Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, September 20, 2013

நீயே சொல்..




ஆசை சொல்ல
ஆசையாக இருக்கிறது
ஆனாலும் நெஞ்சம்
சொல்ல தயங்குதே..

சொல்லும் செயலும்
எப்பொழுதும் சொல்லியும்
சொல்லால் சொல்லச்
சொல்லி சொல்லும்
என் இதயம்..

சொல்லால் சொல்லி
சொல்லனோ துயர்ப்பட்டால்
சொற்குற்றம் ஏற்பட்டு
சொல்வது தடைப்பட்டால்
சொல்லி மறுத்துவிட்டால்
சொல் வராது போய்விட்டால்..

சொல்..நான் என்ன செய்வேன்..
சொல்லட்டுமா..என் காதலை..
சொல்லிலா மவுனத்தின் வழியில்?



Wednesday, July 6, 2011

காதலிக்க நேரமில்லை...!



நீ தொட்டுசென்ற பிறகுதான்
துவங்குகிறது என் நாள்..

நீ சுவைத்த மிச்சமே
தேனீராய் கிடைக்கிற்து தினமும்..

நீ உப்பை சரிப்பார்த்தபின்தான் 
நான் சாப்பிடவே அமர்கிறேன்..

தண்ணீர் பாட்டிலின் வாயில்
உந்தன் உதடுகளின் தடம் தினந்தோறும்..

நீ மிச்சம்வைத்த உணவை
மிச்சமில்லாமல் முடிக்கிறேன் மதியம்..

நீ ஓட்டிப்பார்த்ததால் மென்மைகண்டன
என் பைக்கின் கைப்பிடிகள்..

நீ அனுப்பியதாய் சொல்லிதான்
தொட்டுபோகிறது மாலைக்காற்று..

நீ போட்ட கோலமதனால்
தள்ளியே நிறுத்திகிறேன் வாகனத்தை..

வந்தவனை அள்ளிகொண்டு
வாஞ்சையாய் காபி தர..

உனக்கு என்று கேட்டதும்
உனக்குதான் முதலில் என்கிறாய்..

நான் என்னடி செய்தேன் 
என்றே உன்னை கேட்க..

நீ புத்தன் நான் யசோதரை
உன் சேவை என் தேவை..
உன் காதல் என் கூலி..
என்றாயே பார்க்கலாம்..

இப்படி நீயே எங்கும்
என்னை சூழ
காதலின் கடலின் 
நான் மூழ்கியே வாழ


இனி காதலிக்க தனியாய் 
ஏது நேரம்..

காதலிக்கே மொத்தமாய் வாழும் போது..!!

Saturday, June 18, 2011

காதலிப்பவனா நீ..? கொஞ்சம் இங்கே கவனி..!!





உடல்தேடும் பெண்ணோடு
ஒருபோதும் ஒட்டாதே..
பொருள்தேடும் பெண்ணோடு
பொடியேனும் சேராதே..
மணம்தேடும் பெண்ணோடு
மணித்துளியும் செல்லாதே..

சொல்லாலும் செயலாலும்
சொல்லாத செயலாலும்
சொல்லொனா துயரம் சேரும்
நான் சொல்லியும் இவரோடு 
சேர்ந்தால்..

வாழ்க்கை என்னவென
வழியெங்கும் தேடிடும் நீ
வீணாய் தொலைப்பாய் அஃதை..
வீண் வீணை இடைதனில்
மயங்கி சேர்ந்தால்..

மண்ணோடு மண்ணாய்
தூசோடு தூசாய் 
காற்றில் கரைந்தே போவாய்
வீண் கரியாய் எரிந்து சாவாய்..

உன்னை ஒட்டி ஒட்டி
உன்னை உறிஞ்சிட கண்டால்
இடப்பாகம் போனாலும் போ - என
உடன்வாழாதே உடனே வா..!!

