Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, September 20, 2013

நீயே சொல்..




ஆசை சொல்ல
ஆசையாக இருக்கிறது
ஆனாலும் நெஞ்சம்
சொல்ல தயங்குதே..

சொல்லும் செயலும்
எப்பொழுதும் சொல்லியும்
சொல்லால் சொல்லச்
சொல்லி சொல்லும்
என் இதயம்..

சொல்லால் சொல்லி
சொல்லனோ துயர்ப்பட்டால்
சொற்குற்றம் ஏற்பட்டு
சொல்வது தடைப்பட்டால்
சொல்லி மறுத்துவிட்டால்
சொல் வராது போய்விட்டால்..

சொல்..நான் என்ன செய்வேன்..
சொல்லட்டுமா..என் காதலை..
சொல்லிலா மவுனத்தின் வழியில்?



Wednesday, July 6, 2011

காதலிக்க நேரமில்லை...!



நீ தொட்டுசென்ற பிறகுதான்
துவங்குகிறது என் நாள்..

நீ சுவைத்த மிச்சமே
தேனீராய் கிடைக்கிற்து தினமும்..

நீ உப்பை சரிப்பார்த்தபின்தான் 
நான் சாப்பிடவே அமர்கிறேன்..

தண்ணீர் பாட்டிலின் வாயில்
உந்தன் உதடுகளின் தடம் தினந்தோறும்..

நீ மிச்சம்வைத்த உணவை
மிச்சமில்லாமல் முடிக்கிறேன் மதியம்..

நீ ஓட்டிப்பார்த்ததால் மென்மைகண்டன
என் பைக்கின் கைப்பிடிகள்..

நீ அனுப்பியதாய் சொல்லிதான்
தொட்டுபோகிறது மாலைக்காற்று..

நீ போட்ட கோலமதனால்
தள்ளியே நிறுத்திகிறேன் வாகனத்தை..

வந்தவனை அள்ளிகொண்டு
வாஞ்சையாய் காபி தர..

உனக்கு என்று கேட்டதும்
உனக்குதான் முதலில் என்கிறாய்..

நான் என்னடி செய்தேன் 
என்றே உன்னை கேட்க..

நீ புத்தன் நான் யசோதரை
உன் சேவை என் தேவை..
உன் காதல் என் கூலி..
என்றாயே பார்க்கலாம்..

இப்படி நீயே எங்கும்
என்னை சூழ
காதலின் கடலின் 
நான் மூழ்கியே வாழ


இனி காதலிக்க தனியாய் 
ஏது நேரம்..

காதலிக்கே மொத்தமாய் வாழும் போது..!!

Saturday, June 18, 2011

காதலிப்பவனா நீ..? கொஞ்சம் இங்கே கவனி..!!





உடல்தேடும் பெண்ணோடு
ஒருபோதும் ஒட்டாதே..
பொருள்தேடும் பெண்ணோடு
பொடியேனும் சேராதே..
மணம்தேடும் பெண்ணோடு
மணித்துளியும் செல்லாதே..

சொல்லாலும் செயலாலும்
சொல்லாத செயலாலும்
சொல்லொனா துயரம் சேரும்
நான் சொல்லியும் இவரோடு 
சேர்ந்தால்..

வாழ்க்கை என்னவென
வழியெங்கும் தேடிடும் நீ
வீணாய் தொலைப்பாய் அஃதை..
வீண் வீணை இடைதனில்
மயங்கி சேர்ந்தால்..

மண்ணோடு மண்ணாய்
தூசோடு தூசாய் 
காற்றில் கரைந்தே போவாய்
வீண் கரியாய் எரிந்து சாவாய்..

உன்னை ஒட்டி ஒட்டி
உன்னை உறிஞ்சிட கண்டால்
இடப்பாகம் போனாலும் போ - என
உடன்வாழாதே உடனே வா..!!

உயிர்தேடி உயிர்தேடி
தன் உளம்காட்ட துடிக்கின்ற
உத்தமப் பெண்ணோடு சேர்..
இல்லேல் துணிந்து நீ
துறவறம் பூண்...

அன்பும் காதலும்
ஆழியாய் இன்பமும்
மண்ணில் பூத்திடும் பார்..
உளகாதலியவளை நீ சேர்..

உன்னில் தன்னை ஊற்றிட
விண்ணில் உன்னை சேர்த்திட
உனக்காக தன்னை தந்தால்
அவள் துகில்துவை 
துகில்துவை
தப்பேதும் இல்லை...

தாய்க்கு நிகராய் உன்னை
தரணிக்கு ஏற்ற துடிக்கும்
இன்னொரு தாயாவாள் உனக்கு 
இவளே உன் விடியற்கிழக்கு..!!
,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
,,,,,
,,,
,

Monday, April 4, 2011

நீ காதலின் புன்னகை..!




உண்மைதான் புரிகிறது..
உன் பாசம் தெரிகிறது..

காதல் கொண்ட கண்ணில்
கோபம் கொட்டிக் கிடக்கிறது..

ஆசை சொல்லும் இதழில்
ஆத்திரம் பொங்கி வழிகிறது..

புன்னகை பூக்கும் முகம்
பூகம்பமாய் என்னை பார்க்கிறது..

தென்றல் வீசும் பேச்சு
இன்று இடியென இடிக்கிறது..

சாரல் வீசும் சொற்கள்..
கற்கள் வீசி செல்கிறது

வண்ண கண்களை கத்தியாக்கி
என் இதயத்தில் கீறாதே..

சொற்களின் சூரிய சுட்டீல்
என்னை சுட்டுவிடவும் பார்க்காதே..

தாமதம் தவறுதான்..
தயவுசெய்து என்னை மன்னி..

நாம் காதல்செய்யும் நேரமிது
புரிந்துகொள்ளடி என் கன்னி..

கண்கள் மெல்ல பார்த்து
காற்றாட காலாட நடந்து
காதல் செய்வதை விட்டுவிட்டு..

அட..
இதோ.. வருகிறது..
இன்னும் கொஞ்சம்..


அட வந்துவிட்டதே புன்னகை..!!
என் அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் நகை..!!



Wednesday, March 30, 2011

என் உயிரினும் மேலான..femaleக்கு..



நீ தயவுசெய்து சிரிக்காதே..
பொறாமையில் பூப்பதில்லையாம்..
சொர்க்கத்தில் பூக்கள்..

நீ தயவுசெய்து முறைக்காதே..
என்னை விட சூடா என்று
சுருங்கிப்போகிறான் சூரியன்..

நீ தயவுசெய்து அழாதே..
என்னைவிட அதிகம் தண்ணீர்..
நடுங்கிப்போகிறது நயாகரா..

நீ தயவுசெய்து நடக்காதே..
உன் பாதத்தின் மென்மையில்
உருகிவிடுகின்றன சாலைகள்..

நீ எதையும் தொடாதே..
தொட்டதெல்லாம் தங்கமானால்
தங்கத்திற்கும் ஏது மதிப்பு..??

நீ பேசவே செய்யாதே...
வரும் வார்த்தைகளை எல்லாம்
பொருக்கிகொண்டு ஓடுகிறது காற்று..

நீ எதையும் பார்க்காதே..
பார்ப்பதெல்லாம் பாசம்கொண்டு
பின்னால் வருகிறது உன்னோடு..

நீ பிறக்கத்தான் நான் பிறந்தேனாம்..
நாம் சேரத்தான் பூமி வந்ததாம்..
நாம்தானாம்

அந்த ஆசை  ஆதாமும்..
அழகி ஏவாளும்..
....
...
..
.

Tuesday, February 15, 2011

தீண்டல்..!!




கண்சிமிட்டும் கணமொன்றில்
என்னை கடந்துபோகும் நேரத்தில்
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கன்னங்களை..

மெல்ல வந்தமரும்
மேனியெங்கும் பூவாய் நீயமர
தீண்டத்துடிக்கிறேன்.. உன் உள்ளங்கைகளை..

ஜல்ஜல் சத்தமிட்டு
என்னை ஸ்ருதியிழக்க செய்தோட..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கொலுசுப்பாதங்களை..

சமையலின் சமயங்களில்..
சத்தமிடாமல் சத்தமிடும் வளையலால்..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் வளைகரத்தை..


குழந்தையாய் கொஞ்சம்
குழந்தையை நீ கொஞ்ச..
தீண்டத்துடிக்கிறேன் அந்த மெல்லிடையை..

என்னடி பார்க்கிறாய்
என்று கேட்க தலைகுனிவாய்..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த தீக்கண்களை..

காதலோடு வந்து
காதோரம் சுவாசம் தந்து..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த மணிக்கழுத்தை..

தீயே!!நான்..

தீண்டலின் தீண்டலில்
தீயாய் தீய்ந்ததில்
தீந்தமிழ் கொண்டிங்கு
தீட்டினேன் ஓர் கவிதை..!!

Sunday, February 6, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்..சில கவிதைகளோடு!!



தொட்டு போன தென்றல்
கடந்து ஓடும் நதி
கண்முன் மறையும் சூரியன்
உதிர்ந்துவிழும் பூ
இவை எதுவும் பாதிக்கவில்லை
என்னை மறந்துசென்ற உன்னைப்போல்..!!



காத்திருக்க சொன்னாய்
பொறுமையோடு
சேர்ந்திருக்க சொன்னாய்
நட்போடு
பூத்திருக்க சொன்னாய்
சிரிப்போடு
எல்லாமுமாய் இருக்கிறேன்..
நீ என்னை மறந்துபோன பின்னும்..

Saturday, November 13, 2010

நீ,நான்,நிலா



செல் எனும் வார்த்தையெங்கும்
வா என்பதை  மறைக்கிறாய்..

ச்சீ என்கிற கொச்சை சொல்லில்
இச்சை சேர்த்து கொல்கிறாய்..

ம்ம் என்ற மௌன சொல்லில்
பேசேன் என்றே ஏங்குகிறாய்..

போ என்று விரட்டும் சொல்லில்
விரைந்து வா என்று மிரட்டுகிறாய்..

முறைக்கும் பார்வை பார்த்தெனை
முறையற்ற மனிதனாக்குகிறாய்..

பூத்து நிற்கும் புன்னகையதில்
புதியவளாய் என்னுள் பூக்கிறாய்..

நான் பேசாதே சமயம்- பேவிடு
என்று பேசாமலே கெஞ்சுகிறாய்..

முத்தம் ஒன்று கேட்டுவிட்டால்
சத்தமில்லாமல் கொஞ்சுகிறாய்..

முத்தத்தூரல் ஓய்ந்தபின்னே
மழையாய் நெஞ்சை மிஞ்சுகிறாய்..

அன்று சிரித்திருந்தது உதடுகள்,

 துடித்திருந்தது இதயங்கள்,

இனித்திருந்திருந்தது யார்...?

நீ,நான், நிலா..!!

Tuesday, February 9, 2010

அவளுக்கான என் காதல் கவிதைகள்


நன்றிகள் சில..
நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை
காணாத கண்ணீர் கண்களோடு...!!

** ** ** **
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..
பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்
தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..
தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!

** ** ** **
சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???

** ** ** **

தமிழரசிக்காக கிறுக்கிய கவிதைகள் இவை..!! :)

Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!

Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.



http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

Thursday, October 22, 2009

மறந்த பிரிதலும்.. மறவாத காதலும்.!

http://farm1.static.flickr.com/24/100790656_348ed6701a.jpg



நீ அளித்து போன முத்தம்
நீ சொல்லி போன வார்த்தை
நீ தந்து போன அந்த குட்டி கரடி பொம்மை
நீ எறிந்துவிட்டு போன அந்த கைக்குட்டை
நீ சிதறவிட்ட சில கண்ணீர்துளிகள்..

