Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

Thursday, May 15, 2014

கனவுகளில் வாழ்க்கை






கனவுகளை என்னால் வெறுமனே கனவுகள் என்று ஒதுக்க முடியவில்லை, ஏனோ கனவுகள் என்னை மிகவும் லைவ்லியாக உணரவைக்கின்றன, அதுமட்டுமல்லாது ஒரு வேளை கனவுகளும் ஒரு சின்ன வாழ்க்கையாக இருக்குமோ என்று தோன்றுகிறது, ஒவ்வொரு கனவின் முடிவிலும் நான் இறக்கிறேன், மீண்டும் இந்த உடலின் வாழ்வை அனுபவிக்க வந்துவிடுகிறேன் என்று சொல்லத் தோன்றுகிறது. கனவுகளைப் பற்றிய ஆய்வுகள் ஏற்கனவே நிறைய நடந்திருந்தாலும், அவைகளினூடே உள்ள ஒரு சுதந்திரத்தை நிஜவாழ்வில் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அங்கே கட்டுகளற்ற கற்பனை வெளியில் பயணித்துவிட்டு, மீண்டும் உடல் சிறைக்குள் வருவது என்பது எனக்கு தினசரி எரிச்சலாக இருந்தது, இப்பொழுது பழகிவிட்டது. பிறப்பின் பொழுது என்னுடைய அழுகைக்கான காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும், இந்த சிறைக்குள் வந்து சிக்கிகொள்கிறோமே என்று (ஹாஹாஹா!!). ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை, கனவோ அல்லது உடல் வாழ்வோ, விழிப்புணர்வின் நிலை எப்பொழுதும் தூயதாய் இருக்கிறது, அதன் முன் உடல் வாழ்க்கையோ கனவோ, எது நிகழ்ந்த போதும் அது, அதாவது என் நிஜம், அசையாது நிற்கிறது. அது அப்படித்தானே இருக்கும். 

Sunday, January 8, 2012

மக்களை பூமிக்கு கொண்டுவர சில வழிகள்


பொதுவாக நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் எந்நேரமும் பூமியிலேயே இருப்பதில்லை..
சிலர் செவ்வாயிலும், சிலர் வெள்ளியிலும், சிலர் வியாழனிலும் இருக்கிறார்கள்..
எதோ ஒரு சிந்தனையில் எதோ இயந்திரம்போல் வேலை செய்துகொண்டிருக்கும் நம் அன்பு மக்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவருவது நம் கடமையல்லவா..அதற்குதான் சில வழிகளை யோசித்திருக்கிறேன்..

1. சாலை போக்குவரத்து அதிகாரி:
சிக்னலில் அவர் அருகே நிற்க நேர்ந்தால்..
“ஏம்பா, நானும் காலைல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.. நடுரோட்டுல நின்னு போற வர்ற பொண்ணுங்களுக்கு கைகாட்டிகிட்டு இருக்க..ஒருத்தனும் ஏன்னு கேக்க மாட்டேங்கறான்.. எந்த ஊருப்பா நீயி? பஸ்ஸ விட்டுட்டியா? காசு எதுனா வேணுமா? “ என்று நலம் விசாரிக்கலாம்.

2. நகை கடை ஊழியர்:
வேகமாக உள்ளே சென்று ஒரு “நல்ல” ஊழியராய் பார்த்து “ ரெண்டு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி, அரை கிலோ ப்ளாட்டினம், அப்படியே கலப்படம் பண்ண கொஞ்சம் கொசுறு செம்பு பார்சல் பண்ணுப்பா.. அப்புறம், நெக்லஸ் முப்பது, அட்டிகை இருபத்தஞ்சு, தங்க மோதிரம் ஒரு நாப்பது..அப்படியே முத்து முந்நூறு..ம்ம்..இப்போதைக்கு இவ்ளோதான்.. என்னப்பா முழிக்கிற..எழுதிக்கோப்பா..”

அப்படியே அங்கே கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் சென்று “ தம்பி, லிஸ்ட் குடுத்துட்டேன்..சாயங்காலம் சரக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாகணும்..இல்லைன்னா அப்புறம் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டு வரலாம்.

3. வங்கி பணியாளர்:
வெகு நேரம் ஒரு க்யூவில் நில்லுங்கள்.. பிறகு பக்கத்து க்யூவிற்கு மாறிவிடுங்கள், பிறகு மீண்டும் அடுத்த க்யூவிற்கு மாறிகொள்ளுங்கள்..வெகு நேரம் நின்றபின் உங்கள் முறை வந்தவுடன் “5 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?” என்று அவசரமாய் கேளுங்கள். உங்களை அவர்கள் வாழ்க்கைக்கும் மறக்கமாட்டார்.

4. கோவில் பூசாரி:
உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவர் வெளியே வந்ததும்.. “அய்யரே, ஒன்னுமே புரியலை.. என்னய்யா மந்திரம் படிச்சீரு.. ஒழுங்கா புரியற மாதிரி இன்னொரு முறை சொல்லும்..போங்க..”  பலமுறை அவரை விரட்டுங்கள். அல்லது.
”நீயும்தான் தினமும் சாமிகிட்ட வேண்டுற, சாமி பக்கத்துலயே இருக்க.. ஆனா என்ன புண்ணியம்? ஒரு சட்டை கூட வாங்க வழியில்லை.. என்னை பார்த்தியா? எப்பவாச்சும் தான் வரேன்..ஒரு 2 நிமிஷம் தான் நிக்கறேன்..சட்டை பார்த்தீல்ல..500 ரூபா.. அதுக்கெல்லாம் குடுப்பணை வேணும்யா..” என்று சொல்லி கடுப்பேத்தலாம்.

