Showing posts with label பாட்டு பாஸ்கி. Show all posts
Showing posts with label பாட்டு பாஸ்கி. Show all posts

Thursday, July 2, 2009

ஒரு கவிஞனின் விதி...!!!


அப்போது எனக்கு வயது 16..

அன்றொரு நாள்..

..
ஆசையோடு நான்
சில புதுக் கவிதை
எழுதி வந்தேன்;

”ஏண்டா இப்படி பேப்பரா வீண் பண்ற?!” என்றாள் தங்கை.

“ஹோம்வர்க் செய்யறதை விட்டுட்டு,கவிதை கேக்குதா கழுதை” இது அப்பா

“பையன் போற போக்கே சரியில்ல சாந்தி, கொஞ்சம் அடக்கி வை” இது பாட்டி

...

ம்ம்.. அம்மாவும் திட்ட போகிறாள் என்று நினைத்தேன்.


ஆனால் தனியே என்னை அழைத்து..

“லூஸ்.. இதெல்லாம் தனியா என்கிட்ட காட்டி இருக்கலாம்ல.”

கவிதையை பார்த்துவிட்டு

”பரவாயில்லையே.. கவிதை எல்லாம் சூப்பர்.. ம்ம்.. அடுத்த வாலி நீதான்.”

நான் கேட்டேன்..

”வாலா.. வாலியா?”

அழகாய் சிரித்துவிட்டு சொன்னாள்.

“வாலிடா கண்ணா. அவர் ஒரு பெரிய கவிஞர்”. என்று சொல்லி என் தலை வருடினார்.

அப்போது அம்மாவை அப்பா முறைத்தார்.

மாலை..
அப்பா.
“ஏண்டி.. உன் புள்ளைதான் லூஸுன்னு பார்த்தா நீயுமா?”

அம்மா.
“ஏங்க..என்ன ஆச்சு இப்போ?”

அப்பா.
“பின்ன என்ன? அவன் கவிதை எழுதிட்டு வரான். நீ அவனை ரொம்ப புகழ்ற.”

அம்மா.
“ஆமா. புகழ்ந்தேன். அதுக்கென்ன இப்பொ?”

அப்பா.
“இப்படி ஆரம்பிச்சா. அவன் எப்படி ப்ராக்டிகல் வாழ்க்கையில் வாழ முடியும்?,,
எப்ப பார்த்தாலும் கவிதை, கற்பனைன்னே இருந்துட்டா.. சுத்தி நடக்குறது என்னனு தெரியாமலே போய்டும்.
அவன் மட்டும் இந்த உலகத்துக்கு அந்நியமா போய்டுவான். அவனை நீ என்கெரேஜ் பண்ணாதே”

அம்மா.
“அது எனக்கு தெரியாதாங்க. முதலில் என்கெரேஜ் பண்ற மாதிரி பண்ணுவேன். அப்புறம் போக போக, அது சரியில்லை
இது சரியில்லைன்னு சொல்லி. அவனை கவிதை எழுதுவது மேல ஒரு வெறுப்பு வர வெச்சுடுறேன். அப்புறம் அவன்
நம்ம வழிக்கு வந்து தானே ஆகணும். “

அப்பா.
“அட.. நல்லா தான் யோசிச்சுருக்க. குட். அவனை கவிஞனா பாக்க எனக்கு மனசு வரலை. அவன் பெரிய பிசினஸ் மேனா வரணும்.
அது தான் என் ஆசை.”

அம்மா
“என் ஆசையும் அதுதான்.”

..........

ஒரு மெல்லிய விசும்பலோடு.. அவைகளை கேட்டுகொண்டிருந்தேன் நான்.

முதன்முறையாக.. என் தாயே எனக்கு ஒரு எதிரியாக தெரிந்தார்.

என்ன செய்வது.. அவர்களின் தேடல் வேறு. என் தேடல் வேறு.


இறுதியாக...

ஒரு “ரகசிய வாழ்க்கை”யை துவங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

இனி உலகுக்கு நான் பிஸினஸ் மேன். எனக்குள் ஒரு மகா கவி.

அன்று முடிவு செய்தேன்:

சுயத்தை இழந்து தானே வாழக்கூடாது. சுயத்தோடு வாழ்ந்துகொண்டே, உலகத்தோடும் வாழ்ந்து காட்டுகிறேன்.


பாட்டு பாஸ்கி : ஐ யம் பேக்.. !!

ஆஹா.. இது என்னடா அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட்டா இருக்குது.

ஆனா, அந்த பையன் பேர கடைசி வரை சொல்லவே இல்லியே நீ...?