அப்போது தெரியவில்லை..
அத்தனையும் கடைசி என்று..
இப்போது உணர்கிறேன்..
காதலின் வலியென்ற ஒன்று..!

Saturday, October 17, 2009

திரை விமரசனம்- Eternal Sunshine of a Spotless Mind (+18 only)

ஹாய்..


புது டெம்ளேட் நல்லா இருக்கும்னு நம்பறேன்..!!


ரொம்ப நாளாச்சுங்க திரைவிமர்சன பதிவெழுதி..

இப்போதான் சரியான நேரமும் விமர்சனத்துக்கு ஒரு படமும் கிடைச்சுது..அப்புறம் கேக்கவா வேணும்..!!

இன்னிக்கு விமர்சனத்துக்கு எடுத்துகிட்ட படம் “Eternal Sunshine of a Spotless Mind"..

இந்த படத்தை IMDB rating-ல தான் முதன்முதலில் பார்த்தேன்..

ஆனால் “Rated-R".. :(

Jim carrey யின் அசத்தலான நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் இது..







கதையின் போக்கை புரிஞ்சிக்க முதலில் இருந்தே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

எப்பவும் போல Jim-காமெடி பண்ணி கலக்குவாரு.. நல்ல நகைச்சுவை இருக்கும்னு பார்த்தா..
மனுஷன் ரொம்ப சீரியஸாவே இருக்கார்..

அடுத்த இன்ப அதிர்ச்சி..நம்ம டைட்டானிக் ஹீரோயின் (கேட் வின்ஸ்லெட்) பார்க்க 70’s ஹிப்பி மாதிரி ஒரு திமிரான(அழகான) லுக்கோட வளைய வராங்க..!!



முதல் 6 காட்சிகள் கவிதையோ கவிதை..!!

ஜிம் கேரியை ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் ஹீரோயின் அவரிடம் பேச்சு கொடுக்கிறார்..
அந்த பேச்சு நல்ல நட்பாக மாறி பிறகு காதலில் முடிகிறது.. ஆனால் சில பொய்களும் கொஞ்சம் டாமினேஷனும் குறுக்கே வர
அவர்களின் காதல் சிதைகிறது. சிறது காலம் விரக்தியில் வாழும் ஜிம் கேரி தன் காதலியை மீண்டும் சந்திக்க அவர் வேலை செய்யும்
கடைக்கு செல்கிறார். ஆனால் அவளோ அவரை சுத்தமாக மறந்தே விட்டார்...கவனிக்க.. சுத்தமாக என்றால்..தன் மனதில்,மூளையில் இருந்து
அவரின் நினைவுகள் அனைத்தையும் அழித்தே விட்டார்.(கொஞ்சம் சையின்ஸ் ஃபிக்‌ஷன்).. அதிர்ந்து போகிறார் ஜிம் கேரி.








அவரின் நண்பர் ஒருவர்
இது சகஜம்தான்..இதே போல் நீயும் அவளை அழித்துவிட்டு ஏன் நிம்மதியாக வாழக்கூடாது என்று கேட்க ஜிம் கேரிக்கு பொறி தட்டுகிறது.
அவளே நம்மை தூக்கி எறிந்த பிறகு நாம் மட்டும் ஏன் அவளை நினைத்து உருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல
அந்த நினைவுகளை அழிக்கும் டாக்டரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஏன் அவள் காதலியை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது போல சில பல
கேள்விகளோடு நினைவுகளை அழிக்கும் வேலையை துவங்குகிறார்.

ஜிம்மின் வீட்டிலேயே நினைவழித்தல் ட்ரீட்மெண்ட் தருவதாக உறுதியளித்த டாக்டர் அவரை விட்டிற்கு அனுப்பிவிடுகிறார்.வீட்டிற்கு வந்ததும்
ஜிம் கேரிக்கு மீண்டும் அதே விரக்தி தொற்றி கொள்கிறது. அதே நேரம் அவர் வீட்டிற்கு இரண்டு அஸிஸ்டண்ட் டாக்டர்கள் வர.. நினைவழித்தல்
வேலை துவங்கிவிடுகிறது.





ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்லும் ஜிம் கேரியின் மூளையினை Brain Mapping மூலம் ஆராய்கிறார் டாக்டர். குறிப்பிட்ட இடத்தில் அவரின்
காதல் நினைவுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். இப்போது ஜிம்மின் மனம் அவரின் மூளைக்குள் பயணிக்கிறது..அவரின் நினைவுகளை அவரே
மூன்றாவது மனிதராக நின்று பார்க்கிறார்..சில நேரம் அவரே அந்த நினைவுகளை கட்டுபடுத்தவும் முடிகிறது...


அந்த ட்ரீட்மெண்ட் நடந்துகொண்டிருக்கும் போது ஜிம்மின் வீட்டில் இந்த அஸிஸ்டண்ட் டாக்டர்கள் போடும் ஆட்டம்.. Untoleratable..!! இதுங்க அடிக்கிற லூட்டிக்கு தான் படம் "R" rating வாங்கிடுச்சுன்னு கூட சொல்லலாம்..!!


இப்போது துவங்குகிறது போராட்டம்.


ஜிம்-மின் காதல் நினைவுகள் அழிக்கப்பட ஆரம்பித்தவுடன் அவருக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. அவர் தன் நினைவுகள் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்று
யோசிக்கிறார்.. தன் காதலில் சின்னமாய் நம் நினைவுகளாவது இருக்கட்டும் என்று முடிவு செய்யும் ஜிம்.. அவரின் காதலியை கூட்டிக்கொண்டு..
கன்னாபின்னாவென்று குழந்தை நாள் நினைவுகளுக்கும் எதிர்கால கனவுகளுக்குள்ளும் புகுந்து கொள்கிறார். இதனால் ஜிம் கேரியின் நினைவுகளை
ஒழுங்காக அழிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இந்த டாக்டர்கள்.



இது ஒரு பக்கம் இருக்க.. தன் அடுத்த பாய் ஃப்ரெண்டோடு விளையாடிகொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் எதோ தோன்றுகிறது. அவர் கண்முன்னே ஜிம் கேரியின் முகமும்
அவர்களின் சில காதல் நினைவுகளும் வந்து மறைகின்றன. தன் காதலனை தன் நினைவுகளை அழித்துவிட்ட அந்த நாள் அவருக்கு ஞாபகம் வர
அவரை தேடி அவர் வீட்டுக்கு கிளம்புகிறார் ஹீரோயின்.

இங்கே ஜிம் தன் காதலியின் நினைவுகளை காப்பாற்ற போராடிகொண்டிருக்க..அவளும் ஜிம்மை தேடி கிளம்ப..

இறுதியில் ஜிம் தன் காதலியின் நினைவுகளை அழிக்காமல் காப்பாற்றினாரா? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? கடைசி பத்து நிமிட கவிதை காட்சிகள் உங்களுக்கு அதை சொல்லும்..!!

சில நெளிய வைக்கும் காட்சிகளை நீங்கள் உங்கள் நினைவிலிருந்து அழித்துவிட்டு..மீண்டும் இந்த திரைப்படத்தை பற்றி நினைத்து பார்த்தால்..அவர்களின் அருமையான நடிப்பும், கதையின் ஆழமும் நிச்சயம் புரியும்...


மேற்படி தகவலுக்கு இங்க பாருங்க..

Thursday, September 24, 2009

யோசித்தேன்.. எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ!!-2

அதிர்ஷடம்

ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்.

சோகம்

நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.


நட்சத்திரம்

அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.


காதல் கயிறு

காசிக்கயிறை பார்க்கிறாள்
அவளின் தாலிக்கயிறை கட்ட
மறுத்த காதலனின் நினைவாக..!!


நினைவு சின்னம்

உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.


மணல் வீடு

கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.

நிர்வாணம்

ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!