உயிர்தேடி உயிர்தேடி
தன் உளம்காட்ட துடிக்கின்ற
உத்தமப் பெண்ணோடு சேர்..
இல்லேல் துணிந்து நீ
துறவறம் பூண்...

அன்பும் காதலும்
ஆழியாய் இன்பமும்
மண்ணில் பூத்திடும் பார்..
உளகாதலியவளை நீ சேர்..

உன்னில் தன்னை ஊற்றிட
விண்ணில் உன்னை சேர்த்திட
உனக்காக தன்னை தந்தால்
அவள் துகில்துவை 
துகில்துவை
தப்பேதும் இல்லை...

தாய்க்கு நிகராய் உன்னை
தரணிக்கு ஏற்ற துடிக்கும்
இன்னொரு தாயாவாள் உனக்கு 
இவளே உன் விடியற்கிழக்கு..!!
,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
,,,,,
,,,
,

Monday, May 30, 2011

சோகமாய்...ஒரு கவிதை...!!







இருப்பதில் இருப்பது
ஏதுமில்லை எனவே
இருப்பதா வேண்டாமா
யோசிக்கிறேன்..

பொறுமை என்னை
போவென விட்டபின்
பொருப்பதா போகவா
யோசிக்கிறேன்..

நன்மையும் தீமையும்
தீர்க்கமாய் தெரிந்தபின்
தீயில் தீய்ந்திட
யோசிக்கிறேன்..

சுட்ட பழங்கள் எல்லாம்
சுடாமல் போனபின்
சுடலையில் சுடப்பட
யாசிக்கிறேன்..

அண்டமும் பிண்டமும்
அவனே ஆனப்பின்
அணைவதா எரிவதா?
யோசிக்கிறேன்..

நேசங்கள் அத்தனையும்
வேஷங்கள் ஆனப்பின்
காற்றோடு கரைந்திட
யாசிக்கிறேன்..

மண்ணும் நீரும்
கொஞ்சம் காற்றும்
கலவையாய் கலந்து
கொடுத்த உடம்பை
கவனமாய் கழட்டிவிட்டு
கரைந்திட போகிறேன்..

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்

வருந்துகிறேன் 
இங்கு வந்தமைக்கு
திரும்புகிறேன் 
என் தாய்வீட்டிற்கு!!



Monday, April 4, 2011

நீ காதலின் புன்னகை..!




உண்மைதான் புரிகிறது..
உன் பாசம் தெரிகிறது..

காதல் கொண்ட கண்ணில்
கோபம் கொட்டிக் கிடக்கிறது..

ஆசை சொல்லும் இதழில்
ஆத்திரம் பொங்கி வழிகிறது..

புன்னகை பூக்கும் முகம்
பூகம்பமாய் என்னை பார்க்கிறது..

தென்றல் வீசும் பேச்சு
இன்று இடியென இடிக்கிறது..

சாரல் வீசும் சொற்கள்..
கற்கள் வீசி செல்கிறது

வண்ண கண்களை கத்தியாக்கி
என் இதயத்தில் கீறாதே..

சொற்களின் சூரிய சுட்டீல்
என்னை சுட்டுவிடவும் பார்க்காதே..

தாமதம் தவறுதான்..
தயவுசெய்து என்னை மன்னி..

நாம் காதல்செய்யும் நேரமிது
புரிந்துகொள்ளடி என் கன்னி..

கண்கள் மெல்ல பார்த்து
காற்றாட காலாட நடந்து
காதல் செய்வதை விட்டுவிட்டு..

அட..
இதோ.. வருகிறது..
இன்னும் கொஞ்சம்..


அட வந்துவிட்டதே புன்னகை..!!
என் அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் நகை..!!



Wednesday, March 30, 2011

என் உயிரினும் மேலான..femaleக்கு..



நீ தயவுசெய்து சிரிக்காதே..
பொறாமையில் பூப்பதில்லையாம்..
சொர்க்கத்தில் பூக்கள்..

