Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, January 5, 2012

டாக்டரை கொல்ல முடியுமா? - ஒரு செய்தி சார்ந்த சிந்தனை

இது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒரு கூட்டத்தை  நான் பார்த்ததே இல்லை- இதுதான் நேற்று அந்த டாக்டர் பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார், நடவடிக்கை  எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம் என்று செய்தி வந்த போது, என் மனதில் தோன்றிய எண்ணம்.
ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது என்கிறீர்களா? சொல்கிறேன்.

 முதலாவதாக
டாக்டரை  யாராலும் கொல்ல முடியாது. ஏனெனில் டாக்டர் என்பது ஒரு கற்பனை பட்டம். உங்களை நல்லவர், வல்லவர் என்று சொல்வது போல (நீங்கள் எவ்வளவு மோசம் என்று அவரவர் மனசிற்கு தெரியும்..அது வேறு விஷயம்). ஒரு பட்டத்தை சுமந்து திரிந்த ஒரு பெண்ணைத்தான் யாரோ ஒருவன் கொன்றிருக்கிறானே தவிர.. டாக்டரை கொல்ல முடியாது. அது ஒரு Abstract Noun.

இரண்டாவதாக,
டாக்டரை கொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனால் கொல்லமுடியாது. கடவுளை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் அது ஒரு மனகற்பனை, அதேதான் இங்கும். டாக்டர் என்பதும் உங்களுக்கு பிறரால் கொடுக்கப்பட்ட ஒரு கற்பனை அங்கீகாரம். அவ்வளவே.. எனவே...அந்த கொலையாளி கொன்றது ஒரு பெண்ணைத்தானே தவிர.. டாக்டரை அல்ல.

மூன்றாவதாக,
அப்படி கொன்றதற்கு அவனுக்கு எனது நன்றிகள். இப்போது இவர்கள் போராடுவதன் மூலம் நான் டாக்டருக்கே  படித்திருந்தாலும் முட்டாள்தான், சுயசிந்தனை என்பதே இல்லாமல்தான் நானும் வாழ்கிறென் என்று இத்தனைப்பேர் தங்களை தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிகொண்டனர்.

நான்காவதாக,
இப்போது டாக்டர்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். இதோ, தங்களாலும் கொஞ்சம் சமுதாயம் ஸ்தம்பிக்கத்தான் செய்கிறது. ஹைய்யா ஜாலி என்று உள்ளுக்குள் ஒரே குஷியாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று மூன்றாம்தர அரசியல்வாதிகள்(அரசியலே மூன்றாம்தரம் தான்) போல் இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் என் மனவேதனை.

ஐந்தாவதாக,
யாரோ ஒரு அம்மையார் இறந்ததற்காக போராடுகிறேன் பேர்வழி என்று போய், இருக்கும் நோயாளிகள் இறந்துபோனால் யார் பொறுப்பு? இப்போது அந்த கொலையாளியை விட இவர்கள் கீழே  சென்றுவிட்டனர். அவன் பொறுப்பாய் அவன் கடமையை செய்துவிட்டான். கொல்வது கடமை, கொன்றாயிற்று. ஆனால் காப்பாற்றும் கடமையிலிருந்து நழுவ சந்தர்ப்பம் தேடும் இவர்களை என்ன செய்யலாம்?

ஆறாவதாக,
ஐ.சி.யூ. விற்கு மட்டும் வந்து பார்ப்போம் என்கிறார் ஒருவர். சாதாரண நோயாளிகளை, மருத்தவம் பார்த்து சரிசெய்யாதுவிட்டால், ஐ.சி.யூ. விற்கு தானே  வந்தாக வேண்டும். இதில் என்ன கருணை வள்ளல் போல் ஐ.சி.யூ. விற்கு மட்டும் வருவோம் என்பது.
ஐ.சி.யூ. வில் வைத்துவிட்டால் சிறப்பாக பில்லைத் தீட்ட முடியுமென்பதால், அங்கு மட்டும் Concession-ஆ? சரி புறநோயாளி என்ன பாவம் செய்தான்? பணம் கட்ட வழியில்லாமல், வெளியிலேயே பிணமாய் போனால், கவலை இல்லையா உங்களுக்கு?( அது இருந்தால் ஏன் போராட்டம் அது இது என்று நேரத்தை  வீணடிக்க போகிறீர்கள்?)

..ஒன்று மட்டும் சரியாக புரிகிறது..
இப்போதைய ட்ரெண்ட் போராட்டம்.. பொழுது போகவில்லையா  போராடு, பொட்டி பொட்டியாய் பணம் வேண்டுமா போராடு..
..யப்பா..முடியல..!!

பி.கு: இறந்த அந்த பெண்மணிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

Wednesday, April 13, 2011

மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு, வாயை மூடு!!



என் வாழ்வில் பல திருமணங்களை பார்த்திருக்கிறேன், என் தங்கை திருமணம் உட்பட.
அவைகளில் உள்ள சில விஷயங்கள் எனக்கு முரணாகவும், முட்டாள்தனமாகவும் ஏன் கொஞ்சம்
கீழ்த்தரமானதாகவும் கூடப் படுகிறது.
அதில் முக்கியமான ஒன்று.. நான் மாப்பிள்ளை வீடு என்று பந்தா காட்டுவது. எதோ மைக்ரோஸாப்ட் ஓனரின்
ஒன்னுவிட்ட கஸின் போல சீனைப்போட்டுக் கொண்டு ஒருசில பெண்களும் ஆண்களும்
பெண்வீட்டுக்காரர்களை சீண்டுவதும், அதிகாரம் பண்ணுவதுமாய் இருப்பார்கள். பெண்வீட்டுகாரர்கள் மனதிற்குள்
பொருமினாலும் வெளியே சொல்லாமல் சிரித்தும், நாசூக்காக தவிர்த்தும் அவர்களை அனுசரித்துகொள்வர்.
இப்படி ஒரு ஆணை பெற்றேன் என்று பெருமை அடித்துகொள்வதை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது.

சொல்லப்போனால் பெண்வீட்டுகாரர்கள் தான் பந்தா பண்ண வேண்டும். ஆணின் மொத்த பலமே.. பெண் தான்.
ஆண் தன்னை ஆண் என்று உறுதி செய்வதற்கும் ஒரு பெண்ணே தேவையாகிறாள். அவளின் அன்பும் அரவணைப்பும்
ஆணிற்கு மிகவும் முக்கியமானதாகவும், அவளின் புத்திசாலித்தனமும் நாசூக்கும் வாழ்க்கை சுமூகமாக செல்ல வழிவகுப்பதாகவும், தானே தாயான பின்னும் கணவனின் இரண்டாவது தாயாகவும் மாறும் பெருமையான பிறவியாக பெண் இருக்கிறாள்.

(உடனே பெண்ணியவாதின்னு நினைச்சுட்டீங்கன்னா உங்க தலைக்கு ஒரு செல்லக்குட்டு..நான் அவன் இல்லை :) )..

இப்படி ஒரு பெருமைக்குரிய பெண்ணை மணப்பெண்ணாய் ஒரு ஆணை நம்பி அனுப்புவதை நினைத்து பெருமையும்
பூரிப்பும் அடையவேண்டியது பெண்வீட்டார் தான். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது..

அந்த பெண்ணை அவர்கள் படுத்தும் பாடு... மாப்பிள்ளையை எப்படி அனுசரித்து போவது? மாமியாரை எப்படி வழிக்கு கொண்டுவருவது?
மாமனார் எப்படி? என மாப்பிள்ளை குடும்பத்தாரை பற்றி பேசி பேசி அந்த பெண்ணின் மனதில் பெருமளவு பீதியை கிளப்பிவிட்டுகிறார்கள்..
சமையல் குறிப்பு முதல் அழகு குறிப்பு வரை.. வந்தார் போவாரெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்து தள்ளி..
அந்த பெண்ணை திக்குமுக்காட செய்துவிடுகிறார்கள். பாவம் அந்த ஜீவன்.. இவ்வளவு பெரிய தலைவலியா திருமண வாழ்க்கை என்று..
திருமணத்திற்கு முன்பே நோக ஆரம்பித்துவிடுகிறாள்.

