Showing posts with label புவி வெப்பமாதல். Show all posts
Showing posts with label புவி வெப்பமாதல். Show all posts

Friday, March 27, 2009

விளக்கை அணை .. உலகம் வாழட்டும்


முதல் முதலாக புவி வெப்பமடைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகளில் உள்ள மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நாளை சனி இரவு 8 : 30 மணி முதல் 9:30 மணி வரை தங்கள் வீடுகளில் விளக்கை அணைத்து தங்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.



இது போன்ற முயற்சி எர்த்ஹவர் என்கிற இயக்கம் மூலமாக 2007ல் துவங்கப்பட்டது.
முதல் முதலாக 2007ல் ஆஸ்திரேலிய மக்கள் 2.2 மில்லியன் பேர் தங்களுடைய வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்து தங்களுடைய ஓட்டினை எர்த் ஹவருக்கு பதிவு செய்தனர்.
அடுத்த ஆண்டே 2008ல் 50 மில்லியன் பேர் தங்களுடைய ஓட்டினை இவ்வாறு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்கத்தை இந்த வருடம் இந்தியாவும் இந்த ஆண்டு ஆதரிக்க முன்வந்துள்ளது.
நமது நாட்டில் இந்த இயக்கத்தினை தலைமையேற்க பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்வந்துள்ளார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்லாமல் உலக வெப்பமாதலில் நமது நாடும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே வரும் சனிக்கிழமை இரவு உங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்து எர்த் ஹவருக்கு உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
உங்களின் ஓட்டுகள் அனைத்தும் பதியப்படுவது மட்டுமின்றி அது
கோபென்ஹாகனில் நடக்கவிருக்கும் புவி வெப்பமடைதல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்படத்தக்கது.

இன்று வரை சரியாக 80 நாடுகளில் உள்ள 825 நகர மக்கள் இதற்கு ஆதரவு தெரிவுத்துள்ளனர்.
நமது நாட்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, HSBC , HP ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஆதவளித்துள்ளன.

நீங்களும் உங்கள் மேலான ஆதரவினை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

மேலும் தகவலுக்கு இங்கே சுட்டவும்.

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.