Thursday, August 27, 2009

ஒரு துண்டிக்கப்படாத இணைப்பு!


”குட் மார்னிங் சார்.. ஈஸ் திங் ராம்குமார்..”

”யெஸ் ராம்குமார் ஹியர்”

”நாங்க IJKLMN கம்பெனியில் இருந்து பேசுறோம்.
புதுசா ஒரு லோன் ஸ்கீம் ரிலீஸ் பண்ணி இருக்கோம்.
அதை பத்தி உங்ககிட்ட எக்ஸ்பிளையின் பண்ண இருக்கோம்.
ஒரு 5 மினிட்ஸ் ஒதுக்க முடியுமா ப்ளீஸ்”
கெஞ்சியபடி கொஞ்சினாள் அவள்.

“ம்ம்..ஸ்யூர்”..

ஐந்து நிமிடங்கள் முடிந்தது.
குரல் இனித்தது.
சொன்ன விஷயங்கள் மறந்தது.

”சரிங்க பாக்கறேன், நைஸ் வாய்ஸ். நாளைக்கு ஈவனிங் உங்க ஆபீஸ் வரேன்”

“தேங்க் யூ ஸார். ஸீ யூ.. பை”

”பை..”

மகிழ்ச்சியோடு இணைப்பை துண்டித்தாள் அவள்.

அடுத்த ஒரு நிமிஷத்தில் ராம்குமாரின் செல்போன் ஒலித்தது.

புவனா கூப்பிட்டாள்.

”என்னங்க..”

‘என்ன?”

“ வீட்ல கேஸ் தீந்துடும் போல இருக்கு வரும்போது சொல்லிட்டு வந்துடுங்களேன்.”

“ம்ம்.. சரி”

“அப்புறம் ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..பிஸியா?”

”ஆமா.. ஒரு முக்கியமான பைல் பார்த்துட்டு இருக்கேன். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்.. வை”

‘ம்ம்.. சரி..பை”..

எழுந்து காபி குடிக்க நடந்தான் ராம்குமார்.

வருத்தத்தோடு இணைப்பை துண்டிக்காமல் இவள்!!

Tuesday, August 25, 2009

காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!


சேர்ந்தே இருந்த நேரத்தில்
சண்டையிட்டே கழித்தோம்..

பிரிந்த சில நொடிகளில்
ஒருவரில் ஒருவரை இழந்தோம்..

ஏந்தான் நாம் பிரிந்தோம் என்று
ஏங்கியே கழித்தோம்.. நம் பிரிவை!

ஏன் இன்னும் சேரவில்லை என்று
எப்போதும் பார்த்தோம்.. நம் சாலைகளை!

ஏன் இன்னும் விடியவில்லை என்று
மாலை ஏழுமணிக்கே மணி பார்ப்போம் நாம்!

இன்னுமா இருட்டவில்லை என்று
மதியத்திலேயே மதி மயங்குவோம் நாம்!

இப்படி நமக்கான காலமும்
நமக்கான நாட்களும்
நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!

நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து!

Monday, June 22, 2009

என் அருகில் நீ இருந்தால்!!




புத்தம் புது முத்தம்
அதை சொல்லும் ச் எனும் சத்தம்
எப்போதும் என் இதயக்கூட்டில் யுத்தம்..
என்னை ஏனடி கொல்கிறாய் நித்தம்..?

*******
உன்னை அடங்கா பிடாரி என்று
உன் அம்மா சொன்ன போது
அதை நம்பவில்லை நான்..

இப்போது தான் புரிகிறது..
என் உதடுகளுக்கு
நீ அடங்காத போது...!!

************

சொன்னால் கேட்பதில்லை இவை..
எப்போதும் என்னையே சுவை பார்த்தபடி..

உன்னுடைய உதடுகள்!!

**********

அம்மா நீ எனக்கு
சிரிக்க சொல்லிதந்தாய்..

அவள் அழகாய் சிரிக்கிறேன் என்றாள்!!

