Saturday, November 13, 2010

நீ,நான்,நிலா



செல் எனும் வார்த்தையெங்கும்
வா என்பதை  மறைக்கிறாய்..

ச்சீ என்கிற கொச்சை சொல்லில்
இச்சை சேர்த்து கொல்கிறாய்..

ம்ம் என்ற மௌன சொல்லில்
பேசேன் என்றே ஏங்குகிறாய்..

போ என்று விரட்டும் சொல்லில்
விரைந்து வா என்று மிரட்டுகிறாய்..

முறைக்கும் பார்வை பார்த்தெனை
முறையற்ற மனிதனாக்குகிறாய்..

பூத்து நிற்கும் புன்னகையதில்
புதியவளாய் என்னுள் பூக்கிறாய்..

நான் பேசாதே சமயம்- பேவிடு
என்று பேசாமலே கெஞ்சுகிறாய்..

முத்தம் ஒன்று கேட்டுவிட்டால்
சத்தமில்லாமல் கொஞ்சுகிறாய்..

முத்தத்தூரல் ஓய்ந்தபின்னே
மழையாய் நெஞ்சை மிஞ்சுகிறாய்..

அன்று சிரித்திருந்தது உதடுகள்,

 துடித்திருந்தது இதயங்கள்,

இனித்திருந்திருந்தது யார்...?

நீ,நான், நிலா..!!

Tuesday, November 9, 2010

வாழ்ந்துவிடு..!!


ஓடியாடி விளையாடு..
இந்த ஓய்வற்ற வாழ்க்கை விளையாட்டை..

யாரும் போடவில்லை சட்டம்..
இது யாருக்கும் புரியா திட்டம்..

பத்தாது இந்த வாழ்வு
பத்து நூறாயிரம் வாழ்க்கை வாழ்..
வாழும் கணமெல்லாம்..
வாழ்வை உறிஞ்சி வாழ்!!

விட்டுவிடாதே..
சொட்டுவிடாதே..
முழுதாய் குடி..
மிச்சம் விடாதே..!!

நீ மிச்சத்தில் 
பிறந்த மிருகம்..
நீ எச்சத்தில் 
பிறந்த சொச்சம்..
ஆனால் உச்சம்
என்பதெல்லாம் உனக்கு
துச்சம்..

அனுமதி நதியை
உன்னை அள்ளிகொண்டுபோக
அனுமதி வாழ்வை
உன்னுள் தன்வழிபோக..

துளியாய் துள்ளாதே..
துடித்தே  ஆவியாவாய்..
கடலில் குதித்துவிடு..
கடலாய் மாறிவிடு..

நீ நின்ற இடம் 
நாளை உனக்கில்லை..
நீயே யாதுமானால்
நிறைவை தவிர வேறெதுவுமில்லை.