5. ஹாஸ்பிடஸ் ரிஷப்ஷனிஸ்ட்:
வேகமாக அவரை அணுகுங்கள், மிக சீரியஸாய்
”இந்த 302ம் ரூம்ல இருக்கற பேஷண்ட் எப்போ சாவார்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்கலாம்.

6. கிஃப்ட் ஷாப் வைத்திருப்பவர்:
நேராக உள்ளே போய் “எடுங்க..எடுங்க..டைம் ஆச்சு..”
அவர் பேந்த பேந்த முழிப்பார்.
“அலோ, கிஃப்ட எடுங்க, என் கிஃப்ட எனக்கு குடுக்க இவ்ளோ யோசிக்கிறீங்க..”
என்று அவரை முழிபிதுங்க வைக்கலாம்.

7. மீன் விற்கும் கடை:
திடீரென சத்தமாக “ஏம்பா. திமிங்கலம் ரெண்டு, டால்பின் ஒண்ணு போடுப்பா, நேரமாச்சு.. அப்படியே ஆக்டோபஸ் அரைகிலோ பார்ஸல் பண்ணிடுஎ ..அப்படியெ கொசுறா கொஞ்சம் விண்மீன் போட்டுடு” என்று சொல்லலாம்.

8. ஜெராக்ஸ் கடை:

நீங்கள் உங்கள் நண்பரையும் இதில் கூட அழைத்துகொள்ளலாம்.
”ஏம்பா, வீட்ல ஏகப்பட்ட வேலை.. ஒரே ஆளா சமாளிக்க முடியலை.. என்ன ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடு, இவரு என் நண்பரு, அப்படியே இவரையும் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டுடு..எவ்ளோ ஆகும்?” என்று பவ்யமாக கேட்கலாம்.

9. திருமண தகவல் மையம்:
நேராக உள்ளே சென்று, ”எனக்கு தெரிஞ்சு பையன் ஒருத்தன் இருக்கான், செவ்வாய் கிரகத்துல மணல் அள்ளுற வேலை, நல்ல் சம்பளம், வருஷம் ஒருக்கா ஒரு பத்து நிமிஷம் டான்னு வீட்டுக்கு வந்துடுவான், நல்ல உயரம்.. ஒரு 17 அடி இருக்கும், படிப்பு கம்மிதான்.. ஆள் ஆனா பூசினாப்படி..ஒரு லாரி சைஸ் இருப்பான்.. நல்ல செவப்பா இருப்பான்.. பொண்ணு எதுனா இருக்கா?” என்று கேட்கலாம்.

10. லேடிஸ் ஹாஸ்டல்:

அங்கே மேனேஜரிடம், அறிவியல் பூர்வமான சொல்லணும்னா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண் இருக்கு. இப்போ எனக்குள்ளயும் ஒரு பெண் இருக்கு, அதனால என்னை இங்கெ தங்க அனுமதிக்கணும், இல்லைன்னா இங்க இருக்குற எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, எனவே எல்லாரையும் உடனே வெளியேற்றியே ஆகணும். ஏன்னா இது லேடிஸ் ஹாஸ்டல்” என்று மிரட்டல் விடுக்கலாம்..

11. ஹோட்டல் சர்வர்:

டிப்ஸ் கேட்கும்பொழுது:
”முதலில் நீ நன்றாக வேகமாக நடக்க பழகவேண்டும், அப்போதுதான் கஸ்டமருக்கு உன் மீது மதிப்பு வரும். இரண்டாவது, நீ பல்விளக்காது வரவே கூடாது. உன்னால் என் நண்பர் இரண்டுமுறை மயங்கிவிழுந்துவிட்டார். மூன்றாவது, மாதமொரு தடவை எப்பாடுப்பட்டாவது குளித்துவிட வேண்டும்.. எனக்கென்னவோ உன்னால்தான் இந்த ஹோட்டலில் ஒரு கெட்ட வாடை வருகிறதென்று தோன்றுகிறது”
 என்று இப்படி நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கலாம். நிச்சயம் பயன்படும்.
மேற்சொன்ன ஐடியாக்களை செய்து பார்க்கும்பொழுது, ஏச்சுக்களோ, வசவுகளோ வாங்க நேர்ந்தால் அஞ்ச வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக பதிலளிக்க முடியாமல் இருப்பது அவர்களது பிரச்சனை. நமக்கு அவர்களை பூமிக்கு கொண்டுவந்தாயிற்று.. அவ்வளவுதான். :)

Saturday, November 19, 2011

நாமும், நமது வாழ்க்கையும்..!!








வாழ்க்கை..சிலர் என்னிடம் என்னடா வாழ்க்கை இது ? என்கிறார்கள்.
சிலர் என்னவொரு வாழ்க்கை அடடா!! என்கிறார்கள்.

இப்போது இவர்களில் யாரை நான் நம்புவது.? வாழ்க்கை கொடுமையும்
கசப்புமானதா? அல்லது இனிமையும் நிறைவுமானாதா? இப்படி
வாழ்க்கை எதன் பக்கம் என்று எண்ணிகொண்டிருந்த போது..

பட்டென மனதில் பட்டது ஒரு பொறி..வாழ்க்கை வெறுமனே வாழ்க்கை
மட்டுமே.. நம் மனத்தை கொண்டு அதை நல்லது என்றும் புகழ்ந்து பாடலாம்
..மோசம்..சுத்த மோசம் என்று ஏசவும் செய்யலாம்.

ஆனால்..போற்றுவார் போற்றட்டும்..தூற்றுவார் தூற்றட்டும் என்று
வாழ்க்கை அதன் வழியை பார்த்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமென்றால்.. பொதுவாக நம்மில் பலர்
கல்லை இடித்துவிட்டு, ”என் காலில் கல் இடித்துவிட்டது” என்று சொல்லும் ஆட்கள் தான்.
வெகு வெகு சிலரால் மட்டும்.. “தெரியாமல் நானே போய் இடித்துகொண்டேன்” என்று
நிதானித்து சொல்ல முடியும்.

ஆனால் கல் உங்களை இடிப்பதற்காகத்தான் அங்கே இருந்தாதா?
இல்லை கல்லில் இடிப்படுவதுதான்
உங்கள் நோக்கமா? இரண்டுமே இல்லை.
கல்லில் கால் மோதி கொண்டு வலியெடுக்கிறது. அதற்கு நம் மனதின்
விளக்கமே இடித்துவிட்டது என்பதும்..இடித்துகொண்டேன் என்பதும்.

நான் சொல்லவருவது மூன்றாவது வழி. வெறுமனே கால் கல்லில் இடித்துவிட்டது. அவ்வளவே..!!
Fact. Thats all. அதை நான் இடித்துகொண்டேன் என்றாலும், அது இடித்துவிட்டது என்றாலும்..
கல்லில் கால் மோதிகொண்டது என்பது மட்டுமே Fact.

வாழ்க்கையும் அப்படித்தான்.. உங்களை குஷிப்படுத்தவும் அது இங்கே இல்லை..உங்களை அழவைக்கவும்
அது இங்கே இல்லை. நீங்களே குஷியாகிகொள்கிறீர்கள்..நீங்களே வருத்தப்படவும் செய்கிறீர்கள்..மற்றபடி..
ரங்கராஜனுக்கோ, ஒபாமாவுக்கோ, பில்கேட்ஸுக்கோ, என் தெருவோர பிச்சைக்காரருக்கோ அது எந்த வகையிலும்
Commit ஆகவில்லை..ஆகப்போவதும் இல்லை.

நாளை காலை மனித இனமே இல்லாமல் போய்விட்டாலும்.. சூரியன் உதிக்கத்தான் போகிறது, நதிகள் ஓடத்தான்
போகிறது..கடலலைகள் கரைத்தொட்டு விளையாடத்தான் போகின்றன..நாம் ஒரு (.) புள்ளி அளவுக்குக்கூட இந்த பூமிக்கோ,
சூரியக்குடும்பத்திற்கோ முக்கியமானவர்கள் அல்ல. நாமும் ஒரு Accidental உயிரனங்கள் தான்.

அதனால், வாழ்க்கை அப்படி, வாழ்க்கை இப்படி என்று ஓவராக அலட்டிகொள்ளாமல், வந்த வாழ்க்கை நிறைவாய், அன்பாய்,இந்த
கட்டுரையை படித்துமுடிக்கும்வரை + அதற்கு மேலும் நம்மை உயிரோடு வைத்திருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லி நலமாய் வாழுங்கள்..!!

Monday, May 30, 2011

சோகமாய்...ஒரு கவிதை...!!







இருப்பதில் இருப்பது
ஏதுமில்லை எனவே
இருப்பதா வேண்டாமா
யோசிக்கிறேன்..

பொறுமை என்னை
போவென விட்டபின்
பொருப்பதா போகவா
யோசிக்கிறேன்..

நன்மையும் தீமையும்
தீர்க்கமாய் தெரிந்தபின்
தீயில் தீய்ந்திட
யோசிக்கிறேன்..

சுட்ட பழங்கள் எல்லாம்
சுடாமல் போனபின்
சுடலையில் சுடப்பட
யாசிக்கிறேன்..

அண்டமும் பிண்டமும்
அவனே ஆனப்பின்
அணைவதா எரிவதா?
யோசிக்கிறேன்..

நேசங்கள் அத்தனையும்
வேஷங்கள் ஆனப்பின்
காற்றோடு கரைந்திட
யாசிக்கிறேன்..

மண்ணும் நீரும்
கொஞ்சம் காற்றும்
கலவையாய் கலந்து
கொடுத்த உடம்பை
கவனமாய் கழட்டிவிட்டு
கரைந்திட போகிறேன்..

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்

வருந்துகிறேன் 
இங்கு வந்தமைக்கு
திரும்புகிறேன் 
என் தாய்வீட்டிற்கு!!



Monday, March 28, 2011

உன் பார்வையில்...!




புரட்டும் புத்தகம் பிடுங்கி எறிந்து
புதிதாய் பார்த்தாய் என்னை..

சீவி முடித்த தலை கலைத்து
சிரித்து பார்த்தாய் என்னை..

ஒரு கால் ஷூவை ஒளித்துவைத்து
ஒருமாதிரி பார்த்தாய் என்னை..

வெறும் தட்டை வெட்டென வைத்து
வெகுளியாய் பார்த்தாய் என்னை..

சட்டைபை நிறைய சில்லரை கொட்டி
சின்னதாய் பார்த்தாய் என்னை..

கைப்பையை காலியாக்கி
காளியாய் பார்த்தாய் என்னை..

நான் வாசல் நெருங்க
நீ ஓடிவந்து
கோபமாய் கிட்டே வந்து
காதோரம் சொன்னாய் நீ..

“லூஸே..இன்னைக்கு ஞாயிற்றுகிழமை”..


:))))

Sunday, March 13, 2011

விவேகானந்தர் புத்தகத்தை எரித்தேன்.. ஏன்?