Saturday, May 30, 2009

அப்பா.....!!


என்னில் எப்போதும் சில புயல்கள் வந்து போவதுண்டு.
எப்போதும் அவைகள் அவையாகவே மறைந்துவிடும்.

அன்றும் அப்படிதான் வந்தது ஒரு புயல்
உன்னை பிரியும் ஒரு பயங்கர புயல்..

எப்படி என்று இன்று நினைத்தாலும்
என்னுயிர் மெல்ல சறுக்கி விழுகிறது.

ஏன் என்று இன்று நினைத்தாலும்
நெஞ்செல்லாம் வலியுடன் துடிக்கிறது.

எதற்கு என்று இன்று நினைத்தாலும்
காரணம் தெரியாமல் விழி நீர்சேர்க்கிறது.

என்ன செய்ய.. ஏது செய்ய
என சிந்தித்து முடிப்பதற்குள்

எங்கோ போய்விட்டாய் நீ
என்னை தனியாய் தவிக்கவிட்டு..

நீ பிரியும் தருணத்தில் கூட
உன் வார்த்தைகளை மதித்தேன்..

ஆம்..

ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு..

வாழ்நாளில் நீ என்னை நினைத்து
வருந்தினாய்..
மன்னித்துவிடு..!!
உன்னை வருந்த வைத்தமைக்கு..

இனி எவருக்கும் வருத்தந்தராதவனாய்
வாழ்ந்து காட்டுவேன் ...!!

இனி உன் குடும்பத்தின் பொறுப்பு
என் தோள்களில்...!!

உன்னை கேட்பதெல்லாம் ஒன்று தான்..

சுமையை குறைக்காதே..
என் தோள்களை விரிவாக்க செய்..

பாட்டு பாஸ்கி :
அவர் எங்கயும் போகலைப்பா.. ரங்கா.. அவர் எப்பவும் உங்களோட தான் இருக்காரு.. இருப்பாரு..
வலியை மற.. வாழ்வை நினை.. வெற்றி உனக்கே.. வாழ்த்துக்கள்!

Monday, May 25, 2009

அந்த மழை காலத்தில் ஒரு மதிகெட்டவன்..!!



மெல்லிய மழை..
சாலையோரம் நான்..
எப்போதும் போல நனைய மறுக்கும்
நமத்துபோன நெஞ்சங்கள்..
எனக்கும் நனைய விருப்பமில்லை..
என்றாலும் காலையில் படித்த ஓஷோ
என்னை என்னவோ செய்ய சொன்னாரே...?!

ஆங்... உன் மனதை கவனி..
அப்போது உன் உண்மையான உன்னை நீ உணரலாம்..

கவனித்தேன்..
ரொம்பவும் அஞ்சுகிறது..
நனைந்தால் சுரம் வரும்..
ஆபிஸ் லீவ் வேறு இல்லை..
பார்ப்பவர்கள் பைத்தியமென்பார்கள்..
வீட்டில் விட்டு விட்டு திட்டுவார்கள்..
இவனுக்கு ஒழுங்கா வேலைக்கு போற எண்ணமில்லை என்பார்கள்..
இப்படி பல மடங்கு அஞ்சியது..

சரி.. நனைந்து தான் பார்த்துவிடுவோம்..
என்னதான் ஆகிவிடும்..
மிஞ்சி மிஞ்சி போனால் காய்ச்சல் வர போகிறது..
ஒரு கால்பாலும்.. ரஹ்மான் பாடலும் போட்டால்
சரியாகிவிடுமே..

ஆஹா.. இவ்ளோ மழையும் எனக்காக
பெய்கிறதா..
என்று ஒரு ஆச்சிரியம்..

மெல்ல இரண்டு கைகளையும் விரித்து நின்றேன்..
இன்னும் இருக்கமாய் அணைத்துகொண்டது அது..

இப்படியே சில கணங்கள் மெல்ல கரைந்து போனேன்...
சாலைவாசிகள் என்னை பார்த்து எதோ சொன்னதுபோல இருந்தது..

இருக்கட்டுமே.. என்ன இப்போ..

நனைவதன் சுகம் எப்போதும் அலாதியானது..
அருவி குளியல் அகத்தினை தொட்டால்...
மழையின் நனைதல்.. ஆன்மாவை தீண்டுகிறதே...

சில கணங்களுக்கு பின்..
என் சாலையில் ஒரு லாரி சடசடத்தபடி ஓடியது..
பாவம் யாரோ ஒருவன்
நட்ட நடு சாலையில் அடிபட்டு கிடக்கிறான்..

அட..!!
நான் அணிந்திருக்கும் சட்டை
போலவே இருக்கிறதே அவனுடையதும்..!!!

