Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, January 7, 2013

மினிமலிஸம் (minimalism) - ஒரு புதிய துவக்கம்



மினிமலிஸம்(Minimalism) என்றால் என்ன என்கிறீர்களா?




வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் சிதறி கிடக்கும் சாமான்கள், பேப்பர்கள், புத்தகங்கள், அலமாரியை தவிர வேறு எல்லா இடத்திலும் இருக்கும் பொருட்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கே இடமில்லாதபடிக்கு ஏகப்பட்ட பொருட்களோடு நிறைந்து வழிகிறது நமது மிடில் கிளால் குடும்பங்களின் வீடுகள்.

"என்னங்க பண்றது? எவ்வளவுதான் ஒரே ஆளா சுத்தம் பண்ண முடியும்? இன்னும் கூட பண்ண வேண்டியது ஏகப்பட்டது இருக்கு"  என்று சலிப்பாக சொல்பவரா நீங்கள்?

இதோ இருக்கவே இருக்கிறது மினிமலிஸம்.

பொருள்முதவாதத்தை உலகிற்கு (மூக்கைபிடித்து திணித்து) ஊட்டிய அமெரிக்காவின் இப்பொழுதைய பந்தாவான விஷயமே எங்கள் வீட்டில் பொருட்கள் குறைவு என்பதுதான்.

என்னது?

அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை அதுதான். பொருள்களிடையே சிக்கி சின்னாபின்னபட்ட மேற்கத்திய மக்களின் ஒரு தலைகீழ் திருப்பம் தான் இந்த மினிமலிஸம். அதாவது பொருட்குறையியல். குறைவான பொருட்கள், குறைவான Maintanance வேலைகள். அமைதியான, நிம்மதியான ஒரு சிறிய வீடு. இதுதான் இன்று மேற்கின் புதுமண தம்பதியரின் முதல் முடிவு. மினிமலிஸம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் ரத்தத்தோடு அங்கே கலந்துகொண்டிருக்க, நாம் இப்பொழுதுதான் வீட்டு சாமான்கள் வாங்கி போட ஆரம்பித்திருக்கிறோம்.

 ஆனாலும், இப்பொழுதே நம்மில் சிலருக்கு எங்கயோ உதைக்க போகுது என்று பட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஆம், வீட்டு பொருட்களின் பயனராய் இல்லாமல், வீட்டு பொருட்களின் காவலாளியாக மாறும் நாட்களை நாம் வேகமாய் நெருங்கிகொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதைவிட, இதனால் ஏற்படும் மன உளைச்சல், சலிப்பு, நேர விரயம், ஓய்வின்மை என இதன் பக்க விளைவுகளால் இப்பொழுதே நாம் அல்லாட துவங்கிவிட்டிருக்கிறோம்.

ஒரு நாளை நமக்கு சரியாக 20 நிமிடங்கள் இருந்தால் நம்மால் ஒரு அமைதியான வீட்டை உருவாக்கிவிட முடியும் என்று ஒரு Interior Designer நண்பர் கூறுகிறார். அது மட்டுமின்றி, பழைய சாமான்களை Sentiment-ஆக சேர்த்து வைக்கும் பழக்கமும் நம்மிடையே காலம் காலமாய் இருக்கிறது, அதை விடுத்து, நாமே ஒரு மொத்த வீட்டையும் நமது பாணியில் உருவாக்குவது இன்னும் இதயத்தை தொடும் விஷயமாகத் தானே நிச்சயம் இருக்க முடியும்..?

அடடா.. Introduction பகுதியே மிகவும் நீண்டுவிட்டது, சரி இனி வரும் தினங்களில் மினிமலிஸம் பற்றி இன்னும் விரிவாக எழுதுகின்றேன்.

 

Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!

Thursday, January 5, 2012

டாக்டரை கொல்ல முடியுமா? - ஒரு செய்தி சார்ந்த சிந்தனை

இது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒரு கூட்டத்தை  நான் பார்த்ததே இல்லை- இதுதான் நேற்று அந்த டாக்டர் பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார், நடவடிக்கை  எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம் என்று செய்தி வந்த போது, என் மனதில் தோன்றிய எண்ணம்.
ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது என்கிறீர்களா? சொல்கிறேன்.

 முதலாவதாக
டாக்டரை  யாராலும் கொல்ல முடியாது. ஏனெனில் டாக்டர் என்பது ஒரு கற்பனை பட்டம். உங்களை நல்லவர், வல்லவர் என்று சொல்வது போல (நீங்கள் எவ்வளவு மோசம் என்று அவரவர் மனசிற்கு தெரியும்..அது வேறு விஷயம்). ஒரு பட்டத்தை சுமந்து திரிந்த ஒரு பெண்ணைத்தான் யாரோ ஒருவன் கொன்றிருக்கிறானே தவிர.. டாக்டரை கொல்ல முடியாது. அது ஒரு Abstract Noun.

இரண்டாவதாக,
டாக்டரை கொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனால் கொல்லமுடியாது. கடவுளை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் அது ஒரு மனகற்பனை, அதேதான் இங்கும். டாக்டர் என்பதும் உங்களுக்கு பிறரால் கொடுக்கப்பட்ட ஒரு கற்பனை அங்கீகாரம். அவ்வளவே.. எனவே...அந்த கொலையாளி கொன்றது ஒரு பெண்ணைத்தானே தவிர.. டாக்டரை அல்ல.

மூன்றாவதாக,
அப்படி கொன்றதற்கு அவனுக்கு எனது நன்றிகள். இப்போது இவர்கள் போராடுவதன் மூலம் நான் டாக்டருக்கே  படித்திருந்தாலும் முட்டாள்தான், சுயசிந்தனை என்பதே இல்லாமல்தான் நானும் வாழ்கிறென் என்று இத்தனைப்பேர் தங்களை தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிகொண்டனர்.