ம்ம்ம்.. ரொம்ப வருடங்களாக அந்த புத்தகம் என் அலமாரியை அலங்கரித்து வந்தது. அதன் மீது எனக்கு ஒரு காலத்தில்
அளவுகடந்த காதலும் மதிப்பும் இருந்தது.  அந்த புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன் என்று சொன்னாலே எல்லாரும்
ஆச்சரியப்படுவார்கள். கண்கள் விரியும். புருவங்கள் உயரும். எனக்கும் மகிழ்ச்சியும் கொஞ்சம் மேதாவி என்கிற அகந்தையும்
கூடும்.. அதே போல் கூடியது.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஒரு சின்ன சிந்தனை... இவ்வளவு படித்து என்ன கிழித்துவிட்டோம்? இரண்டு கொம்புகள்
முளைத்துவிட்டதா? சிறகுகள் எதும் முளைத்துவிட்டதா?
மேதாவி என்பதால் தலையில் ஒளிவட்டம் எதும் தெரிகிறதா?
என் அறிவை பாராட்டும் எல்லாரும் என் அன்பை பாராட்டியிருக்கிறார்களா?
பார்ப்பதை எல்லாம் பகுத்தாராய்ந்துகொண்டே  இருந்தால்.. ரசிப்பது எப்போது? சுவைப்பது எப்போது?
அருவியில் நின்று குளித்து கும்மாளம் போடாமல் அதன் வேகத்தை அளப்பவன் முட்டாள் தானே?
வாழ்க்கை எனும் மாபெரும் அருவி என்னை அள்ளி அணைத்து இன்பம் தரத் துடிக்கும்போது..
அதை எட்ட நின்று பகுத்தாய்ந்து என்ன புண்ணியம் கண்டேன்..?

மண்டைகனமும், மனதில் வெறுமையுமாய் வரண்டதொரு வாழ்க்கை தேவையா?
சிரிக்க தெரியாதவன் மனிதன் இல்லை என்பார்கள். நானும் சிரிப்பை தொலைத்திருந்தேன். என்னுடைய அறிவும் மூளையுமே
என் அன்பிற்கும் இதயத்திற்கும் எதிரிகளாய் மாறி நிற்பதை கண்டேன்.
கொஞ்ச நாள் இதைப்பற்றி யோசித்தபடி சுற்றி வந்தேன்.. சில வாரங்களில் பிறருக்கு அறிவுரை  கூறுதல் குறைந்தது.
இப்போது உலகம் கொஞ்சம் தெளிவாய் தெரிந்தது. அடுத்து வீணாக எனக்கு என்ன தெரியும் என்று காட்டிகொள்வதை நிறுத்தினேன்.
என்னை எவரும் எக்கேள்வியும் கேட்கதாவரை நான் எந்தவகையிலும் அறிவை வெளிப்படுத்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன்.
இந்த சிந்தனைகளின் உச்சகட்டமாய்.. என்னை என்னிடமிருந்தே பிரித்த எதோவொன்றை எரித்தால் என்னவென்று யோசித்தேன்.

என்னை பெரிய Intellectual Personஆக காட்டும் பொருட்களில் எதாவதை எரித்தால் என்னவென்று தோன்றியது.
கண்ணில் பட்டார் விவேகானந்தர். அவரை மதிக்கிறேன். அவரின் வார்த்தைகளின் மதிப்பும் எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்போது காப்பாற்றப்பட வேண்டியது நா. என்னை  என் அகந்தையிலிருந்து காப்பாற்றவேண்டி இருப்பதால்..

ச்ச்ரக்க்..  தீக்குச்சி எரிந்தது. அடுத்து அவரின் புத்தகமும். மனம் அமைதியானது. பேச்சு நின்றது. அகந்தை அகன்று அமைதி வந்தது. இதை எழுதுவதற்கு காரணம். படிப்பதும், அதன்படி நடப்பதும் நல்லதுதான். அதையே பிடித்துகொண்டு..
அவர் அதை சொன்னார்..இவர் இதை சொன்னார்..கலீல் ஜிப்ரான் சொன்னார், காக்கை பாடினியார் கரைந்தார் என்று
கூறி அலைந்து அசாதரணமாக தெரிய எனக்கு துளியும் விருப்பமில்லை. சாதாரணம் போதும். அதில் நான் சௌக்கியமாய் இருந்துகொள்வேன்.

உங்ககிட்டயும் MatchBox இருக்குல்ல?

Sunday, February 6, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்..சில கவிதைகளோடு!!



தொட்டு போன தென்றல்
கடந்து ஓடும் நதி
கண்முன் மறையும் சூரியன்
உதிர்ந்துவிழும் பூ
இவை எதுவும் பாதிக்கவில்லை
என்னை மறந்துசென்ற உன்னைப்போல்..!!



காத்திருக்க சொன்னாய்
பொறுமையோடு
சேர்ந்திருக்க சொன்னாய்
நட்போடு
பூத்திருக்க சொன்னாய்
சிரிப்போடு
எல்லாமுமாய் இருக்கிறேன்..
நீ என்னை மறந்துபோன பின்னும்..

Monday, December 6, 2010

நெஞ்சை தொட்ட குறள்கள் 10..


1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

இந்த குறளில் தான் எனக்கு தமிழ் முதன்முதலில் அறிமுகமானது.
இன்னும் அதன் சுவையும் பொருளும் மாறாது இனிக்கும் குறளிது.

2.இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்

என்ன அருமையான குறள். இன்னும் இவர்களை விட்டுவைக்கணுமான்னு நினைக்கும்போதெல்லாம்

நினைவுக்கு வந்து என்னை ஆசுவாசப் படுத்தும் குறள் இது.

3.என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு

நம்பிக்கை துரோகம், நம்ப வைத்து ஏமாற்றுதல், வேலை முடிந்ததும் கழட்டிவிடப்படுதல் இவற்றை எல்லாம்
தாண்டி வந்தபின் இந்த குறளின் அருமையும் ஆழமும் எனக்கு புரிந்தது.

4.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

நம் எண்ணம் போலவே வாழ்வு எனும் அருமையான தத்துவத்தை எனக்கு சொல்லிக்கொடுத்த குறளிது.

5.வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு.