பாட்டு பாஸ்கி : இதுக்குதான்.. மழைவந்தா ஒதுங்கி நிக்கணுங்கறது..
இல்லனா.. செம் சர்ட்.. சேம் ப்ளட்...!!

Friday, April 24, 2009

அற்புத பதிவு -1001!!!

வணக்கம் நட்புகளே!!

பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.

தினசரி நான்கைந்து பதிவுகளையாவது படித்து கமெண்ட் போடாவிடில் தூக்கம் வருவதில்லை. நமது ஜமால் போல் பத்தாயிரம் பின்னுரை எல்லாம் போட்டு அசத்த வேண்டும் என்றுகூட சில நேரங்களில் ஆசையாயிருக்கு எனக்கு. மனிதருக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ தெரியலீங்க..!!

ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.

நான் 2007-ஆம் ஆண்டு சிபியால் அறிமுகப்படுத்த பட்டேன். அவர் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் நான் படித்து அசந்து போகும் அளவுக்கு பதிவில் கலக்குகிறார்கள் ,அடியேன் இன்னும் கத்துக்குட்டிதான்..என்பதில் பெருமையே எனக்கு.

அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்துகொள்ள சில பதிவர்கள் உற்ற துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பதிவை படித்தே நான் என்னை உயர்த்திகொண்டு வருகிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது பாவம்.

உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படியே சில பல பிரச்சனைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம் தான்.

ஆமா.. இப்போ நீ என்னதான் சொல்ல வரே? ன்னு கடுப்பாய் காதில் புகையுடன் கேட்பது புரிகிறது.

அது தெரிஞ்சா முதல் பாராவிலேயே சொல்லி இருக்க மாட்டேனா?


பாட்டு பாஸ்கி : அடப்பாவி இன்னுமா உனக்கு எழுத மேட்டர் கிடைக்கலை.. இன்னிக்கு நீ செத்தடி...நான் வரலை.. நீயாச்சு.. அவங்களாச்சு.. நான் இப்போவே டீசண்டா கழண்டுக்கறேன்..

Sunday, April 19, 2009

வெயிடிங்க்...!!!


அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..

அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..

அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..

அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..

காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...

அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..

கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..

அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..

இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..

அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.

இப்படிக்கு-

பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.

பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு...  ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..


Wednesday, April 8, 2009

என் அன்பு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!




அட.. !! என்ன இன்றைக்கு உனக்கு அழகு கூடி விட்டது?

என்ன உன் நடையில் ஒரு கம்பீரம் மிளிர்கிறது?

உன் கண்ணில் காந்தம் எதும் வைத்துவிட்டான கடவுள்
இப்படி ஈர்க்கிறது என்னை?

அடிக்கடி என்னை அழைத்து சிரிக்கிறதன் அர்த்தம் என்னவோ?

எதோ சொல்ல வருகிறாய்.. காபி கொடுக்கும் போது புதியதாய் புன்னகை வேறு...?

"கல்யாண நாளா?" என்று அப்பாவின் காதோரம் கேட்டேன்.

அந்த துக்க தினம் இன்று இல்லை என்று அப்பா கிண்டலடிக்கிறார்.

வேறென்ன..

உன் மாமியார் கிளவியிடம் கேட்டேன்.."ம்ம்கும்" ..என்று முகத்தை திருப்பிகொள்கிறது.

அட.. என்னம்மா ஆச்சு... உனக்கு..

அட.. இன்று ஏப்ரல் எட்டா?

நேராக சென்றேன்... கையை பிடித்து நிறுத்தி சொன்னேன்.

"ஹாப்பி பர்த்டே மா"

"அடடா....!! இரு மேட்டூர் போகலாம் அங்கே அழு.. அணையாவது நிரம்பட்டும்."

"சிரிக்காதே கள்ளி.. !! சொல்லாமல் சொன்ன உனக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என் இதயத்தில்."

நகரு.. இன்று நான் சமைக்கிறேன் என்றேன்.

நான் நீண்ட நாள் வாழ பிடிக்கவில்லையா என்று கலாய்கிறாய் நீ.

எதாவது செய்ய வேண்டுமே ..ஆசையோடு நின்றேன்.

"நீ வாழ்வில் சிறப்பானவனாக வா.. அது போதும்." என்றாய்.

"நிச்சயமாக மா.. நிச்சயமாக"

"இப்போது இருவருமே மேட்டூர் கிளம்புங்கள்" என் கண்ணீர் துடைத்துவிட்டார் அப்பா.