அதுமட்டுமில்லாமல், கொடுக்கும் சீரில் அது இல்லை இது இல்லை என்றும்..நாங்கள் அது செய்தோம்..இவங்க இவ்வளவுதானா என்று கம்பேரிஸன் கண்மணிகள் வேறு ஒரு பக்கம்..


அடுத்த தொல்லை ஹோம குண்டம்.. வேர்த்து விருவிருத்து.. சீக்கிரம் கட்டிடுப்பா தாலியைன்னு கடுப்பா உட்கார்ந்திருப்பாங்க.
அடுத்து..போட்டோ செஷன்..
நாளைக்கே போட்டோ ஆகப்போகிறவர்கள் முதற்கொண்டு எல்லாரும் சுற்றி சுற்றி வந்து சுட்டுதள்ளுவார்கள்.
அத்தனை போட்டோவிலும் புன்னகைக்க வேண்டும். இல்லாவிடில் அதுக்கும் பிரச்சனை கிளப்பும் கூட்டம் இது.

இப்படியெல்லா வகையிலும் அவளை படுத்தி எடுத்ததில்லாமல் அந்த சடங்கு இந்த சடங்கு என அடுத்த இரண்டு மூன்று மணிநேரங்கள்
கூத்து நடக்கும்..

இதெல்லாம் எதற்கு செய்கிறோம் என்ற அர்த்தம் புரியாமல் சொல்லுதுங்க...செஞ்சி தொலைப்போம் என்று மாப்பிள்ளையும் பெண்ணும் பொம்மைகளாய்
வலம் வருகின்றனர்.

இப்படி பல்வேறு வகையில் பெண்ணை வதைத்தே திருமணங்கள் நடக்கின்றன.


வெரி ஸேட்.. கொஞ்சமாச்சும் மாருங்கப்பா..!!


Friday, October 29, 2010

என் கேள்விக்கென்ன பதில்?



நாம் நம்முடைய இந்திய கல்வியின்படி சிறப்பாக பதில் சொல்லவே கற்றுதரப்படுகிறோம்.
அதே 40 வருட பழமையான கேள்விகள். பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிற்து.

என்னை எப்போதும் வாட்டுவது..
ஒரு குழந்தையிடம் ¨நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்?¨ என்ற முட்டாள்தனமான
கேள்வி.
ரேடியோக்களில், டி.வியில், ஏன் நம் வீடுகளிலும் சகஜமாய் இந்த கேள்வி குழந்தைகளிடம்
கேட்கப்படுகிறது. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி.
அதே கேள்வியை குழந்தை உங்களிடம் திருப்பிகேட்டால்..
¨நீங்க என்னவா  ஆகி இருக்கீங்க அங்கிள்/ஆண்டி? சின்னவயசில் நீங்க சொன்னதை அடைஞ்சுட்டீங்களா?¨ என்று தன் பிஞ்சு மொழியில் கேட்டாலும்..நெஞ்சில் நஞ்சை பாய்ச்சியதுபோல
இருக்கும். காரணம். நமக்கே தெரியும்.
நாம் நம்மை இலக்கை இன்னும் அடையவே இல்லை. நம் இலக்கை இன்னும் தீர்மானிக்கக்கூட இல்லை என்பது.
குழந்தைகள் கலெக்டர்களாவதற்கு பிறக்கவில்லை, டாக்டராகவும் பிறக்கவில்லை, என்ஜினியராகவும்
பிறக்கவில்லை. அவர்கள் வாழப் பிறக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப்போல் கேள்விகளுக்கு பதில்
சொல்லும் கிளிப்பிள்ளைகள் இல்லை. பிரபஞ்சத்தின் மிச்சங்கள் அவர்கள். அவர்களுக்கு சிறப்பாக
பதில் சொல்ல கற்றுதருவதை விட சிறப்பாக கேள்விகேட்க கற்றுகொடுக்க வேண்டும்.

இனி பிள்ளைகளிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்காதீர்கள்..
அவர்கள் எப்படியும் நீங்கள் சொல்லிகொடுத்ததை தான் சொல்வார்கள்.
அவர்களுக்கு முதலில் வாழ கற்றுகொடுங்கள். கேள்வி கேட்கும் பிள்ளைகளால்தான் உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே தவிர..
டேப்ரிக்காடர்களாலோ, கிளிப்பிள்ளைகளாலோ..இந்த உலகுக்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும்? என்று ஒரு இந்தியன் யோசிக்கவில்லை.
ஒருவேளை  பூமி சூரியனை சுற்றுகிறதோ? என்று இந்தியன் யோசிக்கவில்லை. தீக்குளித்தானே முத்துகுமார்.. உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா? என்று
எத்தனை பேர் யோசித்து இருப்போம்..??

3000 ஆண்டுகளாக மண்ணையும், பெண்ணையும் தின்றே வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
இல்லை..இல்லை..ஆர்யபட்டருக்கு புவியீர்ப்பு தெரியும், கோள்களை பற்றியும் தெரியும் என்று சொன்னாலும்..
அவைகள் மதக்கலாச்சாரத்தில் மக்கிபோய்விட்டன.

தெரியும் என்று சொல்வதை விட..தெரிவிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பவனை தான் உலகம்
தேடிக்கொண்டிருக்கிறது.

இன்று கேள்விகளை சிறப்பாக கேட்க தெரிந்ததால் தான் சந்திராயன் என்கிற இந்திய செயற்கோளை
உலகுக்கு தந்து நம்மால் நெஞ்சை  நிமிர்த்தி நிறக முடிகிறது.

கேட்பவனின் துணிவும், அதற்கான பதிலை  அடைய துடிக்கும் முயற்சியும் இருந்துவிட்டால்..பிரபஞ்சத்தின் கதவுகள்..தானே  திறந்துகொள்ளும்..!!

(பி.கு):  இந்த பதிவு சம்பந்தமாய் எதேனும் கேள்விகள் இருந்தால் என்னை கேட்கலாம்!!

Monday, October 25, 2010

எல்லாருக்குள்ளும் ஒரு கமலஹாசன்!!









"ம்கும்..ஆளை பார்த்ததும் என்ன நடிப்பு நடிக்கிறா /ன்.."
"வந்துட்டா/ன்.. இவ /ன்கிட்ட கமல் ட்யூஷன் போகணும்.."
”ஹையோ.. இப்படி நடிக்கிதே பக்கி.”
”ஆரம்பிச்சுட்டாண்டா/டி சீனை..!!”





இதெல்லாம் மக்களிடையே பொதுவாக ஆக்டிங் போடுபவர்களை
பார்த்ததும் எழும் மைண்ட் வாய்ஸ்.
ஏன்யா இந்த நடிப்பு நடிக்கிறாய்ங்க..?
என்னதான் பிரச்சனை இவங்களுக்குன்னு
ரோசிக்கிறதுக்கு முன்னாடி..
ஏன் நடிக்கிறோம்னு யோசிச்சமா?
லேது..இப்போ யோசிப்போம்..

பொதுவா நடிப்பு என்பது..நாலு அடிப்படை விஷயங்களால் நடக்குது.
1. சுயநலம்.   
2. சுயமரியாதை.
3. பயம்
4. கோபம்

1. சுயநலம்னா..
தனக்காக ஒருத்தரை அன்புகாட்டியோ, கோபப்பட்டோ பணியவெச்சு, அல்லது தானே பணிஞ்சு போய்
வேலைகளை முடித்துகொள்ளுதல். இதற்காக இவங்க போடுற சீன், நடிப்பு எல்லாமே வேலை முடிஞ்சதும் கலைஞ்சிடும்.