தாமரை தண்டு நீர்மட்டம் பொருத்து உயர்ந்தும் தாழ்ந்தும் தன்னை சரிசெய்துகொள்வது போல்.. மனித வாழ்வில் எல்லா உயர்வு தாழ்வுகளிலும்
தன்னை சரிசெய்து வாழ்ந்து பழகி கொள்ள சொல்லும் குறள். எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் குறளிது.

6.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

என் தந்தை, ஓஷோ, வள்ளுவர் இந்த மூவரும் இந்த குறளில் ஒத்துபோகிறார்கள். மூவருமே.. துணிந்து செய்..அதுவே சக்தி தரும் என்று எனக்கு
சொல்லி தந்த குறளிது.

7.யாகவராயின் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

சொல்வன்மை குறித்தும் அதில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் குறளிது. எனக்கு தேவையான குறளும் கூட..!!

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

என்ன அருமையான குறள்!! நல்லதை எண்ணி வாழ்வை நல்வழியில் கொண்டு போவதை விடுத்து, தீயதை ஏன் சுமக்கிறாய்..தூக்கி எறி, அழித்துவிடு
என்று சொல்லும் குறள்.

9.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது

உறுதியான உள்ளமும், ஆர்பாட்டமில்லாத அறிவும் கொண்டவன் மலைகளுக்கும் மேலானவன். இது என்னுடைய இன்ஸ்பிரேஷன் குறள்..!!

10. அன்பிலார் எலாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு, Love, என்ன அருமையான குறள். ஒரு ஒட்டுமொத்த மனிதமே அன்புடையதாய் நினைத்து பாருங்கள். கடவுள், சாத்தான் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துகொள்வார்கள்.
அப்படிபட்ட மனிதத்திற்காக காத்திருக்கிறேன். அதோடு என்னால் முடிந்தமட்டும் எல்லாரிடமும் அன்பாய் இருக்கிறேன். :)

நன்றி!!

Tuesday, November 9, 2010

வாழ்ந்துவிடு..!!


ஓடியாடி விளையாடு..
இந்த ஓய்வற்ற வாழ்க்கை விளையாட்டை..

யாரும் போடவில்லை சட்டம்..
இது யாருக்கும் புரியா திட்டம்..

பத்தாது இந்த வாழ்வு
பத்து நூறாயிரம் வாழ்க்கை வாழ்..
வாழும் கணமெல்லாம்..
வாழ்வை உறிஞ்சி வாழ்!!

விட்டுவிடாதே..
சொட்டுவிடாதே..
முழுதாய் குடி..
மிச்சம் விடாதே..!!

நீ மிச்சத்தில் 
பிறந்த மிருகம்..
நீ எச்சத்தில் 
பிறந்த சொச்சம்..
ஆனால் உச்சம்
என்பதெல்லாம் உனக்கு
துச்சம்..

அனுமதி நதியை
உன்னை அள்ளிகொண்டுபோக
அனுமதி வாழ்வை
உன்னுள் தன்வழிபோக..

துளியாய் துள்ளாதே..
துடித்தே  ஆவியாவாய்..
கடலில் குதித்துவிடு..
கடலாய் மாறிவிடு..

நீ நின்ற இடம் 
நாளை உனக்கில்லை..
நீயே யாதுமானால்
நிறைவை தவிர வேறெதுவுமில்லை.


Sunday, August 22, 2010

கல்யாணமும்,காதலும்,கசப்புகளும்!!


என்ன பாஸ் இது? என்ன இதெல்லாம்? இப்படி ஒரு பொழப்பு தேவையா நமக்கு?
நல்லா இருந்த பையனையும் பொண்ணையும் புடிச்சு கட்டிவெச்சிட்டு..இப்போ அதுங்க போடுற
ஆட்டம் தாங்கலைன்னு புலம்புறதும், அதுங்களை மாதிரி நாங்க ஒன்னும் சண்டை போட்டுக்கலைன்னு
பெருமை பேசிக்கிறதும்..ஏன் ஏன் இந்த வேலை..

..அந்த புள்ள பாட்டுக்கு படிச்சமா வேலைக்கு போனமா, ஒரு நல்ல பையனை லவ் பண்ணினமா,
வாழ்க்கைய சிறப்பா ஆரம்பிச்சமான்னு இருந்திருக்கும்..அத போய் எவனோ ஒரு குடிகாரனுக்கு கட்டிவெச்சி,
அது வாழ்க்கையை வீணடிச்சிட்டீங்க.. இப்போ அந்த நாதாரிய திருத்த அந்த புள்ள எவ்ளோ போராடிகிட்டிருக்கு.
அது மனசுல எவ்ளோ பொறுமும் , வேதனைப்படும்னு யாராச்சும் யோசிச்சீங்களா?
அந்த நாய்க்கு குடிப்பழக்கம் விட்டுபோகணும்னா மறுவாழ்வு மையத்துல சேர்க்க வேண்டியதுதானே..அதை விட்டுட்டு
இப்படியா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிப்பீங்க..த்தூ..

இது கூட பரவால்ல..இந்தா..இந்த பையன பாருங்க..நல்லவன், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை, நல்ல நண்பர்கள்னு
எல்லாம் நல்லதாய் அமைஞ்ச ஒரு மனுஷன். இவனுக்கு ஒரு பொஞ்சாதி. யப்பா.. சும்மா சொல்லக்கூடாது...அடங்காபிடாரி,
இவனுக்கு என்ன கேடுகாலமோ..இப்படி ஒரு பொண்ணை கட்டிகணும்னு தலையெழுத்து. பாவம் நொடிஞ்சி போய்ட்டான்.
எப்ப பாரு, அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தினமும் சண்டை. சம்பளத்துக்கு மீறி வாழ்க்கை நடத்தகூடாதுன்னு நினைச்சவனுக்கு,
கிம்பளம் வாங்கிகூட திருப்திபடுத்த முடியல இந்த மகராணிய. இவனோட அப்பா அம்மா மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இதுங்களுக்கு
பொண்ணு பார்க்க தெரியுமா தெரியாதா? இல்லை..அழகா இருக்காங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வெச்சிடுசுங்களா?! .. பாவம் இந்த பையன்,
இன்னைக்கு இவளால இவன் கடன்காரன், குடும்ப விரோதி, திருடன்னு பட்டம் வாங்கி குவிச்சதுதான் மிச்சம்..
...

