுழைந்தான் ராமசாமி.

வாங்க..!! காப்பி போடவா?

ம்கும்..இந்த ஊருல ஒரு நாய் என்னை மதிக்கிறதில்லை..காப்பி ஒன்னு தான் குறைச்சல்…போட்டு தொல போ..!!

சரிங்க..!..சில நிமிடங்களில் காப்பியோடு வந்தாள்.
அப்பா..ஆசையாய் கட்டிகொள்ள வந்தான் முருகன். கைகளை தட்டி விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.

என்னடா? என்ன வந்துச்சு உன் அப்பனுக்கு..? சொல்லு

பா.. கண்ணாமூச்சி ஆடலாமா பா..?

டேய்..அரைஞ்சி பல்லை எல்லாம் கழட்டிடுவேன்..இந்த குடிசைல கண்ணாமூச்சிதான் குறைச்சல்.. போடா போய் படிக்கிற வேலைய பாரு..

காப்பியோடு வந்த கண்ணம்மா முருகன் முகம் வாடுவதை கவனித்தாள்.

ஏங்க ஆசையா கேக்குறான்..ஒரு தடவ தானே..

ஏய் யாருடி இவ... சரிடா.. போ..போய் ஒளி..

ஹைய்யா..மீண்டும் அதே மரப்பலகை அருகில் ஒளிந்துகொண்டான்.

என்ன கோபமோ.. நேராக அவனை இழுத்து வந்து நடுகூடத்தில் போட்டு ஒரு அறை அறைந்தான்.ராமசாமி.

கலங்கியபடி அம்மாவிடம் சேர்ந்துகொண்டான் முருகன்.

ஏண்டா..அந்த பலகை பக்கம் போகாதேன்னு சொல்லி இருக்கேன்ல..விழுந்தா எவன் செலவுக்கு அழுவறதாம்?

ஸாரிப்பா..இனிமே போகலை..!! கண்ணில் நீர் பெருகியது.
வாசல் அருகில் அமர்ந்துகொண்டான்.

ஏங்க அவனை இப்படி வையறீங்க..பாவம் அவன்..!!

ஏய்..ஏண்டி.. நானே கம்பெனிக்காரனுங்க பண்ண கூத்துல கடுப்பா இருக்கேன்..இவன் வேற..

இவன் கம்பெனி கதையை சொல்ல..அவள் வீட்டு கதைகளை சொல்ல..
சில மணி நேரங்கள் உருண்டது.

ஆமா..எங்க முருகனை காணோம்? முருகா..!!..
தேடினார்கள்..தேடிக்கொண்டே இருந்தார்கள்..

காலையில் தான் கண்டுபிடித்தினர்..

முருகன் அந்த ஊர் கோவில் குளத்து நீரில் ஒளிந்திருப்பதை..அவன் அதில் அதுவாக மிதந்த போது..!!



Sunday, December 6, 2009

என்ன பேரு வேணும்..?

என்னடா இவன் பேரை எல்லாம் விலைக்கு விக்கிறானான்னு நினைச்சுடாதீங்க.. எல்லாம் ஒரு குறும்பு மெயிலால் வந்த வினை..

நீங்களும் இந்த குறும்பை படிங்க..ரசிங்க..!!

Doctor – Vaidyanathan
Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver – Parthasarathy

டிஸ்கி :  பெண்கள் பேரு லிஸ்டில் இல்லாம போச்சேன்னு எனக்கும் வருத்தம்தான்..!!கிகிகி..

Tuesday, December 1, 2009

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

இன்னாங்கடா இது..ஆச்சரியமா கீது.. நெசமாத்தான் சொல்றியா?

இப்படி எனக்குள் கேட்டுகொண்டேன் இன்று முழுதும்..

“ஏம்பா...ஏய்..இது தமிழ்நாடு ஸ்டேட் தானே.. இல்ல ஆஸ்திரேலியா எதும் வந்துட்டேனா? ” என்று புளங்காதிப்படும் விதமாய் சில சம்பவங்கள் நெஞ்சை தொட்டது..

சம்பவம் -1:

தங்கை புதுக்குடித்தனம் போவதால் அவர் பெயரை அட்டையில் இருந்து நீக்க வேண்டும்..அதற்கு இன்று வர சொல்லி இருந்தார்கள். போன சில நிமிடங்களில் அன்பான உபசரிப்போடு!!! சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

அட..!! இது முதல் அதிர்ச்சி.

சம்பவம் -2 :

இன்னைக்கு என்று பார்த்து என் வாகனம் நட்ட நடு சாலையில் மக்கர் பண்ண..அதுவும் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடு ரோட்டில் பக்கி பழிவாங்கிவிட்டது..

இன்னிக்கு ஃபைன் தான்.. 500 வாங்காம மாமா விடமாட்டாரு..அய்யயோ போச்சே.. ஆமா யார் முகத்தில் விழிச்சோம் என்றெல்லாம் என்ன அலைகள் அழுவ..

அருகில் வந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள்.. தம்பி..பாத்து...இப்படி..ஓரமா கொண்டுவாங்க..என்று அவரும் எனக்கு உதவ.. எதற்கும் ஒரு முறை பார்த்துகொள்வோம் அது கடவுளாய் இருந்துதொலைத்துவிட போகிறது என்று உத்த்த்த்து பார்த்தேன்..அவர் பெயர் சண்முக சுந்தரம்.ஆபத்தில் ஓடு வந்து உதவிய இவரது செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திட்டு இல்லை..ஒரு கோபப் பார்வை இல்லை..அட ஒரு ஃபைன் கூட இல்லை ..நீ நீடுழி வாழ்க என போற்றியபடி புறப்பட்டேன்..

சம்பவம் -3:

அடுத்து வீடு வந்து சேர்ந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சம்சாரம் போனா சந்தோஷபடலாம்(ஊருக்கு போனால்).. மின்சாரம் போனால் முடியுமா? உடனே மின்சார வாரிய தொலைப்பேசிக்கு அழைத்தேன்..
அட...!!
அமைதியான தெளிவான குரலில் பதில்கள் வந்தன.. என்னால் இதை நம்ப முடியவில்லை...காலை பதினோரு மணிக்கு கம்ப்ளெயிண்ட் புக் செய்யப்பட்டது...மதியம் 12.30க்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டு விட்டது.

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.



http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

Sunday, November 15, 2009

கண்டதும் வென்றதும்..!!

http://a.espncdn.com/photo/2008/0810/oly_g_kitajima_300.jpg

சிரித்தேன்..

கிண்டலடிக்கிறார்கள்..!

அழுதேன்..

வீணாய் போகிறவன் அழுவான் என்றார்கள்..!

முறைத்தேன்..

லாயக்கு இல்லாதவன் முறைக்கிறான் என்றார்கள்..!

வருந்தினேன்..

வருத்தம் பணம் சேர்க்காது என்றார்கள்..!

அன்பு காட்டினேன்..

பணம் பிடுங்க நெருங்கிவருகிறான் என்றார்கள்..!

எது செய்தாலும் என்ன செய்தாலும்..

அந்த நாலு பேருக்கு நாம் நல்லவரில்லை..

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டால்..

இந்த அகிலத்தில் நமை போல் வல்லவரில்லை..!!

வாழ்க்கை சிறந்தது..

வாழ்தல் அறியது..

வாழ துணிந்துவிட்டால்..

அந்த வானும் சிறியது..!!