2. சுயமரியாதை..
தன்னை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது..
தன்னை யாரும் தப்பா நினைக்க கூடாது
தன்னை எல்லாரும் நல்லவன், மேதாவி, அறிவாளி, அனுபவசாலினு நம்பணும்..
தன்னை ஒரு தேவமகன்/தேவமகள் மாதிரி மக்கள் பார்க்கணும்..
இப்படி தன்னை பிறர் ரொம்ப உயர்வா நினைக்கணுனே வாழும் க்ராக்குகள்..ஸாரி..
நண்பர்கள் அருமையா நடிப்பாங்க..
அவர்களை பற்றி உண்மை தெரியும்போது.. டர்ர்ர்ர்னு ஒரு சத்தத்தோட அவங்க முகத்திரை
கிழிஞ்சி..ஒரு கோரமான முகம் தெரியும்..உவ்வே.. இவங்களை கிட்டவே சேர்க்காதீங்க.
ரொம்ப பாவமா இருந்தா மட்டும் மன்னிசுடுங்க.!!

3. பயம்..
மத்தவங்க நம்மை எதுவும் சொல்லிடுவாங்களோ?
அவங்க தப்பா நினைச்சா என்ன பண்றது?
இப்படி தன் அந்தஸ்தும் மரியாதையும் கெட்டுவிடக்கூடாது என்கிற பயம்.
இது முத்தி போவதால் தான் பலவீடுகளில் இன்று வாங்கும் சம்பளம் EMI கட்டவே சரியா போகுது.
இந்த பயத்தில் இருந்து கொஞ்சம் முயன்றாலே வெளியே வந்துடலாம்.

4. கோபம்..
கோபத்துல நிறைய கேட்டகரிங்க.. வேணாமா..சரி சிம்பிளா சொல்றேன்..
கேலியால் வர்ற கோபம், ஏமாற்றத்தால் வர்ற கோபம் ரெண்டுதான் மெயினா
மனசை ரொம்ப பாதிக்கும். ஆனா அதுக்கு உடனே நெகட்டிவா எதாவது பண்ணினா..
உறவுக்கயிறு அந்துக்கும். அதுக்காகவும் நடிக்க வேண்டி இருக்கும். இதுக்கு செம
பொறுமை வேணும். (எல்லாரும் அவங்கவங்க அம்மாகிட்ட இதை கத்துக்கோங்க ;)

ஃபைனலா பார்த்தீங்கன்னா.. நடிப்பு என்பது..எந்த உறவு பாலங்கள் எளிதில் உடைந்துகொள்ளாமல்
இருக்க உதவும் கயிறு மாதிரி. ஆனா என்னைக்கு நீங்க நடிச்சீங்கன்னு தெரிஞ்சாலும்..
டமால் தான்..அப்புறம் அவங்க உங்களை மதிப்பாங்கன்னு எதிர்ப்பார்க்க கூடாது.
அதே போல்.. நடிக்கிறதே தெரியாம நடிக்கவும் நாம நல்லா பழகிக்கணும்.
அப்போ உறவுகளும் நஷ்டமாகாது. எந்த சூழ்நிலையும் கஷ்டமாகாது.

இன்னும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ரொம்ப நெருக்கமானவங்க.. லைக்..அம்மா, அப்பா,
மனைவி, கணவன், நெருங்கிய உண்மையான நண்பர்கள் ,
இவங்ககிட்ட நடிக்காதீங்க.
எவ்ளோ சூப்பரா நடிச்சாலும் மாட்டிப்பீங்க...உண்மையா இருங்க(இவங்ககிட்டயாச்சும்!!)


எப்படியோ..எல்லாரும் நல்லா நடிங்கப்பூ..!! வாழ்த்துக்கள்!! ஹிஹிஹி..!!


Monday, September 27, 2010

ஹையா ஜாலி!! நான் சுயநலவாதி!!

இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க.
ஏங்க..ஏன் சந்தோஷப்படகூடாது..?

இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.


இது ரொம்ப முக்கியமான விஷயம். பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும்  நடந்திருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்கு காரணம் இந்த "பொதுநலம்" என்கிற எண்ணம்.

முதலில் பொதுநலம் என்பது என்ன? நாலு பேருக்கு கொடுப்பது.. நாலு பேருக்கு நன்மை செய்வது. இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு  இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு
போகவேண்டியதுதான்.

  ஏன் இப்படி சொல்கிறேன்?

காரணம் நம்மிடம் இருப்பதில் பங்களித்து கொடுப்பதுதான் பொதுநலமாகமே தவிர.. நம்மையே கொடுத்துவிடுவது பொதுநலமில்லை.
அப்படி கொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் அன்பில் நிறைந்துவழிந்தவர்கள், அப்படிப்பட்ட நிறைவு, நம்மிடம் இருக்குமேயானால்
கொடுப்பதில் தவறேதும் இல்லை.

இங்கு நாமே "அய்யா சாமி"என்று அலையும்போது நம் வாசலில் எவனாவது கடன்கேட்டு வந்தால், கண்டிப்பாக உதையை தவிர வேறெதுவும் கொடுக்க
வேண்டியதில்லை. நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம். நம்மிடம் அதிகமாக இருக்கும்போது கஞ்சப்பிரபுவாக
மாறுவது அதைவிட முட்டாள்தனம். நாம் இவைகள் இரண்டையுமே இப்போதைய காலத்தில் சிறப்பாக செய்து வருகிறோம்.
நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர்
குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்.

இயற்கையில் தனக்காக வாழத்தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான உயிரனம் மனிதாக மட்டுமே இருக்க முடியும். மரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
அவைகள் சுயநலமானவைதான். அவைகள் நன்கு வளரும்வரை வேர்களை பரப்பி நீரை தேடுகின்றன. இலைகளில் சூரியவெப்பத்தை சேர்த்து உணவு
சமைக்கின்றன. இப்படி ஒரு பெரும் சுயநலப் போராட்டத்திற்கு பின்பே..அவைகள் பூக்கின்றன, காய்க்கின்றன, கனிகள் தருகின்றன. காரணம், அவைகள்
நிறைந்துவிட்டன. நிறைவடைந்துவிட்டன. இனிமேல் அவைகள் பொதுநலவாதிகள் ஆகலாம். அவைகள் தன்னளவில் நிறையாவிட்டால் காயுமில்லை,
கனியுமில்லை. இப்படிமொத்த இயற்கையும் சுயநலம் என்பதை சரியாக பயன்படுத்திகொள்கிறது.
இவ்வளவு சுயநலமான இயற்கையை நம்மால் ரசிக்கமுடிகிறது. நம் அருகில் இருக்கும் ஒரே ஒரு சுயநலவாதியை நம்மால் சகித்துகொள்ள முடிவதில்லை.

அப்போ எப்பவுமே சுயநலமா இருக்கணுமா?
எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும். பொதுநலம் ஒரு மகிழ்ச்சிதரும்.
நிறைவடையாமல் இப்போது நாம் செய்யும் எந்த பொதுநல சேவையும் மகிழ்ச்சிதராது. நம்மை நாமே ஏமாற்றிகொள்வது அது. நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)

புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு முக்கியமாய் நான் சொல்வதும் இதுதான். அவளை நீயும், அவனை நீயும் புரிந்துகொள்ளுங்கள். புரிதலில் முழுமை வந்ததும்
பிறப்பதே பிள்ளையாக இருக்கும்.!!, மற்றவை.....  ( இது ஒரு பேச்சுலரின் அட்வைஸ். :))) )

Sunday, August 8, 2010

மாற்றமும் மாறும்!!



