Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, May 15, 2014

கனவுகளில் வாழ்க்கை






கனவுகளை என்னால் வெறுமனே கனவுகள் என்று ஒதுக்க முடியவில்லை, ஏனோ கனவுகள் என்னை மிகவும் லைவ்லியாக உணரவைக்கின்றன, அதுமட்டுமல்லாது ஒரு வேளை கனவுகளும் ஒரு சின்ன வாழ்க்கையாக இருக்குமோ என்று தோன்றுகிறது, ஒவ்வொரு கனவின் முடிவிலும் நான் இறக்கிறேன், மீண்டும் இந்த உடலின் வாழ்வை அனுபவிக்க வந்துவிடுகிறேன் என்று சொல்லத் தோன்றுகிறது. கனவுகளைப் பற்றிய ஆய்வுகள் ஏற்கனவே நிறைய நடந்திருந்தாலும், அவைகளினூடே உள்ள ஒரு சுதந்திரத்தை நிஜவாழ்வில் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அங்கே கட்டுகளற்ற கற்பனை வெளியில் பயணித்துவிட்டு, மீண்டும் உடல் சிறைக்குள் வருவது என்பது எனக்கு தினசரி எரிச்சலாக இருந்தது, இப்பொழுது பழகிவிட்டது. பிறப்பின் பொழுது என்னுடைய அழுகைக்கான காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும், இந்த சிறைக்குள் வந்து சிக்கிகொள்கிறோமே என்று (ஹாஹாஹா!!). ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை, கனவோ அல்லது உடல் வாழ்வோ, விழிப்புணர்வின் நிலை எப்பொழுதும் தூயதாய் இருக்கிறது, அதன் முன் உடல் வாழ்க்கையோ கனவோ, எது நிகழ்ந்த போதும் அது, அதாவது என் நிஜம், அசையாது நிற்கிறது. அது அப்படித்தானே இருக்கும். 

Monday, January 7, 2013

மினிமலிஸம் (minimalism) - ஒரு புதிய துவக்கம்



மினிமலிஸம்(Minimalism) என்றால் என்ன என்கிறீர்களா?




வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் சிதறி கிடக்கும் சாமான்கள், பேப்பர்கள், புத்தகங்கள், அலமாரியை தவிர வேறு எல்லா இடத்திலும் இருக்கும் பொருட்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கே இடமில்லாதபடிக்கு ஏகப்பட்ட பொருட்களோடு நிறைந்து வழிகிறது நமது மிடில் கிளால் குடும்பங்களின் வீடுகள்.

"என்னங்க பண்றது? எவ்வளவுதான் ஒரே ஆளா சுத்தம் பண்ண முடியும்? இன்னும் கூட பண்ண வேண்டியது ஏகப்பட்டது இருக்கு"  என்று சலிப்பாக சொல்பவரா நீங்கள்?

இதோ இருக்கவே இருக்கிறது மினிமலிஸம்.

பொருள்முதவாதத்தை உலகிற்கு (மூக்கைபிடித்து திணித்து) ஊட்டிய அமெரிக்காவின் இப்பொழுதைய பந்தாவான விஷயமே எங்கள் வீட்டில் பொருட்கள் குறைவு என்பதுதான்.

என்னது?

அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை அதுதான். பொருள்களிடையே சிக்கி சின்னாபின்னபட்ட மேற்கத்திய மக்களின் ஒரு தலைகீழ் திருப்பம் தான் இந்த மினிமலிஸம். அதாவது பொருட்குறையியல். குறைவான பொருட்கள், குறைவான Maintanance வேலைகள். அமைதியான, நிம்மதியான ஒரு சிறிய வீடு. இதுதான் இன்று மேற்கின் புதுமண தம்பதியரின் முதல் முடிவு. மினிமலிஸம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் ரத்தத்தோடு அங்கே கலந்துகொண்டிருக்க, நாம் இப்பொழுதுதான் வீட்டு சாமான்கள் வாங்கி போட ