பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!
ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.
வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!
வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!
கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?
இலவசம் :
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!
Showing posts with label ஹைக்கூ... Show all posts
Showing posts with label ஹைக்கூ... Show all posts
Monday, August 9, 2010
Wednesday, December 9, 2009
யோசித்தேன்..எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ-3
பேருந்து

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************
குடிநீர்

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************
பணம்

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************
கண்டுபிடிப்பு

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************
தாய்பால்


பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************
மகிழ்ச்சி

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************
முத்துசரம்

அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************
தமிழரசி

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************
குடிநீர்

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************
பணம்

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************
கண்டுபிடிப்பு

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************
தாய்பால்


பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************
மகிழ்ச்சி

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************
முத்துசரம்

அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************
தமிழரசி

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!
Thursday, September 24, 2009
யோசித்தேன்.. எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ!!-2
அதிர்ஷடம்
ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்.
சோகம்
நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.
நட்சத்திரம்
அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.
காதல் கயிறு
காசிக்கயிறை பார்க்கிறாள்
அவளின் தாலிக்கயிறை கட்ட
மறுத்த காதலனின் நினைவாக..!!
நினைவு சின்னம்
உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.
மணல் வீடு
கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.
நிர்வாணம்
ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!
ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்.
சோகம்
நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.
நட்சத்திரம்
அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.
காதல் கயிறு
காசிக்கயிறை பார்க்கிறாள்
அவளின் தாலிக்கயிறை கட்ட
மறுத்த காதலனின் நினைவாக..!!
நினைவு சின்னம்
உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.
மணல் வீடு
கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.
நிர்வாணம்
ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!
Thursday, July 16, 2009
யோசித்தேன்! எழுதிவிட்டேன்..!! இந்த பதிவில் ஹைக்கூ
கடவுளும் மரமும் :

தன்னை திட்டுபவனுக்கும்
அருள் தருகிறது கடவுள்,
தன்னை வெட்டுபவனுக்கும்
நிழல் தருகிறது மரம்.
ஆம்புலன்ஸ் :

அப்பாவுக்கு நெஞ்சுவலி
எங்களோடு சேர்ந்து தானும்
கதறுகிறது சைரனோடு.
பயணச் சீட்டு :

சீட்டு இருக்கு கண்டக்டர்
ஆனால் சீட்டு தான் இல்லை
கால்வலியோடும் காமெடி செய்கிறார்
அந்த 82வயது முதியவர்.
காவ(லி)ல் நிலையம் :

எப்போதும் இருவர் கையில் ஆயுதங்களுடன் காவலில்
பாதுக்காப்பாய் தான் இருக்கிறது காவல் நிலையம்.
கடவுள் தெரிகிறார்! :

பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்.
மறதி :

குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.
நீங்களுமா..? :

ஆத்திரத்தில் மனைவியை அடிக்கபோகிறார்
அந்த “லாஃபிங் தெரபி டாக்டர்”.
அட! :

"உடம்பு சரியில்லைங்க
ஆபரேஷன் நாளைக்கு வெச்சிகலாம்."
அலுப்புடன் போனை வைத்தார் டாக்டர்.

தன்னை திட்டுபவனுக்கும்
அருள் தருகிறது கடவுள்,
தன்னை வெட்டுபவனுக்கும்
நிழல் தருகிறது மரம்.
ஆம்புலன்ஸ் :

அப்பாவுக்கு நெஞ்சுவலி
எங்களோடு சேர்ந்து தானும்
கதறுகிறது சைரனோடு.
பயணச் சீட்டு :

சீட்டு இருக்கு கண்டக்டர்
ஆனால் சீட்டு தான் இல்லை
கால்வலியோடும் காமெடி செய்கிறார்
அந்த 82வயது முதியவர்.
காவ(லி)ல் நிலையம் :

எப்போதும் இருவர் கையில் ஆயுதங்களுடன் காவலில்
பாதுக்காப்பாய் தான் இருக்கிறது காவல் நிலையம்.
கடவுள் தெரிகிறார்! :

பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்.
மறதி :

குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.
நீங்களுமா..? :

ஆத்திரத்தில் மனைவியை அடிக்கபோகிறார்
அந்த “லாஃபிங் தெரபி டாக்டர்”.
அட! :

"உடம்பு சரியில்லைங்க
ஆபரேஷன் நாளைக்கு வெச்சிகலாம்."
அலுப்புடன் போனை வைத்தார் டாக்டர்.
Subscribe to:
Posts (Atom)