இந்த உலகத்தில் நிலைத்த தன்மை என்ற ஒன்றை நினைத்துபார்க்கவே முடிவதில்லை.
இதை இன்றைய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே ஒப்புகொள்கின்றன.
காரணம், இயற்கை. இயற்கையின் நியதிகளில் மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாய்
இந்த மாறுதல் கோட்பாடு அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வுலகமும், பிற உலகங்களும்,
ஏன்..மொத்த பிரபஞ்சமுமே இயங்கி வருகிறது.
இப்படிப்பட்ட அத்தியாவசிய மாறுதல் விதி நம்மை சுற்றி மட்டுமே நடக்கிறதா என்றால் இல்லை.
நமக்குள்ளும்,அதாவது நம்முடைய உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளிலும் ஒரு தொடர் நிகழ்வாக நிகழ்ந்தவண்ணமே
உள்ளது.

நாம் அன்றைய நாகரிகமற்ற மனிதர்களைப்போல் இல்லை. கல்லை குட்டி தீமூட்டவில்லை. உணவை பச்சையாக உண்பதில்லை.
இவ்வளவு ஏன்..80களில் இருந்த மனித சமுதாயத்திற்கும் இப்போது இருக்கும் மனித சமுதாயத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
இப்படி நம் அழகுணர்ச்சி முதல் நாம் பயன்பாட்டில் ஏற்றுகொண்ட பொருட்கள் வரை அவ்வளவும் தங்கள் நிலையில் இருந்து மருவி,
மாறுபட்டு நிற்கின்றன. மாறுபட்டு என்கிற வார்த்தையில் அடியிலும் எதோ ஒரு உட்கருத்து ஒளிந்துள்ளதை நான் உணர்கிறேன்.

அதுதான் படைப்பாற்றல்.

படைப்பாற்றல் என்பது ஓவியருக்கோ, பாடகருக்கோ, அல்லது சினிமாக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் விஷயம் என்றால்,
நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் வீட்டில் தினமும் ஒரே குழம்பும் இட்லியும் செய்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? மனம் புதியதை
அல்லது புதுவகையில் அதே விஷயம் மாறி இருப்பதையே விரும்புகிறது. நம் படைப்பாற்றலின் ஊற்று எல்லாருக்குள்ளும் ஒளிந்து
நம்மை மாற்றமடையவும், மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான ஊக்கத்தையும் தந்த வண்ணம் இருக்கிறது.

மாற்றங்களை தூண்டும் படைப்பாற்றல் மனித மனத்தில் ஒரு சிறந்த சீரான முதிர்ச்சியை தெளிவை கொடுக்கக்கூடியது.
அதன் எல்லைகளை தொட்டவர்கள் துறைசார்ந்த ஞானிகளாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். டாவின்சி முதல் ரஹ்மான் வரை
நாம் அவர்களை பெருமையோடு போற்றி வந்துள்ளோம். அப்படிப்பட்ட மாறுதலை தூண்டும் படைப்பாற்றல் எல்லாருக்கும் சொந்தமானது.

அதை அனைவரும் சுயமாய் தெரிந்துகொண்டு அதை சிறப்பான முறைகளில் வழிநடத்துவதன் மூலம் தன்னுள்ளும் மேம்பட்டு , மனித
சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

Friday, February 5, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-2



கடந்த பதிவில் Procrastination பற்றி பார்த்தோம்..

இப்போது நீங்கள் திமிங்கலத்தை தின்ன தயாரியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் மலைத்து போகும் அந்த மிகப்பெரிய வேலையை திமிங்கலத்தை தின்ன வரிசையான செய்முறை விளக்கம்
இதோ..


1.நம் வாய் எவ்வளவு கிராம் கொள்ளளவு கொண்டது என்பதை கணக்கெடுத்து கொள்ளுங்கள்.(VOLUME)
(முப்பது கிராம் அளவு என்கிறது அறிவியல்)

2. பின்பு திமிங்கலத்தை துண்டுதுண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.(PARTITIONING)

3. வெட்டிய துண்டுகளை மீண்டும் 30 கிராம் அளவுகொண்ட துண்டுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.(CONTENT BASED PARTITIONS)

4. வெட்டிய துண்டுகளை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்துவிடுங்கள்.(PRESERVATION)

5. ஒவ்வொரு துண்டுகளாக போகவர எடுத்து சாப்பிட்டுகொண்டே வரவேண்டும்.(CONTINOUS PROCESS)

6. விடாது , தொடர்ந்து இதையே செய்து வரவேண்டும்.(MAINTANANCE OF CONTINUUM)



ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்..திமிங்கலத்தை முழுவதுமாய் சாப்பிட்டு முடித்திருப்போம்.

சரி இதன் சூட்சமம் என்ன..இதை நம் வாழ்க்கை முறையில் , நேர மேலாண்மையில் பயில்வது எப்படி?

திமிங்கலத்தை போய் யார் சாப்பிடுவார்கள் அதுவும் பச்சையாக? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பெரிய விஷயத்தை எப்படி சிறு பகுதிகளாக்கி முடிப்பதற்கான உதாரணம்தான் இது என்று சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.


நீங்கள் புதிதாக ஒரு மொழியை கற்க விரும்புகிறீர்கள்..என்றால் எடுத்த எடுப்பில் அதன் இலக்கிய நூல்களை புரட்டினால் என்ன ஆகும்?

எதுவும் புரியாது. என்னடா இது மொழி பிரச்சனை என்று மலைத்து போவீர்கள்.

அதே அந்த மொழி சம்பந்தமான ஒரு அகராதி(டிக்‌ஷனரி)யை வாங்கி அதன் வார்த்தைகளையும் அர்த்தங்களையும் புரிந்துகொண்டு..

தினமும் பத்து அல்லது பதினைந்து வார்த்தைகளை விடாமல் படித்து வந்தால்..ஒரு நாள் நீங்களும் அந்த மொழியில் புலமை பெற்றவர் ஆவீர்கள்.!!

முடிக்கலாம், முடிக்க முயற்சி செய்வோம் என்கிற எண்ணங்களுக்கும் இந்த விஷயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

முடிக்கலாம் என்று சொல்லும்போதும், முடிக்க முயற்சி செய்யலாம் என்று சொல்கிற போதும், ஒரு மலைப்பும் களைப்பும் வருகிறது..

ஆனால் இந்த முறையில் அப்படி பட்ட களைப்பே வர வாய்ப்பு இல்லை..காரணம்.

1. எந்தப் பெரிய வேலையையும், சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல்.

2. பிரித்துக்கொண்ட சிறிய பகுதியை, தினம் தினம் விடாது முடித்துவிடுதல்.

3. மொத்த விஷயமும் முடியும்வரை கவனம், ஆர்வம் பிசகாமல் தொடர்ந்து செய்தல்.

இதன் பெரிய பலன், தங்கு தடையின்றி வேலை நடைபெறும். மலைப்பு விலகும். தினசரி வாழ்க்கையின் சுவாரசியம் கூடும்..வெற்றி நம் முன்னே விரியும்.

Tuesday, January 5, 2010

”சாலை பாதுகாப்பு வார”த்தை முன்னிட்டு ஒரு சிறுகதை..

http://www.irintech.com/x1/images/jean/hell_met_helmet.jpg
-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

”சாலை பாதுகாப்பு வார” த்தை முன்னிட்டு இந்த சிறுகதை..!!


டிஸ்கி :

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."

Tuesday, December 1, 2009

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

இன்னாங்கடா இது..ஆச்சரியமா கீது.. நெசமாத்தான் சொல்றியா?

இப்படி எனக்குள் கேட்டுகொண்டேன் இன்று முழுதும்..

“ஏம்பா...ஏய்..இது தமிழ்நாடு ஸ்டேட் தானே.. இல்ல ஆஸ்திரேலியா எதும் வந்துட்டேனா? ” என்று புளங்காதிப்படும் விதமாய் சில சம்பவங்கள் நெஞ்சை தொட்டது..

சம்பவம் -1:

தங்கை புதுக்குடித்தனம் போவதால் அவர் பெயரை அட்டையில் இருந்து நீக்க வேண்டும்..அதற்கு இன்று வர சொல்லி இருந்தார்கள். போன சில நிமிடங்களில் அன்பான உபசரிப்போடு!!! சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

அட..!! இது முதல் அதிர்ச்சி.

சம்பவம் -2 :

இன்னைக்கு என்று பார்த்து என் வாகனம் நட்ட நடு சாலையில் மக்கர் பண்ண..அதுவும் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடு ரோட்டில் பக்கி பழிவாங்கிவிட்டது..

இன்னிக்கு ஃபைன் தான்.. 500 வாங்காம மாமா விடமாட்டாரு..அய்யயோ போச்சே.. ஆமா யார் முகத்தில் விழிச்சோம் என்றெல்லாம் என்ன அலைகள் அழுவ..

அருகில் வந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள்.. தம்பி..பாத்து...இப்படி..ஓரமா கொண்டுவாங்க..என்று அவரும் எனக்கு உதவ.. எதற்கும் ஒரு முறை பார்த்துகொள்வோம் அது கடவுளாய் இருந்துதொலைத்துவிட போகிறது என்று உத்த்த்த்து பார்த்தேன்..அவர் பெயர் சண்முக சுந்தரம்.ஆபத்தில் ஓடு வந்து உதவிய இவரது செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திட்டு இல்லை..ஒரு கோபப் பார்வை இல்லை..அட ஒரு ஃபைன் கூட இல்லை ..நீ நீடுழி வாழ்க என போற்றியபடி புறப்பட்டேன்..

சம்பவம் -3:

அடுத்து வீடு வந்து சேர்ந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சம்சாரம் போனா சந்தோஷபடலாம்(ஊருக்கு போனால்).. மின்சாரம் போனால் முடியுமா? உடனே மின்சார வாரிய தொலைப்பேசிக்கு அழைத்தேன்..
அட...!!
அமைதியான தெளிவான குரலில் பதில்கள் வந்தன.. என்னால் இதை நம்ப முடியவில்லை...காலை பதினோரு மணிக்கு கம்ப்ளெயிண்ட் புக் செய்யப்பட்டது...மதியம் 12.30க்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டு விட்டது.

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.



http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

Sunday, November 15, 2009

கண்டதும் வென்றதும்..!!

http://a.espncdn.com/photo/2008/0810/oly_g_kitajima_300.jpg

சிரித்தேன்..

கிண்டலடிக்கிறார்கள்..!

அழுதேன்..

வீணாய் போகிறவன் அழுவான் என்றார்கள்..!

முறைத்தேன்..

லாயக்கு இல்லாதவன் முறைக்கிறான் என்றார்கள்..!

வருந்தினேன்..

வருத்தம் பணம் சேர்க்காது என்றார்கள்..!

அன்பு காட்டினேன்..

பணம் பிடுங்க நெருங்கிவருகிறான் என்றார்கள்..!

எது செய்தாலும் என்ன செய்தாலும்..

அந்த நாலு பேருக்கு நாம் நல்லவரில்லை..

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டால்..

இந்த அகிலத்தில் நமை போல் வல்லவரில்லை..!!

வாழ்க்கை சிறந்தது..

வாழ்தல் அறியது..

வாழ துணிந்துவிட்டால்..

அந்த வானும் சிறியது..!!

Sunday, November 1, 2009

ஒரு புலியின் முடிவு..!!

சில வலைப்பக்கங்களை உலாவிக்கொண்டிருந்த போது இந்த விஷயம் கிடைத்தது.

மென்மையான மனம் கொண்டவர்கள் மேற்கொண்டு தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்..!



http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/10/ltte-leader-prabhakaran.jpg


யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.).

எப்போதும் மரணம் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது..ஆனால் சிலரது மரணம் மட்டுமே நினைவுகளாக வாழ்கிறது..!!

Thursday, October 22, 2009

நறுக்..கென்று சில கேள்விகள்..!!

http://www.lokvani.com/lokvani/a_images/y2007/38561-plus-4-kolam-brought-toge.jpg


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

அவருக்கு வாகனத்தில் இடம் கொடுத்தால் என்னவென்று..
ஒரு முடவர் வேர்த்துகொட்டி உங்களை கடந்தபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் பேசினால் என்னவென்று
உங்கள் மூத்தோர்கள் வீட்டில் முடங்கி இருக்கும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

சர்க்கரை அளவை தெரிந்துகொண்டால் என்னவென்று
நீங்கள் குலாப் ஜாமூனும்,ஜிலேபியையும் சாப்பிடும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் வாழக் கற்றுகொண்டோமா என்று..
உங்கள் குழந்தைக்கு வாழ கற்றுகொடுக்கும்போது..?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் மனிதராய் பிறந்ததன் பயன் என்னவென்று..
நீங்கள் நல்ல மனிதர் என புகழப்படும்போது...!!

Tuesday, October 13, 2009

Farmville'யில நீங்க எந்த லெவெல்?

http://vator.tv/images/attachments/020909121934gameBig_farmville.jpg


நானும் ..நானும்..நானும்...

இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!

அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.

பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..

இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?

3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?

4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..

5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?

6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?


7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?

8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?

ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..

அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...

யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!

Thursday, July 16, 2009

என்னுள் விழுந்த மழைத்துளிகள்!!

குழந்தை தொழில்!! :






இந்தா கொழந்தெ நேரா பாரு...

ஆங்..,,இப்போ லேசா தலைய சாயி..

அட..எரும மாடே.. எதுக்கு இப்போ அதை கீழே போட்டே..!!

கைத்தவறி விழுந்திடுச்சு சாமி... அழுதாள் பானு.

பளாரென அறைந்தார் முதுகில்..மீண்டும் ஒரு அடி.

செங்கல் சட்டியை மீண்டும் தலையில் ஏற்றினார்.

ம்ம்.. இப்போ ஒழுங்கா பிடி..

நேரா பாரு..

நட..

ம்ம்.. சரி...போதும்..போய் காச வாங்கிக்க..

கிளம்பினார் ராமு.

குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பற்றிய விளம்பரத்திற்கு

படங்கள் தயார் செய்துவிட்டார்.

பானு மதிய உணவுக்கு காசு சேர்த்துவிட்டாள்.




-----------------------
நேரம் சரியில்லை!! :



அப்பா..ப்ளீஸ் பா..

என்னடா குமார்?

அப்பா..வாங்கி குடுங்கப்பா..

ம்ம்..பார்க்கலாம்..

பா..ப்ளீஸ்ப்பா.. இன்னிக்கே வேணும்..
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் இருக்கு.
எனக்கும் ஒண்ணு வேணும்பா..

சரிடா.. அதான் வாங்கிதரேன்னு சொல்றேன்ல..
இதுக்கு மேல பேசினா அடிதான் விழும்..

நீ அடிச்சாலும் பரவால்ல..வாங்கி தரேன்னு சொன்னாதான்
விடுவேன்..

ஏய்..சொல்லிட்டே இருக்கேன்..

குமார் , அம்மாஆஆஆ....!!

குமாரை லேசாக தள்ள ..தள்ளிய வேகத்தில் அவன் கீழே படிகளில் சரிந்து விழுகிறான்.

ச்சை..இதெல்லாம் ஒரு புள்ளை.. ஒரே நச்சரிப்பு..

நீயும் உன் புள்ளையும்...

அடிப்பட்ட மகனை கவனிக்காமல் ஆபிஸ் கிளம்பி போகிறார்.