Wednesday, November 11, 2009

The Prestige-2006, Christopher Nolan,Christian Bale,Hugh Jackman

கிரிஸ்டோபர் நோலன்.. என்னவோ சாதரண பேர்தான்..என்றாலும் தலைவர் வாழ்கன்னு கோஷம் போடுற அளவுக்கு ரசிகர்கூட்டம் கொண்ட டைரக்டர்.
ஸ்டீவன் ஸ்பீல்ஸ்பெர்க்கிர்கு பிறகு அதிக ரேட்டிங் கட்டிய ரைட்டர், டைரக்டர் இவர்.
இவரோட படங்கள் எப்பவுமே கடைசி நேர திருப்பத்துக்கு பேமஸ்..
அதுவும் அதிகபட்சம் மனதை தொடும் முடிவாகவே அமைப்பதில் கில்லாடி.

சரி புராணம் போதும்..வரலாறுக்கு வருவோம்!
இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர்பா ரகம்.Memento,Batman Begins,Dark Knight,The Prestige.

இப்போ நாம் பார்க்க போகும் படம் the prestige.

http://images.allmoviephoto.com/2006_The_Prestige/2006_the_prestige_045.jpg

1800களில் நடக்கும் கதை இது.
பிரிட்டிஷ் இங்கிலாந்தில் இரண்டு சமகால மேஜிக் நிபுணர்கள்.கிரிஸ்டியன் பேல்(Terminator Salvation hero),ஹீஜ் ஜேக்மேன்(Wolverine-xmen,-2,3,4)
இவங்க ரெண்டு பேரும் முதலில் ஒருத்தருக்கு கீழ வேலை செஞ்சு பிறகு சில காலம் கழிச்சு தனித்தனியே மேடை
ஏறி மக்களை ஏமாற்றியவர்கள்(மேஜிக்கில் மட்டும்).

ஆனால் ஒரே வித்தியாசம்..ஜாக்மேன் தான் பெரிய மெஜிஷியனா வரணும்ங்கற வெறி கொண்டவர். அதற்காக எப்படியும் பலரோட ஸ்டைலை காப்பி அடிக்க
தவறாதவர்.
கிரிஸ்டியன் பேலும் அதே ரகம் ஆனால் கொஞ்சம் டீஸண்டா தானே புதுசா கண்டுபிடிக்க தெரிஞ்சவர்.ரகசியங்களை காப்பாத்த தெரிஞ்ச கில்லாடி.

ஒரு முறை ஜேக்மேனின் ஷோவில் மாறுவேஷத்தில் மேடையில் கலந்துகொள்கிறார்.அப்போது நடக்கும் அசம்பாவிதத்தில் ஜேக்மேனின் மனைவி இறக்கிறார்.The Prestige Wallpaper - 2006
இதற்கு கிரிஸ்டியன் பேல் தான் காரணம் என்று ஜேக்மேன் அவரை பழிவாங்க துடிக்கிறார். தான் தொலைத்த மகிழ்ச்சியை அவனும் தொலைக்க வேண்டும் என்கிற
பழிவெறி மனதில் குடிகொள்கிறது.

இப்போது கதை சூடுபிடிக்கிறது.. ஒரு புதிய ஷோ ஆரம்பிக்கிறார் கிரிஸ்டியன் பேல். அதில் மக்களோடு மக்களாய் கலந்துகொள்ளும் ஜேக்மேன் , கிரிஸ்டியன் பேலை கொல்ல முயற்சிக்க,
கைதவறிப்போக..கிரிஸ்டியன் பேலின் இரண்டு இடது கை விரல்களை மட்டும் பலி வாங்குகிறது.தப்பித்து விடுகிறார் ஜேக்மேன்.

அதற்குள் கிரிஸ்டின் பேல் ஒரு புதிய நிகழ்ச்சியை துவங்குகிறார். அதில் கிரிஸ்டியன் பேல் இந்த மூலையில் இருந்து ஒரு பந்தினை தானே தூக்கி போட்டுவிட்டு ஒரு கதவுக்குள் அறைக்குள் செல்வார். அடுத்த மூலையில் இருக்கும் கதவு வழியாக வெளியேறி பந்தை பிடிக்கிறார்.
மக்கள் ஆச்சரியத்தில் வியந்து போகிறார்கள். இதை ஜேக்மேனும் கவனிக்கிறார்.


சில நாட்கள் கடந்தன. ஒரு புதிய ஷோ ஒன்றை ஏற்பாடு செய்யும் திட்டத்தில் இருக்கும் ஜேக்மேன்.. தன்னை போலவே இருக்கும் இன்னொரு நபரை தேடுகிறார். ஆனால் அந்த நபர் சரியான குடிகாரனாய் இருப்பதால் அவரை விரட்டிவிடுகிறார்.
நிக்கோலஸ் டெஸ்லா என்பவர் மூலம் “ஒரு பொருளை அப்படியே நகல் எடுத்து வேறு இடத்தில் சேர்க்கும்”(Science-fiction)புதிய திட்டம் பற்றி அறிகிறார்.
இவருக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இவருக்குள்ள இருக்கும் சாத்தான் சிரித்தது. இந்த மிஷினை தானே வாங்கிகொள்வதாகவும், அதை தன் ஷோவில் பயன்படுத்தபோவதாகவும் சொல்கிறார் ஜேக்மேன்.

அந்த ஷோவிற்கு பெயர் ”Transported Man" என நாமகரணம் சூட்டுகிறார். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. ஒவ்வொரு ஷோவிலும் ஒரு புதிய ஜேக்மேன் உருவாகிவிடுவார். அவரின் நகல்களாய்.
இதை சமாளிக்க தன்னையே பலியிடுகிறார் ஜேக்மேன்.

இந்த பலியிடலை ஒருநாள் நேரில் பார்த்துவிடும் கிரிஸ்டின் பேல் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அதில் தோற்றுவிட , கிரிஸ்டின் பேல் மீது வழக்கு தொடர்கிறார் ஜேக்மேனின் உதவியாளர் மைக்கேல் கேன்.
இதை சற்றும் எதிர்பாராத கிரிஸ்டின் பேல் கோர்டின் தூக்கு தண்டனைக்கு ஆளாகிறார்.

கிரிஸ்டின் பேலின் குடும்பத்தை கவனித்துகொள்கிறார் அவரின் உதவியாளர்.(இவர்தான் கதையின் மெயின் கேரக்டர்). ஒரு நாள் கிரிஸ்டியன் பேலை சந்திக்க ஒரு அரசாங்க அதிகாரி வர.. அதிர்கிறார் கிரிஸ்டியன் பேல்.
காரணம் அது ஜேக்மேனின் இன்னொரு காப்பி. அதாவது அந்த மிஷின் மூலம் கடைசி ஷோவில் உருவான காப்பி .

உன் குழந்தை உயிருடன் இருக்க வேண்டுமானால் உன் ஷோவின் ரகசியத்தை சொல்லிடுன்னு மிரட்டுகிறார் ஜேக்மேன்.இறுதி நாட்கள் நெருங்கினாலும் தன் ரகசியத்தை வெளியிடாமலே உயிர்விடுகிறார் கிரிஸ்டின் பேல்.
குழந்தையையும் காப்பாற்றிவிடுகிறார் கிரிஸ்டின் பேல். எப்படி...?

படத்தில் காணுங்கள்.



ரொம்ப பெருசா போய்டுச்சா? ஐயம் ஸாரி..!!

..very lengthy..but..very very nice script..by christopher nolan.


எச்சரிக்கை..படத்தில் எதாவது ஒரு கதாப்பாத்திரத்தின் குணம் உங்களை தொற்றிகொள்ளும் வாய்ப்புள்ளது..ஜாக்கிரதை..!

Thursday, November 5, 2009

பிடிக்கும்...ஆனா...பிடிக்காது!!!


எத்தன சொன்னாலும் கேக்குறாங்களா..ஹ்ம்ம்..
நானும் சிக்கிட்டேன் இந்த தொடர்பதிவில்..
அழைத்த முரளிக்குமாருக்கும், கலாம்மா(புதுகைத் தென்றல்)க்கும் நன்றி..ரெடி ..ஸ்டார்ட்..

