Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Sunday, December 6, 2009

என்ன பேரு வேணும்..?

என்னடா இவன் பேரை எல்லாம் விலைக்கு விக்கிறானான்னு நினைச்சுடாதீங்க.. எல்லாம் ஒரு குறும்பு மெயிலால் வந்த வினை..

நீங்களும் இந்த குறும்பை படிங்க..ரசிங்க..!!

Doctor – Vaidyanathan
Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver – Parthasarathy

டிஸ்கி :  பெண்கள் பேரு லிஸ்டில் இல்லாம போச்சேன்னு எனக்கும் வருத்தம்தான்..!!கிகிகி..

Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.



http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

Sunday, November 1, 2009

ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!

நான் புதுமையானவன்

புதுசா தலைப்பு(ஹெட்டர்) மாத்தியாச்சு..!!
கீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே!!
ம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..

சரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..!!!!!!!
இப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.

நீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,
நீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..

இப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.

அதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..!!

எங்கிருந்து வந்தது..?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.

உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.


உண்மையான மகிழ்ச்சி!!

ஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து "தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்." என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. "என்ன இது? வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே?", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, "வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா? எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது", என்றார்.


விடுதியா? அரண்மனையா?

ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார். "என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?" என்ற குருவிற்கு "என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?

அதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500!!).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..!!

Sunday, September 27, 2009

விஜயதசமி வாழ்த்துக்களும்..!! ஒரு காமெடி ஸ்கிரீன் ப்ளேவும்!!!

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg
எல்லாருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

குட்டீஸ் நல்லா படிச்சு பெரிய அளவுல பேர் வாங்கி , அப்பா அம்மாவை காப்பாத்தணும்னு சாமிய நல்லா வேண்டிக்கோங்க..!!

இளவட்டங்கள் இப்போ நல்லா படிக்காட்டியும் இனிமே நல்லா படிச்சு, கண்ட பொண்ணு பின்னாடி சுத்தாம, நல்ல வேலைக்கு போய், கைநிறைய சம்பாதிச்சு , பெத்தவங்களை சந்தோஷமா வெச்சிருந்து, நாலு பொண்ணை நம்ம பின்னாடி சுத்த வெய்யி தாயேன்னு சரஸ்வதிய வேண்டிக்கோங்க..!!

பெரிசுகள் எப்பவும் ஜாலியா சந்தோசமா நம்மையும் நம்மை சுத்தி உள்ளவங்களையும் வெச்சு பார்த்துக்க வேண்டிய பொறுப்பை இன்னும் சிறப்பா செய்யணும்னு வேண்டிக்கோங்க...!!

பெண்கள் எப்பவும் எதற்கெடுத்தாலும் கோவப்படாம , சூதனாம(அது உங்களுக்கு மட்டும்தான் வரும்.. ஜென்ஸ் இதில் வேஸ்ட்) நடந்து புகுந்த வீட்லயும், பிறந்த வீட்லயும் நல்ல பேரு வாங்கி , என்னையும் என் குடும்பத்தையும் மேலும் முன்னேற்றம் பண்ண வழி செய் தாயீன்னு வேண்டிக்கோங்க..!!!

அம்பாளின் அருளுக்கு எல்லாருக்கும் எல்லாம் தரட்டும். எல்லாரும் நல்ல மனசோட பரிச்சுத்தமா இருங்க..!!


http://farm2.static.flickr.com/1009/864900082_71906f506d.jpg


ஹோஸ்ட் : வணக்கம் நேயர்களே என்றும் போல் இன்றும் ஏழரை எப்.எம் மோடு உங்கள் இந்த இனிய இரவு பொழுதை கழியுங்கள்..!!

நேயர் : அலோஓஓஓஓஓஓஓஓஓ!..

ஹோஸ்ட் : அலோ.. வாங்க வணக்கம். உங்க பேர் என்ன ? எங்க இருந்து பேசுறீங்க?

நேயர் : அலோஓஓஓஓஓஓஒ...ஓ..ஓஓஓஓஓஓஓஓ..!!

குரல் லெந்தாக ஒலிக்க ஹோஸ்ட் பீதியாகிறார்...

ஹோஸ்ட் : சார், லைனுக்கு வந்துட்டீங்க..பேசுங்க..உங்க பேர் என்ன?

நேயர் : ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...!!