அவரை கண்ணீரோடு முறைக்கிறாள் சிவகாமி.
...

ஆபீஸில் வேலையே ஓடவில்லை.
எதோ பெரிய தவறு செய்ததாய் உணர்கிறார்.
..

மாலை..

டேய்.. குமார்.. இங்க பாரு.

அப்பா என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..

நீ கேட்ட ரிஸ்ட் வாச்..

..எங்கடா இருக்க..குமார்..குமார்..

குரல் கேட்டு வெளியே சிவகாமி வர..

ஏய்..குமார் எங்கடி?

உள்ளதான் இருக்கான் போங்க..

புன்னகையோடு உள்ளே போகிறார்..

குமார்..இந்தா நீ கேட்ட ரிஸ்ட் வாட்ச்..



அப்படியே அதிர்ந்து போனார்...கண் கலங்கினார்.

குமாரின் இடது கையில் பெரிய கட்டு.

வலது கையில் மணிக்கட்டு வரை சிராய்ப்புகள்.



(பி.கு).

குழந்தைகள் நம் நாட்டின் வீட்டின் எதிர்கால தூண்கள்.

நாம் இந்த பூமிக்கு வந்தோம் என்பதற்கு அவர்கள் தான் சாட்சி.

உங்களால் முடிந்தால் ஒரு குழந்தைகான கல்வி செலவை ஏற்றுகொள்ளுங்கள்.


வலிமை இல்லாதவர்களிடமும், குழந்தைகளிடமும் தன் வலிமையை கோபத்தை காட்டுபவன் மிருகமாக கருதப்படுவான்- திருக்குறள்.

Tuesday, July 7, 2009

எவரும் எழுதலாம் கவிதை!!


கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல.

ஆனால் சிலர்..

- "இப்போது எல்லாம் கவிதை என்கிற பேரில் கிறுக்க ஆரம்பித்துவிட்டனர் பலரும். ஒரு பத்து கவிதை எழுதுகிறார். கவிஞராகி விடுகிறார். "

என்று கவிதை வராத பலர் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் விஷயம் அப்படியல்ல. கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல. கவிதை என்றால் வாலியும், வைரமுத்துவும், கண்ணதாசனும், வண்ணதானும், பா.விஜயும், பழனிபாரதியும்
மட்டுமே எழுத வேண்டும் என்றில்லை. அது ஒரு காதல். காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்க வேண்டும் என்று எவரையும் தனியே குறிப்பிட முடியாது. அது எல்லாருக்கும் பொது. அது போல் தான் கவிதையும்.

அது பூவுக்குள்ளும் இருக்கும். நேற்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அது எல்லாருக்கும் பொதுவானது. அது காற்றை போல.


சரி விஷயத்திற்கு வருகிறேன்.

விதை.. ஆஹா.. சொல்லும்போதே இனிமையான.. மகிழ்ச்சியான.. மற்றும் பல எண்ணங்களை ஏற்படுத்திகொடுக்கிற ஒரு வார்த்தை.

வார்த்தை என்று சொல்வதை விட.. அதை ஒரு மையம் என்று சொல்லலாம். ஆம் கவிதை தான் எழுத முயல்கிறோம். ஆனால் கவிதை நம்மிடம் இருந்து பிறந்து நம்மையே எழுதிவிடுகிறது.

நம் எண்ணங்களை அள்ளி தன்னகத்தே கொண்டு.. ஆங்கே ஓர் இணைவை உருவாக்கிவிடுகிறது.

இப்படிப்பட்ட கவிதைகளை எழுத ஏன் நாம் தயங்குகிறோம்.. ஏன்?

வார்த்தைகள் வந்து விழ வேண்டுமே .. வருவதில்லையே.

என்னை பொருத்த வரை வார்த்தைகள் ஒரு பொருட்டே அல்ல. எப்படி?
ஒரு குழந்தை பார்த்து அதன் அருகில் சென்றதும் என்ன செய்கிறோம்.. ஆஆஅ.. ச்ச்சூசு.. என அதற்கு புரிந்த மொழிக்கு நம் மனம் தாவிவிடுகிறது.
அதே போல் தான் கவிதையும். உங்களுக்கு வர வேண்டிய வார்த்தைகள் தானாய் வந்து விழும்.. நீங்கள் வழிவிட்டால் மட்டும் போதும்.

ஓஷோ சொல்வார்.

“நீ உன் கதவை திறந்து மட்டும் வை. வரும் காற்றை வா.. வா. என்று அழைத்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அது உனக்கானது நிச்சயமாக. அது உனக்கு வந்தே தீரும். நீ செய்ய வேண்டியதெல்லாம் உன்னை நீ திறந்து வைத்திரு. எதையும் போட்டு குழப்பிகொள்ளாமல் தயாராய் மட்டும் இரு.”

அவ்வளவுதான்.

நீங்கள் கவிதை எழுத முடிவு எடுத்து பேனாவோடு அமர்ந்துகொண்டு ..கவிதையே வா.. என்று கூவினால் வரப்போவதில்லை.மிஞ்சி போனால்.. அடுத்த
அரை மணி நேரத்தில் நீங்கள் அடுத்த வேலையில் இருப்பீர்கள் ..அல்லது தூங்கிகொண்டு இருப்பீர்கள். அவ்வளவே..

பின்ன எப்படி தான் வரும் கவிதை ?

கவிதை.. அது வந்து போகும் ஒரு பொருளோ. எண்ணமோ அல்ல. அது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் காய்கறி வாங்கும் போதும், பல் துலக்கும்போதும்,
நடக்கும்போதும் அது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது அதை உணர வேண்டியது மட்டுமே. அந்த போதை வஸ்து உங்களுக்குள்ளேயே
ஊறி கிடக்கிறது.

நீங்கள் போதையை(கவிதையை) உணர நீங்கள் தான் இடைஞ்சல். அதை புரிந்து கொள்ளுங்கள்.

சரி எப்படித்தான் உணர்வது?

கடவுளையும் கவிதையையும் .. அதன் உணர்வையும் எந்த மொழியாலும் சொல்ல முடிந்ததில்லை. அதற்கு வார்த்தைகளே இல்லை.

எனக்கு தெரிந்த ஒரே வழியை சொல்கிறேன்.

நல்ல ஒரு பாடலை கேளுங்கள். அதன் வரிகளை ரசியுங்கள். முடிந்தால் ஆடுங்கள். பாடுங்கள். அனுபவியுங்கள்.

உங்களுக்குள் ஒரு சிலிர்ப்பு பரவும். அருவியின் சாரல் பட்டால் உடல் சிலிர்க்குமே அந்த சிலிர்ப்பு வரும்.


அப்போது எடுங்கள் பேனாவை.

அடுத்த பத்து நிமிடங்களில் நீங்கள் ஒரு அழகான அற்புதமான வரிகள் கொண்டு ஒரு கவிதையை புனைந்திருக்கிறீர்கள்.

முயன்று பாருங்கள்.

உங்களுக்குள் பரவசத்தை கொண்டு வரும் வழி எது என்று கண்டுபிடியுங்கள்.

பிறகு நீங்களும் ஒரு மகாகவி.

Wednesday, June 3, 2009

நானும் இந்த வலையில் சிக்கிவிட்டேன்.. !!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இப்போதான் எனக்கும் அந்த யோசனை வருது. இருந்தாலும் சொல்றேன்.
சும்மா திடீர்னு தோணிண பேர்தான் இது. (ஹிஹி.. இதுக்கே இவ்ளோ யோசனையான்னு கேக்ககூடாது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அந்த அறுவை மெகா சீரியலை பாட்டியோடு உக்காந்து பார்த்த போது.. அவ்வ்வ்வ்....!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும்,
ஏனோ தெரியலை மத்தவங்க பிடிக்கலைன்னுதான் சொல்றாங்க..
(இன்னும் பயிற்சி வேணுமோ?!)
4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன் .. அதனால்..
...