1. அரசியல் தலைவர்:

பிடித்தவர்: காமராஜர்.

பிடிக்காதவர்: இப்போதைய எந்த _____ யும் பிடிக்காது..!!

2. எழுத்தாளர்:

பிடித்தவர்: சுஜாதா..(even we both have same Real Name,S.Ranga Rajan)

பிடிக்காதவர்: சாரு நிவேதிதா.(கண்ல படாம இருந்துக்க தம்பி, இல்லன்னா நான் பொறுப்பில்ல)

3. கவிஞர்:

பிடித்தவர்: பாரதியார், வைரமுத்து, கண்ணதாசன், தமிழரசி(அட நம்ம எழுத்தோசை எழுதுறவங்க!!)

பிடிக்காதவர்: டப்பாங்குத்து பாடல் எழுதும் இரண்டாம் தர கவிஞர்..?!கள்..

4. இயக்குனர்:

பிடித்தவர்: ஸ்ரீதர், பாலசந்தர், மணிரத்னம், அமீர், சேரன், பாலா, ஷங்கர்.

பிடிக்காதவர்: பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார்(ஆதவனுக்காக மட்டும்)

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம், சூர்யா

பிடிக்காதவர்: விஜய், அஜீத்.(மக்களை ஏமாத்தும் மவராசனுங்க..நல்லா இருங்கடே!)
6. நடிகை:

பிடித்தவர்: அசின், ஆச்சி மனோரம்மா, ஜெனிலியா(உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதே ஏன்?)

பிடிக்காதவர்:
நமீதா(தண்டம் ஆஃப் தமிழ் சினிமா),
பியா(அழகு முகத்தை குரங்கு மாதிரி வெச்சிகிட்டு நடிக்கிது இது),
த்ரிஷா(நீங்க நடிச்சு நான் பார்த்ததே இல்ல! aaannggg..!!)
நயன்தாரா (என் தாய்மாமனை கூட விட்டு வெக்கலைங்க இவங்க!!)

7 . இசையமைப்பாளர்:

பிடித்தவர்: இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர்

பிடிக்காதவர்: எல்லார் இசையிலும் ஏதாவது ஒரு பாடல் பிடித்திருக்கிறது.

8. பாடகர்:
பிடித்தவர்: விஜய் யேசுதாஸ் (தாய் தின்ற மண்ணை பாட்டுக்காக), கார்த்திக் , எஸ்.பி.பி, மனோ

பிடிக்காதவர்: உதித்..(வேணாம்..தமிழ் பாவம்)

9. பாடகி:
பிடித்தவர்: ஜானகி, சொர்ணலதா, சுனந்தா, ஜென்சி, நித்யஸ்ரீ.

பிடிக்காதவர்: மன்மத ராசா பாடகி.
10. விளையாட்டு வீரர்:

பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த், சக் தே இண்டியா! தன்ராஜ் பிள்ளை.

பிடிக்காதவர்: அம்புட்டு கிரிக்கெட் வீரர்களையும்...
( ball பட்டாலே மேட்ச்சுக்கு லீவ் எடுக்குறானுங்க..இவுனுங்க வீரர்களாம்..ச்சீஈஈ)..

ஹப்பாடி..ஒரு வழியா தொடர்பதிவு போட்டாச்சு..
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது..(சிக்கவிடுவது!!)
1. ரம்யா(will to live)
2.தமிழரசி(எழுத்தோசை)
3. ரசனைக்காரி(எனது ரசனை)
4. சீனா
5. இயற்கை(இதயப்பூக்கள்)
6.மயாதி(கொஞ்சும் கவிதைகள்)

Tuesday, November 3, 2009

நீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா? -Are u a good Friend?

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!

உங்கள் நட்பை பலமாக்க சில டிப்ஸ் இதோ...


http://s165.photobucket.com/albums/u73/cyarena/comments/friend-is/images/friendIs952.jpg


1.உங்கள் நண்பருக்கு என்ன கொடுக்க முடியும் என்று பாருங்கள், என்ன பெறலாம் என்பதை விடுங்கள்.
“உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது”

2. ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

“நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாக, துடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

3.மன்னிக்க பழகுங்கள்..!!

”சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்ன? மன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.”
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

4. தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

”சிலர் இருக்கிறார்கள், இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் மன்னிப்பதுபோல் மன்னித்துவிட்டு,குத்திகாட்டுவார்கள்.
அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஆதிக்க மனப்பான்மையின்
வெளிப்பாடு குத்திகாட்டுதல். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில், இந்த வகையில்
சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொன்னால்..
ஆஹா..அதுதான் உங்கள் நட்பை மிகவும் உயர்த்தும்.”

5.சொன்னதை செய்யுங்கள்..!!

“நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு ”டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.”

6. நட்புக்கேது கட்டுபாடு..!!

”உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.”

7. நல்லதுக்கும், கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

“நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும், என்கிற பழமொழி
இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை
அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும்.
இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

8. அவர் அவராகவே இருக்கட்டும்..!!

“நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை
செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது.
அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி.
என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

9. ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

“நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதா? முடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது
பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு
நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம்
மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

10. பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி
என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர்
சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை.
எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சா? இனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்கோங்க..!!

விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!

Sunday, November 1, 2009

ஒரு புலியின் முடிவு..!!

சில வலைப்பக்கங்களை உலாவிக்கொண்டிருந்த போது இந்த விஷயம் கிடைத்தது.

மென்மையான மனம் கொண்டவர்கள் மேற்கொண்டு தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்..!



http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/10/ltte-leader-prabhakaran.jpg


யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.).

எப்போதும் மரணம் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது..ஆனால் சிலரது மரணம் மட்டுமே நினைவுகளாக வாழ்கிறது..!!

ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!

நான் புதுமையானவன்

புதுசா தலைப்பு(ஹெட்டர்) மாத்தியாச்சு..!!
கீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே!!
ம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..

சரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..!!!!!!!
இப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.

நீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,
நீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..

இப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.

அதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..!!

எங்கிருந்து வந்தது..?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.

உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.


உண்மையான மகிழ்ச்சி!!

ஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து "தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்." என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. "என்ன இது? வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே?", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, "வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா? எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது", என்றார்.


விடுதியா? அரண்மனையா?

ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார். "என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?" என்ற குருவிற்கு "என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?

அதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500!!).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..!!

Saturday, October 24, 2009

மீண்டும் சில காதல் கவிதைகள்!!

காதல் சொன்னபோது
தந்த ரோஜா
இறந்துவிட்டது அவள்
தூக்கி எறிந்தபோது..
கொல்லப்பட்டது அவைகள்
ஏறி சென்றபோது..

***************************

இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை
நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை
தூரங்கள் அதிகப்பட மனமில்லை

இருந்தாலும் வேறு வழியில்லை..
விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!!

******************************


செல்லாதே என்னை விட்டு
சில தூரம் போனாலும்
தொடர முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில அடிகள் கடந்தாலும்
பிரிய முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில மணித்துளிகள் நடந்தாலும்
மறக்க முடியவில்லை உன்னை..

இப்படி எல்லாம் புலம்புகிறேன்..
நீ விடிகாலையில் கட்டில் விட்டு
கடந்து போன போது..!!

Friday, October 23, 2009

நதியும்..சில படகுகளும்..!!


சூரிய கதிர்கள்
செல்லும் வழி
எப்போதும் அறியாது..

ஓடும் நதி
தன் பாதை
எப்போதும் அறியாது..