ஸோ..மக்களே..மகாஜனங்களே!! எப்பவும் நம்ம அப்பா அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்கனு நினைச்சு..நீங்க கண்ணமூடிகிட்டு சம்மதிச்சா,
98% நீங்க அதலபாதாளத்துல குதிக்கறீங்கன்னுதான் அர்த்தம்..அது மட்டும் இல்லாம, அடுத்து வர 80 வருஷமும் உங்களுக்கு ஆயுள் தண்டனையாகவும்
போகலாம். ஸோ.. ப்ளீஸ்..யோசிங்க.. அந்த பொண்ணுகூடவோ, பையன்கூடவோ பழகி பாருங்க. உங்க குணத்துக்கு சரிவரும்னு முடிவு பண்ணிட்டு அப்புறம்
சம்மதிங்க. அழகுல மயங்கி விழுகுற வேலையே வேணாம். அது பசுத்தோல் போர்த்திய முதலை. ஸோ..ப்ளீஸ்..யோசிங்க. பழகிப்பாருங்க. முடிவுப்பண்ணுங்க.

டிஸ்கி : 
வாழ்ந்து முடிச்சவுங்களுக்காக, வாழப்போறவங்க வாழ்க்கையை தொலைக்கணும்னு எந்த தர்மமும் சொல்லலை!! அது போன்ற அதர்மமும் இல்லை!!

Monday, August 9, 2010

ஹைக்கூ என்கிற பேரில்!!

பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!

ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.

வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!

வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!

கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?

இலவசம் : 
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!

Sunday, April 4, 2010

ஏன் இதயம் உடைத்தாய் ...நொறுங்கவே??

http://i.ehow.com/images/a04/gs/7k/over-broken-heart-800X800.jpg

நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,
நனையாதது பாதம் மட்டுமே,
என் நெஞ்சமெல்லாம் ஏனோ ஈரம்..


நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,
இன்னும் எவ்வளவு தூரம்
ஏனோ மழை வந்தததென் விழியில்.


தூரத்தில் தெரிகிறது பூந்தோட்டம்,
தலையாட்டும் பூக்களின் ஆட்டம்,
இதோ கார்மேகங்களில் கூட்டம்,
ஏனோ என்நெஞ்சில் இன்னும் வாட்டம்.


வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இது தனிக்கூடம்,
கண்களும் இதயமும் நனைந்து
இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.


காதலிக்கிறேன் என்றாள் அன்று
மறந்துவிடு என்றாள் அன்று
அப்பா மறுப்பார் என்று
தவிக்கவிட்டு அவனோடு சென்றாள் இன்று..!!

எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றது,
காதல் இன்னும் வாழ்கிறது
காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.

******** ******** ******** ******

(பி.கு): என் நண்பன் ”டேய்..நீ சென்ஸிட்டிவ்..இந்த படம் வேணாம்..சொன்னா கேளு”ன்னு சொல்ல சொல்ல கேட்காமல் ”விண்ணை தாண்டி வருவாயா” பார்த்ததன் விளைவு.. நல்ல திரைக்கதை...நல்ல படம்..நோ மோர் கமெண்ட்ஸ்..!!

(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)

Tuesday, March 23, 2010

ஒரு சோம்பல் முறிப்பும், ஒரு ஜென் கதையும்-2

ரொம்ப்ப்ப்பபப நாள் ஆச்சுங்க பதிவு போட்டு..என்ன செய்ய வேலை பென்ட கழட்டுது.
சரி.விஷயத்துக்கு வருவோம்.
என் செல்ல அம்மா பேரில் வந்திருக்குற “அவள் பெயர் தமிழரசி” படத்தை எல்லாரும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். படம் நல்லாவே வந்திருக்கு. எனக்கும் பிடிச்ச படம் அது.

நேற்று ஒரு ஜென் கதை ஒன்னு படிச்சேன்.அதன் ஆழமும் கருத்தும் ரொம்ப நல்லா இருந்தது.
அதை உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேன்.


http://webwarriortools.com/images/ebooks/email-zen.jpg


: ஒரு கோப்பை தேநீர் :
அந்த இளவரசர்கள் நாலு பேருக்கும் அந்த துறவியை சந்திக்க அவர் குடிலுக்கு வந்திருக்கிறார்கள்.
அந்த துறவி அவர்களை வரவேற்று அமர செய்தார். அவர் வந்த விஷயம் என்னவென்று கேட்டார்.
அந்த இளவரசர்கள் சொன்னார்கள் : வாழ்க்கை என்பது என்ன ? இத்தனை துன்பங்களும் வாழ்க்கையின் அங்கமாகி போனதன் சூட்சுமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம் ..
என்றனர்.
துறவி புன்னகை பூத்தார். சரி சற்று பொறுங்கள். டீ சாப்பிட்டுவிட்டு இதை பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார். இவர்களும் ஆமோதித்தனர்.

சில நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சில கோப்பைகளுடன் ஒரு கூஜாவில் டீயை ஊற்றி எடுத்து
வந்தார் துறவி. தட்டை அவர்கள் முன் வைத்தார். அவரவர்களுக்கு வேண்டிய கோப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்.