பாட்டு பாஸ்கி : மம்மீ.. ஹாப்பி பர்த்டே..வாழ்த்துக்கள் அம்மா.
இவன் என்னா இப்படி உருகறான். அடக்கிவைங்க அவனை.

Tuesday, April 7, 2009

ரங்காவிண்ட சமையல் கட்டு.. வாழைப்பழ பேஸ்டு செய்வது எப்படி?

வணக்கம் மக்கள்ஸ்!!

இன்னிக்கு நாம பாக்க போற டிஷ் பேரு... வாழைப்பழ பேஸ்ட்.

என்ன பேர கேட்டதுக்கே அதிருதா.. அதான் ரங்கன்.

நாங்க எப்பவும் டிஃபரண்டாதான் யோசிப்போம்.ஹிஹி..

சரி.. இப்போ மேட்டருக்கு வருவொம்.

தேவையான பொருட்கள்
1. பழுக்காத வாழைப்பழம்-2
2. பழைய டூத்பேஸ்ட் டியூப்
3. கத்தி அல்லது கத்தரிகோல்
4. பெவிக்குயிக் கம்.

முதலில் நல்ல பழுக்காத வாழைப்பழமா வாங்கிகோங்க.. இல்ல வாங்கிட்டு வர சொல்லுங்க.
அது நல்லா பழுக்காம திக்கா இருக்கனும். அடுத்து இப்போ கத்தி.. வைச்சு (வாயால கத்துவது இல்லை). கட் பண்ணிடுங்க.

அடுத்து அந்த பேஸ்ட் டியூப் இருக்கா.. அதை எடுங்க.. அதனுடைய வாய் பகுதிய மட்டும்..
அதாங்க பேஸ்ட் வெளியே வருமே.. அந்த பகுதி.. அதை மட்டும் கட் பண்ணி வெச்சுகங்க.

இப்போ பெவிக்குயிக் கம்மை அதில் பூசுங்க.. உடனடியா அதை வாழைப்பழத்தோட கட் பண்ண பகுதியில் ஒட்டிடுங்க.

20 நிமிடம் கழித்து உங்களுடைய வாழைப்பழ பேஸ்ட் ரெடி.

நான் செய்த வாழைப்பழ பேஸ்ட் கீழ இருக்கு.





எப்படி சூப்பரா இருக்கா..

நீங்களும் இதை முயற்சி பண்ணி பாருங்க.. உங்க கருத்தை சொல்லுங்க.


பாட்டு பாஸ்கி : மச்சி.. இன்று முதல் நீ சமையல் கட்டின் சாதனையாளன் என்று அழைக்கப்படுவாய்..

Saturday, April 4, 2009

என்னையும் கவர்ந்த வீடியோ-1

என்னை கவர்ந்த வீடியோ இது.
தயவு செய்து மிஸ் பண்ணிடாதீங்க.
நல்ல அழகான கொஞ்சம் புத்திசாலி தனமான வீடியோ இது.

பாத்து ரசிங்க.. ரசிச்சு சிரிங்க... அப்படியே உங்க கருத்தையும் சொல்லிடுங்க..



பாட்டு பாஸ்கி : மச்சி நான் கூட இப்படி யோசிச்சதில்லைடா..
எங்க இருந்துடா பிடிச்ச இதை.. சூப்பரா கீதுப்பா..!!
என் ஆளுக்கு உடனே இப்படி ஒன்னு அனுப்புனும்..இரு வரேன்..

Monday, March 30, 2009

அவன் கடவுள்!!

பாஸ்கர்.
அவன் எனக்கு 2 வருடங்களுக்கு முன் பழக்கம்.நல்லவன்,என்னை பொருத்த வரை.
அவன் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் போலவே இருப்பான்.
ஆஜானுபாகுவான தேகம்.பாசமான கண்கள். சில நேரம் அவனை பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும்.
எங்கள் கல்லூரி நாட்களில் அவன் தான் மாணவிகளின் கனவு நாயகன்.
எங்களிடம் ஒரே ஒற்றுமை.. அவனை போலவே தான் என் சிந்தனையும் இருக்கும்.
இதுதான் எங்களை இணைப்பிரியா நண்பர்களாக்கியது.


