Monday, April 4, 2011

நீ காதலின் புன்னகை..!




உண்மைதான் புரிகிறது..
உன் பாசம் தெரிகிறது..

காதல் கொண்ட கண்ணில்
கோபம் கொட்டிக் கிடக்கிறது..

ஆசை சொல்லும் இதழில்
ஆத்திரம் பொங்கி வழிகிறது..

புன்னகை பூக்கும் முகம்
பூகம்பமாய் என்னை பார்க்கிறது..

தென்றல் வீசும் பேச்சு
இன்று இடியென இடிக்கிறது..

சாரல் வீசும் சொற்கள்..
கற்கள் வீசி செல்கிறது

வண்ண கண்களை கத்தியாக்கி
என் இதயத்தில் கீறாதே..

சொற்களின் சூரிய சுட்டீல்
என்னை சுட்டுவிடவும் பார்க்காதே..

தாமதம் தவறுதான்..
தயவுசெய்து என்னை மன்னி..

நாம் காதல்செய்யும் நேரமிது
புரிந்துகொள்ளடி என் கன்னி..

கண்கள் மெல்ல பார்த்து
காற்றாட காலாட நடந்து
காதல் செய்வதை விட்டுவிட்டு..

அட..
இதோ.. வருகிறது..
இன்னும் கொஞ்சம்..


அட வந்துவிட்டதே புன்னகை..!!
என் அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் நகை..!!



7 comments:

Anonymous said...

லேட்டானதுக்கே இந்த ரியாக்‌ஷனா? ரங்கா பார்த்துப்பா இன்னும் நிறைய இருக்கு...


கவிதைகளால் மட்டுமே காதலின் அழகை கூட்ட முடியும் காதலியின் அழகை விட கவிதை தான் அழகு..

Ungalranga said...

@தமிழரசி,
ஹாஹாஹா!!

நீ சொல்வது சரிதான் தமிழ்..காதலின் அழகே கவிதைகளால்தான்..!! சிலநேரம் காதலியின் அழகையும் கவிதைகள் மிஞ்சத்தான் செய்கிறது..!!

கனிமொழி said...

:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

லேட்டா வந்து கன்னா பின்னானு திட்டு வாங்கினத சூப்பரா சொல்லி இருக்கீங்க... ஜஸ்ட் கிட்டிங்... nice write up...:)

Ungalranga said...

@அப்பாவி தங்கமணி,

:) நன்றி ம்மா!!

கமலேஷ் said...

படிக்கும் போதே இதழில்/வரிகளில்

ஒரு புன்னகை இழையோடுகிறது

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா - உணர்ச்சி பொங்க கவிதை எழுதுகிறாயே ! பரவாய் இல்லை - தொடர்க - ஆமாம் அதென்ன பேசும் போது சாரல் - எச்சி தெறிக்கிறதா ? பிறகு அச்சொற்களே சூரிய சூடாக வருகிறதா ? ம்ம்ம்ம் - உனக்கு காதலியை மடக்கும் திறமை இருக்கிறது - இறுதியில் பெட்டிப் பாம்பாய் அடக்கி விட்டாயே ! பலெ பலே ! வாழ்க வளமுடன் - காதலில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.