Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, May 10, 2012

தப்பி ஓட்டம்



சரியாத்தானே இருந்துச்சு..என்ன ஆச்சு..?!

ட்ட்டப்ப்..ட்ட்டப்ப்.. மீண்டும் இரண்டுமுறை அவர் அதை இடதும் வலதுமாய் தட்டித்தட்டிப் பார்த்தார். அது வேலைநிறுத்தத்தில் இருக்கிறதா? அல்லது விருப்ப ஓய்வே பெற்றுவிட்டதா? என்று யோசித்துகொண்டே மீண்டும் தட்டி தட்டி பார்த்தார்..ம்ஹீம்..ஒன்றும் பிரயோஜனமில்லை..

அந்த மீட்டரில் முள் சரியாக நூறில் அப்படியே நின்றபடி இருந்தது. நூறுக்கு மேலும் சேர்த்திருக்க வேண்டும் போல, அந்த அளவு அது அப்படியே நூறாம் எண்ணோடு பசைபோட்டு ஒட்டிகொண்டது. ஏனோ இதை பார்த்தவுடன், காலை வாக்கிங் முடித்து வரும்பொழுது, பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அம்மாவின் கால்களை இறுக்கிப்பிடித்துகொண்டிருந்த பெண்குழந்தை நினைவுக்கு வந்தது அவருக்கு.

சரி… மற்ற மீட்டர்களை சரி பார்ப்போம் என்று மற்ற மீட்டர்களை நோக்கி நடந்தார், அந்த சுவற்றில் வரிசையாக இருந்த பல்வேறு மீட்டர்களை பொதுவாக கவனித்தார்.எல்லாமே கொஞ்சம் நகர்ந்தவண்ணமாய் தான் இருந்தது. மயிலின் பைத்தியக்காரத்தனம்- 14 சதவிகிதம், கடல் நண்டின் பைத்தியக்காரத்தனம்- 19 சதவிகிதம், கரடியின் பைத்தியக்காரத்தனம்- 21 சதவிகிதம், நரி- 23 சதவிகிதம்..

எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. அப்படியென்றால்…அப்படியென்றால்.. இந்த மீட்டரும் சரியாகத்தான் இருக்கவேண்டும்..சரிக்கும் மேலாக, நூறுக்கும் மேலாக அது சரியாகத்தான் இருக்கமுடியும்..அப்பொழுது இந்த மீட்டரின் எதுவும் பிரச்சனை இல்லை..

பிரச்சனை..மனிதர்களிடம்தான்..

அவர் அதிர்ந்து போனார்..இதை எப்படி சமாளிப்பது. பகல் நெருங்க நெருங்க.. இன்னும் அந்த மீட்டர் வேகமாய் துடித்துகொண்டிருந்தது.. இன்னும் நேரம் ஆக ஆக, அந்த மீட்டரின் முள் சூட்டில் சிவந்தே விட்டது.. அதிர்ச்சியில் அவரும் மீட்டரைப்போலவே துடித்துகொண்டிருந்தார்.. ஒருவாறாய் ஒரு முடிவுக்கு வந்தார்..

”இனி இங்கு இருக்கமுடியாது.. இது சாத்தியப்படாத ஒன்று, நம் இருப்பு இவர்களுக்கு எளக்காரமாகிவிட்டது, ஒருவகையில் நாம் தான் இந்த அளவு இது வளர்ந்ததற்கு காரணம்கூட. இனியும் இது தொடரக்கூடாது” என்று முடிவுக்கு வந்தார்.

உடனடியாக அவரின் உடைகளை பைக்குள் திணித்துகொண்டார்.அவரின் அறைக்கதவை சாத்துவதற்கு முன் ஒருமுறை அந்த மீட்டரை பார்த்தார், இன்னும் சிவந்து க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் என அதிபயங்கர வேகத்தில் துடித்துகொண்டிருந்தது. மிரட்சியுடன் கதவைப்பூட்டிவிட்டு நடந்தார், காரில் ஏறினார், சில பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரகத்தை குறிப்பிட்டார். ஓய்வாக அவர் சாய்ந்து அமர, அவரைத் தூக்கிகொண்டு அந்த கார் விண்வெளிக்கு விருட்டென கிளம்பியது.


..பூமியில், ஏதோ ஒரு வீட்டு டி.வியில் அன்றிரவு..

…..வானத்தில் தீடீரென பிரகாசித்து மறைந்த பொருள்,.. மேலும் பல முக்கிய செய்திகள், விளம்பர இடைவேளைக்கு பிறகு..!!





Saturday, August 6, 2011

எப்போ ம்மா வருவீங்க?





நேரம்: 7.08 மணி

இதோ.. வேகமாய்.இன்னும் வேகமாய்.. அடுத்த கணமே என் தங்கத்தை அடைந்துவிடக்கூடாதா?
இன்னும் எதற்கு அவளுக்கும் எனக்கும் 7 நிமிட இடைவெளி.. அன்பில் காலம் கரைவதில்லை..கூடுகிறது..
கணமொன்று கடக்கையில் யுகம்கடந்த வலி..ச்சே..மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்லாதா?
இல்லை இந்த ஆட்டோகாரன் மெதுவாக செல்கிறானா? வேகமாகத்தான் திருகுகிறான்.. இத்தனை பேர் சாலையில்
என்ன செய்கிறார்கள்.. ச்சே.. அசமஞ்சங்கள்..நகரவே நாள் செய்கின்றன. எருமைகள்...
சீக்கிரம் போங்க ..ப்ளீஸ் .. மீண்டும் ஆட்டோகாரனுக்கு கெஞ்சலாய் உத்தரவிட்டேன்.

போறேன்மா..போறேன்..ன்னு கொஞ்சம் உறுமலாய் சொல்லிவைத்தான்.

அட..சொல்ல மறந்துவிட்டேனே..நான் அஞ்சலி.. என் வீட்டிற்குதான் இவ்வளவு வேகமாய் போய்கிட்டு இருக்கேன்..
காரணம்.. என் மகள் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கா..!! சந்தோஷமாய் இருக்கா? எனக்கும்தான்..ஆனால்..

நேரம் 6.45 மணி
ஹையா..ஹையா..யய்யய்..ஹையா.. !! கூச்சலுடன் வீட்டிற்குள் ஓடிவந்தாள் இந்திரா.

வந்துடுச்சு பிஸாஸு.. இன்னைக்கு என்ன கிழிச்சிதோ? புகைந்தபடி வெளிவந்தாள் கற்பகம் பாட்டி.

குழந்தையை ஏன் திட்ற..எதுவா இருந்தாலும் என்னை நேரா சொல்லிட்டு போ.. மாடிப்படியிலிருந்து கூவினாள் லட்சுமி.

பாட்டி பாட்டி.. இன்னைக்கு நான் ஸ்கூல்ல..