நீ தயவுசெய்து முறைக்காதே..
என்னை விட சூடா என்று
சுருங்கிப்போகிறான் சூரியன்..

நீ தயவுசெய்து அழாதே..
என்னைவிட அதிகம் தண்ணீர்..
நடுங்கிப்போகிறது நயாகரா..

நீ தயவுசெய்து நடக்காதே..
உன் பாதத்தின் மென்மையில்
உருகிவிடுகின்றன சாலைகள்..

நீ எதையும் தொடாதே..
தொட்டதெல்லாம் தங்கமானால்
தங்கத்திற்கும் ஏது மதிப்பு..??

நீ பேசவே செய்யாதே...
வரும் வார்த்தைகளை எல்லாம்
பொருக்கிகொண்டு ஓடுகிறது காற்று..

நீ எதையும் பார்க்காதே..
பார்ப்பதெல்லாம் பாசம்கொண்டு
பின்னால் வருகிறது உன்னோடு..

நீ பிறக்கத்தான் நான் பிறந்தேனாம்..
நாம் சேரத்தான் பூமி வந்ததாம்..
நாம்தானாம்

அந்த ஆசை  ஆதாமும்..
அழகி ஏவாளும்..
....
...
..
.

Monday, March 28, 2011

உன் பார்வையில்...!




புரட்டும் புத்தகம் பிடுங்கி எறிந்து
புதிதாய் பார்த்தாய் என்னை..

சீவி முடித்த தலை கலைத்து
சிரித்து பார்த்தாய் என்னை..

ஒரு கால் ஷூவை ஒளித்துவைத்து
ஒருமாதிரி பார்த்தாய் என்னை..

வெறும் தட்டை வெட்டென வைத்து
வெகுளியாய் பார்த்தாய் என்னை..

சட்டைபை நிறைய சில்லரை கொட்டி
சின்னதாய் பார்த்தாய் என்னை..

கைப்பையை காலியாக்கி
காளியாய் பார்த்தாய் என்னை..

நான் வாசல் நெருங்க
நீ ஓடிவந்து
கோபமாய் கிட்டே வந்து
காதோரம் சொன்னாய் நீ..

“லூஸே..இன்னைக்கு ஞாயிற்றுகிழமை”..


:))))

Tuesday, February 15, 2011

தீண்டல்..!!




கண்சிமிட்டும் கணமொன்றில்
என்னை கடந்துபோகும் நேரத்தில்
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கன்னங்களை..

மெல்ல வந்தமரும்
மேனியெங்கும் பூவாய் நீயமர
தீண்டத்துடிக்கிறேன்.. உன் உள்ளங்கைகளை..

ஜல்ஜல் சத்தமிட்டு
என்னை ஸ்ருதியிழக்க செய்தோட..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கொலுசுப்பாதங்களை..

சமையலின் சமயங்களில்..
சத்தமிடாமல் சத்தமிடும் வளையலால்..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் வளைகரத்தை..


குழந்தையாய் கொஞ்சம்
குழந்தையை நீ கொஞ்ச..
தீண்டத்துடிக்கிறேன் அந்த மெல்லிடையை..

என்னடி பார்க்கிறாய்
என்று கேட்க தலைகுனிவாய்..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த தீக்கண்களை..

காதலோடு வந்து
காதோரம் சுவாசம் தந்து..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த மணிக்கழுத்தை..

தீயே!!நான்..

தீண்டலின் தீண்டலில்
தீயாய் தீய்ந்ததில்
தீந்தமிழ் கொண்டிங்கு
தீட்டினேன் ஓர் கவிதை..!!

Sunday, February 6, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்..சில கவிதைகளோடு!!



தொட்டு போன தென்றல்
கடந்து ஓடும் நதி
கண்முன் மறையும் சூரியன்
உதிர்ந்துவிழும் பூ
இவை எதுவும் பாதிக்கவில்லை
என்னை மறந்துசென்ற உன்னைப்போல்..!!