வெள்ளை மேகம்
தன் இலக்கு
எப்போதும் தெரியாது..

வளரும் மரம்
தன் வயதை
எப்போதும் அறியாது..

சுற்றும் பூமி
சுற்றும் காரணம்
எதுவும் அறியாது..

எப்படி என்றால்
ஏழாயிரம் விளக்கமுண்டு.

ஏன் என்றால்
எவனுமில்லை விளக்க..

வாழ்க்கை எனும் நதியிலே
வாழ்வை போல் இன்பமில்லை..

உடலே அதன் படகு..
உன் மனமே அதில் பயணி..
வாழ்வே அந்த நதி..

நிச்சயமாய் பயணம் முடிவற்றது
சில படகுகள் மாறி ஏறிக்கொள்வோம்..

நிச்சயமாய் பயணத்தில் அர்த்தமுள்ளது
பயணிக்கையில் அதை நாம் அறிந்துகொள்வோம்.

Thursday, October 22, 2009

நறுக்..கென்று சில கேள்விகள்..!!

http://www.lokvani.com/lokvani/a_images/y2007/38561-plus-4-kolam-brought-toge.jpg


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

அவருக்கு வாகனத்தில் இடம் கொடுத்தால் என்னவென்று..
ஒரு முடவர் வேர்த்துகொட்டி உங்களை கடந்தபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் பேசினால் என்னவென்று
உங்கள் மூத்தோர்கள் வீட்டில் முடங்கி இருக்கும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

சர்க்கரை அளவை தெரிந்துகொண்டால் என்னவென்று
நீங்கள் குலாப் ஜாமூனும்,ஜிலேபியையும் சாப்பிடும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் வாழக் கற்றுகொண்டோமா என்று..
உங்கள் குழந்தைக்கு வாழ கற்றுகொடுக்கும்போது..?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் மனிதராய் பிறந்ததன் பயன் என்னவென்று..
நீங்கள் நல்ல மனிதர் என புகழப்படும்போது...!!

மறந்த பிரிதலும்.. மறவாத காதலும்.!

http://farm1.static.flickr.com/24/100790656_348ed6701a.jpg



நீ அளித்து போன முத்தம்
நீ சொல்லி போன வார்த்தை
நீ தந்து போன அந்த குட்டி கரடி பொம்மை
நீ எறிந்துவிட்டு போன அந்த கைக்குட்டை
நீ சிதறவிட்ட சில கண்ணீர்துளிகள்..

அப்போது தெரியவில்லை..
அத்தனையும் கடைசி என்று..
இப்போது உணர்கிறேன்..
காதலின் வலியென்ற ஒன்று..!

Tuesday, October 20, 2009

சின்ன குசும்பர் வந்தாச்சு..!! இனிமே குசும்பர் பாடு என்னாச்சு..?




வந்துட்டாரே..வந்துட்டாரே..எங்க அண்ணாத்தைக்கு சின்ன அண்ணாத்தே வந்துட்டாரே..!!


கலாய்க்கும் குசும்பருக்கு சின்ன குசும்பர் பிறந்தாச்சே..!!


எல்லாரும் ஓடியாங்க.. உங்க வாழ்த்துக்களை சொல்லிடுங்க..!!

Saturday, October 17, 2009

திரை விமரசனம்- Eternal Sunshine of a Spotless Mind (+18 only)

ஹாய்..


புது டெம்ளேட் நல்லா இருக்கும்னு நம்பறேன்..!!


ரொம்ப நாளாச்சுங்க திரைவிமர்சன பதிவெழுதி..

இப்போதான் சரியான நேரமும் விமர்சனத்துக்கு ஒரு படமும் கிடைச்சுது..அப்புறம் கேக்கவா வேணும்..!!

இன்னிக்கு விமர்சனத்துக்கு எடுத்துகிட்ட படம் “Eternal Sunshine of a Spotless Mind"..

இந்த படத்தை IMDB rating-ல தான் முதன்முதலில் பார்த்தேன்..

ஆனால் “Rated-R".. :(

Jim carrey யின் அசத்தலான நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் இது..







கதையின் போக்கை புரிஞ்சிக்க முதலில் இருந்தே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

எப்பவும் போல Jim-காமெடி பண்ணி கலக்குவாரு.. நல்ல நகைச்சுவை இருக்கும்னு பார்த்தா..
மனுஷன் ரொம்ப சீரியஸாவே இருக்கார்..

அடுத்த இன்ப அதிர்ச்சி..நம்ம டைட்டானிக் ஹீரோயின் (கேட் வின்ஸ்லெட்) பார்க்க 70’s ஹிப்பி மாதிரி ஒரு திமிரான(அழகான) லுக்கோட வளைய வராங்க..!!



முதல் 6 காட்சிகள் கவிதையோ கவிதை..!!

ஜிம் கேரியை ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் ஹீரோயின் அவரிடம் பேச்சு கொடுக்கிறார்..
அந்த பேச்சு நல்ல நட்பாக மாறி பிறகு காதலில் முடிகிறது.. ஆனால் சில பொய்களும் கொஞ்சம் டாமினேஷனும் குறுக்கே வர
அவர்களின் காதல் சிதைகிறது. சிறது காலம் விரக்தியில் வாழும் ஜிம் கேரி தன் காதலியை மீண்டும் சந்திக்க அவர் வேலை செய்யும்
கடைக்கு செல்கிறார். ஆனால் அவளோ அவரை சுத்தமாக மறந்தே விட்டார்...கவனிக்க.. சுத்தமாக என்றால்..தன் மனதில்,மூளையில் இருந்து
அவரின் நினைவுகள் அனைத்தையும் அழித்தே விட்டார்.(கொஞ்சம் சையின்ஸ் ஃபிக்‌ஷன்).. அதிர்ந்து போகிறார் ஜிம் கேரி.








அவரின் நண்பர் ஒருவர்
இது சகஜம்தான்..இதே போல் நீயும் அவளை அழித்துவிட்டு ஏன் நிம்மதியாக வாழக்கூடாது என்று கேட்க ஜிம் கேரிக்கு பொறி தட்டுகிறது.
அவளே நம்மை தூக்கி எறிந்த பிறகு நாம் மட்டும் ஏன் அவளை நினைத்து உருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல
அந்த நினைவுகளை அழிக்கும் டாக்டரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஏன் அவள் காதலியை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது போல சில பல
கேள்விகளோடு நினைவுகளை அழிக்கும் வேலையை துவங்குகிறார்.

ஜிம்மின் வீட்டிலேயே நினைவழித்தல் ட்ரீட்மெண்ட் தருவதாக உறுதியளித்த டாக்டர் அவரை விட்டிற்கு அனுப்பிவிடுகிறார்.வீட்டிற்கு வந்ததும்
ஜிம் கேரிக்கு மீண்டும் அதே விரக்தி தொற்றி கொள்கிறது. அதே நேரம் அவர் வீட்டிற்கு இரண்டு அஸிஸ்டண்ட் டாக்டர்கள் வர.. நினைவழித்தல்
வேலை துவங்கிவிடுகிறது.





ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்லும் ஜிம் கேரியின் மூளையினை Brain Mapping மூலம் ஆராய்கிறார் டாக்டர். குறிப்பிட்ட இடத்தில் அவரின்
காதல் நினைவுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். இப்போது ஜிம்மின் மனம் அவரின் மூளைக்குள் பயணிக்கிறது..அவரின் நினைவுகளை அவரே
மூன்றாவது மனிதராக நின்று பார்க்கிறார்..சில நேரம் அவரே அந்த நினைவுகளை கட்டுபடுத்தவும் முடிகிறது...