வந்தது லேட்டு.. இதுல கதைவேற அளக்கறியா.. ஃபங்ஷன் முடிச்சமா..புள்ளைய அனுப்பினமான்னு இல்ல..
இவ்வளவு நேரமா பண்ணுவனுங்க.. என்ன ஸ்கூலோ..?!

உங்கம்மா இருக்காளே.. அவளை அப்படியே உரிச்சி வெச்சிருக்க.. அதே துள்ளல், அதே திமிரு.. அதே அடம்..

பொக்கென்று போனது இந்திராவிற்கு.

அப்பா எங்க பாட்டி..? என்று சோகமாய் கேட்டாள்.

அவன் உள்ளதான் இருக்கான்.. ஏன் அவனை வேறு வம்பிழுக்கணுமா நீ.?
என்னை படுத்தும் இம்சை போதாதா? என்றவண்ணம் அவளுக்கு கவுன் மாட்டிவிட்டாள்.

பேக்கை தன்னோடு தூக்கிகொண்டு..அறைக்குள் நுழைந்தாள்.
சர்ரென்று ஒரு பேனா அவள் கன்னம் உரசி வெளியே விழுந்தது.

எங்க.ஒரு பேனா கூட இல்லை.. ச்சை..வீடா இது.. ஒரு நம்பர் நோட் பண்ண பேனா கூட இல்லை...
இருய்யா இருய்யா..இரு லேப்-ல ஸ்டோர் பண்ணிக்கிறேன்.. |
என்கிட்ட மட்டும் எல்லாம் சொல்லு..என்று செல்லில் எவனையோ எகிறிகொண்டிருந்தான் பாலு.

அப்..பாஆஆஆ..

திரும்பி பார்த்தான் பாலு. செல் தவறி கீழே விழுந்தது.. இணைப்பு துண்டிக்கப்பட்டது.. செல்போன் அணைந்தது.

கோபம் குழந்தைமேல் பாய்ந்தது.

ஏய்..எந்த நேரத்துல கூப்பிடறதுன்னு தெரியாது.. ச்சை.. பிஸாஸே..போ..போ வெளியே என்று அலறியபடி
செல்போனை பொறுக்க போனான்.

..குழந்தை மிரண்டே போனது..6 வயது பெண் என்னதான் செய்வாள்.. மலங்க மலங்க விழித்தாள்..
கலங்கி போனாள்.. துக்கம் தொண்டைக்குள் தள்ள..

மெதுவாய் நடந்தாள்.. லேண்ட் லைனில் அம்மாவின் ஆபிஸ்க்கு அழைத்தாள்..

அலோ..எம்.கே. அஸோஸியேட்ஸ்..

அம்மா இருக்காங்களா? அம்மாட்ட பேசணும்..

எந்த அம்மா.. இங்க நிறைய பேர் இருக்காங்களே குழந்த.. பேர் சொல்லு மா..

அம்மா பேர் அஞ்சலி.. என்றாள்.

அஞ்சலி மேடம்.. உங்களுக்கு போன்..

ஹல்லோ..

ம்மா.. ம்மா..

சொல்லும்மா..

மா..குரல் உடைந்தது.. அழ துவங்கினாள்..

மா..ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் மா...கதறி அழுதாள்..

அழுகையில் நடுவே..

எப்போ ம்மா வருவீங்க..?

அழுகை தொடர்ந்தது

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Friday, September 10, 2010

புத்தரை தடுமாற வைத்த கேள்வி!



என்னது புத்தரையே தடுமாற வெச்ச கேள்வியா? ஆமாங்க..
அப்படி யோசிச்சு கேள்விகேட்டது யாருங்க? இருங்க சொல்றேன்..
ஞானி..எல்லாம் தெரிஞ்சவர் அவர் ஏன் தடுமாறினாரு? எல்லாம் தெரிஞ்சதாலதான்..

Wednesday, May 5, 2010

ஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்!!

இந்த நாளை கொண்டாடுங்கள்!!




அந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி.
மாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு
தன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி.
வெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார்.
இந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்?..ஒருவேளை இவருக்கு
பைத்தியமோ” என்று நினைத்துகொண்டார்.

பிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார்.
இரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார்.

“என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..
இந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார்.

மூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க..
இவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும்
இரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன்? அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால்
இந்த மகிழ்ச்சி? எனக்கும் சொல்லுங்களேன் “ என கேட்கிறார்.

அந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?”என்று.

இவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..

மூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.

இளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் ?” என்று கேட்டார்.

துறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை
இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ
என் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்....இப்படி உலகையே அச்சுறுத்தும்
மரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார்.



இளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.

.....

இந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை
தெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
சோதனைகளை எல்லாம் சாதனையாக்குங்கள்.

(பி.கு)இது முழுக்கதையும் எங்கிருந்தும் எடுக்கபடவில்லை. என் எண்ணங்களில் உதித்தது தான். :)

Tuesday, January 5, 2010

”சாலை பாதுகாப்பு வார”த்தை முன்னிட்டு ஒரு சிறுகதை..

http://www.irintech.com/x1/images/jean/hell_met_helmet.jpg
-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

”சாலை பாதுகாப்பு வார” த்தை முன்னிட்டு இந்த சிறுகதை..!!


டிஸ்கி :

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."

Saturday, December 26, 2009

பொம்மை கதை

http://www.carwale.com/images/RoadTests/ChevroletSpark%5CChevrolet%20Spark%20Front%20Dynamic.jpg


என்னங்க..நிஜமாத்தான் சொல்றீங்களா?
லோன் சேங்ஷன் ஆகிடுச்சா?
ஓ..காட்..என்னால நினைச்சுகூட பார்க்க
முடியல..

எப்போ பணம் வருமாம்..?
......
மனைவியின் துள்ளலில் எனக்கு எரிச்சலாய் இருந்தாலும்..
குடும்ப கவுரவம் என்பதற்காக இதை செய்யவேண்டியதாய் போனது.
அதுதான் கார் வாங்குவது.

சுசிக்கு ஏனோ..எதிர்வீட்டுகாரர் காரின் மீது அப்படி ஒரு கண்.
அதே போல நிறம் மட்டும் வேறு நிறத்தில் ஒரு கார் வாங்கியே ஆக வேண்டும்
என்று என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

இது சகஜம் என்றுதான் இருந்தேன்..ஆனால் என்னையும் குழந்தைகளையும்
பட்டினி போடும் அளவுக்கு அவளுக்கு வெறியேறிவிட்டது.

நண்பனிடம் சொன்னேன்.
போனா போகுது..வாங்கிடேன் என்று தனக்கு தெரிந்த
கார் டீலரை அணுக சொன்னான்.

இப்போது பேங்கில் லோன் போட்டு, பணம் வர இருக்கிறது.
......
ஏங்க..உங்களைத்தான் கேக்குறேன்..எப்போ பணம் வருமாம்?

இன்னும் ரெண்டு நாளில் வந்துடும் சுசி.