நான்காவதாக,
இப்போது டாக்டர்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். இதோ, தங்களாலும் கொஞ்சம் சமுதாயம் ஸ்தம்பிக்கத்தான் செய்கிறது. ஹைய்யா ஜாலி என்று உள்ளுக்குள் ஒரே குஷியாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று மூன்றாம்தர அரசியல்வாதிகள்(அரசியலே மூன்றாம்தரம் தான்) போல் இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் என் மனவேதனை.

ஐந்தாவதாக,
யாரோ ஒரு அம்மையார் இறந்ததற்காக போராடுகிறேன் பேர்வழி என்று போய், இருக்கும் நோயாளிகள் இறந்துபோனால் யார் பொறுப்பு? இப்போது அந்த கொலையாளியை விட இவர்கள் கீழே  சென்றுவிட்டனர். அவன் பொறுப்பாய் அவன் கடமையை செய்துவிட்டான். கொல்வது கடமை, கொன்றாயிற்று. ஆனால் காப்பாற்றும் கடமையிலிருந்து நழுவ சந்தர்ப்பம் தேடும் இவர்களை என்ன செய்யலாம்?

ஆறாவதாக,
ஐ.சி.யூ. விற்கு மட்டும் வந்து பார்ப்போம் என்கிறார் ஒருவர். சாதாரண நோயாளிகளை, மருத்தவம் பார்த்து சரிசெய்யாதுவிட்டால், ஐ.சி.யூ. விற்கு தானே  வந்தாக வேண்டும். இதில் என்ன கருணை வள்ளல் போல் ஐ.சி.யூ. விற்கு மட்டும் வருவோம் என்பது.
ஐ.சி.யூ. வில் வைத்துவிட்டால் சிறப்பாக பில்லைத் தீட்ட முடியுமென்பதால், அங்கு மட்டும் Concession-ஆ? சரி புறநோயாளி என்ன பாவம் செய்தான்? பணம் கட்ட வழியில்லாமல், வெளியிலேயே பிணமாய் போனால், கவலை இல்லையா உங்களுக்கு?( அது இருந்தால் ஏன் போராட்டம் அது இது என்று நேரத்தை  வீணடிக்க போகிறீர்கள்?)

..ஒன்று மட்டும் சரியாக புரிகிறது..
இப்போதைய ட்ரெண்ட் போராட்டம்.. பொழுது போகவில்லையா  போராடு, பொட்டி பொட்டியாய் பணம் வேண்டுமா போராடு..
..யப்பா..முடியல..!!

பி.கு: இறந்த அந்த பெண்மணிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

Monday, December 6, 2010

நெஞ்சை தொட்ட குறள்கள் 10..


1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

இந்த குறளில் தான் எனக்கு தமிழ் முதன்முதலில் அறிமுகமானது.
இன்னும் அதன் சுவையும் பொருளும் மாறாது இனிக்கும் குறளிது.

2.இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

என்ன அருமையான குறள். இன்னும் இவர்களை விட்டுவைக்கணுமான்னு நினைக்கும்போதெல்லாம்

நினைவுக்கு வந்து என்னை ஆசுவாசப் படுத்தும் குறள் இது.

3.என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு

நம்பிக்கை துரோகம், நம்ப வைத்து ஏமாற்றுதல், வேலை முடிந்ததும் கழட்டிவிடப்படுதல் இவற்றை எல்லாம்
தாண்டி வந்தபின் இந்த குறளின் அருமையும் ஆழமும் எனக்கு புரிந்தது.

4.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

நம் எண்ணம் போலவே வாழ்வு எனும் அருமையான தத்துவத்தை எனக்கு சொல்லிக்கொடுத்த குறளிது.

5.வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு.

தாமரை தண்டு நீர்மட்டம் பொருத்து உயர்ந்தும் தாழ்ந்தும் தன்னை சரிசெய்துகொள்வது போல்.. மனித வாழ்வில் எல்லா உயர்வு தாழ்வுகளிலும்
தன்னை சரிசெய்து வாழ்ந்து பழகி கொள்ள சொல்லும் குறள். எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் குறளிது.

6.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

என் தந்தை, ஓஷோ, வள்ளுவர் இந்த மூவரும் இந்த குறளில் ஒத்துபோகிறார்கள். மூவருமே.. துணிந்து செய்..அதுவே சக்தி தரும் என்று எனக்கு
சொல்லி தந்த குறளிது.

7.யாகவராயின் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

சொல்வன்மை குறித்தும் அதில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் குறளிது. எனக்கு தேவையான குறளும் கூட..!!

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

என்ன அருமையான குறள்!! நல்லதை எண்ணி வாழ்வை நல்வழியில் கொண்டு போவதை விடுத்து, தீயதை ஏன் சுமக்கிறாய்..தூக்கி எறி, அழித்துவிடு
என்று சொல்லும் குறள்.

9.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது

உறுதியான உள்ளமும், ஆர்பாட்டமில்லாத அறிவும் கொண்டவன் மலைகளுக்கும் மேலானவன். இது என்னுடைய இன்ஸ்பிரேஷன் குறள்..!!

10. அன்பிலார் எலாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு, Love, என்ன அருமையான குறள். ஒரு ஒட்டுமொத்த மனிதமே அன்புடையதாய் நினைத்து பாருங்கள். கடவுள், சாத்தான் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துகொள்வார்கள்.
அப்படிபட்ட மனிதத்திற்காக காத்திருக்கிறேன். அதோடு என்னால் முடிந்தமட்டும் எல்லாரிடமும் அன்பாய் இருக்கிறேன். :)

நன்றி!!