சங்கு சத்தமெல்லாம் கேக்குதே என அதிர்ச்சி அடைகிறார் ஹோஸ்ட்..

ஒரு வேளை கோஸ்டா இருக்குமோ என்று பீதியாகி லைனை துண்டிக்கிறார்.

அடுத்த நேயர் அழைக்கிறார். கொஞ்சம் முகத்தை துடைத்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் ஹோஸ்ட்.

நேயர் : அலோ வணக்கம்!!

ஹோஸ்ட் : வணக்கம் . உங்க பேரு என்ன? எங்க இருந்து பேசுறீங்க..?

நேயர் : அலோ.. சுகமதி இருக்காளா?

ஹோஸ்ட் : நீங்க கால் பண்ணி இருக்குறது ஏழறை எப்.எம் முக்கு சார்.. உங்க பேரை சொல்லுங்க..!!

நேயர் : டேய் நாயே!! யாருடா நீ? என் வீட்டுல உனக்கு என்னடா வேலை..?

ஹோஸ்ட் : (அதிர்ச்சியில் முழி பிதுங்கி) சார் இது உங்க வீடு இல்லை.. இது ஏழரை எப்.எம் ஆபிஸ்.. நீங்க நம்பர் தப்பா டயல்
பண்ணிட்டீங்க போல.. கட் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடுங்க..

நேயர் : டேய் பொரம்போக்கு..!! என் வீட்ல அதும் அர்த்த ராத்திரியில என்னடா பண்ற.. இருடா நேர்ல வரேன்.. மவனே இன்னிக்கு
நீ செத்தட!!

பீதியாகி இணைப்பை துண்டிக்கிறார் .

சரி தற்போது அலம்பர ..ச்சே..விளம்பர இடை வேளை..!!


அருகே கம்யூட்டர் ஆப்பரேட்டரை பார்க்க

க.ஆ : யோவ் லூஸா நீ..இன்னிக்கு ஒரு விளம்பரமும் இல்லை ..

ஹோஸ்ட் : ஆமால்ல.. சரி சரி..

ம்ம்.. அடுத்த நேயர் வருக வணக்கம்.

நேயர் : வணக்கம்.. ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!

ஹோஸ்ட் : என்ன வணக்கத்தையே இவ்ளோ நீளமா சொல்றீங்க.. உங்க பேரு உண்மைதமிழனா?

நேயர் : இல்லீங்க..என் பேஏஏஏஎரு... குடியாத்தம் குப்புசாமிங்க..!!

ஹோஸ்ட் : சரி சொல்லுங்க குடிகாரன் குப்புசாமி.. உங்களுக்கு என்ன பாடல் வழங்கலாம்?

நேயர் : ரெண்டு ப்ளேட் மிக்ஸர் கொஞ்சம் சோடா!!

ஹோஸ்ட் (கடுப்பாகிறார்) : ஐயா இது டாஸ்மாக் கடை இல்லை.. ஏழறை எப். எம். இங்க நீங்க பாட்டு மட்டும்தான் கேக்கணும்.

நேயர் : அப்போ ரெண்டு பாட்டில் எளைய ராசா பாட்டு குடு.. அப்படியே தொட்டுக்க கொஞ்சம் குத்துபாட்டும் ,
ரசிக்க 3 மெலடி பாட்டும் போடு போதும்..!!

ஹோஸ்ட் : சரிங்க வைங்க..!!

ஹோஸ்ட் முதலில் கீழே இருக்கும் அந்த இரும்பு தடியை எடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை மண்டே மேலே போடுறார்..
அப்படியே தன் மண்டே மேல்யும் போட்டுகிட்டு திவாலாகிறார்..!!

பின்ன ஏழறைன்னா சும்மாவா?

Thursday, July 30, 2009

அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?


அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?

ஆமா நீங்க?

நாந்தான் பில் கிளண்டன் பேசுறேன்.

ஓ..சொல்லுங்க நலமா? லெவெண்ஸ்கி நலமா?

யாவரும் நலம் ஜார்ஜ், அங்க எல்லாரும் சௌக்கியமா?

ஆங்,, நலம்.!!

...பில் கிளிண்டனின் பின்னால் ஒபாமா நிற்கிறார்.

சார் நானும் பேசணும் ஒரு நிமிஷம்..

ஜார்ஜ்.. ஒபாமா பேசணுமாம்..

இல்லை வேண்டாம்.. நீங்க பேசுங்க.