அம்மா நீ எனக்கு
நடக்க சொல்லிதந்தாய்

அவள் கம்பீரமாய் நடக்கிறேன் என்றாள்!!


அம்மா நீ எனக்கு
அன்பை சொல்லிதந்தாய்

அவள் என்னை காதலிக்கிறேன் என்றாள்!!

*********

பூக்களின் தேசத்துக்கு ஒரே எதிரி நீ..

உன் புன்னகையின் தாக்குதலில்
தினமும் மாலையில் வாடின பூக்கள்!!

********

தேடிகொண்டே இருக்கிறேன்..

உன்னிடம் தொலைந்து போன
என் இதயத்தை

உனக்குள்...!!!

*********

எப்போதும் போல் தான் நடந்து வருகிறாய்..
ஆனால் ஏனடி என் இதயம் மட்டும் இப்படி குதிக்கிறது..?!

எப்போதும் போல் தான் சிரித்து பேசுகிறாய்..
ஆனால் ஏனடி உதடுகள் மட்டும் காய்ந்து போகின்றது..?!

எப்போதும் போல் தான் புன்னகை பூக்கிறாய்..
ஆனால் ஏனடி என் மனம் செத்து செத்து பிழைக்கிறது..?!

எப்போதும் போல் தான் ஐ லவ் யூ என்கிறாய்..
ஆனால் ஏனடி அந்த மூன்று வார்த்தைகளும் என்னை மூர்ச்சையாக்குகிறது..?!

**********

Thursday, May 21, 2009

அவளின் சிவந்த உதடுகளுக்கு!!





உன்னை பற்றி எழுதும் வார்த்தைகளை கவிதை என்கிறார்கள்..
நீயோ யாரை நினைத்து எழுதினாய் என்று என்னை முறைக்கிறாய்.
என்ன செய்வது என்று தெரியாமல்...
எழுத்தோடு நான் ஏக்கமாய் காத்திருக்கிறேன்..உன் வரவுக்காக.

*******************

என்னை தூண்டிவிட்டு விடுகிறாய்..
என் தவிப்புகள் தீயாய் எறிந்து ..
என்னை தீர்த்துவிடும்போது..
என்னோடு இருப்பதில்லை.. நீ.. :(

**********************

என்ன வேண்டும் என்று கேட்காதே இனிமேல்...
என்னிடம் எப்போதும் இருக்கும் ஒரே பதில்..
“நீ மட்டும் போதும்”..

**************************




பாட்டி சொல்கிறார்..
மற்றவரின் எச்சில் பண்டத்தை உண்ணகூடாதாம்..

அவர்களுக்கு எப்படி தெரியும்...
உன் உதடுகளின் சுவை.

****************************

காலெல்லாம் ரத்தம்..
நம் காதலின் கால் தடங்களின் மீது
ஒற்றையாய் நான் நடந்த போது..

********************************

வெள்ளி மழையின்.. ஒவ்வோரு துளியும்..
உன் முத்தங்களாய் சேர்கிறது..
என் மேனியில்..

Friday, May 8, 2009

உன் விழிகள்.. என் வழிகள்!!

சில நேரங்களில் கவிதை கொட்டும்..அதை எழுத இடம் இருக்காது..
அப்படிப்பட்ட ஒரு அவசர கவிதைதான் இதுவும்..






உன் கண்கள் விஷம் தான்..
சில நேரம் நோய் தருகிறது;
சில நேரம் நோய் முறிக்கிறது.

உன் கண்கள்.. எப்போதும்..
கொன்றுகொண்டும்.. வாழவைத்துகொண்டும்..

வாழ்க்கை சக்கரத்தில்
எப்போதும் என்னை
சுழலவிட்டபடி நகைக்கிறது.

Sunday, April 19, 2009

வெயிடிங்க்...!!!


அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..

அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..

அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..

அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..

காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...

அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..

கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..

அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..

இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..

அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.

இப்படிக்கு-

பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.

பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு...  ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..