Friday, July 9, 2010

சிங்கத்தின் எண்ணங்கள்!!

இந்த பதிவில் நான் எழுதியது எதுவும் இல்லை..!!
விவேகானந்தரின் வீரமான வார்த்தைகளில் இருந்து பிறந்த வாக்கியங்களை இங்கே தந்துள்ளேன்..!


முடிந்தால் ப்ரிண்ட் போட்டு கண்ணில்படுமாறு ஒட்டிவிடுங்கள்.
தன்னம்பிக்கை குறைவதாய்ப்படும் சமயங்களில் இது பெரிதும் உதுவும்.(அனுபவச்சி சொல்றேன் :) )







* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

Friday, April 23, 2010

உங்களுக்கு கடவுள் மீதிருப்பது நம்பிக்கையா ? பயமா?

கடந்த சில வருடங்களாகவே என்னுள் எப்போதும் ஒரு ஊசலாட்டம்.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை(பயம்) இவைகளுக்கு இடையேயான ஊசலாட்டம் அது.

http://geesun.files.wordpress.com/2009/12/believe_small1.jpg

எல்லா ஊஞ்சல்களையும் போல இது மேலேயும் கொண்டு சென்றது. கீழேயும் தள்ள பார்த்தது.

என்ன செய்ய? எல்லா மனிதனுக்கும் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டு தானே இருக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
நானும் இந்த ஊசலில் ஆடி ஓய்ந்த போது ஒரு சின்ன விஷயம் மூளையில் பளிச்சிட்டது. அதுதான், நம்பிக்கை, பயம் இரண்டுமே
ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல். அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும், சாராமலும் இயங்கும்
ஒரு விசித்திர இயந்திரமாய் தெரிந்தது.

ஒரு இருட்டறையில் நுழையும்போது, அங்கே எதுவும் இருக்காது என்கிற நம் மனதின் நம்பிக்கையே, எதாவது இருக்குமோ என்கிற பயமாய்
மாறிவிடுகிறது. இது எப்போதும் நிகழ்வதே. நம்பிக்கையே நாம் செய்யும் எந்த செயலுக்கும் அடிப்படை. பயமே நாம் தவிர்க்கும் எந்த செயலுக்கும்
அடிப்படை. இப்படி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஆதார சுருதியாக விரும்பும் இந்த இருவரின் கையில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.

http://ui05.gamespot.com/260/fear_2.jpg

நம்பிக்கையால் தூண்டப்படுவதும், அதனால் சில செயல்கள் செய்வதும், அது தோற்றபின் அந்த செயலில் பயம்கொள்வதும்
எப்போதும் நடக்கிறது. எப்போதும் நாம் முழுமையாக வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உடைய விஷயங்களை மட்டுமே முன்னுரிமை தருகிறோம்.
தோல்வி சார்ந்த விஷயங்களை நாம் எப்போதும் கண்டு அஞ்சுகிறோம். இந்த அச்சம் தேவையற்றது என்கிறேன்.



குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா? அவைகள் எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதில்லை.
அந்த விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவைகள் விளையாடுகின்றன. வெற்றிக்கான வெறியும் இல்லை. தோல்விக்கான
பயமும் இல்லை.
கால்பந்து வீரர் பீலே ஒரு பேட்டியின் சொன்னார் :
“நான் விளையாடவே ஆசைப்படுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் ஜெயித்துவிடுகிறேன்” என்று.

வாழ்க்கை நம்பிக்கையை சார்ந்ததும் அல்ல, பயத்தை சார்ந்ததும் அல்ல. அது வாழ்க்கையை முழுமையாக ஏற்றுகொள்வதிலேயே இருக்கிறது.

ஒரு அருவியில் குளிப்பதை போல், ஒரு தென்றலை அனுபவிப்பதை போல, ஒரு குழந்தையோடு கொஞ்சி மகிழ்வதை போல..
அது எப்போதும் நம்பிக்கைக்கும், பயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்...அன்பு மயமானதாய், ஆனந்தமானதாய் இருக்கிறது.

நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார் :)

மறக்காம ஓட்டும் கமெண்டும் பண்ணிடுங்க..!!

நன்றி,
ரங்கன்

Monday, March 1, 2010

நூறு பதிவுகளை கடந்தபின்!!

http://jamesfrankel.musiced.net/files/2007/03/number_100_1.png
எல்லாருக்கும் பழக்கமான எண், எண்ணிக்கை 100.

சரி..ஏன் நூறு?
10*10= 100
எண்களில் முதல் மூண்றெழுத்து எண் 100.
இரண்டு 2 எழுத்து எண்களின் பெருக்கல் தொகை நூறு..
இப்படி நூறு பல வகைகளில் கணிதத்தில் ஒரு முக்கியமான எண்ணாக இருக்கிறது.

கணிதத்தின் அடிப்படையில் தான் உலகமே இருக்கிறது..நம் சமூகமும்..!!

அதனால் தான் நூறு வயதை எட்டியவர்களை கண்டு வியக்கிறோம்..நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்

சச்சின் டெண்டுல்கர் நூறு ஓட்டங்கள் எடுத்தால் கைதட்டு ஆர்ப்பரிக்கிறோம்..
பரிட்சையில் நூறு மார்க்குகளை உச்ச தகுதியாக வைத்திருக்கிறோம்..!!

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாபெரும் முன்னேற்றத்தை மனித இனம் எடுத்து வைக்கிறது.!!

இப்படி எல்லா வகையிலும் நம் வாழ்வில் இணைபிரியாது வரும் நூறு என் வாழ்விலும் ஒரு
முக்கிய பங்கை தந்திருக்கிறது..!!