..ஓ..நல்லது..அதுக்குள்ள நாம என்ன கார் வாங்குறதுன்னு முடிவு பண்ணிடலாம்..

ம்ம்..சரி..

வார்த்தைகள் முடிப்பதற்குள் வந்து விழுந்தது முத்தம்.


10 நாட்கள் கழித்து..

நன்றி சார்..வரோம்..
தன் புதிய செவ்ரோலெட் ஸ்பார்க்கில் ஏறி அமர்ந்தபோது..
சங்கர் மகிழத்தான் செய்தான்.

சுசிக்கும், குமார்,அனு மூவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..
வேகம் எடுத்தால் அலறுகிறார்கள்..மிதுவாய் சென்றால் சினுங்கினார்கள்..

இந்தா..நீயாச்சு காராச்சு..என்று சுசி கையில் காரை கொடுத்துவிட்டால் என்ன என்றுகூட
இருந்தது..

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

மாலை கோவிலுக்கு சென்று திரும்பி வந்தோம்.

மகள் அனு அழும் சத்தம் கேட்டது..
”என்னடா ஆச்சு..”என்று எழுந்து ஓடினேன்.

”ம்ம்..வேணும்..அதுதான் வேணும்..” என்று சுசியுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள் அனு.

”ஹேய்..அனு என்ன இது அடம் பிடிச்சிகிட்டு..என்ன வேணும் உனக்கு இப்போ? ”

எங்க க்ளாஸ் பொண்ணு ஒருத்தி ஒரு கார் பொம்மை வெச்சிருக்கா..

அதே மாதிரி எனக்கும் வேணும்பா..வாங்கி தர சொல்லுங்கப்பா..

கெஞ்சினாள் அனு.

”சுசி..பொம்மைதானே..வாங்கிகுடு
த்திருக்கலாம்ல..”என்றேன் மனைவியிடம்.

”ஏங்க..நீங்களும் புரியாம பேசுறீங்க..அது விலை 1200 ரூபாய்.

அதில்லாம அதே கலர்ல இருக்க கூடாதாம் வேற கலர்-ல வேணுமாம்.

இந்த வயசில இப்படி அடம்பிடிச்சா எதிர்காலத்துல ரொம்ப சிரமப்படுவா..!!

நீங்கதான் கண்டிக்கறதே இல்லை..அதான் நான் கண்டிச்சேன்.” என்றாள்..

உண்மைதான்..நான் அவளை மட்டுமல்ல..உன்னையும் கண்டிக்க தவறி இருக்கிறேன்.

அன்று இரவு டைரியில் எழுதினேன்:

வாழ்க்கை என்பது எப்போதும் பொம்மை விளையாட்டுதான்.
சிறு வயதில் பொம்மைகள் நம் கைக்குள் அடங்கி இருந்தது.
பெரியவர் ஆனதும் அவை நம்மை கைக்குள் அடக்கிவிடுகிறது.
சில பொம்மைகள் உயிரற்றவை என் புதிய காரை போல,
சில பொம்மைகள் உயிருள்ளவை..
என் சுசியை போல!!!

Thursday, December 17, 2009

அறிவு [திருக்குறள் கதைகள்- 1]

வரேன் சார்...!!

ஆங்..வாங்க..!!

பணத்தை கட்டிவிட்டு நடந்தார் ராம்சுந்தர்.
இவ்வளவு பெரிய பெயர்பெற்ற பள்ளியில் தன் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிறைவோடு.

இவர் மகன் கோபால்.இதே பள்ளியில் பளஸ் ஒன் படிக்கிறான்.

பள்ளி கேட் வழியே மாணவிகள் வந்த வண்ணம் இருக்க..

அந்த பக்கம் நின்றிருந்த சில மாணவர்கள் “ஃபிகர்..ஃபிகர் “என்று பேசிகொண்டு இருப்பதை கவனித்தார்.

அவர்களை கண்டிப்பதற்காக அருகில் சென்ற அவருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் அவன் மகனும் இருந்தான். கடும் கோபம் .

அவர் மகனை வெளியே இழுத்து வந்து கன்னங்களில் அறை விட்டார்.

அரண்டு போனான் கோபால். மற்ற மாணவர்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர்.

“சார் ஏன் சார் கோபாலை அடிக்கறீங்க..என்ன தப்பு பண்ணிட்டான் ?” என்றான் ஒரு மாணவன்.

“ஏண்டா..படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா..போற வர பொண்ணுங்களை ஃபிகர்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா?..
இதுல எப்படிடா நீயும் சேர்ந்த..”என்று கோபாலை முறைத்தார்.

“சார் ..இங்க பாருங்க..”
என்று தன் க்ராப் நோட்டை காட்டினான் ஒரு மாணவன்.

”இதுல ஒரு சில படங்கள், அதாவது..ஃபிகர்ஸ் சரியா வரலைன்னு பேசிகிட்டு இருந்தோம்..
நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு அவனை அடிச்சிட்டீங்க.”.என்றான் .

மகனை அடித்த வேதனையும்..அவனை பொது இடத்தில் அவமானபடுத்தியதையும் நினைத்து வருந்தியபடி கிளம்பினார் ராம்சுந்தர்.

குறள் : எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

Monday, December 7, 2009

கண்ணாமூச்சி..!!



அம்மா..ஒரே ஒரு தடவை மா..ப்ளீஸ் மா!!..

என்னடா இப்படி நச்சு பண்ற..என்ன வேணும் உனக்கு இப்போ?

கண்ணாமூச்சி ஆடணும்..மா..

இங்கயா? இந்த குடிசைல கண்ணாமூச்சி ஒண்ணுதான் குறைச்சல்…
சரி.. போ..போய் ஒளிஞ்சிக்கோ..!!

ஹையா ஜாலி..அம்மா திரும்பி நில்லு..

ம்ம்..சரிங்க துரை..!

முருகன் ஓடிப்போய் அருகில் இருந்த மரப்பலகை பின்னால் ஒளிந்துகொண்டான்.

முருகா..எங்கடா போய்ட..அச்சச்சோ..முருகனை காணலையே..டேய் திருட்டுபயலே..எங்கடா போய்ட..பொய்யாக தேடினாள் கண்ணம்மா.

களுக்கென்று வெட்கத்தோடு சிரிப்பு வந்தது முருகனுக்கு..

அம்மா நான் இங்கே இருக்கேன் என்று எழுந்து நின்றான்..

அடப்பாவி..அங்க போய் ஒளிஞ்சிகிட்டியா..கில்லாடிடா நீ..

ஹப்பா..இவனுக்கு எவ்வளவு சந்தோஷம்..இவளுக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிகொண்டது. அணைத்துகொண்டாள் மகனை.

கண்ணம்மா..!! ஓங்கி ஒலித்தது ஒரு ஆண் குரல்.
சிடுசிடுப்பான முகம். கோபப் பார்வை. கலைந்த தலை. கசங்கிய சட்டை.
குடிசைக்குள்ளே நுழைந்தான் ராமசாமி.