கோழிக்குழம்பு நல்லா திக்கா காரமா இருக்கணும். அப்புறம் அந்த முட்டை பொரியல்.
(அதான் சொன்னேன்ல.. நான் - வெஜிடேரியன் என்று.. !!)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெல்லாம் .. ஆமா.. ஏன் வெச்சிக்ககூடாது. பிடிச்சா நண்பர்களா இருப்போம். இல்லியா ப்ரெண்ட்ஸாவே இருப்போம்.. வாங்க பழகலாம்..!!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதலில் குளிக்கவே பிடிக்காது. இருந்தாலும் அருவிதான் எனக்கு பெஸ்ட். சுருளி பால்ஸ்ல கடைசியா குளிச்சேன். ஆகா.. அருமையோ அருமை.. என் ஜாய் பண்ணி குளிச்சேன். நீங்களும் போய் பாருங்க. அருமையா இருக்கு.




7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் , கண்கள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: பிடிக்காத விஷயங்களை மாற்றிகொள்வது.

பிடிக்காத விஷயம் : பிடிக்காத விஷயங்களே இல்லாமல் போனது. அதான் எனக்கு பிடிக்கலை..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் பார்ட் பார்ட்டா பிரிக்க ஆள் வரலை. வந்ததும் சொல்றேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்பா ..............


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெண்ணிற ஆடை நிர்மலாவின் முதல் படத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம்தான்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம். பார்த்துகொண்டும் கேட்டுகொண்டும்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம், கறுப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மணம், சந்தன வாசம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜோசப் பால்ராஜ்- மாரநேரிகாரர்.
சென்ஷி- பின்நவீனத்துவத்தின் பிள்ளை.
சீனா- ஓல்டு ஈஸ் கோல்டு மா

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

தமிழரசியின் கவிதைகள் அத்தனையும் அவ்வளவு அழகு. படிக்கதூண்டுபவை அவை. கலக்கும் கவிதை சோலை அவர்.

17. பிடித்த விளையாட்டு?

கில்லி தாண்டி, நொண்டி குதிர, கண்ணாமூச்சி, அஞ்சாங்கல், ரிங்கா ரிங்கா ரோஸஸ்...

இதெல்லாம் பிடித்த விளையாட்டுகள் அப்போது.

இப்போது ஷட்டில் , புட்பால், ஸ்நோ பவுலிங்க்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


ஆக்ஷன் திரில்லர்,
அறிவியல் புனைவு படங்கள்,
அனிமேஷன் படங்கள்.
ப்ரெஞ் படங்கள் அதிகம் பார்க்க பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, டுவல் என்கிற ஆங்கிலப்படம்.(இரண்டையும் ஒரே நாளில் பார்த்ததால் குறிப்பிடுகிறேன்.)

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழிதான்.

ஏனெனில் அந்த மாதங்களில் இரவின் நீளம் அதிகம். நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.

அதுவும் காலை குளிரில் குளித்து கோவிலுக்கு போனால் அட..அட.. திவ்ய தரிசனம் கிட்டுமே..(கடவுளின்!!)..


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Take it Easy- பாகம் 1.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு நாளைக்கு மூன்று முறை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு, வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை.

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்.(பொய்ய்ய்ய்ங்ங்ங்ன்ங்....!!)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

குஜராத் .. ஒரு சுற்றுலாவிற்காக..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

நல்லா வரைவேன்.
கவிதை எழுதுவேன்.
பாட்டுக்கு தாளம் போடுவேன்.
நன்றாக சமைப்பேன்.
எல்லோருடைய தனித்திறமைகளையும் ரசிப்பேன்.
அதைப்போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உங்களை புத்திசாலின்னு யாரோ சொன்னதை...

(சும்மா உல்லுலாயி.. நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்!!)



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாங்களெல்லாம் அகம் ப்ரம்மாஸ்மிப்பா..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிசர்லாந்து, சிம்லா, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

அவங்க வரட்டும்.. கேட்டு சொல்றேன்..ஓக்கே!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மகிழ்ந்திரு, மகிழ்ச்சிபடுத்து.



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சீனா, ஜோசப், சென்ஷி.

Monday, June 1, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது ! பாகம்-3

இந்த மூன்றாம் பாகம் என் வாழ்க்கையோடு சரியாக பின்னப்பட்டதாக உணர்கிறேன்.
ஆம்.. இந்த பாகத்தில் நான் சொல்லப்போவது சூழ்நிலைக்கேற்றபடி தன்னை சரியமைத்துக்கொள்வது பற்றி.
இதை ஆங்கிலத்தில் “Evolve, Evolution" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள்.

பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் சூழ்நிலைக்கேற்றபடி மாறிய ஒன்றுதான்.
ஆம்.. வெறும் புழுவாய் தன்னை ஏற்றுகொள்ளமுடியாத அந்த பட்டாம்பூச்சி தன்னை இரு உயர்ந்த இடத்தில்
கொள்ள ஆசைப்பட்டதன் விளைவுதான் அதன் சிறகுகள்.
அதன் சிறகுகள் அதற்கு மிகப்பெரிய பெருமையை தேடிந்தந்திருக்கிறது.அதன் உருமாற்றம் அதனுடைய வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.அதனிடம் இருக்கும் இறைமையை வெளிப்பட வைத்து அதனை அழகான ஒரு
உயிரனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

இப்படி தன்னை சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைப்பை மாற்றிக்கொள்வதன் அவசியம் என்ன?
வாழ்க்கை போராட்டம் தான். அவைகள் வயிற்றுக்காக செய்யும் அந்த தகவமைப்பு மாற்றத்தை நாம் நம்
ஆன்மாவுக்காக செய்தே ஆகவேண்டியுள்ளது. அப்படி சில உயர்ந்த நோக்கங்களுக்காக தன்னை தகவமைத்துகொள்கிற எந்த
மனிதனும் வீணாக போனதில்லை. என் வாழ்விலும் இது நடந்திருக்கிறது.

”தந்தை காலமாகி விட்டார்”.. மருத்துவர் அந்த வார்த்தைகளை சொல்லும்போது என் அம்மா மயக்கமுற்றார்.
தாங்கி பிடித்து மெல்ல அவர்களை சரி செய்து.. அடுத்த இருபது நிமிடங்கள் என் கண்களில் நீர் நின்றது.
நின்ற வண்ணமே இருந்தது.. கீழே விழாமல். மெல்ல மெல்ல என் மனநிலை மாறி வருவதை என்னால் உணர முடிந்தது.
அப்பாவின் சடலத்தினை வீட்டில் வைத்த போது நேரம் 1.30 மணி. நடு ஜாமம். என் தாயும் பாட்டியும் கண்ணீரில் நனைகிறார்கள்.
என்னால் ஏனோ அழ முடியவில்லை. அப்பாவின் நண்பர் ஆறுதல் சொல்ல அருகே வந்த போது.. ”அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க” என்ற போது
அவர் மலைத்துதான் போனார். அவருக்காக சோகமாய் அமர்ந்தது அந்த இருவது நிமிடங்கள் மட்டுமே.
இப்போது தூக்கு சட்டியுடன் இடுப்பில் ஒற்றை வேஷ்டியுடன்.. அவரின் இறுதி ஊர்வலத்தில்..சாலையில் நான் நடக்கிறேன். எனக்கு அப்போது தான் உறைத்தது..
என் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்பது. ஏதோ ஒன்று என்னை சாயாமல் தாங்கி நின்றதை உணர்ந்தேன்.

என்னை அழசொல்லி எவ்வளவோ பேர் வற்புருத்தினார்கள் என்றாலும்..அழ தோன்றவில்லை.
மனோரீதியான மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன,இருக்கின்றன.