இதோ என் நூறு பதிவுகளை முடித்து நூற்றியோராவது பதிவை வெற்றிகரமாய் பதிவு செய்திருக்கிறேன்..!!
உண்மை தான் ..பதிவுகளை பொருத்த மட்டில் எண்ணிக்கை பெரிதில்லை..விஷயமே பெரிது..!!
நானும் என்னால் முடிந்த சிறந்த பதிவுகளை தந்திருக்கிறேன் என்பதில் எந்த ஐயமும் இல்லை..!!
அதை நிரூபிக்கும் விதமாக என் பதிவுகள் பலவற்றை தன்னகத்தே ஏற்றுகொண்டு ஆதரவளித்த ஆனந்த விகடனுக்கு இங்கே நன்றி சொல்ல
கடமைப் பட்டிருக்கிறேன்..!!

நூறு பதிவுகள் எழுதியும் வலைச்சரத்தில் எழுதாத ஒரே பதிவர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்...!!
அது என் அடுத்த நூறு பதிவுகளுக்குள் நடந்துவிடும் என்று நம்புகிறேன்..!!


இத்தனைக்கும் காரணமாய், ஆதரவாய், அன்பாய் நட்பாய் அமைந்த என் மாமன் நாமக்கல் சிபிக்கும் மற்ற உலக தமிழ் பதிவர்கள்
அத்தனை பேருக்கும் என் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொண்டு..
இன்னும் நல்ல பல பதிவுகள் தருவேன் என்ற உறுதியும் அளிக்கிறேன்..!!

நன்றி நண்பர்களே !! ..என்னை கைப்பிடித்து , அரவணைத்து , ஆசுவாசப்படுத்தி , ஆறுதல்தந்து , அன்பை சுரந்தமைக்காக..!!

பி.கு :

நூறு பதிவுகளை கடந்த பின் நான் ஒரு பதிவராக கண்டுகொண்டது ஒரே விஷயம் தான்.
” பரிந்துரைக்கபடவேண்டும் என்றோ,ஹிட்டுக்காகவோ, எண்ணிக்கைக்காவோ, விகடனில் வெளியாகும் என்றோ என்றைக்கும் எழுதாதே..!!
உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் காத்துகிடக்கிறது..மற்றவையில் எதுவும் இல்லை!!

Saturday, February 20, 2010

புயல்களுடன் ஒரு வாழ்க்கை!!

ஒரு நாளுக்குள் எத்தனை பிரச்சனைகள்..எத்தனை புயல்கள்..
இவைகளில் இருந்து விடுபடவே முடியாதா?


http://www.freewebs.com/hoseo_environmental_club/Cyclones.jpg

இந்த கேள்விதான் நம் மாபெரும் வாழ்க்கையின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.
முதலில் நாம் அதை உணர முயல்வோம்..பிறகு அதை குறை கூறலாம். கடலில் அலைகள்
வந்தும் போயும் இருப்பது போல, பிரச்சனை புயல்களும் உங்கள் வாழ்வில் வந்தும் போயுமே இருக்கிறது.
எந்த ஒரு புயலும் அதே இடத்தில் தங்குவதில்லை..ஒன்று மறைந்தும் அடுத்து வந்துகொண்டுமே இருக்கின்றன.

ஒரு புயல் ஓய்ந்த பின் நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள், சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள்..ஆனந்தமாய் உணர்கிறீர்கள்..
அந்த கணங்களில் உங்களுக்குள் இருக்கும் பயம், தயக்கம், நடுக்கம் எல்லாம் மறந்து, மறைந்து போகிறது.
அன்பு ஊற்றெடுக்கிறது.

எப்போது நீங்கள் புயல்களை திறந்த மனதோடு வரவேற்கிறீர்களோ அப்போதே அவைகள் சக்தி இழந்துவிடுகின்றன.
அப்படி திறந்த மனதோடு இருக்க நீங்கள் முதலில் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது..
அற்ப ஆசைகள், அலையும் மனது, குற்ற உணர்ச்சிகள் என பலவகையான உணர்ச்சிகளை நீங்கள் தடுத்து ஆராய்வது அவசியம்.
அப்படி ஆராயும் போதுதான்..”இந்த கயிறுகளையா பாம்பென்று பயந்தேன் !!” ..என்று நீங்கள் தெளிவடைவீர்கள்..
அப்போது அறிவு பிறக்கும்..தெளிவு உண்டாகிடும்.

எல்லா ஞானிகளுமே ஒரு வகையில் இதைத்தான் செய்தார்கள்..தன்னுடைய குழப்பங்களை, அற்ப ஆசைகளை, குற்ற உணர்ச்சிகளை
பிரித்து பிரித்து வகுத்து பார்த்தார்கள்..அப்படி பிரித்து பார்த்து பெற்றதை ஞானம் என்றார்கள்.அதை நமக்கும் சொன்னார்கள்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்..அலைகள் இல்லாத கடல் எப்படி சாத்தியமில்லையோ அதே போல் பிரச்சனைபுயல்கள் இல்லாத
வாழ்க்கையும் சாத்தியமில்லை...ஞானிகளுக்கும் மிகப்பெரும் மனிதர்களுக்கும் கூட பிரச்சனைகள் இருந்தன..இருக்கும், அது தான் இயற்கை.

எப்போதும் புயல்களை ஒழிக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க தேவையில்லை. அதனோடு இருங்கள். அவைகளோடு ஒரு கப் தேனீர் கூட அருந்துங்கள்.
உங்கள் மடியில் வைத்துகொள்ளுங்கள். பிரச்சனைகள் வெளியே இல்லை உங்களுக்குள் தான் என்பது அப்போது புரியும். நீங்கள் தான் இப்போது உலகத்தின் மையம்.
அதாவது உங்கள் பிரச்சனைக்குரிய உலகத்திற்கு.