அது 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி. மாலை நான்கு மணி. ஒரு ஃபுட் பால் என் தலையில் வந்து அடித்தது.
வலி சுரீரென்றது. வலியுடன் திரும்பி பார்த்தேன். அவன். கோபமே உருவாக நின்றிருந்தான். எனக்கு புரியவில்லை.
இவன் எதுக்கு என் மீது கோவப்பட வேண்டும். நான் அப்படி எந்த விதத்தில் இவனை புண்படுத்தினேன். யோசித்தேன்.
அப்போது வகுப்பு நண்பர்கள் அவனை நோக்கி பாய்ந்தனர். நான் தடுத்து நிறுத்தினேன். அவனை பார்த்தேன். சிரித்தான்.
அட..சிரிக்கிறானே!.. சரி..மரியாதைக்காக நானும் சிரித்தேன்.அடுத்த கணம் கன்னம் சுரீரென்றது. அறைந்தான்.
இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அப்படியே அவன் சட்டையை பிடித்து கீழே சாய்த்தேன். கால்களை
சரியாக இடறிவிட்டேன். கீழே விழுந்தான். தலை தரையில் பலமாகவே மோதியது. சத்தம் கேட்டதும் எனக்கு உறைத்தது.
ரத்தம் பார்க்க போகிறான் ரங்கன். அப்போது அவனை தூக்க முயன்றேன். பயனில்லை. மயங்கிவிட்டான். நண்பர்களை அழைத்தேன்.
உள்ளே கொண்டு வந்தோம். வெளியே யாரும் பார்த்ததாக தெரியவில்லை. உள்ளே சென்றேன். தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
வேண்டாம் என்றேன்.

அனைவரும் என்னை பார்த்தனர். ஏன். அவனுக்கு தலையில் அடிப்பட்டு இருக்கிறது. முதலில் மருந்து வைத்து கட்டுவோம்.
1 நிமிடம் கூட ஆகாது என்றேன். சரி. இப்போது அவன் மயக்கத்தில் இருந்து எழுந்தான். அவனருகில் அமர்ந்திருந்தேன்.
நேராக அமர்ந்தான்.
நன்றி என்றான்.
வெல்கம் என்றேன். நீ ஓய்வு எடு. நான் வேறு மருந்துகள் வாங்கி வருகிறேன் என்றேன்.
வேண்டாம் என்றான்.
சரி வேறு என்ன வேண்டும் என்றேன்.

உன் நட்பு என்றான் தெளிவாக. நான் ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன் எனக்கு ஒரு விடை வேண்டும் என்றேன்.
ம்ம் சொல்லு.
எதற்கு என்னை தாக்கினாய்?.
அது நானாக செய்யவில்லை, தூண்டப்பட்டேன்.நீ நன்றாக கவிதை
எழுதுவியாமே .உன்னை ஒரு காதல் கவிதை எழுதி தர சொல்லி கேட்டதற்கு முடியாது என்று சொல்லி என் நண்பர்களை
மிகவும் திட்டினாயாமே. அதனால் வந்த கோபம் தான் .

ம்ம்.. என்னை அவர்கள் திட்டியது பற்றி அவர்கள் சொல்லி இருக்க
மாட்டார்கள். உன் தாயை திட்டினால் நீ கோபப்பட மாட்டாயா?. கொன்றுவிடுவேன்.
அதை நான் செய்துருக்க வேண்டும்.
அப்போது அங்கே ஆசிரியர் வந்துவிட்டார். தப்பித்தனர். பாவம் உன்னை தாக்கி என் கோவத்தை வடித்துகொண்டேன். மன்னித்துவிடு.

அதெல்லாம் ஒன்றுமில்லை.
இனி நான் நண்பர்கள். சரிதானே. ம்ம்..
அடுத்த சில நாட்கள். அமைதியாய் கழிந்தது. கல்லூரி நாளில் என்
கவிதை ஒன்றை அவன் மேடையில் படித்தான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். நானும்தான். மெல்ல மெல்ல அவனும் நானும்
நண்பர்களாய் வளர்ந்தோம். அவனின் சிந்தனை அப்படியே என்னுடையதை ஒத்து இருந்தது. படிப்பில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அவனின் ஆர்வம் என்னையும் பற்றிகொண்டது. மெல்ல மெல்ல
நாங்கள் நட்பின் ஆழத்தை உணர்ந்தோம். அது வெகு சீக்கிரம் முடியப்போவது அறியாமல்.

மரங்களும் நட்பும் ஒன்று. அவை ஆயுளுக்கும் வளர்பவை. தினமும் புதுப்பித்துகொள்பவை.


அன்று மார்ச் 29. மாலை ஆறு மணி. சரி நான் கிளம்புகிறேன் ரங்கா.
ம்ம்.. சரி.
ரங்கா நாளை நான் வருவேனா என்று தெரியவில்லை.
வீட்டில் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கிறது.

கவலைப்படாதே. சரியாகிவிடும்.

எனக்கு அப்படி தோன்றவில்லை. பயமாக இருக்கிறது.
என் கைகளை பிடித்துகொண்டான். கண்கள் பனித்திருந்தன.