வாங்க..!! காப்பி போடவா?

ம்கும்..இந்த ஊருல ஒரு நாய் என்னை மதிக்கிறதில்லை..காப்பி ஒன்னு தான் குறைச்சல்…போட்டு தொல போ..!!

சரிங்க..!..சில நிமிடங்களில் காப்பியோடு வந்தாள்.
அப்பா..ஆசையாய் கட்டிகொள்ள வந்தான் முருகன். கைகளை தட்டி விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.

என்னடா? என்ன வந்துச்சு உன் அப்பனுக்கு..? சொல்லு

பா.. கண்ணாமூச்சி ஆடலாமா பா..?

டேய்..அரைஞ்சி பல்லை எல்லாம் கழட்டிடுவேன்..இந்த குடிசைல கண்ணாமூச்சிதான் குறைச்சல்.. போடா போய் படிக்கிற வேலைய பாரு..

காப்பியோடு வந்த கண்ணம்மா முருகன் முகம் வாடுவதை கவனித்தாள்.

ஏங்க ஆசையா கேக்குறான்..ஒரு தடவ தானே..

ஏய் யாருடி இவ... சரிடா.. போ..போய் ஒளி..

ஹைய்யா..மீண்டும் அதே மரப்பலகை அருகில் ஒளிந்துகொண்டான்.

என்ன கோபமோ.. நேராக அவனை இழுத்து வந்து நடுகூடத்தில் போட்டு ஒரு அறை அறைந்தான்.ராமசாமி.

கலங்கியபடி அம்மாவிடம் சேர்ந்துகொண்டான் முருகன்.

ஏண்டா..அந்த பலகை பக்கம் போகாதேன்னு சொல்லி இருக்கேன்ல..விழுந்தா எவன் செலவுக்கு அழுவறதாம்?

ஸாரிப்பா..இனிமே போகலை..!! கண்ணில் நீர் பெருகியது.
வாசல் அருகில் அமர்ந்துகொண்டான்.

ஏங்க அவனை இப்படி வையறீங்க..பாவம் அவன்..!!

ஏய்..ஏண்டி.. நானே கம்பெனிக்காரனுங்க பண்ண கூத்துல கடுப்பா இருக்கேன்..இவன் வேற..

இவன் கம்பெனி கதையை சொல்ல..அவள் வீட்டு கதைகளை சொல்ல..
சில மணி நேரங்கள் உருண்டது.

ஆமா..எங்க முருகனை காணோம்? முருகா..!!..
தேடினார்கள்..தேடிக்கொண்டே இருந்தார்கள்..

காலையில் தான் கண்டுபிடித்தினர்..

முருகன் அந்த ஊர் கோவில் குளத்து நீரில் ஒளிந்திருப்பதை..அவன் அதில் அதுவாக மிதந்த போது..!!



Monday, September 28, 2009

சீட்டிங் சிறுகதைகள்!




கள்ளா!



http://boyfriendcheat.files.wordpress.com/2009/03/how-to-catch-a-cheating-husband_hubsite40a.jpg



மாலை 7.30 மணி.

களைப்பாய் உள்ளே வருகிறான் ராம்.

”புவனா ஒரு காபி கிடைக்குமா?”

”ஏன் அவ போட்டுகுடுக்கலையா?”

அதிர்ந்த ராம், மனதிற்குள் சொல்லிக்கொண்டான் .
”எவனோ போட்டுகுடுத்துட்டான்”

காதலா?!

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/5203617/cheating-main_Full.jpg

மதியம் 12 : 30


அலோ உமா.

அவ இல்ல.. வசு பேசுறேன்.

ஹப்பாடி..ஹேய் எப்போ பீச்சுக்கு போலாம்?

இன்னிக்கு ஈவனிங்..!

”சரி.. பார்த்து வா. அவளுக்கு தெரிஞ்சுட போகுது.”

12: 31

..கடற்கரையில் உமா.. அவள் காதலனிடம்..
”ம்ம்..தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.. தெரிஞ்சா சமாளிச்சுக்கலாம்!!”

Thursday, August 27, 2009

ஒரு துண்டிக்கப்படாத இணைப்பு!


”குட் மார்னிங் சார்.. ஈஸ் திங் ராம்குமார்..”

”யெஸ் ராம்குமார் ஹியர்”

”நாங்க IJKLMN கம்பெனியில் இருந்து பேசுறோம்.
புதுசா ஒரு லோன் ஸ்கீம் ரிலீஸ் பண்ணி இருக்கோம்.
அதை பத்தி உங்ககிட்ட எக்ஸ்பிளையின் பண்ண இருக்கோம்.
ஒரு 5 மினிட்ஸ் ஒதுக்க முடியுமா ப்ளீஸ்”
கெஞ்சியபடி கொஞ்சினாள் அவள்.

“ம்ம்..ஸ்யூர்”..

ஐந்து நிமிடங்கள் முடிந்தது.
குரல் இனித்தது.
சொன்ன விஷயங்கள் மறந்தது.

”சரிங்க பாக்கறேன், நைஸ் வாய்ஸ். நாளைக்கு ஈவனிங் உங்க ஆபீஸ் வரேன்”

“தேங்க் யூ ஸார். ஸீ யூ.. பை”

”பை..”

மகிழ்ச்சியோடு இணைப்பை துண்டித்தாள் அவள்.

அடுத்த ஒரு நிமிஷத்தில் ராம்குமாரின் செல்போன் ஒலித்தது.

புவனா கூப்பிட்டாள்.

”என்னங்க..”

‘என்ன?”

“ வீட்ல கேஸ் தீந்துடும் போல இருக்கு வரும்போது சொல்லிட்டு வந்துடுங்களேன்.”

“ம்ம்.. சரி”

“அப்புறம் ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..பிஸியா?”

”ஆமா.. ஒரு முக்கியமான பைல் பார்த்துட்டு இருக்கேன். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்.. வை”

‘ம்ம்.. சரி..பை”..

எழுந்து காபி குடிக்க நடந்தான் ராம்குமார்.

வருத்தத்தோடு இணைப்பை துண்டிக்காமல் இவள்!!

Thursday, July 30, 2009

அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?


அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?

ஆமா நீங்க?

நாந்தான் பில் கிளண்டன் பேசுறேன்.

ஓ..சொல்லுங்க நலமா? லெவெண்ஸ்கி நலமா?

யாவரும் நலம் ஜார்ஜ், அங்க எல்லாரும் சௌக்கியமா?

ஆங்,, நலம்.!!

...பில் கிளிண்டனின் பின்னால் ஒபாமா நிற்கிறார்.

சார் நானும் பேசணும் ஒரு நிமிஷம்..

ஜார்ஜ்.. ஒபாமா பேசணுமாம்..

இல்லை வேண்டாம்.. நீங்க பேசுங்க.



