
நெடு நாட்களாக இந்த ஆசை மனதை நெருடிக்கொண்டே இருந்தது.
இன்று அதற்கான சிறப்பான வழி ஒன்று கிடைத்துவிட்டது.
ஆம்.. அதுதான் இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது!
(This Blogger is My Best Friend!) விருது.
இதை ஏற்படுத்த காரணம் உண்டு.
முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.
இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.
மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.
இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.
இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :
1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
எனக்கு பிடித்த பன்னிரெண்டு பேர் :
1. நாமக்கல் சிபி
(நம்மை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர், தல)
2. தமிழரசி
(ரெண்டாவது அம்மா, இதுக்குமேல சொல்ல ஆரம்பிச்சேன் ஒரு வரி பத்தாது)
3. புதுகைத் தென்றல்
(நல்ல தோழி, இவங்க பதிவில் இல்லாத நல்ல விஷயங்களே இல்லை எனலாம்)
4. குசும்பர்
(இவர் பதிவு பக்கம் போனாலே என்னை வீட்டில் ஒரு மாதிரி பாக்குறாங்க..அப்பூடி சிரிப்போம்ல!!)
5. வடகரை வேலன்
(சார்.. சிம்பிளி சூப்பர் சார், எழுத்தில் எளிமை அத்தனை எழுத்துக்களும் அருமை)
6. தூயா
( ஒரு பெண் பூ..ஒரு பெண் போராளி, இவங்க கிச்சன் எனக்கு உசுரு)
7. ஜீவ்ஸ்| jeeves
(நல்ல நண்பர்...புகைப்படங்களில் பேசுவார், இவரிடம் பேச ஆரம்பிச்சேன்... நாள் போறதே தெரியாது, ஒரு மனித லைப்ரரி)
8. ஜெஸ்வந்தி
(கவிதையிலும் கதையிலும் என்னை சிந்திக்க வைத்தவர்)
9. நட்புடன் ஜமால்
(இவர் நம்ம ஆளு!, கமெண்ட் அடிச்சே நண்பர்கள் சேர்த்தவர், நல்ல மனிதர்)
10. ரம்யா
(இவங்களோட பயணக் கட்டுரைக்கும், குட்டீஸ் கதைகளுக்கும் நான் ரசிகன்)
11. மயாதி
(இவரின் கொஞ்சும் கவிதைகள் என் மனதை கொஞ்சும்)
12. சுரேஷ் குமார்
(இவரின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!)
இன்னும் பலர் இருக்காங்க..ஆனால்.. என் விதிய நானே மீறக்கூடாது .. அதனால் மத்தவங்க கோச்சிக்காதீங்க..
(டிஸ்கி)
ஆமா..இந்த விருதை எனக்கு யார் தர போறீங்க?