அந்த ட்ரீட்மெண்ட் நடந்துகொண்டிருக்கும் போது ஜிம்மின் வீட்டில் இந்த அஸிஸ்டண்ட் டாக்டர்கள் போடும் ஆட்டம்.. Untoleratable..!! இதுங்க அடிக்கிற லூட்டிக்கு தான் படம் "R" rating வாங்கிடுச்சுன்னு கூட சொல்லலாம்..!!


இப்போது துவங்குகிறது போராட்டம்.


ஜிம்-மின் காதல் நினைவுகள் அழிக்கப்பட ஆரம்பித்தவுடன் அவருக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. அவர் தன் நினைவுகள் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்று
யோசிக்கிறார்.. தன் காதலில் சின்னமாய் நம் நினைவுகளாவது இருக்கட்டும் என்று முடிவு செய்யும் ஜிம்.. அவரின் காதலியை கூட்டிக்கொண்டு..
கன்னாபின்னாவென்று குழந்தை நாள் நினைவுகளுக்கும் எதிர்கால கனவுகளுக்குள்ளும் புகுந்து கொள்கிறார். இதனால் ஜிம் கேரியின் நினைவுகளை
ஒழுங்காக அழிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இந்த டாக்டர்கள்.



இது ஒரு பக்கம் இருக்க.. தன் அடுத்த பாய் ஃப்ரெண்டோடு விளையாடிகொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் எதோ தோன்றுகிறது. அவர் கண்முன்னே ஜிம் கேரியின் முகமும்
அவர்களின் சில காதல் நினைவுகளும் வந்து மறைகின்றன. தன் காதலனை தன் நினைவுகளை அழித்துவிட்ட அந்த நாள் அவருக்கு ஞாபகம் வர
அவரை தேடி அவர் வீட்டுக்கு கிளம்புகிறார் ஹீரோயின்.

இங்கே ஜிம் தன் காதலியின் நினைவுகளை காப்பாற்ற போராடிகொண்டிருக்க..அவளும் ஜிம்மை தேடி கிளம்ப..

இறுதியில் ஜிம் தன் காதலியின் நினைவுகளை அழிக்காமல் காப்பாற்றினாரா? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? கடைசி பத்து நிமிட கவிதை காட்சிகள் உங்களுக்கு அதை சொல்லும்..!!

சில நெளிய வைக்கும் காட்சிகளை நீங்கள் உங்கள் நினைவிலிருந்து அழித்துவிட்டு..மீண்டும் இந்த திரைப்படத்தை பற்றி நினைத்து பார்த்தால்..அவர்களின் அருமையான நடிப்பும், கதையின் ஆழமும் நிச்சயம் புரியும்...


மேற்படி தகவலுக்கு இங்க பாருங்க..

Tuesday, October 13, 2009

Farmville'யில நீங்க எந்த லெவெல்?

http://vator.tv/images/attachments/020909121934gameBig_farmville.jpg


நானும் ..நானும்..நானும்...

இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!

அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.

பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..

இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?

3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?

4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..

5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?

6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?


7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?

8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?

ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..

அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...

யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!

Friday, October 9, 2009

Engineering College for Humans!!!! (எச்சரிக்கை- இது கொஞ்சம் கடுப்பான பதிவு!)

http://cdn.sheknows.com/articles/fighting-couple.jpg


இனியும் என்னால பொறுக்க முடியாது..
இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்.. எப்படியாச்சும் இந்த புத்திமதியை, ஆதங்கத்தை நம்ம வலையுலகத்துல கொட்டிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு பழமொழி உண்டு ..ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு..

அதுபோல..இப்ப இந்த மனுஷ இனத்தையே ரெண்டு பண்ணி மனுஷங்களே கொண்டாடிக்கிறாங்க..!

இந்த சேலம் மாநகராட்சியில ஒரு பெயர் சொல்ல விரும்பாத..கல்லூரியில..

கல்லூரி பேருந்து விடுறாங்க..(இதுல என்னா ஆச்சரியம்னு தானே கேக்குறீங்க.?)...
அதுல முன்னாடி உக்கார்ந்து வரணுமாம் பெண்கள்.. பின்னாடி பசங்க வரணுமாம்..

சரி..கழுத..போய் தொலையுதுன்னு உக்கார்ந்த அடுத்த கண்டிஷன் பொண்ணுங்க கிட்ட எக்காரணம் கொண்டும் பேசவே கூடாதாம். இதை நினைச்சு சிரிக்கிறதா..அழுவுறதா? இல்ல அந்த காலேஜ் பிரின்சிபாலை மிதிக்கிறதான்னு தெரியலை..!!

அதுமட்டும் இல்லாம பேசுனது தெரிஞ்சா ரெண்டு நாளு சஸ்பெண்டு வேறயாம்..!!

அசிங்கமா இல்லை..!! ஒரு மனுஷன் இன்னோரு மனுஷ ஜென்மத்துகிட்ட பேசுவதை.. மூணாவதா இன்னோரு மனுஷ ஜென்மமே தடுக்குது..!!

அப்பா சாமிகளா..! அறிவு ஜீவிகளா! உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்புடு..
இனிமேவாச்சும் யோசிச்சு பேசுங்க..உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணோ பையனோ இருக்கும் என்கிறதை ஞாபகம் வெச்சுக்கோங்க..!!

ஆணின் இயல்புகள் பெண்ணிற்கும் ..பெண்ணோட இயல்புகள் ஆணிற்கும் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்..அப்படி தெரியாதவங்க மனுஷங்களா? எவ்ளோவோ படிச்சிருக்கோம்.. இதை ஏன் கண்டு பயப்படுறோம்?

தன் சக இனத்(மனித இனம்)தின் சைக்காலஜியையும் அனாடமியையும் தெரிஞ்சுக்காத ஒரே இனம் நாமா தான் இருப்போம்...!!

ப்ளீஸ்... நான் சொல்ல வரது இதுதான்.. பெண் பெண்ணா அழகா லட்சணமா இருக்கட்டும்..ஆனால் அவளுக்கு ஆணிடம் பேசவும் பழகவும் தைரியத்தையும் தெளிவையும் இந்த சமூகம் வளர்க்கட்டும்..

இதுவே தான் ஆணுக்கும்..

ப்ளீஸ் மச்சீஸ், கேர்ள்ஸ்!! இனிமே உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க..உங்க அப்பா அம்மா வாழ்க்கைய அப்படியே ஜெராக்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க..ஆல் தி பெஸ்ட்..!!

பி.கு : என் ப்ளாகுல நான் என்ன வேணா எழுதுவேன் என்று சொல்லபோவதில்லை.. அதே போல் பிறருக்காக நான் எழுவதை நிறுத்த போவதும் இல்லை.. என்ன சில நேரம் இப்படி கடுப்பா டைப் பண்ணிடுறேன்..ஹாஹாஹஹ..!!

Monday, September 28, 2009

சீட்டிங் சிறுகதைகள்!




கள்ளா!



http://boyfriendcheat.files.wordpress.com/2009/03/how-to-catch-a-cheating-husband_hubsite40a.jpg



மாலை 7.30 மணி.

களைப்பாய் உள்ளே வருகிறான் ராம்.

”புவனா ஒரு காபி கிடைக்குமா?”

”ஏன் அவ போட்டுகுடுக்கலையா?”

அதிர்ந்த ராம், மனதிற்குள் சொல்லிக்கொண்டான் .
”எவனோ போட்டுகுடுத்துட்டான்”

காதலா?!

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/5203617/cheating-main_Full.jpg

மதியம் 12 : 30


அலோ உமா.

அவ இல்ல.. வசு பேசுறேன்.

ஹப்பாடி..ஹேய் எப்போ பீச்சுக்கு போலாம்?

இன்னிக்கு ஈவனிங்..!