நீங்கள் எங்கே சென்றாலும் உடன் ஒருவரை ரகசியமாய் அழைத்தே போகிறீர்கள்..அது தான் உங்கள் மனம். அது எப்போதும் பிரச்சனைகளை சுமந்தபடி உங்களோடே வருகிறது.
அதை விட்டு நீங்கள் தப்பிக்க முடியாது..ஆனால் அது சுமக்கும் பிரச்சனை என்கிற பாரத்தை குறைக்கலாம்.

அப்படி பாரமில்லாத மனதோடு எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு பிரபஞ்ச ரகசியம் விளங்கும் : “புயல்கள் எப்போதும் இருக்கின்றன..நம்மை உயர்த்துவதற்காக”

Friday, February 5, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-2



கடந்த பதிவில் Procrastination பற்றி பார்த்தோம்..

இப்போது நீங்கள் திமிங்கலத்தை தின்ன தயாரியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் மலைத்து போகும் அந்த மிகப்பெரிய வேலையை திமிங்கலத்தை தின்ன வரிசையான செய்முறை விளக்கம்
இதோ..


1.நம் வாய் எவ்வளவு கிராம் கொள்ளளவு கொண்டது என்பதை கணக்கெடுத்து கொள்ளுங்கள்.(VOLUME)
(முப்பது கிராம் அளவு என்கிறது அறிவியல்)

2. பின்பு திமிங்கலத்தை துண்டுதுண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.(PARTITIONING)

3. வெட்டிய துண்டுகளை மீண்டும் 30 கிராம் அளவுகொண்ட துண்டுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.(CONTENT BASED PARTITIONS)

4. வெட்டிய துண்டுகளை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்துவிடுங்கள்.(PRESERVATION)

5. ஒவ்வொரு துண்டுகளாக போகவர எடுத்து சாப்பிட்டுகொண்டே வரவேண்டும்.(CONTINOUS PROCESS)

6. விடாது , தொடர்ந்து இதையே செய்து வரவேண்டும்.(MAINTANANCE OF CONTINUUM)



ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்..திமிங்கலத்தை முழுவதுமாய் சாப்பிட்டு முடித்திருப்போம்.

சரி இதன் சூட்சமம் என்ன..இதை நம் வாழ்க்கை முறையில் , நேர மேலாண்மையில் பயில்வது எப்படி?

திமிங்கலத்தை போய் யார் சாப்பிடுவார்கள் அதுவும் பச்சையாக? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பெரிய விஷயத்தை எப்படி சிறு பகுதிகளாக்கி முடிப்பதற்கான உதாரணம்தான் இது என்று சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.


நீங்கள் புதிதாக ஒரு மொழியை கற்க விரும்புகிறீர்கள்..என்றால் எடுத்த எடுப்பில் அதன் இலக்கிய நூல்களை புரட்டினால் என்ன ஆகும்?

எதுவும் புரியாது. என்னடா இது மொழி பிரச்சனை என்று மலைத்து போவீர்கள்.

அதே அந்த மொழி சம்பந்தமான ஒரு அகராதி(டிக்‌ஷனரி)யை வாங்கி அதன் வார்த்தைகளையும் அர்த்தங்களையும் புரிந்துகொண்டு..

தினமும் பத்து அல்லது பதினைந்து வார்த்தைகளை விடாமல் படித்து வந்தால்..ஒரு நாள் நீங்களும் அந்த மொழியில் புலமை பெற்றவர் ஆவீர்கள்.!!

முடிக்கலாம், முடிக்க முயற்சி செய்வோம் என்கிற எண்ணங்களுக்கும் இந்த விஷயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

முடிக்கலாம் என்று சொல்லும்போதும், முடிக்க முயற்சி செய்யலாம் என்று சொல்கிற போதும், ஒரு மலைப்பும் களைப்பும் வருகிறது..

ஆனால் இந்த முறையில் அப்படி பட்ட களைப்பே வர வாய்ப்பு இல்லை..காரணம்.

1. எந்தப் பெரிய வேலையையும், சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல்.

2. பிரித்துக்கொண்ட சிறிய பகுதியை, தினம் தினம் விடாது முடித்துவிடுதல்.

3. மொத்த விஷயமும் முடியும்வரை கவனம், ஆர்வம் பிசகாமல் தொடர்ந்து செய்தல்.

இதன் பெரிய பலன், தங்கு தடையின்றி வேலை நடைபெறும். மலைப்பு விலகும். தினசரி வாழ்க்கையின் சுவாரசியம் கூடும்..வெற்றி நம் முன்னே விரியும்.

Tuesday, February 2, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-1

http://www.edupics.com/en-coloring-pictures-pages-photo-man-and-whale-p9852.jpg
என் நண்பர் ஒருவர்..வெகு நாட்களுக்கு முன்..

நான் ஒரு நாவல் எழுதப் போகிறேன்..அது மிகவும் புதுமையானதாகவும்,
பலரால் பாராட்ட கூடியதாகவும் இருக்கும் என்று அடிக்கடி (கடந்த 2 வருடங்களாக) என்னிடம்
சொல்லி வந்தார்..வருகிறார் :).

ஆனால் கொடுமை என்னவென்றால் அவர் இன்னும் அந்த நாவலை துவங்க பிள்ளையார் சுழி கூட
போடவில்லை..!!

காரணம்..அது பெரிய வேலை..அதற்கு நல்ல மனநிலையும், அதிக ஆர்வமும், அதிக நேரமும் பிடிக்கும்.
அவரால் சின்ன சின்ன விஷயங்களில் காட்ட முடிகிற ஆர்வத்தை அதில் காட்ட முடிவதில்லை..