அந்த தட்டில் இருந்ததோ நான்கு வகையான கோப்பைகள். ஒன்று- சுத்தமான தங்கத்தாலும்,
மற்றொன்று- சுத்தமான வெள்ளியாலும், மூன்றாவது- சுத்தமான செம்பாலும், நான்காவது- களிமண் கோப்பையாகவும் இருந்தது.

இளவரசர்கள் குழம்பினர். ஒருவரை ஒருவர் முறைக்கவே ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்ய..எல்லாருக்கும் தங்க கோப்பை மீதே ஆசை. இப்படியே சில நிமிடங்கள் மவுன போராட்டம் தொடர்ந்தது.
இதை பார்த்துகொண்டிருந்த துறவி சொன்னார். “இளவரசர்களே! இதோ இதுதான் வாழ்க்கை ”என்று
அந்த சூடான நறுமணம் மிக்க டீயை காட்டினார். ”நீங்கள் கோப்பைக்கு ஆசைப்பட்டு டீயை வீண்டிக்கிறீர்களே..? இது எந்த வகையில் நியாயம்? என்னதான் தங்ககோப்பையில் குடித்தாலும் இதே டீயை தான் குடிக்க போகிறீர்கள். களிமண் கோப்பையிலும் இதே டீதான் கிடைக்க போகிறது!
எனவே கோப்பை எது என்பது விஷயமல்ல..டீயை சுவைப்பதே முக்கியம்” என்றார்.
அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது : “பணம், அந்தஸ்து, கவுரவம் என்ற கோப்பைகள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனுபவித்து மகிழவேண்டியது இந்த வாழ்க்கை என்கிற டீயை தானே வேறொன்றுமில்லை..” என்பது.


Friends, இனிமேலும் டீயை வீணடிக்காதீர்கள் ஏனெனில் கோப்பை எப்போது வேண்டுமானால்
மாறலாம், ஆனால் நமக்கு எப்போதும் கிடைப்பது ஒரே ஒரு சுவையான வாழ்க்கைதான்..!!

by,
Rangan

Monday, March 1, 2010

என்றென்றும் புன்னகை!!

http://www.granitestatechild.com/images/smiling-girl.jpg

இன்று காலை ஏ.டி.எம் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன்..
அப்போது ஒரு பூக்காரர் திடீரென்று கையில் பூவோடு ஓடி வர..
வேகம் குறைத்து அவரை கவனித்தேன்..

ஒரு இளம்பெண் பச்சை சுடிதாரில் தோள்களில் கைப்பையோடு, இடது கையில் செல்லுடன்
நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்த பூக்காரர் அந்த பெண்ணிடம் பூவை கொடுத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.
நான் அந்த பூவையும், பெண்ணையும், அந்த கண்களையும் ஒரு கணம் ரசிக்கத்தான் செய்தேன்.
ஜீவ்ஸின் கேமரா என்னிடம் இருந்திருந்தால் க்ளிக்கி இருப்பேன். அடுத்த கணம் அவரை பார்த்து
புன்னகைக்க அவரும் புன்னகைத்தார். இது அன்பா, ரசனையா, மகிழ்ச்சியா?

பெண்ணே அழகுதான்..பூ அழகுதான்.
பெண்கள் தலையில் பூச்சுடுவது அழகுதான்.., ஆனால் இன்று ஒரு மாறுதலாய் ஒரு பெண் கையில் புத்தம்புது
பூவோடு நடந்து செல்வதை பார்த்ததும் நின்று ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ரசித்தேன், புன்னகைத்தேன்,
நன்றிகளை பெற்றுகொண்டேன்..!!

அதன் தொடர்ச்சியாக என் அம்மாவை பள்ளியில் ட்ராப் பண்ணிவிட்டு வண்டியை திருப்பும் சமயம் ஒரு குட்டி பெண்
சரியாக முன் டயரை கடக்க உடனே ப்ரேக் அடித்து நிறுத்தினேன். அந்த குட்டிப்பெண் என்னை பயத்தோடு பார்த்தாள்.
அந்த கண்களின் அழகை கண்டதும் மீண்டு(ம்) வந்தது புன்னகை. என் புன்னகையை பார்த்து அவளுக்கும் நம்பிக்கை வர,
அவளும் புன்னகைக்க.. கொல்லிமலை அருவியில் கண்மூடி குளிக்கும்போது ஒரு உணர்வு உள்ளத்தில் பரவுமே..
அதே உணர்வு என்னுள் பரவி விரவி நின்றது.

அதன் பிறகு எப்போது வீடு வந்தேன்..எப்போது இந்த பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை..
என்னை அறியாமலே என் புன்னகையும் மகிழ்ச்சியும் பிறரை ஆக்ரமித்து நிற்கும் அதிசயத்தை பார்த்து
நித்தமும் வியந்துகொண்டிருக்கிறேன்..!!

”One Pure Smile , a spiritual touch between two good hearts" - Buddha.

Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!

Sunday, December 6, 2009

என்ன பேரு வேணும்..?

என்னடா இவன் பேரை எல்லாம் விலைக்கு விக்கிறானான்னு நினைச்சுடாதீங்க.. எல்லாம் ஒரு குறும்பு மெயிலால் வந்த வினை..

நீங்களும் இந்த குறும்பை படிங்க..ரசிங்க..!!

Doctor – Vaidyanathan
Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver – Parthasarathy

டிஸ்கி :  பெண்கள் பேரு லிஸ்டில் இல்லாம போச்சேன்னு எனக்கும் வருத்தம்தான்..!!கிகிகி..

Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.



http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

Sunday, November 15, 2009

கண்டதும் வென்றதும்..!!

http://a.espncdn.com/photo/2008/0810/oly_g_kitajima_300.jpg

சிரித்தேன்..

கிண்டலடிக்கிறார்கள்..!

அழுதேன்..

