Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Tuesday, February 9, 2010

அவளுக்கான என் காதல் கவிதைகள்


நன்றிகள் சில..
நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை
காணாத கண்ணீர் கண்களோடு...!!

** ** ** **
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..
பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்
தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..
தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!

** ** ** **
சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???

** ** ** **

தமிழரசிக்காக கிறுக்கிய கவிதைகள் இவை..!! :)

Wednesday, April 8, 2009

என் அன்பு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!




அட.. !! என்ன இன்றைக்கு உனக்கு அழகு கூடி விட்டது?

என்ன உன் நடையில் ஒரு கம்பீரம் மிளிர்கிறது?

உன் கண்ணில் காந்தம் எதும் வைத்துவிட்டான கடவுள்
இப்படி ஈர்க்கிறது என்னை?

அடிக்கடி என்னை அழைத்து சிரிக்கிறதன் அர்த்தம் என்னவோ?

எதோ சொல்ல வருகிறாய்.. காபி கொடுக்கும் போது புதியதாய் புன்னகை வேறு...?

"கல்யாண நாளா?" என்று அப்பாவின் காதோரம் கேட்டேன்.

அந்த துக்க தினம் இன்று இல்லை என்று அப்பா கிண்டலடிக்கிறார்.

வேறென்ன..

உன் மாமியார் கிளவியிடம் கேட்டேன்.."ம்ம்கும்" ..என்று முகத்தை திருப்பிகொள்கிறது.

அட.. என்னம்மா ஆச்சு... உனக்கு..

அட.. இன்று ஏப்ரல் எட்டா?

நேராக சென்றேன்... கையை பிடித்து நிறுத்தி சொன்னேன்.

"ஹாப்பி பர்த்டே மா"

"அடடா....!! இரு மேட்டூர் போகலாம் அங்கே அழு.. அணையாவது நிரம்பட்டும்."

"சிரிக்காதே கள்ளி.. !! சொல்லாமல் சொன்ன உனக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என் இதயத்தில்."

நகரு.. இன்று நான் சமைக்கிறேன் என்றேன்.

நான் நீண்ட நாள் வாழ பிடிக்கவில்லையா என்று கலாய்கிறாய் நீ.

எதாவது செய்ய வேண்டுமே ..ஆசையோடு நின்றேன்.

"நீ வாழ்வில் சிறப்பானவனாக வா.. அது போதும்." என்றாய்.

"நிச்சயமாக மா.. நிச்சயமாக"

"இப்போது இருவருமே மேட்டூர் கிளம்புங்கள்" என் கண்ணீர் துடைத்துவிட்டார் அப்பா.



பாட்டு பாஸ்கி : மம்மீ.. ஹாப்பி பர்த்டே..வாழ்த்துக்கள் அம்மா.
இவன் என்னா இப்படி உருகறான். அடக்கிவைங்க அவனை.