இப்போது அவரை குறை சொல்ல வரவில்லை..அவரை போலத்தான் நாமும்..
சில வேலைகள் நம்மை மலைக்க வைக்கிறது..
இது நம்மால் ஆகுமா? என்று நம் தன்னம்பிக்கையை சந்தேகப்பட வைக்கிறது..

அப்படியே தள்ளிவைத்து விட்டு வேறு சிறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம்..
பிறகு ஒரு நாள் அதே வேலை..பல சிக்கல்களையும் கூட்டிகொண்டு நம்மிடம் வந்து
நிற்கும் போது மீண்டும் மலைத்துபோகிறோம்..

ஏன்.. என்ன காரணம்..ஏன் இந்த மலைப்பு..??


திருமண பந்திகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்..சிலர்.. பிடித்த பதார்த்தங்களை
ஆவலுடன் பார்த்தபடி மற்ற பதார்த்தங்களை சாப்பிட்டுவிடுவார்கள்.
பின்பு கடைசியாக தான் அவர்கள் அந்த பதார்த்தங்களை ருசித்து ருசித்து
சாப்பிடுவார்கள்..இது ஒரு வகையான மனப்பான்மை..


சிலர் சுலபான வேலைகளை எல்லாம் உடனே முடித்துவிடுவார்கள்.
ஆனால் பெரிய வேலைகளை, அதாவது அதிக நேரமும், கூடுதல் உழைப்பும்
தேவைப்படுகிற வேலைகளை ஆரம்பிக்கவே மாட்டார்கள். தள்ளி போட்டுகொண்டே
வருவார்கள்..

இந்த வகையான மனநிலைக்கு பெயர் Procrastination. இது ஆபத்தானது.

சரி..இதற்கும் திமிங்கலத்தை தின்பதற்கும் என்ன சம்பந்தம்..ஒரு வேளை அதை தின்றால்
Procrastination சரியாகிவிடுமா?

ம்ம்..ஆகலாம்..!! 98 % வாய்ப்பிருக்கிறது..!!

என்னது?!!!!....சரி நான் திமிங்கலத்துக்கு எங்கே போவேன்?

எங்கேயும் போக வேண்டாம்..நீங்கள் தள்ளி போடும் அந்த பெரிய வேலை தான் அந்த திமிங்கலம்.

அதை எளிமையாக முழுமையாக தின்ன நான் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.

தொடர்ச்சி வரும் வெள்ளியன்று..!!

Tuesday, January 5, 2010

”சாலை பாதுகாப்பு வார”த்தை முன்னிட்டு ஒரு சிறுகதை..

http://www.irintech.com/x1/images/jean/hell_met_helmet.jpg
-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

”சாலை பாதுகாப்பு வார” த்தை முன்னிட்டு இந்த சிறுகதை..!!


டிஸ்கி :

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."

Tuesday, December 1, 2009

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

இன்னாங்கடா இது..ஆச்சரியமா கீது.. நெசமாத்தான் சொல்றியா?

இப்படி எனக்குள் கேட்டுகொண்டேன் இன்று முழுதும்..

“ஏம்பா...ஏய்..இது தமிழ்நாடு ஸ்டேட் தானே.. இல்ல ஆஸ்திரேலியா எதும் வந்துட்டேனா? ” என்று புளங்காதிப்படும் விதமாய் சில சம்பவங்கள் நெஞ்சை தொட்டது..

சம்பவம் -1:

தங்கை புதுக்குடித்தனம் போவதால் அவர் பெயரை அட்டையில் இருந்து நீக்க வேண்டும்..அதற்கு இன்று வர சொல்லி இருந்தார்கள். போன சில நிமிடங்களில் அன்பான உபசரிப்போடு!!! சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

அட..!! இது முதல் அதிர்ச்சி.

சம்பவம் -2 :

இன்னைக்கு என்று பார்த்து என் வாகனம் நட்ட நடு சாலையில் மக்கர் பண்ண..அதுவும் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடு ரோட்டில் பக்கி பழிவாங்கிவிட்டது..

இன்னிக்கு ஃபைன் தான்.. 500 வாங்காம மாமா விடமாட்டாரு..அய்யயோ போச்சே.. ஆமா யார் முகத்தில் விழிச்சோம் என்றெல்லாம் என்ன அலைகள் அழுவ..

அருகில் வந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள்.. தம்பி..பாத்து...இப்படி..ஓரமா கொண்டுவாங்க..என்று அவரும் எனக்கு உதவ.. எதற்கும் ஒரு முறை பார்த்துகொள்வோம் அது கடவுளாய் இருந்துதொலைத்துவிட போகிறது என்று உத்த்த்த்து பார்த்தேன்..அவர் பெயர் சண்முக சுந்தரம்.ஆபத்தில் ஓடு வந்து உதவிய இவரது செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திட்டு இல்லை..ஒரு கோபப் பார்வை இல்லை..அட ஒரு ஃபைன் கூட இல்லை ..நீ நீடுழி வாழ்க என போற்றியபடி புறப்பட்டேன்..

சம்பவம் -3:

அடுத்து வீடு வந்து சேர்ந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சம்சாரம் போனா சந்தோஷபடலாம்(ஊருக்கு போனால்).. மின்சாரம் போனால் முடியுமா? உடனே மின்சார வாரிய தொலைப்பேசிக்கு அழைத்தேன்..
அட...!!
அமைதியான தெளிவான குரலில் பதில்கள் வந்தன.. என்னால் இதை நம்ப முடியவில்லை...காலை பதினோரு மணிக்கு கம்ப்ளெயிண்ட் புக் செய்யப்பட்டது...மதியம் 12.30க்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டு விட்டது.

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.



http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

Tuesday, November 3, 2009

நீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா? -Are u a good Friend?

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!