வீணாய் போகிறவன் அழுவான் என்றார்கள்..!

முறைத்தேன்..

லாயக்கு இல்லாதவன் முறைக்கிறான் என்றார்கள்..!

வருந்தினேன்..

வருத்தம் பணம் சேர்க்காது என்றார்கள்..!

அன்பு காட்டினேன்..

பணம் பிடுங்க நெருங்கிவருகிறான் என்றார்கள்..!

எது செய்தாலும் என்ன செய்தாலும்..

அந்த நாலு பேருக்கு நாம் நல்லவரில்லை..

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டால்..

இந்த அகிலத்தில் நமை போல் வல்லவரில்லை..!!

வாழ்க்கை சிறந்தது..

வாழ்தல் அறியது..

வாழ துணிந்துவிட்டால்..

அந்த வானும் சிறியது..!!

Thursday, November 5, 2009

பிடிக்கும்...ஆனா...பிடிக்காது!!!


எத்தன சொன்னாலும் கேக்குறாங்களா..ஹ்ம்ம்..
நானும் சிக்கிட்டேன் இந்த தொடர்பதிவில்..
அழைத்த முரளிக்குமாருக்கும், கலாம்மா(புதுகைத் தென்றல்)க்கும் நன்றி..ரெடி ..ஸ்டார்ட்..

1. அரசியல் தலைவர்:

பிடித்தவர்: காமராஜர்.

பிடிக்காதவர்: இப்போதைய எந்த _____ யும் பிடிக்காது..!!

2. எழுத்தாளர்:

பிடித்தவர்: சுஜாதா..(even we both have same Real Name,S.Ranga Rajan)

பிடிக்காதவர்: சாரு நிவேதிதா.(கண்ல படாம இருந்துக்க தம்பி, இல்லன்னா நான் பொறுப்பில்ல)

3. கவிஞர்:

பிடித்தவர்: பாரதியார், வைரமுத்து, கண்ணதாசன், தமிழரசி(அட நம்ம எழுத்தோசை எழுதுறவங்க!!)

பிடிக்காதவர்: டப்பாங்குத்து பாடல் எழுதும் இரண்டாம் தர கவிஞர்..?!கள்..

4. இயக்குனர்:

பிடித்தவர்: ஸ்ரீதர், பாலசந்தர், மணிரத்னம், அமீர், சேரன், பாலா, ஷங்கர்.

பிடிக்காதவர்: பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார்(ஆதவனுக்காக மட்டும்)

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம், சூர்யா

பிடிக்காதவர்: விஜய், அஜீத்.(மக்களை ஏமாத்தும் மவராசனுங்க..நல்லா இருங்கடே!)
6. நடிகை:

பிடித்தவர்: அசின், ஆச்சி மனோரம்மா, ஜெனிலியா(உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதே ஏன்?)

பிடிக்காதவர்:
நமீதா(தண்டம் ஆஃப் தமிழ் சினிமா),
பியா(அழகு முகத்தை குரங்கு மாதிரி வெச்சிகிட்டு நடிக்கிது இது),
த்ரிஷா(நீங்க நடிச்சு நான் பார்த்ததே இல்ல! aaannggg..!!)
நயன்தாரா (என் தாய்மாமனை கூட விட்டு வெக்கலைங்க இவங்க!!)

7 . இசையமைப்பாளர்:

பிடித்தவர்: இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர்

பிடிக்காதவர்: எல்லார் இசையிலும் ஏதாவது ஒரு பாடல் பிடித்திருக்கிறது.

8. பாடகர்:
பிடித்தவர்: விஜய் யேசுதாஸ் (தாய் தின்ற மண்ணை பாட்டுக்காக), கார்த்திக் , எஸ்.பி.பி, மனோ

பிடிக்காதவர்: உதித்..(வேணாம்..தமிழ் பாவம்)

9. பாடகி:
பிடித்தவர்: ஜானகி, சொர்ணலதா, சுனந்தா, ஜென்சி, நித்யஸ்ரீ.

பிடிக்காதவர்: மன்மத ராசா பாடகி.
10. விளையாட்டு வீரர்:

பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த், சக் தே இண்டியா! தன்ராஜ் பிள்ளை.

பிடிக்காதவர்: அம்புட்டு கிரிக்கெட் வீரர்களையும்...
( ball பட்டாலே மேட்ச்சுக்கு லீவ் எடுக்குறானுங்க..இவுனுங்க வீரர்களாம்..ச்சீஈஈ)..

ஹப்பாடி..ஒரு வழியா தொடர்பதிவு போட்டாச்சு..
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது..(சிக்கவிடுவது!!)
1. ரம்யா(will to live)
2.தமிழரசி(எழுத்தோசை)
3. ரசனைக்காரி(எனது ரசனை)
4. சீனா
5. இயற்கை(இதயப்பூக்கள்)
6.மயாதி(கொஞ்சும் கவிதைகள்)

Saturday, October 24, 2009

மீண்டும் சில காதல் கவிதைகள்!!

காதல் சொன்னபோது
தந்த ரோஜா
இறந்துவிட்டது அவள்
தூக்கி எறிந்தபோது..
கொல்லப்பட்டது அவைகள்
ஏறி சென்றபோது..

***************************

இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை
நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை
தூரங்கள் அதிகப்பட மனமில்லை

இருந்தாலும் வேறு வழியில்லை..
விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!!

******************************


செல்லாதே என்னை விட்டு
சில தூரம் போனாலும்
தொடர முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில அடிகள் கடந்தாலும்
பிரிய முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில மணித்துளிகள் நடந்தாலும்
மறக்க முடியவில்லை உன்னை..

இப்படி எல்லாம் புலம்புகிறேன்..
நீ விடிகாலையில் கட்டில் விட்டு
கடந்து போன போது..!!