Saturday, June 18, 2011
காதலிப்பவனா நீ..? கொஞ்சம் இங்கே கவனி..!!
Monday, June 22, 2009
என் அருகில் நீ இருந்தால்!!

புத்தம் புது முத்தம்
அதை சொல்லும் ச் எனும் சத்தம்
எப்போதும் என் இதயக்கூட்டில் யுத்தம்..
என்னை ஏனடி கொல்கிறாய் நித்தம்..?
*******
உன்னை அடங்கா பிடாரி என்று
உன் அம்மா சொன்ன போது
அதை நம்பவில்லை நான்..
இப்போது தான் புரிகிறது..
என் உதடுகளுக்கு
நீ அடங்காத போது...!!
************
சொன்னால் கேட்பதில்லை இவை..
எப்போதும் என்னையே சுவை பார்த்தபடி..
உன்னுடைய உதடுகள்!!
**********

அம்மா நீ எனக்கு
சிரிக்க சொல்லிதந்தாய்..
அவள் அழகாய் சிரிக்கிறேன் என்றாள்!!
அம்மா நீ எனக்கு
நடக்க சொல்லிதந்தாய்
அவள் கம்பீரமாய் நடக்கிறேன் என்றாள்!!
அம்மா நீ எனக்கு
அன்பை சொல்லிதந்தாய்
அவள் என்னை காதலிக்கிறேன் என்றாள்!!
*********
பூக்களின் தேசத்துக்கு ஒரே எதிரி நீ..
உன் புன்னகையின் தாக்குதலில்
தினமும் மாலையில் வாடின பூக்கள்!!
********
தேடிகொண்டே இருக்கிறேன்..
உன்னிடம் தொலைந்து போன
என் இதயத்தை
உனக்குள்...!!!
*********

எப்போதும் போல் தான் நடந்து வருகிறாய்..
ஆனால் ஏனடி என் இதயம் மட்டும் இப்படி குதிக்கிறது..?!
எப்போதும் போல் தான் சிரித்து பேசுகிறாய்..
ஆனால் ஏனடி உதடுகள் மட்டும் காய்ந்து போகின்றது..?!
எப்போதும் போல் தான் புன்னகை பூக்கிறாய்..
ஆனால் ஏனடி என் மனம் செத்து செத்து பிழைக்கிறது..?!
எப்போதும் போல் தான் ஐ லவ் யூ என்கிறாய்..
ஆனால் ஏனடி அந்த மூன்று வார்த்தைகளும் என்னை மூர்ச்சையாக்குகிறது..?!
**********
Sunday, May 31, 2009
தோழிக்கு !!

தோழி..
மரணிக்க கடலில்
குதித்த வேளையில்
மீனவன் வலை சிக்கியவனாய்..
வீழ கிடந்த என்னை
தாங்கி பிடித்தாய் நீ..
சருகாய் வாடி
மண்ணோடு மக்க
இருந்த வேளையில்
பாசத்தண்ணீர் ஊற்றி
பாதுகாத்தாய் நீ...
காற்றில் மறையும்
கானல் நீராய்
இருந்த வேளையில்
மெல்ல மெருகேற்றி
நதியாக்கினாய் நீ...
விழுந்த என்னை
எழுப்பி..
சுருண்ட என்னை
நிமிர்த்தி..
பழையதான என்னை
புதியவனாக்கி..
என்னுள் என்னை
எனக்கே அறிமுகம் செய்தாய்..
எப்போதும் என்னை
தாங்கி பிடிக்கும் நீயும் எனக்கு
ஒரு தாய்..!!
Sunday, April 19, 2009
வெயிடிங்க்...!!!
அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..
அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..
அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..
அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..
காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...
அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..
கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..
அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..
இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..
அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.
இப்படிக்கு-
பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.
பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு... ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..
Wednesday, April 8, 2009
என் அன்பு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அட.. !! என்ன இன்றைக்கு உனக்கு அழகு கூடி விட்டது?
என்ன உன் நடையில் ஒரு கம்பீரம் மிளிர்கிறது?
உன் கண்ணில் காந்தம் எதும் வைத்துவிட்டான கடவுள்
இப்படி ஈர்க்கிறது என்னை?
அடிக்கடி என்னை அழைத்து சிரிக்கிறதன் அர்த்தம் என்னவோ?
எதோ சொல்ல வருகிறாய்.. காபி கொடுக்கும் போது புதியதாய் புன்னகை வேறு...?
"கல்யாண நாளா?" என்று அப்பாவின் காதோரம் கேட்டேன்.
அந்த துக்க தினம் இன்று இல்லை என்று அப்பா கிண்டலடிக்கிறார்.
வேறென்ன..
உன் மாமியார் கிளவியிடம் கேட்டேன்.."ம்ம்கும்" ..என்று முகத்தை திருப்பிகொள்கிறது.
அட.. என்னம்மா ஆச்சு... உனக்கு..
அட.. இன்று ஏப்ரல் எட்டா?
நேராக சென்றேன்... கையை பிடித்து நிறுத்தி சொன்னேன்.
"ஹாப்பி பர்த்டே மா"
"அடடா....!! இரு மேட்டூர் போகலாம் அங்கே அழு.. அணையாவது நிரம்பட்டும்."
"சிரிக்காதே கள்ளி.. !! சொல்லாமல் சொன்ன உனக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என் இதயத்தில்."
நகரு.. இன்று நான் சமைக்கிறேன் என்றேன்.
நான் நீண்ட நாள் வாழ பிடிக்கவில்லையா என்று கலாய்கிறாய் நீ.
எதாவது செய்ய வேண்டுமே ..ஆசையோடு நின்றேன்.
"நீ வாழ்வில் சிறப்பானவனாக வா.. அது போதும்." என்றாய்.
"நிச்சயமாக மா.. நிச்சயமாக"
"இப்போது இருவருமே மேட்டூர் கிளம்புங்கள்" என் கண்ணீர் துடைத்துவிட்டார் அப்பா.
பாட்டு பாஸ்கி : மம்மீ.. ஹாப்பி பர்த்டே..வாழ்த்துக்கள் அம்மா.
இவன் என்னா இப்படி உருகறான். அடக்கிவைங்க அவனை.
Sunday, March 29, 2009
என் தேவதையின் சோகம் :(

அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது
கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.
"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..
நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"
தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"
கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"
தேவதை சொன்னது
"இறைவா..!!
நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;
நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;
நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;
நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;
நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;
நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."
கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.
"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."
தேவதை சொன்னது
"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"
கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.
"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "
தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.
கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.
இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.
கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"
என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."
தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "
தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.
பாட்டு பாஸ்கி :
ஆமா இது கதையா கவிதையா?
என்னவோ .. உனக்கு இப்போ மனஸ ரிப்பேர் பண்ணனும் .
க(வி)தைக்கேத்த பாட்டு என்கிட்ட இருக்கு.. கீழ பாரு.
"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே.
நான் தான்டா என் மனசுக்கு ராஜா
தூவுங்கடா என் வழியில ரோஜா...
நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேக்குற வரத்தே கேட்டுக்கடா..
இந்த பாட்ட முழுசா கேளு..
தெம்பாகிடுவ.. என்னங்க.. இந்த பாஸ்கி சொல்றது சரிதானே...!!