ஒபாமா கைப்பேசியை வாங்கி கீழே எறிகிறார்.

கிளிண்டன் அதிர்ச்சியடைகிறார்.

புஷ்ஷீக்கும் அதிர்ச்சி.

டேய் ஒபாமா ஏண்டா இப்படி பண்ண?


ஒழுங்கா போய் தூங்கு.. இல்லனா சோனியா காந்தி கிட்ட சொல்லிடுவேன்..


பயந்துபோய் கட்டிலிக்கு ஓடிப்போய் படுத்துகொள்கிறார் கிளிண்டன்.

ஒரு பெருமூச்சு விடுகிறார் ஒபாமா.


இதெல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது , இந்த பைத்தியகார ஆஸ்பத்திரிக்கும் நமது கம்பவுண்டர் ஓபாமா கந்தசாமிக்கும்!!!

Saturday, June 6, 2009

ப்ளீஸ் இத படிக்காதீங்க.. !!


அன்றும் அப்படித்தான்..
ஒரு மொக்கை மாலை வேளையில் வீட்டு கணினி முன் அமர்ந்து கொண்டு
என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துகொண்டு இருந்தேன்.

தங்கையின் ரிசல்டாவது பார்க்கலாம் என்றால் அந்த சைட்டே லோடு ஆகாமல்
டபாய்கிறது. அவள் என்னை சந்தேகப்படுகிறாள் பாவி.
நாந்தான் ஏதோ செய்து அவள் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தை இயங்கமுடியாமல் செய்து விட்டதாக சொல்லிகொண்டிருந்தாள்.
எனக்கு அப்படியெல்லாம் செய்யத்தெரியாது என்று சொன்னால் நம்ப மறுக்கிறாள்.
நீதான் தினம் தினம் ஏதேதொ கோடிங் கீடிங் என்றெல்லாம் சொல்றியே..
அதுபோல் நீதான் எதாச்சும் பண்ணி இருப்ப.. என்கிறாள்.

அது ஜாவா கோடிங்டி.. இது எச்.டி.எம்.எல்.னு தெளிவா சொல்லிபார்த்தேன்.
ம்ம்.. கேட்டபாட்டை காணோம்..

இது என்னடா கூத்தபெருமாள் கூத்தா போச்சேன்னு நினைச்சுகிட்டேன்.


இப்படியாக பொழுது போய்கொண்டிருந்த போது ..
திடீர் என்று ஒரு எண்ணம் உதித்தது.

நேராக கூகிள் பக்கம் போனேன். அதில் சேர்ச் பாக்ஸில்
"உருப்படியாக எதாச்சும் இருந்தால் காட்டு" என்று அடித்தேன்.

அடி சக்கை.. கூகிள் கூகிள் தான்.
நம் பேர்போன பதிவர்களின் பக்கங்கள் பல திறக்கப்பட்டு கிடக்கின்றன என் கண்பார்வைக்கு.

அடிச்சுதுடா ஜாக்பாட் என்று ஒவ்வொன்றாக மேய.. (ஆடு போல் மெதுவாய்)கிறேன்.

முதல் லிங்கே சூடாக கிடைத்தது. அந்த லிங்க் வேறு யாருடையதும் அல்ல.
நமது திரைக்கடல் பதிவருடையது.

அவரின் பதிவு ஒன்றை படித்த பிறகு அந்த லிங்கை கூட வெளியிடலாமா வேண்டாமா என்ற மனபீதி கிளம்புகிறது. என்றாலும் சிபி மீது நூறு டன் பாரத்தை போட்டு லிங்கை இங்கே தருகிறேன்.

அடுத்து நம்ம வருத்தப்படாத.பசங்க.சங்கத்து பதிவு ஒண்ணு கண்ணில் சிக்கிச்சு.
அதாங்க.. இப்போ பேர் மாற்றம் ஆகி இருக்கும் வருத்தப்படாத.பசங்க.சங்கத்து பதிவு ஒண்ணு சிக்கிச்சு.

அதுதான்..சிவனையும்..அதாங்க லார்டு சிவாவையும்.. லார்டு பெருமாளையும்
கலாய்க்கும் பதிவு.

அதில் வரும் பாடல்களும் விளக்கங்களும் அடடா..என சொல்லவைப்பவை.
இந்த சுட்டியில் பாருங்க..