”சரி.. பார்த்து வா. அவளுக்கு தெரிஞ்சுட போகுது.”

12: 31

..கடற்கரையில் உமா.. அவள் காதலனிடம்..
”ம்ம்..தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.. தெரிஞ்சா சமாளிச்சுக்கலாம்!!”

Sunday, September 27, 2009

விஜயதசமி வாழ்த்துக்களும்..!! ஒரு காமெடி ஸ்கிரீன் ப்ளேவும்!!!

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg
எல்லாருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

குட்டீஸ் நல்லா படிச்சு பெரிய அளவுல பேர் வாங்கி , அப்பா அம்மாவை காப்பாத்தணும்னு சாமிய நல்லா வேண்டிக்கோங்க..!!

இளவட்டங்கள் இப்போ நல்லா படிக்காட்டியும் இனிமே நல்லா படிச்சு, கண்ட பொண்ணு பின்னாடி சுத்தாம, நல்ல வேலைக்கு போய், கைநிறைய சம்பாதிச்சு , பெத்தவங்களை சந்தோஷமா வெச்சிருந்து, நாலு பொண்ணை நம்ம பின்னாடி சுத்த வெய்யி தாயேன்னு சரஸ்வதிய வேண்டிக்கோங்க..!!

பெரிசுகள் எப்பவும் ஜாலியா சந்தோசமா நம்மையும் நம்மை சுத்தி உள்ளவங்களையும் வெச்சு பார்த்துக்க வேண்டிய பொறுப்பை இன்னும் சிறப்பா செய்யணும்னு வேண்டிக்கோங்க...!!

பெண்கள் எப்பவும் எதற்கெடுத்தாலும் கோவப்படாம , சூதனாம(அது உங்களுக்கு மட்டும்தான் வரும்.. ஜென்ஸ் இதில் வேஸ்ட்) நடந்து புகுந்த வீட்லயும், பிறந்த வீட்லயும் நல்ல பேரு வாங்கி , என்னையும் என் குடும்பத்தையும் மேலும் முன்னேற்றம் பண்ண வழி செய் தாயீன்னு வேண்டிக்கோங்க..!!!

அம்பாளின் அருளுக்கு எல்லாருக்கும் எல்லாம் தரட்டும். எல்லாரும் நல்ல மனசோட பரிச்சுத்தமா இருங்க..!!


http://farm2.static.flickr.com/1009/864900082_71906f506d.jpg


ஹோஸ்ட் : வணக்கம் நேயர்களே என்றும் போல் இன்றும் ஏழரை எப்.எம் மோடு உங்கள் இந்த இனிய இரவு பொழுதை கழியுங்கள்..!!

நேயர் : அலோஓஓஓஓஓஓஓஓஓ!..

ஹோஸ்ட் : அலோ.. வாங்க வணக்கம். உங்க பேர் என்ன ? எங்க இருந்து பேசுறீங்க?

நேயர் : அலோஓஓஓஓஓஓஒ...ஓ..ஓஓஓஓஓஓஓஓ..!!

குரல் லெந்தாக ஒலிக்க ஹோஸ்ட் பீதியாகிறார்...

ஹோஸ்ட் : சார், லைனுக்கு வந்துட்டீங்க..பேசுங்க..உங்க பேர் என்ன?

நேயர் : ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...!!

சங்கு சத்தமெல்லாம் கேக்குதே என அதிர்ச்சி அடைகிறார் ஹோஸ்ட்..

ஒரு வேளை கோஸ்டா இருக்குமோ என்று பீதியாகி லைனை துண்டிக்கிறார்.

அடுத்த நேயர் அழைக்கிறார். கொஞ்சம் முகத்தை துடைத்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் ஹோஸ்ட்.

நேயர் : அலோ வணக்கம்!!

ஹோஸ்ட் : வணக்கம் . உங்க பேரு என்ன? எங்க இருந்து பேசுறீங்க..?

நேயர் : அலோ.. சுகமதி இருக்காளா?

ஹோஸ்ட் : நீங்க கால் பண்ணி இருக்குறது ஏழறை எப்.எம் முக்கு சார்.. உங்க பேரை சொல்லுங்க..!!

நேயர் : டேய் நாயே!! யாருடா நீ? என் வீட்டுல உனக்கு என்னடா வேலை..?

ஹோஸ்ட் : (அதிர்ச்சியில் முழி பிதுங்கி) சார் இது உங்க வீடு இல்லை.. இது ஏழரை எப்.எம் ஆபிஸ்.. நீங்க நம்பர் தப்பா டயல்
பண்ணிட்டீங்க போல.. கட் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடுங்க..

நேயர் : டேய் பொரம்போக்கு..!! என் வீட்ல அதும் அர்த்த ராத்திரியில என்னடா பண்ற.. இருடா நேர்ல வரேன்.. மவனே இன்னிக்கு
நீ செத்தட!!

பீதியாகி இணைப்பை துண்டிக்கிறார் .

சரி தற்போது அலம்பர ..ச்சே..விளம்பர இடை வேளை..!!


அருகே கம்யூட்டர் ஆப்பரேட்டரை பார்க்க

க.ஆ : யோவ் லூஸா நீ..இன்னிக்கு ஒரு விளம்பரமும் இல்லை ..

ஹோஸ்ட் : ஆமால்ல.. சரி சரி..

ம்ம்.. அடுத்த நேயர் வருக வணக்கம்.

நேயர் : வணக்கம்.. ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!

ஹோஸ்ட் : என்ன வணக்கத்தையே இவ்ளோ நீளமா சொல்றீங்க.. உங்க பேரு உண்மைதமிழனா?

நேயர் : இல்லீங்க..என் பேஏஏஏஎரு... குடியாத்தம் குப்புசாமிங்க..!!

ஹோஸ்ட் : சரி சொல்லுங்க குடிகாரன் குப்புசாமி.. உங்களுக்கு என்ன பாடல் வழங்கலாம்?

நேயர் : ரெண்டு ப்ளேட் மிக்ஸர் கொஞ்சம் சோடா!!

ஹோஸ்ட் (கடுப்பாகிறார்) : ஐயா இது டாஸ்மாக் கடை இல்லை.. ஏழறை எப். எம். இங்க நீங்க பாட்டு மட்டும்தான் கேக்கணும்.

நேயர் : அப்போ ரெண்டு பாட்டில் எளைய ராசா பாட்டு குடு.. அப்படியே தொட்டுக்க கொஞ்சம் குத்துபாட்டும் ,
ரசிக்க 3 மெலடி பாட்டும் போடு போதும்..!!

ஹோஸ்ட் : சரிங்க வைங்க..!!

ஹோஸ்ட் முதலில் கீழே இருக்கும் அந்த இரும்பு தடியை எடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை மண்டே மேலே போடுறார்..
அப்படியே தன் மண்டே மேல்யும் போட்டுகிட்டு திவாலாகிறார்..!!

பின்ன ஏழறைன்னா சும்மாவா?

Thursday, September 24, 2009

யோசித்தேன்.. எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ!!-2

அதிர்ஷடம்

ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்.

சோகம்

நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.


நட்சத்திரம்

அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.


காதல் கயிறு

காசிக்கயிறை பார்க்கிறாள்
அவளின் தாலிக்கயிறை கட்ட
மறுத்த காதலனின் நினைவாக..!!


நினைவு சின்னம்

உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.


மணல் வீடு

கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.

நிர்வாணம்

ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!

Monday, September 21, 2009

ரமலான் வாழ்த்துக்கள்!!

நமது வலையுலகத்திற்கு.. என் சார்பாக ரமலான் வாழ்த்துக்களை இங்கே தெரிவித்துகொள்கிறேன்..!!

Thursday, September 17, 2009

அட...! கூகுள்!