ஹேய். அழாதே. நாங்களெல்லோரும் இருக்கிறோம்.
பயப்படாமல் போய் வா. இரவு மெஸேஜ் பண்ணு.

பொறுமையா போய்டு வா.

சரி நான் கிளம்புகிறேன். சைக்கிளில் கிளம்பினான்.

இரவு அவன் அனுப்பியது ஒரே ஒரு மெஸேஜ்.
"நீயாச்சும் நல்லா தூங்குடா ரங்கா."

காலை 8.30க்குதான் அதை பார்த்தென்.
அலைப்பேசியை கீழே வைக்க போனேன்.

நண்பன் ரமேஷ் அழைத்தான்.
"மச்சி.. பாஸ்கர்....."

"என்னடா..அவனுக்கு என்ன..தெளிவா சொல்லு"

"சைக்கிள்ல வரும்போது மயங்கி விழுந்து.. இறந்துட்டான்டா.."

"டேய்.. என்னடா சொல்ற..எங்கடா இருக்கே.. "

"பழைய பஸ் ஸ்டாண்ட் டா"

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து அவனை பார்த்தேன்.
பிணமாய்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை.

எனக்கு அவன் கடவுள்தான்.

நட்பின் கடவுள்.

பாட்டு பாஸ்கி அவன் தான்.

இன்று அவனின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி.


பாட்டு பாஸ்கி : மச்சி ஏன் இப்படி..?
சரி.. தெம்பா உனக்கு பிடிச்ச நியுயார்க் நகரம் பாட்டு கேளு.
இனிமே இப்படி ஒப்பாரி வெச்ச..மவனே பேத்துடுவேன்.

Thursday, March 12, 2009

மகிழ்ச்சியே மருத்துவம்

எனக்கு எந்த கவலையுமே இல்லயே..
அதுதான் எனக்கு கவலையா இருக்கு...!!!
இப்படி பல பேரு நம்ம ஊருல புலம்பிட்டு இருக்காங்க.

அதுவும் பெண்களின் பக்கத்தில் இது கொஞ்சம் அதிகமா இருக்கு.

எங்க அத்தை ஒருத்தங்க அப்படித்தான்..
சாப்பாட்டில் ஒரு முடி விழுந்திட்டாக்கூட
பதறி.. பயந்துபோய் தனக்கு எதுவோ வியாதி இருக்குனு நினைச்சுக்குவாங்க..
அவ்ளோ சென்சிட்டிவ்..

சில பேர் லேசா உடம்பு சுடுதுன்னு யாராச்சும் அல்லது தெர்மாமீட்டர்
சொன்னாக்கூட..போச்சு..
கண்ணு செவந்திருக்கா பாரு..
நாக்கு மஞ்சளா இருக்கா பாருன்னு பத்ரகாளி மாதிரி வாயத் திரப்பாங்க..

அதிகபட்சம் வியாதிகள் நமக்கு வருவதும் போவதுமாய் தான் இருக்கிறது
அதை நாம் அறியாமலே உடல் பார்த்துக்கொள்கிறது.

அப்படி மீறிப்போய் வந்தாலும் அதுக்கு தேவையான மருத்துவம் பார்த்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கலாம்.அப்படி தொடர்ந்து வேலையில் இருப்பதால்
உடலை நாம் அதன்போக்கில் நோயுடன் சண்டைப்போட வழிசெய்கிறோம்.
அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. சீக்கிரமே நோய் தீர்க்கப்படுகிறது.
அதைவிட்டு நோயை நினைத்து புலம்புவதால் அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குகிறோம்.

பல மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது இதுதான்:
"மனதினை பொருத்தே மருந்துகள் வேலை செய்கின்றன.
ஒருவர் மருந்தை எடுத்துக்கொண்டிருந்தாலும் நோயினைப் பற்றிய நினைவுகளுடனே இருந்தால்
நோயின் தீவரம் அதிகரிக்குமே தவிர குறைவதில்லை.
அதெ நேரம் மனத்தினை நோய் தாக்கியுள்ள நேரங்களிலும் தெளிவாகவும், மகிழ்ச்சியுடனும்
வைத்திருப்பவர்கள்... வெகு வேகமாக குணமடைகிறார்கள்.

அது மட்டும் இல்லங்க..
இன்னும் ஒரு பெரிய தவறை நாம நமக்கு தெரியாம பண்ணிடுறோம்.
அது என்னனு கீழே படியுங்கள்...