உங்கள் நட்பை பலமாக்க சில டிப்ஸ் இதோ...


http://s165.photobucket.com/albums/u73/cyarena/comments/friend-is/images/friendIs952.jpg


1.உங்கள் நண்பருக்கு என்ன கொடுக்க முடியும் என்று பாருங்கள், என்ன பெறலாம் என்பதை விடுங்கள்.
“உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது”

2. ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

“நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாக, துடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

3.மன்னிக்க பழகுங்கள்..!!

”சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்ன? மன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.”
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

4. தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

”சிலர் இருக்கிறார்கள், இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் மன்னிப்பதுபோல் மன்னித்துவிட்டு,குத்திகாட்டுவார்கள்.
அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஆதிக்க மனப்பான்மையின்
வெளிப்பாடு குத்திகாட்டுதல். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில், இந்த வகையில்
சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொன்னால்..
ஆஹா..அதுதான் உங்கள் நட்பை மிகவும் உயர்த்தும்.”

5.சொன்னதை செய்யுங்கள்..!!

“நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு ”டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.”

6. நட்புக்கேது கட்டுபாடு..!!

”உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.”

7. நல்லதுக்கும், கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

“நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும், என்கிற பழமொழி
இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை
அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும்.
இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

8. அவர் அவராகவே இருக்கட்டும்..!!

“நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை
செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது.
அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி.
என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

9. ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

“நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதா? முடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது
பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு
நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம்
மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

10. பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி
என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர்
சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை.
எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சா? இனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்கோங்க..!!

விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!

Sunday, November 1, 2009

ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!

நான் புதுமையானவன்

புதுசா தலைப்பு(ஹெட்டர்) மாத்தியாச்சு..!!
கீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே!!
ம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..

சரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..!!!!!!!
இப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.

நீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,
நீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..

இப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.

அதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..!!

எங்கிருந்து வந்தது..?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.

உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.


உண்மையான மகிழ்ச்சி!!

ஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து "தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்." என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. "என்ன இது? வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே?", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, "வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா? எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது", என்றார்.


விடுதியா? அரண்மனையா?

ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார். "என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?" என்ற குருவிற்கு "என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?

அதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500!!).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..!!

Thursday, October 22, 2009

நறுக்..கென்று சில கேள்விகள்..!!

http://www.lokvani.com/lokvani/a_images/y2007/38561-plus-4-kolam-brought-toge.jpg


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

அவருக்கு வாகனத்தில் இடம் கொடுத்தால் என்னவென்று..
ஒரு முடவர் வேர்த்துகொட்டி உங்களை கடந்தபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் பேசினால் என்னவென்று
உங்கள் மூத்தோர்கள் வீட்டில் முடங்கி இருக்கும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

சர்க்கரை அளவை தெரிந்துகொண்டால் என்னவென்று
நீங்கள் குலாப் ஜாமூனும்,ஜிலேபியையும் சாப்பிடும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் வாழக் கற்றுகொண்டோமா என்று..
உங்கள் குழந்தைக்கு வாழ கற்றுகொடுக்கும்போது..?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் மனிதராய் பிறந்ததன் பயன் என்னவென்று..
நீங்கள் நல்ல மனிதர் என புகழப்படும்போது...!!

Tuesday, October 13, 2009

Farmville'யில நீங்க எந்த லெவெல்?

http://vator.tv/images/attachments/020909121934gameBig_farmville.jpg


நானும் ..நானும்..நானும்...

இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!

அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.

பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..

இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?

3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?

4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..

5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?

6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?


7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?

8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?

ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..

அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...

யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!

Thursday, June 18, 2009

ஒரு பாண்டா கரடியின் கனவு..!!!

Kung Fu Panda





ஒரு ஊருல ஒரு பாண்டா கரடி இருந்துச்சாம். அதுக்கு குங்-ஃபூ கலையை கத்துக்கணும்னு ரொம்ப ஆசையாம். ஆனா அவங்க அப்பா அவனை
நூடுல்ஸ் விக்க சொல்லிட்டே இருந்தாராம். ஒரு நாளு..

இப்படி சொல்ல வேண்டிய கதையை மெருகேற்றி.. அழகாய், அனிமேஷனாய், அம்சமாய் குடுத்திருக்கிறார்கள் நமது ஹாலிவுட் சகாக்கள்.
நம்ம டிரீம்வர்க்ஸின் கைவண்ணத்தில் அற்புதமாய் ஒரு படைப்பு.

ஒரு உயரமான உருளைகிழங்கு கணக்காய் ஒரு பாண்டா கரடி.
அதனுடைய ஆசைகள், கனவுகள்,லட்சியம் எல்லாமே குங்-ஃபூ.(இதுவும் கராத்தே போலத்தான்..மேலும் தகவலுக்கு இங்கே பாருங்கள்).
அதில் தேர்ச்சி பெற அது அனுபவிக்கும் கஷ்டங்கள். அதை அடைந்துவிட்ட பிறகு அதற்கு வரும் முக்கியமான சவால். இவை அனைத்தையும்
நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார்கள்.




எப்படியும் தன்னை தனித்து நிலைநாட்டிகொள்வதில் ட்ரீம்வர்க்ஸ் எப்போதும் முதலிடம் வகிக்கிறது. பிக்ஸரின் திரைப்படங்களுக்கு
ஈடுகொடுக்கும் விதமாக எப்போதும் ஒரு படைப்பை தன்னிடம் கொண்டுள்ளது ட்ரீம்வர்க்ஸ்.