அட..!
என்றுhttp://ec.mashable.com/wp-content/uploads/2009/09/moar-bigger.jpg

சொல்ல வைக்கும் பல விஷயங்களை கொண்டுள்ள நமது கூகிள் இப்போது இன்னொரு “அட”வும் சொல்ல வைத்துள்ளது.

ஆம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் நீளமாக ஒரு விஷயத்தை செய்துள்ளது கூகிள்.

இன்று காலையில் கூகிளின் முகப்பை திறந்த எல்லாருமே ஒரு நிமிடம் குழம்பி இருப்பீர்கள் அதற்கு காரணம்.. கூகிளின் தேடுபெட்டி(Search Box)யின் நீளம். நேற்று இருந்ததை விட இன்று அதன் நீளம் அதிகரித்துள்ளது.

இதற்கு சரியான காரணங்கள் என்னவென்று தெரியா விட்டாலும் .. இது ஒரு அடுத்த கட்ட பணிகளுக்கான முன்னோடி நடவடிக்கை என்றே என் மனதுக்கு படுகிறது.

கூகிள் தன்னை எப்போதும் சீர்படுத்தி கொள்ளவும் , தன்னை மேம்படுத்திகொள்ளவும் தயங்கியதே இல்லை என்பது நாம் அறிந்ததே.

அப்படிபட்ட சீர்படுத்துதலின் ஆரம்ப கட்டமாக இது இருக்கக் கூடும் என்று பல ஐ.டி. வல்லுனர்கள் தகவல் தந்துள்ளனர்.

எப்படியோ.. கூகிளாண்டவர் தன்னை மேம்படுத்துவதோடு தன்னை நாடி வரும் மக்களின் பணியையும் சுலபமாக்கி தருகிறார் தருவார்...

Wednesday, September 16, 2009

ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னை தேடியே!!

http://www.pawyourheartout.co.uk/resources/ang2-x.jpg
தங்கை கல்யாணம் முடிந்து அப்பாடி என சாய்ந்திருந்த நேரம் ஒரு மெயில் வந்தது..
பார்த்தால்.. நமது தோழி இயற்கை மகள் என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார்..

அகமகிழ்ந்து.. மகிழ்ச்சியோடு என் வேண்டுதல்களை ஏஞ்சலிடம் கேட்க தொடங்கிவிட்டேன்..

முதலில் இந்த ஏஞ்சல் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சேலையிலோ சுடியிலோ வந்து நிக்கட்டும் அப்படின்னு நினைச்சுகிட்டேன்.
உடனே இந்த ஏஞ்செல சேலைக்கு மாறி என் மனதை கொள்ளை கொண்டது..(imagine பண்ணிக்கோங்க.. எனக்கு பிக்சர் கிடைக்கலை..!!)

வெச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டே இருந்தா எப்படி.. என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றது ஏஞ்செல்..

சரி கேக்குறேன்...

1. முதல் வரம்- யாரும் இனிமே இந்த உலகத்துல ஊனமா பிறக்க கூடாது.

2. இரண்டாவது வரம்- எந்த குழந்தையும் தாயில்லாமல் வாட கூடாது.

3. மூன்றாவது வரம்- என்னை சேர்ந்த உறவுகளும், நண்பர்களும் இப்பவும்போல எப்பவும் மகிழ்ச்சியா என்னோடு இருக்கணும்.

4. நான்காவது வரம்- எது வந்தாலும் தைரியத்தையும் நிதானத்தையும் இழக்காத மனசு வேண்டும்.

5. ஐந்தாவது வரம்- பணத்தின் மதிப்பு குறைந்து குணத்தின் மதிப்பு உயரணும்.

6. ஆறாவது வரம்- இயற்கையை (Nature..!!)மேம்படுத்தும் விதமாக மக்கள் செயல்படணும்.

7. ஏழாவது வரம்- நினைச்ச நேரத்தில் நினைச்ச இடத்தில் இருக்கும் சக்தி வேண்டும்..
(பஸ் செலவு, ஃப்லைட் செலவு மிச்சம், அதோட.. என் காதலி பார்க்க விரும்புற இடத்துக்கு
அவளை கூட்டிட்டு சுத்தலாம்ல..)

8. எட்டாவது வரம்- இந்த எட்டாவது வரத்தை என் பதிவை படிக்கிறவங்க கேட்கட்டும்...

9. ஒன்பதாவது வரம்- அப்பா...உனக்குதான் தெரியுமே ஏஞ்செல்.

10. பத்தாவது வரம்- இதை படிக்கிற என் நண்பருக்கு/ நண்பிக்கு இந்த வருஷம் மகிழ்ச்சியான இனிய வருடமா இருக்கணும்.
(அப்போ அடுத்த வருஷம் என்ன பண்றதாம்? மறுபடியும் இங்க வந்து படிங்க!!)

இதுக்கு மேலயும் வேண்டிக்க நிறைய இருக்கு. என்ன பண்றது பத்தே வரம் தானாம்.. இந்த ஏஞ்செல் சுத்த கஞ்சம்..பா.. !
சரி சரி. இன்னும் நாலு பேருக்கு இவளை அனுப்பனுமே!!

நம்ம முரளிக்குமார் பத்மநாபன்..

ரெண்டாவது நம்ம சென்ஷி..

மூன்றாவது நம்ம சுபாஷினி டீச்சர்..

நான்காவது நம்ம சீனா சார்..

இவங்க எல்லாருக்கும் என் இனிய பரிசாய் இந்த ஏஞ்செலை அனுப்பி வெக்கிறேன்..

போய்ட்டு வா தாயி..போய்ட்டு வா..!!

Thursday, August 27, 2009

ஒரு துண்டிக்கப்படாத இணைப்பு!


”குட் மார்னிங் சார்.. ஈஸ் திங் ராம்குமார்..”

”யெஸ் ராம்குமார் ஹியர்”

”நாங்க IJKLMN கம்பெனியில் இருந்து பேசுறோம்.
புதுசா ஒரு லோன் ஸ்கீம் ரிலீஸ் பண்ணி இருக்கோம்.
அதை பத்தி உங்ககிட்ட எக்ஸ்பிளையின் பண்ண இருக்கோம்.
ஒரு 5 மினிட்ஸ் ஒதுக்க முடியுமா ப்ளீஸ்”
கெஞ்சியபடி கொஞ்சினாள் அவள்.

“ம்ம்..ஸ்யூர்”..

ஐந்து நிமிடங்கள் முடிந்தது.
குரல் இனித்தது.
சொன்ன விஷயங்கள் மறந்தது.

”சரிங்க பாக்கறேன், நைஸ் வாய்ஸ். நாளைக்கு ஈவனிங் உங்க ஆபீஸ் வரேன்”

“தேங்க் யூ ஸார். ஸீ யூ.. பை”

”பை..”

மகிழ்ச்சியோடு இணைப்பை துண்டித்தாள் அவள்.

அடுத்த ஒரு நிமிஷத்தில் ராம்குமாரின் செல்போன் ஒலித்தது.

புவனா கூப்பிட்டாள்.

”என்னங்க..”

‘என்ன?”

“ வீட்ல கேஸ் தீந்துடும் போல இருக்கு வரும்போது சொல்லிட்டு வந்துடுங்களேன்.”

“ம்ம்.. சரி”

“அப்புறம் ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..பிஸியா?”

”ஆமா.. ஒரு முக்கியமான பைல் பார்த்துட்டு இருக்கேன். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்.. வை”

‘ம்ம்.. சரி..பை”..

எழுந்து காபி குடிக்க நடந்தான் ராம்குமார்.

வருத்தத்தோடு இணைப்பை துண்டிக்காமல் இவள்!!

Tuesday, August 25, 2009

காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!