" பல வகையான நோய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் நம் ஜுன்களில் தினசரி பதியப்படுகிறது.
அப்படி பதியப்படும்போதே அது எப்படி தீர்க்கப்பட்டது என்ற தகவலும் அதில் சேரும்
அப்படி மனக்குழப்பத்துடனே தீர்க்கப்பட்ட நோய்கள் பற்றிய தகவல் சரியாக சேர்க்கப்பட முடிவதில்லை.
அதனால் உங்களுடைய சந்ததியில் அந்த நோய்க்கான பாதிப்பு தொடர வாய்ப்புகள் அதிகம். "

என்ன ஷாக் ஆகிட்டீங்களா..?
அப்படியே ஆனாலும் இனிமேலாவது "வருவது வரட்டும் .. எது வந்தாலும் என் சந்தோசத்த பறிச்சுட முடியாதுன்னு
இருங்க"
உங்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு எனக்கு வயசு இல்லை..
எல்லாம் ஒரு வேண்டுகோள்தான்..
எடுத்துக்கறதும் தள்ளுவதும் உங்க விருப்பம்.

வாழ்க மகிழ்ச்சியுடன்,
ரங்கன். :D


பாட்டு பாஸ்கி : இந்த பதிவுக்கு சரியான பாடலை அண்ணன் ரங்காவே சொல்லிட்டார்.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்படோம் நடலையல்லோம்;
ஏமாப்போம் பிணி அறுப்போம் பணிவோமல்லோம்,-

இன்பமே ஒரு நாளும் துன்பமில்லை."

Tuesday, March 10, 2009

சந்துருவும்.. புதிய பப்பியும்

சந்துரு..எங்கடா கிளம்பிட்ட..?

மா.. விமல் வீட்டுக்கு போறேன்மா..

நானும் வரட்டுமாடா?

இல்லமா.. அடுத்த தெருதானே.. நானே போயிக்குறேன்..

சரி.. பொறுமையா போ.. கால் வலிக்க போகுது...

ம்ம்ம்... சரிம்மா.. கிளம்பறேன்..டாட்டா..

டாட்டா செல்லம்..

*******************************

சந்துரு படியிறங்கி நடந்தான்..
அப்படியே அவன் தாத்தாவின் மிலிட்டரி நடை..

சற்று நேரத்தில் விமல் வீட்டை அடைந்தான்
ஆனால் வீடு பூட்டி இருந்தது.

திரும்பி வீட்டிற்கே நடந்தான்.
செல்லும் வழியில் ஒரு புதிய கடை ஒன்று வந்திருப்பதை பார்த்தான்.
அருகே சென்று பார்த்தான். அது ஒரு "பெட் ஷாப்".

********************************

சந்துரு "உள்ளே வரலாமா?"

கடை முதலாளி அவனை வரவேற்றார்.

குட்மார்னிங்.. அங்கிள்..

குட்மார்னிங்...

என்னப்பா.. உனக்கு பேர்ட்ஸ் பிடிக்குமா.. அல்லது டாக்ஸ் பிடிக்குமா?

ரெண்டும்தான் அங்கிள், இப்பொ எனக்கு டாக்ஸ் பார்க்கணும்.

சரி வா.. பாத்துடலாம்.

**************************




இங்க பாரு... எல்லாமே அழகழகான பப்பீஸ். நல்லா இருக்கா..?

ஆமாம் அங்கிள்.. அருமையா இருக்கு...
அங்கிள்.. அது என்ன அந்த பப்பி மட்டும் ஏன் நொண்டுது ?
என்ன ஆச்சு அதுக்கு?


அதுவா.. அதுக்கு இடுப்பு எலும்பு அவளோ வலுவா இல்லப்பா.. அதனாலதான் நொண்டுது.

சே.. பாவம் அங்கிள் ... அங்கிள் நான் அந்த பப்பிய வாங்கிக்கறேன்.

தம்பி.. அது எதுக்குப்பா உனக்கு..?
அதானல.. ஓடமுடியாது.. வேகமா நடக்கவே கஷ்டப்படும்..
உன் கூட அது குதிச்சு குதிச்சு விளையாட முடியாது...

இல்ல அங்கிள்.. அதுதான் வேணும்.
எவ்ளோ அங்கிள் பணம் தரணும்?

இல்லப்பா அதுக்கு பணம் ஏதும் வேண்டாம்..
சும்மாவே தரேன்.. வச்சுக்கோ..

சந்துரு கோபமாக..
அங்கிள்.. அதெப்படி.. மத்த பப்பி மாதிரி தானே இதுவும்
இதுக்கு மட்டும் ஏன் விலை இல்லை..?


இல்லப்பா... வேணாம்.. நீயே எடுத்துக்கோ..
பணம் வேண்டாம்.