மேலும் பலபல..பிரபல பதிவர்களின் சூடான பதிவுகள்.. அந்த தேடல் பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன..

தேடி எடுக்க சிரமப்படவே வேண்டாம்.. சும்மா "உருப்படியா எதாச்சும் இருந்தா காட்டு" என்று தமிழில் டைப்புங்க போதும்..

பதிவுகள் வந்து குவியும்..

சரி.. டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. அடுத்த பதிவில் சந்திப்போம்.


கும்மிக்கும் அனுமதி உண்டு என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


டிஸ்கி.. :
வந்தமா..படிச்சமா போனமான்னு இருந்திட கூடாது.. கமெண்ட் போட்டு கணக்கை தீர்க்கணும்..சொல்லிட்டேன்.

Wednesday, June 3, 2009

நானும் இந்த வலையில் சிக்கிவிட்டேன்.. !!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இப்போதான் எனக்கும் அந்த யோசனை வருது. இருந்தாலும் சொல்றேன்.
சும்மா திடீர்னு தோணிண பேர்தான் இது. (ஹிஹி.. இதுக்கே இவ்ளோ யோசனையான்னு கேக்ககூடாது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அந்த அறுவை மெகா சீரியலை பாட்டியோடு உக்காந்து பார்த்த போது.. அவ்வ்வ்வ்....!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும்,
ஏனோ தெரியலை மத்தவங்க பிடிக்கலைன்னுதான் சொல்றாங்க..
(இன்னும் பயிற்சி வேணுமோ?!)
4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன் .. அதனால்..
...


கோழிக்குழம்பு நல்லா திக்கா காரமா இருக்கணும். அப்புறம் அந்த முட்டை பொரியல்.
(அதான் சொன்னேன்ல.. நான் - வெஜிடேரியன் என்று.. !!)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெல்லாம் .. ஆமா.. ஏன் வெச்சிக்ககூடாது. பிடிச்சா நண்பர்களா இருப்போம். இல்லியா ப்ரெண்ட்ஸாவே இருப்போம்.. வாங்க பழகலாம்..!!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதலில் குளிக்கவே பிடிக்காது. இருந்தாலும் அருவிதான் எனக்கு பெஸ்ட். சுருளி பால்ஸ்ல கடைசியா குளிச்சேன். ஆகா.. அருமையோ அருமை.. என் ஜாய் பண்ணி குளிச்சேன். நீங்களும் போய் பாருங்க. அருமையா இருக்கு.




7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் , கண்கள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: பிடிக்காத விஷயங்களை மாற்றிகொள்வது.

பிடிக்காத விஷயம் : பிடிக்காத விஷயங்களே இல்லாமல் போனது. அதான் எனக்கு பிடிக்கலை..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் பார்ட் பார்ட்டா பிரிக்க ஆள் வரலை. வந்ததும் சொல்றேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்பா ..............


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெண்ணிற ஆடை நிர்மலாவின் முதல் படத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம்தான்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம். பார்த்துகொண்டும் கேட்டுகொண்டும்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம், கறுப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மணம், சந்தன வாசம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜோசப் பால்ராஜ்- மாரநேரிகாரர்.
சென்ஷி- பின்நவீனத்துவத்தின் பிள்ளை.
சீனா- ஓல்டு ஈஸ் கோல்டு மா

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

தமிழரசியின் கவிதைகள் அத்தனையும் அவ்வளவு அழகு. படிக்கதூண்டுபவை அவை. கலக்கும் கவிதை சோலை அவர்.

17. பிடித்த விளையாட்டு?

கில்லி தாண்டி, நொண்டி குதிர, கண்ணாமூச்சி, அஞ்சாங்கல், ரிங்கா ரிங்கா ரோஸஸ்...

இதெல்லாம் பிடித்த விளையாட்டுகள் அப்போது.

இப்போது ஷட்டில் , புட்பால், ஸ்நோ பவுலிங்க்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


ஆக்ஷன் திரில்லர்,
அறிவியல் புனைவு படங்கள்,
அனிமேஷன் படங்கள்.
ப்ரெஞ் படங்கள் அதிகம் பார்க்க பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, டுவல் என்கிற ஆங்கிலப்படம்.(இரண்டையும் ஒரே நாளில் பார்த்ததால் குறிப்பிடுகிறேன்.)

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழிதான்.