சேர்ந்தே இருந்த நேரத்தில்
சண்டையிட்டே கழித்தோம்..

பிரிந்த சில நொடிகளில்
ஒருவரில் ஒருவரை இழந்தோம்..

ஏந்தான் நாம் பிரிந்தோம் என்று
ஏங்கியே கழித்தோம்.. நம் பிரிவை!

ஏன் இன்னும் சேரவில்லை என்று
எப்போதும் பார்த்தோம்.. நம் சாலைகளை!

ஏன் இன்னும் விடியவில்லை என்று
மாலை ஏழுமணிக்கே மணி பார்ப்போம் நாம்!

இன்னுமா இருட்டவில்லை என்று
மதியத்திலேயே மதி மயங்குவோம் நாம்!

இப்படி நமக்கான காலமும்
நமக்கான நாட்களும்
நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!

நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து!

Friday, August 7, 2009

மழையா? அவளா? என் மனதை வென்றது..!



மெல்ல சரிந்து விழும்
மேகம் கலைத்து விழும்
வேகம் சேர்த்து விழும்
வானம் மறைக்க விழும்
மெல்லிய துளிகளாய் தூறல்!
.. இது அவளின் அணைப்பை போல் உள்ளதே!

அந்த மெல்லிய மழையில்
மேகத்தின் மோக கூடலில்
காற்றின் ஆவேச அணைப்பில்
பூமியின் கடும் மேற்பரப்பில்
அடியாய் இறங்கியது இடி!
.. இது அவளின் கோபத்தை போல் கொல்லுதே!

கண்கள் பறித்து செல்லும்
காண்போரை நடுங்க சொல்லும்
நிற்போரை ஓட சொல்லும்
நித்தமும் பூமியை கொல்லும்
ஆவேசம் கொண்ட மின்னல்!
..இது அவளின் கண்ணசைவை போல் சொல்லுதே!


காதலிபோல் மின்னல் கண்ணடித்து
அவள் கோபம்போல் இடியிடித்து
அவளின் அணைப்பாய் தூறலிட்டு
என் மனதை வென்றது
மழையா? அவளா?

Thursday, July 30, 2009

அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?


அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?

ஆமா நீங்க?

நாந்தான் பில் கிளண்டன் பேசுறேன்.

ஓ..சொல்லுங்க நலமா? லெவெண்ஸ்கி நலமா?

யாவரும் நலம் ஜார்ஜ், அங்க எல்லாரும் சௌக்கியமா?

ஆங்,, நலம்.!!

...பில் கிளிண்டனின் பின்னால் ஒபாமா நிற்கிறார்.

சார் நானும் பேசணும் ஒரு நிமிஷம்..

ஜார்ஜ்.. ஒபாமா பேசணுமாம்..

இல்லை வேண்டாம்.. நீங்க பேசுங்க.



ஒபாமா கைப்பேசியை வாங்கி கீழே எறிகிறார்.

கிளிண்டன் அதிர்ச்சியடைகிறார்.

புஷ்ஷீக்கும் அதிர்ச்சி.

டேய் ஒபாமா ஏண்டா இப்படி பண்ண?


ஒழுங்கா போய் தூங்கு.. இல்லனா சோனியா காந்தி கிட்ட சொல்லிடுவேன்..


பயந்துபோய் கட்டிலிக்கு ஓடிப்போய் படுத்துகொள்கிறார் கிளிண்டன்.

ஒரு பெருமூச்சு விடுகிறார் ஒபாமா.


இதெல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது , இந்த பைத்தியகார ஆஸ்பத்திரிக்கும் நமது கம்பவுண்டர் ஓபாமா கந்தசாமிக்கும்!!!

Tuesday, July 28, 2009

ராமன் எத்தனை ராமனடி!!



”அய்யயொ.. இன்னிக்கும் அம்மா வீட்டில் இல்லையா?”

வருத்தத்துடன் ராமன் விலாஸுக்குள் நுழைந்தாள் கனகா.

அவள் அந்த வீட்டு வேலைக்காரி.

”கனகா, நல்லா இருக்கியா?” என்றார் ராமன்.
வயது 60-ஐ தொட்டிருக்கும்.


பகீர் என்றது கனகாவிற்கு.

“ம்ம்..இருக்கேன் ஐயா”
என்றாள்.

அடடா இன்னிக்கு இவர் மட்டும் தான் வீட்டில் இருக்கார் போல.

போன முறை இதே போல் சிக்கிகொண்டு நான் பட்ட பாடு.

அப்பப்பா எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலைமை வரகூடாது.

ஆனால் இன்று மீண்டும் அதே நிலைமை எனக்கு வந்துவிட்டதே..

மனதுக்குள் கலங்கினாள்.

பாத்திரங்களை சீக்கிரம் விளக்கி வைத்துவிட்டு முடிந்தால் சொல்லாமலே ஓடிவிட வேண்டும்.
இவரிடம் சிக்கினால் இன்று அதோகதிதான்.

கடவுளே காப்பாத்து என்று வேண்டிக்கொண்டாள்.

*******

ஒருவழியாக பாத்திரங்களை விளக்கி முடித்தாயிற்று.

கிளம்பிடலாம் என்று எழுந்த போது பின்னால் யாரோ நிற்பதை உணரமுடிந்தது.

திரும்பி பார்த்ததும் திடுக்கிட்டாள்.

ராமன்.

முகத்தில் புன்னகையோடும், கண்களில் ஆசையோடும் நிற்கிறார்.

”அம்மாடி கனகா, எனக்கு கால் வலி , கொஞ்ச நேரம் கால் அமுக்கி விடேன்”.

மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் விதியை நொந்தபடி அவர் அறைக்கு நடந்தாள்.

நாற்காலியில் அவர் அமர இவள் கீழே அமர்ந்து கொண்டு கால் அமுக்க ஆரம்பித்தாள்.

ராமன் கனகாவின் அருகில் நெருங்கி பேச ஆரம்பித்தார்.

“இப்ப நாடு நிலைமையே சரியில்ல கனகா, நாங்க 1948-ல லக்னோவில் இருந்தபோது........”

.

.

.கனகா மனதுக்குள் கதறினாள்.

”போன வாரமும் இதே போல் 2 மணி நேரம் வரலாறு பேசி அறுத்து தள்ளிச்சு கிழம்.

இந்த வாரம் தப்பித்துவிடலாம் என்று பார்த்தால் இந்த வாரமும் சிக்கிவிட்டேன்.

ஹூம்ம்.. விதி வலியது!!”.

Thursday, July 23, 2009

இரண்டாவது மணநாளில்!!


இன்று பார்கவனுக்கும், ஹேமாவுக்கும் இரண்டாவது கலியாண நாள்

என்னங்க.. ஸேரி நல்லா இருக்கா?

ம்ம்.. சூப்பர்.. அழகா இருக்குடா.

தேங்க் யூ டா தடியா!!

ஹேய்..என்ன கொழுப்பா? அடிங்க!

ஹாஹா..சும்மா . கண்ணடித்தாள் ஹேமா.


ஏங்க..அத்தைக்கு முந்திரி பக்கோடா, மாமாவுக்கு மெதுவடையும், முறுக்கும் பண்ணி இருக்கேன்.

பாவம் மாமா அத்தை இதெல்லாம் சாப்பிட வாய்ப்பே இல்லாம போச்சு.

பார்கவன் நெகிழ்ந்தான்.

ம்ம்.. உண்மைதான் ஹேமா.

உன் அக்கறை என்னை சிலிர்க்க வெக்கிது.

தோ..நான் கூட அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணி இருக்கேன்.

ம்ம்..கலக்குறீங்க.

சரி..சீக்கிரம் வாங்க அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க!!

வீட்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.

முதியோர் இல்லத்திற்கு!!