ஒபாமா கைப்பேசியை வாங்கி கீழே எறிகிறார்.

கிளிண்டன் அதிர்ச்சியடைகிறார்.

புஷ்ஷீக்கும் அதிர்ச்சி.

டேய் ஒபாமா ஏண்டா இப்படி பண்ண?


ஒழுங்கா போய் தூங்கு.. இல்லனா சோனியா காந்தி கிட்ட சொல்லிடுவேன்..


பயந்துபோய் கட்டிலிக்கு ஓடிப்போய் படுத்துகொள்கிறார் கிளிண்டன்.

ஒரு பெருமூச்சு விடுகிறார் ஒபாமா.


இதெல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது , இந்த பைத்தியகார ஆஸ்பத்திரிக்கும் நமது கம்பவுண்டர் ஓபாமா கந்தசாமிக்கும்!!!

Tuesday, July 28, 2009

ராமன் எத்தனை ராமனடி!!



”அய்யயொ.. இன்னிக்கும் அம்மா வீட்டில் இல்லையா?”

வருத்தத்துடன் ராமன் விலாஸுக்குள் நுழைந்தாள் கனகா.

அவள் அந்த வீட்டு வேலைக்காரி.

”கனகா, நல்லா இருக்கியா?” என்றார் ராமன்.
வயது 60-ஐ தொட்டிருக்கும்.


பகீர் என்றது கனகாவிற்கு.

“ம்ம்..இருக்கேன் ஐயா”
என்றாள்.

அடடா இன்னிக்கு இவர் மட்டும் தான் வீட்டில் இருக்கார் போல.

போன முறை இதே போல் சிக்கிகொண்டு நான் பட்ட பாடு.

அப்பப்பா எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலைமை வரகூடாது.

ஆனால் இன்று மீண்டும் அதே நிலைமை எனக்கு வந்துவிட்டதே..

மனதுக்குள் கலங்கினாள்.

பாத்திரங்களை சீக்கிரம் விளக்கி வைத்துவிட்டு முடிந்தால் சொல்லாமலே ஓடிவிட வேண்டும்.
இவரிடம் சிக்கினால் இன்று அதோகதிதான்.

கடவுளே காப்பாத்து என்று வேண்டிக்கொண்டாள்.

*******

ஒருவழியாக பாத்திரங்களை விளக்கி முடித்தாயிற்று.

கிளம்பிடலாம் என்று எழுந்த போது பின்னால் யாரோ நிற்பதை உணரமுடிந்தது.

திரும்பி பார்த்ததும் திடுக்கிட்டாள்.

ராமன்.

முகத்தில் புன்னகையோடும், கண்களில் ஆசையோடும் நிற்கிறார்.

”அம்மாடி கனகா, எனக்கு கால் வலி , கொஞ்ச நேரம் கால் அமுக்கி விடேன்”.

மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் விதியை நொந்தபடி அவர் அறைக்கு நடந்தாள்.

நாற்காலியில் அவர் அமர இவள் கீழே அமர்ந்து கொண்டு கால் அமுக்க ஆரம்பித்தாள்.

ராமன் கனகாவின் அருகில் நெருங்கி பேச ஆரம்பித்தார்.

“இப்ப நாடு நிலைமையே சரியில்ல கனகா, நாங்க 1948-ல லக்னோவில் இருந்தபோது........”

.

.

.கனகா மனதுக்குள் கதறினாள்.

”போன வாரமும் இதே போல் 2 மணி நேரம் வரலாறு பேசி அறுத்து தள்ளிச்சு கிழம்.

இந்த வாரம் தப்பித்துவிடலாம் என்று பார்த்தால் இந்த வாரமும் சிக்கிவிட்டேன்.

ஹூம்ம்.. விதி வலியது!!”.

Thursday, July 23, 2009

இரண்டாவது மணநாளில்!!


இன்று பார்கவனுக்கும், ஹேமாவுக்கும் இரண்டாவது கலியாண நாள்

என்னங்க.. ஸேரி நல்லா இருக்கா?

ம்ம்.. சூப்பர்.. அழகா இருக்குடா.

தேங்க் யூ டா தடியா!!

ஹேய்..என்ன கொழுப்பா? அடிங்க!

ஹாஹா..சும்மா . கண்ணடித்தாள் ஹேமா.


ஏங்க..அத்தைக்கு முந்திரி பக்கோடா, மாமாவுக்கு மெதுவடையும், முறுக்கும் பண்ணி இருக்கேன்.

பாவம் மாமா அத்தை இதெல்லாம் சாப்பிட வாய்ப்பே இல்லாம போச்சு.

பார்கவன் நெகிழ்ந்தான்.

ம்ம்.. உண்மைதான் ஹேமா.

உன் அக்கறை என்னை சிலிர்க்க வெக்கிது.

தோ..நான் கூட அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணி இருக்கேன்.

ம்ம்..கலக்குறீங்க.

சரி..சீக்கிரம் வாங்க அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க!!

வீட்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.

முதியோர் இல்லத்திற்கு!!



Thursday, July 16, 2009

என்னுள் விழுந்த மழைத்துளிகள்!!

குழந்தை தொழில்!! :






இந்தா கொழந்தெ நேரா பாரு...

ஆங்..,,இப்போ லேசா தலைய சாயி..

அட..எரும மாடே.. எதுக்கு இப்போ அதை கீழே போட்டே..!!

கைத்தவறி விழுந்திடுச்சு சாமி... அழுதாள் பானு.

பளாரென அறைந்தார் முதுகில்..மீண்டும் ஒரு அடி.

செங்கல் சட்டியை மீண்டும் தலையில் ஏற்றினார்.

ம்ம்.. இப்போ ஒழுங்கா பிடி..

நேரா பாரு..

நட..

ம்ம்.. சரி...போதும்..போய் காச வாங்கிக்க..

கிளம்பினார் ராமு.

குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பற்றிய விளம்பரத்திற்கு

படங்கள் தயார் செய்துவிட்டார்.

பானு மதிய உணவுக்கு காசு சேர்த்துவிட்டாள்.




-----------------------
நேரம் சரியில்லை!! :



அப்பா..ப்ளீஸ் பா..

என்னடா குமார்?

அப்பா..வாங்கி குடுங்கப்பா..

ம்ம்..பார்க்கலாம்..

பா..ப்ளீஸ்ப்பா.. இன்னிக்கே வேணும்..
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் இருக்கு.
எனக்கும் ஒண்ணு வேணும்பா..

சரிடா.. அதான் வாங்கிதரேன்னு சொல்றேன்ல..
இதுக்கு மேல பேசினா அடிதான் விழும்..

நீ அடிச்சாலும் பரவால்ல..வாங்கி தரேன்னு சொன்னாதான்
விடுவேன்..

ஏய்..சொல்லிட்டே இருக்கேன்..

குமார் , அம்மாஆஆஆ....!!