காத்திருக்க சொன்னாய்
பொறுமையோடு
சேர்ந்திருக்க சொன்னாய்
நட்போடு
பூத்திருக்க சொன்னாய்
சிரிப்போடு
எல்லாமுமாய் இருக்கிறேன்..
நீ என்னை மறந்துபோன பின்னும்..

Saturday, November 13, 2010

நீ,நான்,நிலா



செல் எனும் வார்த்தையெங்கும்
வா என்பதை  மறைக்கிறாய்..

ச்சீ என்கிற கொச்சை சொல்லில்
இச்சை சேர்த்து கொல்கிறாய்..

ம்ம் என்ற மௌன சொல்லில்
பேசேன் என்றே ஏங்குகிறாய்..

போ என்று விரட்டும் சொல்லில்
விரைந்து வா என்று மிரட்டுகிறாய்..

முறைக்கும் பார்வை பார்த்தெனை
முறையற்ற மனிதனாக்குகிறாய்..

பூத்து நிற்கும் புன்னகையதில்
புதியவளாய் என்னுள் பூக்கிறாய்..

நான் பேசாதே சமயம்- பேவிடு
என்று பேசாமலே கெஞ்சுகிறாய்..

முத்தம் ஒன்று கேட்டுவிட்டால்
சத்தமில்லாமல் கொஞ்சுகிறாய்..

முத்தத்தூரல் ஓய்ந்தபின்னே
மழையாய் நெஞ்சை மிஞ்சுகிறாய்..

அன்று சிரித்திருந்தது உதடுகள்,

 துடித்திருந்தது இதயங்கள்,

இனித்திருந்திருந்தது யார்...?

நீ,நான், நிலா..!!

Tuesday, November 9, 2010

வாழ்ந்துவிடு..!!


ஓடியாடி விளையாடு..
இந்த ஓய்வற்ற வாழ்க்கை விளையாட்டை..

யாரும் போடவில்லை சட்டம்..
இது யாருக்கும் புரியா திட்டம்..

பத்தாது இந்த வாழ்வு
பத்து நூறாயிரம் வாழ்க்கை வாழ்..
வாழும் கணமெல்லாம்..
வாழ்வை உறிஞ்சி வாழ்!!

விட்டுவிடாதே..
சொட்டுவிடாதே..
முழுதாய் குடி..
மிச்சம் விடாதே..!!

நீ மிச்சத்தில் 
பிறந்த மிருகம்..
நீ எச்சத்தில் 
பிறந்த சொச்சம்..
ஆனால் உச்சம்
என்பதெல்லாம் உனக்கு
துச்சம்..

அனுமதி நதியை
உன்னை அள்ளிகொண்டுபோக
அனுமதி வாழ்வை
உன்னுள் தன்வழிபோக..

துளியாய் துள்ளாதே..
துடித்தே  ஆவியாவாய்..
கடலில் குதித்துவிடு..
கடலாய் மாறிவிடு..

நீ நின்ற இடம் 
நாளை உனக்கில்லை..
நீயே யாதுமானால்
நிறைவை தவிர வேறெதுவுமில்லை.


Monday, August 9, 2010

ஹைக்கூ என்கிற பேரில்!!

பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!

ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.

வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!

வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!

கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?

இலவசம் : 
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!

Sunday, April 4, 2010

ஏன் இதயம் உடைத்தாய் ...நொறுங்கவே??

http://i.ehow.com/images/a04/gs/7k/over-broken-heart-800X800.jpg

நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,
நனையாதது பாதம் மட்டுமே,
என் நெஞ்சமெல்லாம் ஏனோ ஈரம்..


நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,
இன்னும் எவ்வளவு தூரம்
ஏனோ மழை வந்தததென் விழியில்.


