Showing posts with label மகிழ்ச்சி என்றால் என்ன?. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி என்றால் என்ன?. Show all posts

Tuesday, July 14, 2009

மகிழ்ச்சி என்றால் என்ன?-1

என் வாழ்க்கையோட இந்த பகுதிக்கு பேரு..வறுமை.

”...ஹலோ.. யாருங்க உள்ள..

ஹெல்லோ.. யாருப்பா அது..

ஹேய்..வெளிய வாய்யா.. ச்சை..”

............

அவங்க கூப்பிடுறது என்னைத்தான்.
என் பேரு நாதன் சண்முகவேல்.
இங்க பேரிஸில் இருக்கேன்.

சொந்த ஊரு எதுன்னு தெரியாது.
எங்க அம்மா அப்பா சொன்னதே இல்லை.

நான் இப்போ ஒரு பப்ளிக் பாத்ரூமில் உள்தாழ்ப்பாள் போட்டுகிட்டு தரையில் சாய்ந்தபடி இருக்கேன்.

..ஓ.. சொல்ல மறந்துட்டேன். இது என்....என்...ப்ச்..என் மகன்..

பேரு..கிரிஸ்டோபர் நாதன்.

இவங்க அம்மா நேத்து இவனை என்னோட விட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்க.

அவங்களுக்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்.

இன்னிக்கு ராத்திரி முழுக்க இங்க தான் இருக்க போறோம்.

ஏன்னா எங்களுக்கு வீடு கிடையாது.

வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன்.

ரிசசன் காரணமா என் வேலை போய்டுச்சு.

இந்தியா திரும்ப காசும் இல்லை.

வாடகை குடுக்க முடியாததால் வீட்டை விட்டு வந்துட்டோம்.

இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் இந்த பாத்ரூம்தான் எனக்கும் என் பையனுக்கும் வீடு.

.. பரவாயில்ல..இந்த வீட்ல தண்ணி வசதிக்கு பஞ்சமில்லை...ஹாஹாஹா..

சரிங்க ..நானும் தூங்க போறேன். குட் நைட்.

அடுத்த பதிவில் சந்திப்போம்..