குமாரை லேசாக தள்ள ..தள்ளிய வேகத்தில் அவன் கீழே படிகளில் சரிந்து விழுகிறான்.

ச்சை..இதெல்லாம் ஒரு புள்ளை.. ஒரே நச்சரிப்பு..

நீயும் உன் புள்ளையும்...

அடிப்பட்ட மகனை கவனிக்காமல் ஆபிஸ் கிளம்பி போகிறார்.

அவரை கண்ணீரோடு முறைக்கிறாள் சிவகாமி.
...

ஆபீஸில் வேலையே ஓடவில்லை.
எதோ பெரிய தவறு செய்ததாய் உணர்கிறார்.
..

மாலை..

டேய்.. குமார்.. இங்க பாரு.

அப்பா என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..

நீ கேட்ட ரிஸ்ட் வாச்..

..எங்கடா இருக்க..குமார்..குமார்..

குரல் கேட்டு வெளியே சிவகாமி வர..

ஏய்..குமார் எங்கடி?

உள்ளதான் இருக்கான் போங்க..

புன்னகையோடு உள்ளே போகிறார்..

குமார்..இந்தா நீ கேட்ட ரிஸ்ட் வாட்ச்..



அப்படியே அதிர்ந்து போனார்...கண் கலங்கினார்.

குமாரின் இடது கையில் பெரிய கட்டு.

வலது கையில் மணிக்கட்டு வரை சிராய்ப்புகள்.



(பி.கு).

குழந்தைகள் நம் நாட்டின் வீட்டின் எதிர்கால தூண்கள்.

நாம் இந்த பூமிக்கு வந்தோம் என்பதற்கு அவர்கள் தான் சாட்சி.

உங்களால் முடிந்தால் ஒரு குழந்தைகான கல்வி செலவை ஏற்றுகொள்ளுங்கள்.


வலிமை இல்லாதவர்களிடமும், குழந்தைகளிடமும் தன் வலிமையை கோபத்தை காட்டுபவன் மிருகமாக கருதப்படுவான்- திருக்குறள்.

Wednesday, July 15, 2009

"சக்தி"ய கொன்னுட்டாங்க!!

இந்த கதைக்கும்.. நமது சக்தி எனும் பெயர் கொண்ட பதிவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.








இல்லீங்க நான் வரலை..

ஏண்டி திமிரா.. சொல்லிட்டே இருக்கேன் வரலைன்னா என்ன அர்த்தம்?
தேவை இல்லாம என் தங்கச்சி முன்னாடி அவமான பட சொல்றியா..?ஒழுங்கா கிளம்பு.

இல்லீங்க..எனக்கு நிஜமா ஒடம்புக்கு முடியலை..கை கால் எல்லாம் ஒரே வலி..நீங்க போய்ட்டு வாங்க..

ஹேய்..சொல்லிட்டே இருக்கேன்..

“பளார்”..

ச்சி.. நீயெல்லாம் ஒரு ஜென்மம்.. சுத்த நோஞ்சானை எனக்கு கட்டி வெச்சு..வாழ்க்கையையே வீண் பண்ணிட்டாங்க..

நானே போறேன்.. நீ இங்கயே கிட..

பஸ் ஏறினார் சந்திரன்.

தன் தங்கை வீட்டு கறி விருந்திற்கு.



ம்ம்..வாங்க அண்ணே!!

ம்ம்..வரேன் மா.. நல்லா இருக்கியா ?

நல்லா இருக்கேன் அண்ணே!! அண்ணி வரலையா ?

அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலையாம்..அதான் வரலைம்மா..!!

என்னமோ..சரி அண்ணே!!

ஆமா.. இந்த அருண் பையன் எங்க போனான்?
மாமான்னு ஓடி வந்து கட்டிப்பான்.. இப்போ எங்க போனான்?

உள்ளதான் அண்ணே இருக்கான்.. டேய் அருண்!! மாமா பாருடா..!!

அருண்,ம்ம்.. போம்மா.. நான் மாட்டேன்.!!

சரி..விடுமா.. நானே பாத்துக்குறேன் அந்த வாலை!!

..அறைக்குள் செல்கிறார் சந்திரன்.

டேய்.. கண்ணா..!!

ம்ம்..

என்னடா, என்ன இப்படி உக்காந்து இருக்க.. என்ன ஆச்சு அருணுக்கு?

அருண் விசும்ப ஆரம்பிக்குறான்.

அடுத்த சில கணங்களில் கண்களில் நீர் தேங்க ,அழ ஆரம்பிக்கிறான்.

டேய்..கண்ணா!! என்னடா என்ன ஆச்சு?

ஹேய்..ஏன் அழற? அட..மாமா இருக்கேண்டா சொல்லுப்பா என்ன ஆச்சு..!!

சந்திரனின் மார்பில் விழுந்து அழ ஆரம்பிக்குறான்.

என்னடா ஆச்சு..? சொல்லுப்பா..

ம்ம்...சக்திய.. சக்திய கொன்னுட்டாங்க மாமா!!!

டேய்.. யாருடா சக்தி..? உன் ஸ்கூல் ஃபிரண்டா..?

தெரிஞ்ச பொண்ணாடா?


.. இல்லை மாமா.. அது நம்ம வீட்டு ஆடு..என் சக்தி ..!

அதை இன்னிக்கு கழுத்த அறுத்து கொன்னுட்டாங்க மாமா..!!

நம்மை நம்பி வந்த ஒரு உயிரை இப்படி சித்திரவதை பண்ணி கொல்றது எவ்ளோ பெரிய பாவம். அது நம்மை எதிர்கிறது இல்லைங்குறதுக்காக
அதை கொலை பண்றது எவ்ளோ கொடூரம்.. இத அம்மாகிட்ட சொன்னா என்னை திட்டுறாங்க.


..அவருக்கு மனதிற்குள் சுருக் என்றது.

அவர் கண்களிலும் கண்ணீர்..

ஆமாம்பா..அது தப்புதான்.

இனி அது நடக்காம பாத்துக்கறேண்டா கண்ணா..நீ அழாதே மா!!

Thursday, July 9, 2009

ஹலோ... எமன் ஹியர்.. !!

-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

நேற்று மட்டும் சேலத்தில் இருவர் சாலைவிபத்துகளில் பலி. இருவருமே சாலையில் டூவிலரில் செல்லும்போது செல்லில் பேசியபடி சென்றுள்ளனர்!!!

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."

Thursday, July 2, 2009

ஒரு கவிஞனின் விதி...!!!


அப்போது எனக்கு வயது 16..

அன்றொரு நாள்..

..
ஆசையோடு நான்
சில புதுக் கவிதை
எழுதி வந்தேன்;

”ஏண்டா இப்படி பேப்பரா வீண் பண்ற?!” என்றாள் தங்கை.