தூரத்தில் தெரிகிறது பூந்தோட்டம்,
தலையாட்டும் பூக்களின் ஆட்டம்,
இதோ கார்மேகங்களில் கூட்டம்,
ஏனோ என்நெஞ்சில் இன்னும் வாட்டம்.


வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இது தனிக்கூடம்,
கண்களும் இதயமும் நனைந்து
இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.


காதலிக்கிறேன் என்றாள் அன்று
மறந்துவிடு என்றாள் அன்று
அப்பா மறுப்பார் என்று
தவிக்கவிட்டு அவனோடு சென்றாள் இன்று..!!

எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றது,
காதல் இன்னும் வாழ்கிறது
காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.

******** ******** ******** ******

(பி.கு): என் நண்பன் ”டேய்..நீ சென்ஸிட்டிவ்..இந்த படம் வேணாம்..சொன்னா கேளு”ன்னு சொல்ல சொல்ல கேட்காமல் ”விண்ணை தாண்டி வருவாயா” பார்த்ததன் விளைவு.. நல்ல திரைக்கதை...நல்ல படம்..நோ மோர் கமெண்ட்ஸ்..!!

(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)

Tuesday, February 9, 2010

அவளுக்கான என் காதல் கவிதைகள்


நன்றிகள் சில..
நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை
காணாத கண்ணீர் கண்களோடு...!!

** ** ** **
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..
பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்
தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..
தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!

** ** ** **
சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???

** ** ** **

தமிழரசிக்காக கிறுக்கிய கவிதைகள் இவை..!! :)

Monday, January 25, 2010

சிகப்பாய் சில பூக்கள்!!


முதல் புன்னகை,
சின்ன அறிமுகம்,
நயமான பேச்சுக்கள்,
பூத்தன அவர்களிடையே
கண்ணியமாய் வெள்ளை பூக்கள்..;

தொடும் தூரத்தில் விரல்கள்,
தொட அஞ்சும் நெஞ்சம்,
கண் பார்த்த பேச்சு,
பூத்தன அவர்களிடையே
நட்பாய் மஞ்சள் பூக்கள்..;

பார்த்த கணம் புன்னகை,
பேச்சில் தொடும் அக்கறை,
பிரியும் போது மென்வருத்தம்,
பூத்தன அவர்களிடையே,
பாசமாய் நீலப் பூக்கள்..;

மறந்து விட்ட கர்ச்சீப்,
ரசித்து பார்த்த புத்தர் சிலை,
சருகான மல்லிப்பூ,
பூத்தன அவர்களிடையே,
நேசமாய் ஊதா பூக்கள்..;


மன்னித்துவிடு
நான் உன்னோடு அப்படி
பழகவில்லை;
இனிமே நான் சந்திக்க வேண்டாம்..

சில கணங்களில்
செத்து போயின
சிகப்பாய் சில பூக்கள்..!!

Wednesday, December 9, 2009

யோசித்தேன்..எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ-3

பேருந்து

http://varnajaalam.files.wordpress.com/2007/07/patient_bus.jpg

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

http://www.indolinks.com/websights/diwali/crackers1.jpg

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************

குடிநீர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs137ZygRRf4ILwcQMUu3odywCl4M0D4NuwR5DXqaIBGwepqx45anp6TffibseAPv3Y6OkHdY8tJeKJBxgrTWdmN86iRblzInSFlBAELKfdl0p4ROfHDinetcznI-KK0QbNPpYUUSJqFw/s320/Chennai_water.jpg

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************

பணம்

http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************

கண்டுபிடிப்பு

http://www.northcoastjournal.com/media/issues/062509/06-25-09-NCJ-Water-on-Moon.jpg