நோ.. அங்கிள்.. முடியாது..
சரி அந்த பப்பிக்கு என்ன விலை..?
சந்துரு வேறொரு பப்பியை காட்டினான்.

அது.. 1500 ரூபா..ப்பா.

ம்ம்.. இருங்க..
தன் பாக்கெட்டில் இருந்து.. 20 ரூபாயை எடுத்தான்.

இந்தாங்க... இப்போதைக்கு இத வெச்சிகங்க..
மாசாமாசம்.. பணம் அனுப்பிடுறேன்...
சரியா? என்று அவரின் கண்களை பார்த்தான்

அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

சரிப்பா.. பணம் வாங்கிக்கறேன்.
ஆனால் ஒரு சந்தேகம், ஏன் அந்த பப்பி மேல அவ்ளோ விருப்பம்?

அவன் புன்னகைத்தான்.
அவனுடைய ஃபேண்டை உயர்த்திக்காட்டினான் சந்துரு.

அவனுடைய வலது கால் மிகவும் மெலிந்து,
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த பப்பியோட வலி எனக்குதான் புரியும் அங்கிள்.. அதான் நான் கேட்டேன்..
அங்கிள் குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.

மலைத்துபோய் நின்றார் கடைக்காரர்.

சந்துரு."பப்பீ.. உனக்கு என்ன பேரு வெக்கலாம்..?"


பாட்டு பாஸ்கி : இதுக்கு சரியா பாட்டு
குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா.. !
குறையொன்றுமில்லை கண்ணா...!!
குறையொன்றுமில்லை கோவிந்தா...!!!

(பி.கு) என்றோ படித்த ஆங்கில கதை இது ... நன்றி

Tuesday, March 3, 2009

கன்னத்தில் என்னடி காயம்...??

நம்ம சிபி...
ஞாயித்துகிழமை ஆளையே காணோம்..
திங்ககிழமை சாட்டிங்-லயும் இல்ல..மெயிலும் இல்ல..

என்னாடா இது.. தல சத்தமில்லாம இருக்கே..னு ரொம்ப பயமா போச்சு..
நம்ம மக்கள் வேற மண்ட காஞ்சிபோயி
"ரங்கா ரங்கா போன் போடு".. "ரங்கா ரங்கா போன் போடு"ன்னு ஒரே நச்சு..

சரி போட்டு தான் பாப்போம்-னு கால் பண்ணா...
"சும்மாதான் டயர்டா இருந்திச்சு.. அதான் லீவ்.. நாளைக்கு வந்துடுவேன்னு சொல்லிடு"னு சொன்னார்

இருந்தாலும் நம்ம க்ரெயின்(அதாங்க.. இங்கிலீஷ்ல மூளை-னு சொல்லுவாங்களே) வேல செய்ய ஆரம்பிச்சுது..
என்னமோ இடிக்குதேன்னு நம்ம சென்னை பிராஞ்ச் உளவுத்துறைய தூண்டிவுட்டேன்..

வந்தது ஒரு அதிர்ச்சி தகவல்...
சிபியோட கன்னத்துல பேண்டேஜ்...!!
ஆடிப்போய்ட்டான் ரங்கன்.. :(


என்னாடா இது கூத்தா இருக்கு.. ?சிபிமேல யாருக்கு என்ன கோவம்?
இந்த கவிதா அப்பப்போ சிபி கன்னக்குழி மேல கண்ணா இருந்துச்சே அதனாலயா?
ஒருவேள கண்மணி கடுப்பாகி கடிச்சுடுத்தா?
இல்ல பக்கத்து ஊட்டு நாய் எதும் பதம் பாத்துருக்குமோ?
இப்படி பல பல கேள்விகள் மண்டைக்குள்ள சுத்துது...

இதுக்கு பதில நம்ம உளவுத்துறையாலக் கூட கண்டுப்புடிக்க முடியல...
அதனால மக்கா மேட்டர உங்ககிட்ட விடரேன்...

எதனால் ஏற்பட்டது அந்த காயம் & பேண்டேஜ்-னு கண்டுபிடிங்க பாக்கலாம்..
பரிசானது கண்டுபிடித்தவரை பொருத்து வாரி வாரி "வழங்கப்படும்"...


பாட்டு பாஸ்கி : இத கேக்கும்போது
ஆ :"கன்னத்தில் என்னடி காயம் ?
பெ : "அது வண்ணக்கிளி செய்த மாயம்"னு சோகமா பாடத்தோணுது..
ஹ்ம்ம்.. சீக்கிரம் காயம் ஆர ப்ராஸ்பிரஸ்தூ...