“ஹோம்வர்க் செய்யறதை விட்டுட்டு,கவிதை கேக்குதா கழுதை” இது அப்பா

“பையன் போற போக்கே சரியில்ல சாந்தி, கொஞ்சம் அடக்கி வை” இது பாட்டி

...

ம்ம்.. அம்மாவும் திட்ட போகிறாள் என்று நினைத்தேன்.


ஆனால் தனியே என்னை அழைத்து..

“லூஸ்.. இதெல்லாம் தனியா என்கிட்ட காட்டி இருக்கலாம்ல.”

கவிதையை பார்த்துவிட்டு

”பரவாயில்லையே.. கவிதை எல்லாம் சூப்பர்.. ம்ம்.. அடுத்த வாலி நீதான்.”

நான் கேட்டேன்..

”வாலா.. வாலியா?”

அழகாய் சிரித்துவிட்டு சொன்னாள்.

“வாலிடா கண்ணா. அவர் ஒரு பெரிய கவிஞர்”. என்று சொல்லி என் தலை வருடினார்.

அப்போது அம்மாவை அப்பா முறைத்தார்.

மாலை..
அப்பா.
“ஏண்டி.. உன் புள்ளைதான் லூஸுன்னு பார்த்தா நீயுமா?”

அம்மா.
“ஏங்க..என்ன ஆச்சு இப்போ?”

அப்பா.
“பின்ன என்ன? அவன் கவிதை எழுதிட்டு வரான். நீ அவனை ரொம்ப புகழ்ற.”

அம்மா.
“ஆமா. புகழ்ந்தேன். அதுக்கென்ன இப்பொ?”

அப்பா.
“இப்படி ஆரம்பிச்சா. அவன் எப்படி ப்ராக்டிகல் வாழ்க்கையில் வாழ முடியும்?,,
எப்ப பார்த்தாலும் கவிதை, கற்பனைன்னே இருந்துட்டா.. சுத்தி நடக்குறது என்னனு தெரியாமலே போய்டும்.
அவன் மட்டும் இந்த உலகத்துக்கு அந்நியமா போய்டுவான். அவனை நீ என்கெரேஜ் பண்ணாதே”

அம்மா.
“அது எனக்கு தெரியாதாங்க. முதலில் என்கெரேஜ் பண்ற மாதிரி பண்ணுவேன். அப்புறம் போக போக, அது சரியில்லை
இது சரியில்லைன்னு சொல்லி. அவனை கவிதை எழுதுவது மேல ஒரு வெறுப்பு வர வெச்சுடுறேன். அப்புறம் அவன்
நம்ம வழிக்கு வந்து தானே ஆகணும். “

அப்பா.
“அட.. நல்லா தான் யோசிச்சுருக்க. குட். அவனை கவிஞனா பாக்க எனக்கு மனசு வரலை. அவன் பெரிய பிசினஸ் மேனா வரணும்.
அது தான் என் ஆசை.”

அம்மா
“என் ஆசையும் அதுதான்.”

..........

ஒரு மெல்லிய விசும்பலோடு.. அவைகளை கேட்டுகொண்டிருந்தேன் நான்.

முதன்முறையாக.. என் தாயே எனக்கு ஒரு எதிரியாக தெரிந்தார்.

என்ன செய்வது.. அவர்களின் தேடல் வேறு. என் தேடல் வேறு.


இறுதியாக...

ஒரு “ரகசிய வாழ்க்கை”யை துவங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

இனி உலகுக்கு நான் பிஸினஸ் மேன். எனக்குள் ஒரு மகா கவி.

அன்று முடிவு செய்தேன்:

சுயத்தை இழந்து தானே வாழக்கூடாது. சுயத்தோடு வாழ்ந்துகொண்டே, உலகத்தோடும் வாழ்ந்து காட்டுகிறேன்.


பாட்டு பாஸ்கி : ஐ யம் பேக்.. !!

ஆஹா.. இது என்னடா அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட்டா இருக்குது.

ஆனா, அந்த பையன் பேர கடைசி வரை சொல்லவே இல்லியே நீ...?

Monday, June 22, 2009

பொல்லாதவன்-2..?!

ஹாய் நண்பர்களே!!

என்னடா இவன் எல்லாம் கதை சொல்லி கேட்கும் அளவுக்கு ஆகிட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க.. எனக்கும் நல்லா கதை விட..ச்சே.. சொல்ல வரும்..

சரி கதைக்கு வருவோம்..!!

ராம்குமார் மார்க்கெட் அருகே வந்து தனது யமஹா கிளேடியேட்டரை நிறுத்தினான்.

"டேய் ராம்...எங்கடா இவ்ளோ தூரம்...?!" என்றார் சண்முகம்.

"அது ஒண்ணுமில்ல மாமா.. சும்மாத்தான் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

-"சரி சரி.. வா.. கடைக்கு வா. எத்தன நாள் ஆச்சு உன்ன பாத்து .. ஆளே இளச்சி போன மாதிரி இருக்கியே ஏன்?"

"அட..என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க.. நான் நேத்து தான் வெயிட் பாத்தேன்..
எடை 4 கிலோ கூடி இருக்கு.. நீங்க என்னடான்னா..."

"நீ என்ன சொன்னாலும் சரி மாப்ள.. நீ இளச்சுத்தான் போய்ட்ட... எங்க அக்கா சரியா சோறாக்கி போடுதா இல்லையா?!"

கடைக்கு உள்ளே சென்றனர்..

கடைப்பையனை பார்த்து சண்முகம்..

"தம்பி.. ஓடிப்போய் ஒரு கலர் வாங்கியா... பணம் அக்கவுண்ட்ல போட்டுக்க சொல்லு.."

கடைப்பையன்..
"ஆமா.. அவனுக்கும் பணத்துல அக்கவுண்டு.. எனக்கு சம்பளத்துல அக்கவுண்டு.. பக்கி" என மனதுக்குள் திட்டிக்கொண்டே செல்கிறான்.

"எதுக்கு மாமா வீண் செலவு " என்று சம்பிரதாயமாக சொல்லி வைக்கிறான் ராம்.

"இருக்கட்டும் மாப்ள..நமக்குள்ள என்ன?"... என்கிறார் சண்முகம்.

"ஆமா மாப்ள.. கேக்கணும்னு இருந்தேன்.. வண்டி கண்டிஷன் எப்படி?"

"அச்சோ மாமா.. மறந்தே போய்ட்டேன்" என அலறுகிறான் ராம்.

"என்ன மாப்ள.. என்ன ஆச்சு?"

"வண்டி சாவி..வண்டிலேயே இருக்கு. இருங்க.. வரேன்.."

பதறியடித்து கொண்டு ஓடினான்..

வண்டியை நெருங்கி பார்த்தான். சாவி அதிலேயே இருந்தது.

உடனே சாவியை எடுத்துகொண்டு திரும்பினான்.

செல்லும் வழியில் ஒரு விநாயகர் கோவில் இருந்தது.

அதில் விநாயகருக்கு ஒரு அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்தான்.