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************

தாய்பால்

http://www.stockphotopro.com/photo-thumbs-2/AWT2TY.jpg

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************

மகிழ்ச்சி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc9rcu85ZiEZRYir6Nb5sN98YP16aVrDluqYAtr_RUvAl_wd6PflLcAPg5mj7arazBPkDlX1Lb8p4Go28TROGYzQgfevo6D-05gtyIfhBMhifuCWpMfVCCwkLK8Ycpojvm2JbpiOBH_eE/s220/jaipurfoot-zambia1.jpg

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************

முத்துசரம்


http://www.thepearloutlet.com/buypearls_images/South_Sea_pearl_necklace.jpg
அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************

தமிழரசி

http://4.bp.blogspot.com/_QyOswGA6pnY/Stqv6Twyn_I/AAAAAAAAAzk/HR6Fx2IU4eY/S220/DETA-127.jpg

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!

Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!

Sunday, November 15, 2009

கண்டதும் வென்றதும்..!!

http://a.espncdn.com/photo/2008/0810/oly_g_kitajima_300.jpg

சிரித்தேன்..

கிண்டலடிக்கிறார்கள்..!

அழுதேன்..

வீணாய் போகிறவன் அழுவான் என்றார்கள்..!

முறைத்தேன்..

லாயக்கு இல்லாதவன் முறைக்கிறான் என்றார்கள்..!

வருந்தினேன்..

வருத்தம் பணம் சேர்க்காது என்றார்கள்..!

அன்பு காட்டினேன்..

பணம் பிடுங்க நெருங்கிவருகிறான் என்றார்கள்..!

எது செய்தாலும் என்ன செய்தாலும்..

அந்த நாலு பேருக்கு நாம் நல்லவரில்லை..

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டால்..

இந்த அகிலத்தில் நமை போல் வல்லவரில்லை..!!

வாழ்க்கை சிறந்தது..

வாழ்தல் அறியது..

வாழ துணிந்துவிட்டால்..

அந்த வானும் சிறியது..!!

Saturday, October 24, 2009

மீண்டும் சில காதல் கவிதைகள்!!

காதல் சொன்னபோது
தந்த ரோஜா
இறந்துவிட்டது அவள்
தூக்கி எறிந்தபோது..
கொல்லப்பட்டது அவைகள்
ஏறி சென்றபோது..

***************************

இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை
நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை
தூரங்கள் அதிகப்பட மனமில்லை

இருந்தாலும் வேறு வழியில்லை..
விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!!

******************************


செல்லாதே என்னை விட்டு
சில தூரம் போனாலும்
தொடர முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில அடிகள் கடந்தாலும்
பிரிய முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில மணித்துளிகள் நடந்தாலும்
மறக்க முடியவில்லை உன்னை..

இப்படி எல்லாம் புலம்புகிறேன்..
நீ விடிகாலையில் கட்டில் விட்டு
கடந்து போன போது..!!

Friday, October 23, 2009

நதியும்..சில படகுகளும்..!!


சூரிய கதிர்கள்
செல்லும் வழி
எப்போதும் அறியாது..

ஓடும் நதி
தன் பாதை
எப்போதும் அறியாது..

வெள்ளை மேகம்
தன் இலக்கு
எப்போதும் தெரியாது..

வளரும் மரம்
தன் வயதை
எப்போதும் அறியாது..

சுற்றும் பூமி
சுற்றும் காரணம்
எதுவும் அறியாது..

எப்படி என்றால்
ஏழாயிரம் விளக்கமுண்டு.

ஏன் என்றால்
எவனுமில்லை விளக்க..

வாழ்க்கை எனும் நதியிலே
வாழ்வை போல் இன்பமில்லை..

உடலே அதன் படகு..
உன் மனமே அதில் பயணி..
வாழ்வே அந்த நதி..

நிச்சயமாய் பயணம் முடிவற்றது
சில படகுகள் மாறி ஏறிக்கொள்வோம்..

நிச்சயமாய் பயணத்தில் அர்த்தமுள்ளது
பயணிக்கையில் அதை நாம் அறிந்துகொள்வோம்.