ஏனெனில் அந்த மாதங்களில் இரவின் நீளம் அதிகம். நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.

அதுவும் காலை குளிரில் குளித்து கோவிலுக்கு போனால் அட..அட.. திவ்ய தரிசனம் கிட்டுமே..(கடவுளின்!!)..


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Take it Easy- பாகம் 1.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு நாளைக்கு மூன்று முறை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு, வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை.

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்.(பொய்ய்ய்ய்ங்ங்ங்ன்ங்....!!)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

குஜராத் .. ஒரு சுற்றுலாவிற்காக..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

நல்லா வரைவேன்.
கவிதை எழுதுவேன்.
பாட்டுக்கு தாளம் போடுவேன்.
நன்றாக சமைப்பேன்.
எல்லோருடைய தனித்திறமைகளையும் ரசிப்பேன்.
அதைப்போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உங்களை புத்திசாலின்னு யாரோ சொன்னதை...

(சும்மா உல்லுலாயி.. நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்!!)



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாங்களெல்லாம் அகம் ப்ரம்மாஸ்மிப்பா..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிசர்லாந்து, சிம்லா, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

அவங்க வரட்டும்.. கேட்டு சொல்றேன்..ஓக்கே!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மகிழ்ந்திரு, மகிழ்ச்சிபடுத்து.



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சீனா, ஜோசப், சென்ஷி.

Monday, May 25, 2009

அந்த மழை காலத்தில் ஒரு மதிகெட்டவன்..!!



மெல்லிய மழை..
சாலையோரம் நான்..
எப்போதும் போல நனைய மறுக்கும்
நமத்துபோன நெஞ்சங்கள்..
எனக்கும் நனைய விருப்பமில்லை..
என்றாலும் காலையில் படித்த ஓஷோ
என்னை என்னவோ செய்ய சொன்னாரே...?!

ஆங்... உன் மனதை கவனி..
அப்போது உன் உண்மையான உன்னை நீ உணரலாம்..

கவனித்தேன்..
ரொம்பவும் அஞ்சுகிறது..
நனைந்தால் சுரம் வரும்..
ஆபிஸ் லீவ் வேறு இல்லை..
பார்ப்பவர்கள் பைத்தியமென்பார்கள்..
வீட்டில் விட்டு விட்டு திட்டுவார்கள்..
இவனுக்கு ஒழுங்கா வேலைக்கு போற எண்ணமில்லை என்பார்கள்..
இப்படி பல மடங்கு அஞ்சியது..

சரி.. நனைந்து தான் பார்த்துவிடுவோம்..
என்னதான் ஆகிவிடும்..
மிஞ்சி மிஞ்சி போனால் காய்ச்சல் வர போகிறது..
ஒரு கால்பாலும்.. ரஹ்மான் பாடலும் போட்டால்
சரியாகிவிடுமே..

ஆஹா.. இவ்ளோ மழையும் எனக்காக
பெய்கிறதா..
என்று ஒரு ஆச்சிரியம்..

மெல்ல இரண்டு கைகளையும் விரித்து நின்றேன்..
இன்னும் இருக்கமாய் அணைத்துகொண்டது அது..

இப்படியே சில கணங்கள் மெல்ல கரைந்து போனேன்...
சாலைவாசிகள் என்னை பார்த்து எதோ சொன்னதுபோல இருந்தது..

இருக்கட்டுமே.. என்ன இப்போ..

நனைவதன் சுகம் எப்போதும் அலாதியானது..
அருவி குளியல் அகத்தினை தொட்டால்...
மழையின் நனைதல்.. ஆன்மாவை தீண்டுகிறதே...

சில கணங்களுக்கு பின்..
என் சாலையில் ஒரு லாரி சடசடத்தபடி ஓடியது..
பாவம் யாரோ ஒருவன்
நட்ட நடு சாலையில் அடிபட்டு கிடக்கிறான்..

அட..!!
நான் அணிந்திருக்கும் சட்டை
போலவே இருக்கிறதே அவனுடையதும்..!!!

பாட்டு பாஸ்கி : இதுக்குதான்.. மழைவந்தா ஒதுங்கி நிக்கணுங்கறது..
இல்லனா.. செம் சர்ட்.. சேம் ப்ளட்...!!

Friday, April 24, 2009

அற்புத பதிவு -1001!!!

வணக்கம் நட்புகளே!!

பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.