இது அனிமேஷன் தானா? அல்லது நிஜ சம்பவங்களா? என்று திகைக்க கூடிய அளவுக்கு
அனிமேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் ”கனவுவேலையாட்கள்”. சண்டை காட்சிகளில் இருக்கும் தத்ரூபத்திற்காகவே
படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிக்ஸரின் வால்-இ ஆஸ்கரை தட்டி சென்றதுதான் சோகம். இருந்தாலும் மக்கள் மனதில் சிறந்த அனிமேஷன் படமாக
கடந்த 2008ம் ஆண்டு குடிகொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த படத்தில் வரும் முதல் காட்சியானது 3டி-யில் செய்யப்படாமல் 2டி அனிமேஷனாக ஜேம்ஸ் பாக்ஸ்டர் (என் மானசீக குரு)என்கிற அனிமேட்டரால்
தனியே தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை அவர் நாவலேயே கேட்டு அறியும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது ,சமீபத்திய பெங்களூரு பயணத்தின் போது.

உதிரி தகவல்கள் :

இதில் வரும் குரங்கு கதாப்பாத்திரத்திற்கு நமது அதிரடி மன்னன் ”ஜாக்கி சானு”ம்..
இதில் வரும் பெண்புலி (அந்த புலி இல்லீங்கோ..இது டைகரஸ்)க்கு நம்ம ”ஏஞ்சலீனா ஜூலி”யக்காவும் குரல் குடுத்திருக்கிறார்கள்.

படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க கூடியது.

சிடிக்கள் முக்கிய நகரங்களில் நிச்சயம் கிடைக்க கூடியதே!!

நம்ம ரேட்டிங் [7/10]

Saturday, June 6, 2009

ப்ளீஸ் இத படிக்காதீங்க.. !!


அன்றும் அப்படித்தான்..
ஒரு மொக்கை மாலை வேளையில் வீட்டு கணினி முன் அமர்ந்து கொண்டு
என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துகொண்டு இருந்தேன்.

தங்கையின் ரிசல்டாவது பார்க்கலாம் என்றால் அந்த சைட்டே லோடு ஆகாமல்
டபாய்கிறது. அவள் என்னை சந்தேகப்படுகிறாள் பாவி.
நாந்தான் ஏதோ செய்து அவள் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தை இயங்கமுடியாமல் செய்து விட்டதாக சொல்லிகொண்டிருந்தாள்.
எனக்கு அப்படியெல்லாம் செய்யத்தெரியாது என்று சொன்னால் நம்ப மறுக்கிறாள்.
நீதான் தினம் தினம் ஏதேதொ கோடிங் கீடிங் என்றெல்லாம் சொல்றியே..
அதுபோல் நீதான் எதாச்சும் பண்ணி இருப்ப.. என்கிறாள்.

அது ஜாவா கோடிங்டி.. இது எச்.டி.எம்.எல்.னு தெளிவா சொல்லிபார்த்தேன்.
ம்ம்.. கேட்டபாட்டை காணோம்..

இது என்னடா கூத்தபெருமாள் கூத்தா போச்சேன்னு நினைச்சுகிட்டேன்.


இப்படியாக பொழுது போய்கொண்டிருந்த போது ..
திடீர் என்று ஒரு எண்ணம் உதித்தது.

நேராக கூகிள் பக்கம் போனேன். அதில் சேர்ச் பாக்ஸில்
"உருப்படியாக எதாச்சும் இருந்தால் காட்டு" என்று அடித்தேன்.

அடி சக்கை.. கூகிள் கூகிள் தான்.
நம் பேர்போன பதிவர்களின் பக்கங்கள் பல திறக்கப்பட்டு கிடக்கின்றன என் கண்பார்வைக்கு.

அடிச்சுதுடா ஜாக்பாட் என்று ஒவ்வொன்றாக மேய.. (ஆடு போல் மெதுவாய்)கிறேன்.

முதல் லிங்கே சூடாக கிடைத்தது. அந்த லிங்க் வேறு யாருடையதும் அல்ல.
நமது திரைக்கடல் பதிவருடையது.

அவரின் பதிவு ஒன்றை படித்த பிறகு அந்த லிங்கை கூட வெளியிடலாமா வேண்டாமா என்ற மனபீதி கிளம்புகிறது. என்றாலும் சிபி மீது நூறு டன் பாரத்தை போட்டு லிங்கை இங்கே தருகிறேன்.

அடுத்து நம்ம வருத்தப்படாத.பசங்க.சங்கத்து பதிவு ஒண்ணு கண்ணில் சிக்கிச்சு.
அதாங்க.. இப்போ பேர் மாற்றம் ஆகி இருக்கும் வருத்தப்படாத.பசங்க.சங்கத்து பதிவு ஒண்ணு சிக்கிச்சு.

அதுதான்..சிவனையும்..அதாங்க லார்டு சிவாவையும்.. லார்டு பெருமாளையும்
கலாய்க்கும் பதிவு.

அதில் வரும் பாடல்களும் விளக்கங்களும் அடடா..என சொல்லவைப்பவை.
இந்த சுட்டியில் பாருங்க..

மேலும் பலபல..பிரபல பதிவர்களின் சூடான பதிவுகள்.. அந்த தேடல் பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன..

தேடி எடுக்க சிரமப்படவே வேண்டாம்.. சும்மா "உருப்படியா எதாச்சும் இருந்தா காட்டு" என்று தமிழில் டைப்புங்க போதும்..

பதிவுகள் வந்து குவியும்..

சரி.. டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. அடுத்த பதிவில் சந்திப்போம்.


கும்மிக்கும் அனுமதி உண்டு என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


டிஸ்கி.. :
வந்தமா..படிச்சமா போனமான்னு இருந்திட கூடாது.. கமெண்ட் போட்டு கணக்கை தீர்க்கணும்..சொல்லிட்டேன்.