சண்முகம் நின்றிருந்தார்..

"என்ன மாப்ள.. சாவி கிடைச்சுடுச்சுல்ல.. வண்டி இருக்குல்ல.. ?!"

"ஆங்.. இருந்துச்சு மாமா. நல்ல வேளை . ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்"

"உன் நல்ல நேரம்.. மாப்ள.. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கோ"


"சரி மாமா.. நான் கிளம்புறேன்"

"சரி மாப்ள.. உனக்கும் வேலை இருக்கும். போய்ட்டு வா"

நிதானமாய் வண்டியை நோக்கி சென்றான்.

டுத்த சில நிமிடங்களில்..

"சார்.. என் பேர் ராம்குமார்..என் வண்டிய காணோம்.. யாரோ திருடிட்டு போய்ட்டாங்க"..

ஏட்டு எட்டி பார்த்தார்.

"தம்பி ஒரு காபி..அப்படியே ரெண்டு வடை சொல்லிடு"

ராம்குமாரை பார்த்து..

"வாங்க.. சொல்லுங்க... என்ன விசேஷம்?"...

Sunday, March 22, 2009

அவசர உலகில் ஒருவன் !

நேரம் 6 : 30
டிக் டிக்..
டிக் டிக்..
டமால்...!!


அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது.

ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான்.
ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு?
என மனதை திட்டுவிட்டு வாசலுக்கு
சடலத்துடன்..ச்சி..கருமம்..
உடைந்த பாகங்களோடு சென்றேன்.

அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன்.

குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன்.

நேரம் 6:45
குளிக்கப் போகிறேன்.
"அடடா!"
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.

அதிர்ந்துபோனேன்.

"அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!"
அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள்.

ஆ.. இது பூமிதானே.. இல்ல வேற எதாவது சொர்க்கமா?

"போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது.

"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."

உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..

கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம்.

நேரம் 7 : 20
"அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.."

"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. "
"மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.."

போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட..
"உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன்.

டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.

ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.

பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.

கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.

மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!

அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!!

Tuesday, March 10, 2009

சந்துருவும்.. புதிய பப்பியும்

சந்துரு..எங்கடா கிளம்பிட்ட..?

மா.. விமல் வீட்டுக்கு போறேன்மா..

நானும் வரட்டுமாடா?

இல்லமா.. அடுத்த தெருதானே.. நானே போயிக்குறேன்..

சரி.. பொறுமையா போ.. கால் வலிக்க போகுது...

ம்ம்ம்... சரிம்மா.. கிளம்பறேன்..டாட்டா..

டாட்டா செல்லம்..

*******************************

சந்துரு படியிறங்கி நடந்தான்..
அப்படியே அவன் தாத்தாவின் மிலிட்டரி நடை..

சற்று நேரத்தில் விமல் வீட்டை அடைந்தான்
ஆனால் வீடு பூட்டி இருந்தது.

திரும்பி வீட்டிற்கே நடந்தான்.
செல்லும் வழியில் ஒரு புதிய கடை ஒன்று வந்திருப்பதை பார்த்தான்.
அருகே சென்று பார்த்தான். அது ஒரு "பெட் ஷாப்".

********************************

சந்துரு "உள்ளே வரலாமா?"

கடை முதலாளி அவனை வரவேற்றார்.

குட்மார்னிங்.. அங்கிள்..

குட்மார்னிங்...

என்னப்பா.. உனக்கு பேர்ட்ஸ் பிடிக்குமா.. அல்லது டாக்ஸ் பிடிக்குமா?

ரெண்டும்தான் அங்கிள், இப்பொ எனக்கு டாக்ஸ் பார்க்கணும்.

சரி வா.. பாத்துடலாம்.

**************************




இங்க பாரு... எல்லாமே அழகழகான பப்பீஸ். நல்லா இருக்கா..?

ஆமாம் அங்கிள்.. அருமையா இருக்கு...
அங்கிள்.. அது என்ன அந்த பப்பி மட்டும் ஏன் நொண்டுது ?
என்ன ஆச்சு அதுக்கு?


அதுவா.. அதுக்கு இடுப்பு எலும்பு அவளோ வலுவா இல்லப்பா.. அதனாலதான் நொண்டுது.

சே.. பாவம் அங்கிள் ... அங்கிள் நான் அந்த பப்பிய வாங்கிக்கறேன்.

தம்பி.. அது எதுக்குப்பா உனக்கு..?
அதானல.. ஓடமுடியாது.. வேகமா நடக்கவே கஷ்டப்படும்..
உன் கூட அது குதிச்சு குதிச்சு விளையாட முடியாது...

இல்ல அங்கிள்.. அதுதான் வேணும்.
எவ்ளோ அங்கிள் பணம் தரணும்?

இல்லப்பா அதுக்கு பணம் ஏதும் வேண்டாம்..
சும்மாவே தரேன்.. வச்சுக்கோ..

சந்துரு கோபமாக..
அங்கிள்.. அதெப்படி.. மத்த பப்பி மாதிரி தானே இதுவும்
இதுக்கு மட்டும் ஏன் விலை இல்லை..?


இல்லப்பா... வேணாம்.. நீயே எடுத்துக்கோ..
பணம் வேண்டாம்.

நோ.. அங்கிள்.. முடியாது..
சரி அந்த பப்பிக்கு என்ன விலை..?
சந்துரு வேறொரு பப்பியை காட்டினான்.

அது.. 1500 ரூபா..ப்பா.

ம்ம்.. இருங்க..
தன் பாக்கெட்டில் இருந்து.. 20 ரூபாயை எடுத்தான்.

இந்தாங்க... இப்போதைக்கு இத வெச்சிகங்க..
மாசாமாசம்.. பணம் அனுப்பிடுறேன்...
சரியா? என்று அவரின் கண்களை பார்த்தான்

அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

சரிப்பா.. பணம் வாங்கிக்கறேன்.
ஆனால் ஒரு சந்தேகம், ஏன் அந்த பப்பி மேல அவ்ளோ விருப்பம்?

அவன் புன்னகைத்தான்.
அவனுடைய ஃபேண்டை உயர்த்திக்காட்டினான் சந்துரு.

அவனுடைய வலது கால் மிகவும் மெலிந்து,
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த பப்பியோட வலி எனக்குதான் புரியும் அங்கிள்.. அதான் நான் கேட்டேன்..
அங்கிள் குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.

மலைத்துபோய் நின்றார் கடைக்காரர்.

சந்துரு."பப்பீ.. உனக்கு என்ன பேரு வெக்கலாம்..?"


பாட்டு பாஸ்கி : இதுக்கு சரியா பாட்டு
குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா.. !
குறையொன்றுமில்லை கண்ணா...!!
குறையொன்றுமில்லை கோவிந்தா...!!!

(பி.கு) என்றோ படித்த ஆங்கில கதை இது ... நன்றி