தினசரி நான்கைந்து பதிவுகளையாவது படித்து கமெண்ட் போடாவிடில் தூக்கம் வருவதில்லை. நமது ஜமால் போல் பத்தாயிரம் பின்னுரை எல்லாம் போட்டு அசத்த வேண்டும் என்றுகூட சில நேரங்களில் ஆசையாயிருக்கு எனக்கு. மனிதருக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ தெரியலீங்க..!!

ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.

நான் 2007-ஆம் ஆண்டு சிபியால் அறிமுகப்படுத்த பட்டேன். அவர் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் நான் படித்து அசந்து போகும் அளவுக்கு பதிவில் கலக்குகிறார்கள் ,அடியேன் இன்னும் கத்துக்குட்டிதான்..என்பதில் பெருமையே எனக்கு.

அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்துகொள்ள சில பதிவர்கள் உற்ற துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பதிவை படித்தே நான் என்னை உயர்த்திகொண்டு வருகிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது பாவம்.

உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படியே சில பல பிரச்சனைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம் தான்.

ஆமா.. இப்போ நீ என்னதான் சொல்ல வரே? ன்னு கடுப்பாய் காதில் புகையுடன் கேட்பது புரிகிறது.

அது தெரிஞ்சா முதல் பாராவிலேயே சொல்லி இருக்க மாட்டேனா?


பாட்டு பாஸ்கி : அடப்பாவி இன்னுமா உனக்கு எழுத மேட்டர் கிடைக்கலை.. இன்னிக்கு நீ செத்தடி...நான் வரலை.. நீயாச்சு.. அவங்களாச்சு.. நான் இப்போவே டீசண்டா கழண்டுக்கறேன்..

Tuesday, March 17, 2009

கோபம் என்னும் எதிரி




நம்ம ஸ்வீட்பாய் விஜய்க்கு இவ்ளோ கோவம் வருமா.. ?!!!
அடி ஆத்தே...
அதான் இவரு படம் எல்லாமே ஆக்ஷன் படமா இருக்கு போல..
நல்லாதான்யா கோவப்படுறாரு...
பாத்தாச்சா..
பாத்ததுக்கு நாலு கமெண்ட் நச்சுனு போட்டுட்டு போங்க..

Wednesday, March 11, 2009

பேனாவை இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள் !!!



சரி.. வீடியோ பாத்தாச்சா...
இப்போ மேட்டருக்கு வருவோம்..
1. முதல் சங்கடம்
நிச்சயமாக திருப்பி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் பேனாவை கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2. இரண்டாம் சங்கடம்
பேனாவை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் பேனாவை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3.மூன்றாம் சங்கடம்
‘இதோ இரண்டொரு நிமிஷத்தில் எழுதி விடுவேன். குடுங்க. எழுதிட்டு மேக்ஸிமம் ஒரே நிமிஷத்தில் குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4. நான்காம் சங்கடம்
இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.குப்பன் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.குப்பன் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நீலக்கலர்ல எழுதுறப் பேனாவை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘பேனாவை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5. ஐந்தாம் சங்கடம்
நாம் இரவல் கொடுத்த பேனாவை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6. ஆறாம் சங்கடம்
வாங்கிய பேனாவை வைத்து ஏதாவது பூச்சிகளை குத்துவது, காது குடைவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7. ஏழாம் சங்கடம்
உண்மையாகவே அந்தப் பேனாவை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது சங்கடத்தின் கடைசி வரிகளைப் படிக்க....)

8. எட்டாம் சங்கடம்
இரவல் குடுத்த பேனா திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9. ஒன்பதாம் சங்கடம்
நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல,(அனுபவசாலி!!!) நண்பனுக்குப் பேனா கொடுத்தால் அந்தப் பேனா, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10. பத்தாம் சங்கடம்
பேனாவை இரவல் வாங்கினால் உடனே திருப்பித்தர வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகத் திருப்பித் தருவார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11. பதினோறாம் சங்கடம்
நல்ல பேனா என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல பேனாவை இரவலாகக் கொடுப்பதால் அவர் பேனா வாங்கும் மனப்பான்மையினை தடுத்து
பல பேனா கம்பெனிகளுக்கு அவரால் வரும் லாபத்தினை இழக்க செய்கிறோம்.

(டிஸ்கி) :-
இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ (உள்குத்தோ) குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!!!