சரி.. இந்த சம்பவத்திற்கும் பட்டாம்பூச்சிக்கும் என்ன தொடர்பு. அது சொன்னது என்ன?
...சொல்கிறேன். பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் இதுவும் ஒரே
விஷயம்தான். ஆம் அது உடல்பூர்வமான தகவமைப்பு மாற்றம். இது மனப்பூர்வமான எவல்யூஷன்.




தன்னை முட்டாள் என்று பள்ளியை விட்டு நீக்கிய ஆசிரியையிடமே அறிவியல் மேதையாக மெடல் வாங்கியவர் ஐன்ஸ்டீன்.
அன்று அவருக்குள் நிகழ்ந்ததும் இதே மாற்றம் தான்.

”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.
சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்.

எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.
சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!!

Friday, April 24, 2009

அற்புத பதிவு -1001!!!

வணக்கம் நட்புகளே!!

பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.

தினசரி நான்கைந்து பதிவுகளையாவது படித்து கமெண்ட் போடாவிடில் தூக்கம் வருவதில்லை. நமது ஜமால் போல் பத்தாயிரம் பின்னுரை எல்லாம் போட்டு அசத்த வேண்டும் என்றுகூட சில நேரங்களில் ஆசையாயிருக்கு எனக்கு. மனிதருக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ தெரியலீங்க..!!

ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.

நான் 2007-ஆம் ஆண்டு சிபியால் அறிமுகப்படுத்த பட்டேன். அவர் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் நான் படித்து அசந்து போகும் அளவுக்கு பதிவில் கலக்குகிறார்கள் ,அடியேன் இன்னும் கத்துக்குட்டிதான்..என்பதில் பெருமையே எனக்கு.

அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்துகொள்ள சில பதிவர்கள் உற்ற துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பதிவை படித்தே நான் என்னை உயர்த்திகொண்டு வருகிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது பாவம்.

உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படியே சில பல பிரச்சனைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம் தான்.

ஆமா.. இப்போ நீ என்னதான் சொல்ல வரே? ன்னு கடுப்பாய் காதில் புகையுடன் கேட்பது புரிகிறது.

அது தெரிஞ்சா முதல் பாராவிலேயே சொல்லி இருக்க மாட்டேனா?


பாட்டு பாஸ்கி : அடப்பாவி இன்னுமா உனக்கு எழுத மேட்டர் கிடைக்கலை.. இன்னிக்கு நீ செத்தடி...நான் வரலை.. நீயாச்சு.. அவங்களாச்சு.. நான் இப்போவே டீசண்டா கழண்டுக்கறேன்..

Saturday, April 11, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-2.



கடந்த பாகத்தில் நம் பட்டாம்பூச்சி உலகிற்கு சொல்லிதந்தது என்னவென்று பார்த்தோம். இந்த பாகத்தில் அது ஒரு தனிமனிதனுக்கு என்ன சொல்லிதருகிறது என்று பார்ப்பொம்.

முதலில் பட்டாம்பூச்சியாக மாறியது யார்?

ஒரு சின்ன புழு.




புழு என்பதால் அது "ஆ.. நான் வெறும் புழுவாக அல்லவா இருக்கிறேன். எனக்கு இப்படி வாழ்வதே பிடிக்கவில்லை" என்று எவையும் தற்கொலை செய்துகொண்டதில்லை. அவைகளுக்குள் இருக்கும் உள்ளுணர்வு அவைகள் சிறந்த பட்டாம்பூச்சியாக மிளிரும் என்று அவைகளிடம் எப்போதும் சொல்லியபடி இருக்கின்றன.

நாம் கீழாய் மதிக்கும் புழுக்கள் கூட தற்கொலைக்கு முயல்வதில்லை.
புழுக்கள் கூட மேலாய் மதிக்கும் மனிதர்களாகிய நாம்...
எத்தனை தற்கொலை முயற்சிகள்.தான் இறந்தால் மட்டும் போதாதென்று தான் அழியும் போது மற்றவரையும் சேர்த்து அழிக்கிறோம்.
இதை பற்றி புழுக்கள் கேள்விப்பட்டால்..
"அட.. இறைவா!! இதற்கு நாங்களே பரவாயில்லை போலிருக்கிறதே" என்று சொல்லக்கூடும்.

தற்கொலை வேண்டாம். அதை இயற்கை அனுமதிப்பதில்லை. நம் உண்மையான முடிவு தானாக நிகழட்டும். நாமாக அதை தேடிப்போக வேண்டாம்.

உள்ளுணர்வு என்கிற ஒன்று நமக்கு இருக்கிறது.ஆம்.. நம்மை போன்ற ஒவ்வொரு உயிரனத்திற்கும் இருக்கிறது. அது நமக்காக மட்டும் தனியாக படைக்கப்பட்டதில்லை. எல்லா உயிரனங்களும் தங்கள் உள்ளுணர்வின் படி மட்டுமே வாழ்கின்றன.சொல்லபோனால் அவைகள் தான் ஒவ்வொரு உயிரனத்தின் டேட்டாபேஸ்.
நாம்..மனிதர்கள் மட்டுமே உள்ளுணர்வை தொலைத்துவிட்டு வாழ்கிறோம். அதன் சத்தம் எப்போதும் இருக்கிறது. நாம் காதுகளுக்கு அதை கேட்க நேரமில்லை. யாரொ சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.. "காது.. அது செல்போன் அடைத்ததால் செத்துவிட்ட ஒன்று" என்று.

வாருங்கள். உங்கள் இயல்பில் சேராத வேலையினை செய்யாதீர்கள். எது உங்கள் இயல்போ அங்கே சேருங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகவேண்டுமெனில் உங்கள் உள்ளுணர்வின் சொல் படி நடைபோடுங்கள். உலகில் நம்மை ஏமாற்றாத ஒரே குரல்.. உள்ளுணர்வின் குரல் மட்டுமே.

அதை எப்படி கேட்பது...? உள்ளுணர்வின் சத்தம் எனக்கு கேட்கவே இல்லையே. என்கிறீர்களா..அதையும் பட்டாம்பூச்சி சொல்லிதருகிறது.
புழுவாய் இருப்பது எப்படி சிறகுகள் பெற்றது? கேட்டதும் கிடைத்துவிட்டதா ? இல்லை. தன்னை ஒரு கூட்டுக்குள் சுற்றி கொண்டது. அதற்குள் இருள்.. இருள் ..இருள் மட்டுமே. வெளியுலக சத்தங்கள் அதை தொல்லை செய்யாத வண்ணம் தன்னை கூட்டுபுழுவாக்கி கொண்டது. காத்திருந்தது, பொறுமையுடன்.



நான் உங்களை கூடு கட்டி குடிப்புக சொல்லவில்லை. உங்களுக்குள் செல்லுங்கள். "எனக்குள் இருப்பதைபோன்ற அதிசயத்தை வெளியில் நான் கண்டதில்லை" என்கிறார் ஐன்ஸ்டீன். அப்படி கண்டதால்தான் அவரை இன்னும் கொண்டாடுகிறோம்.


உங்களுக்கு நீங்களே புதிதாய் தெரிவீர்கள். அட.. இது நானா..!! என்று உண்மையான உங்களை பார்த்து உங்களுக்கே ஆச்சர்யமாய் இருக்கும்.



அப்படி உங்களை நீங்கள் கண்டறிய முதலில் தனிமையில் இருக்க பழகுங்கள். வாரத்தில் ஒரு நாள். ஒரு மணி நேரம் மட்டும். தனித்து
இருங்கள். மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் இயல்பை கண்டறியுங்கள்.

"உள்ளுணர்வின்படி வாழுங்கள்.அதுதான் உங்களின் வாழ்க்கை."

தொடரும்...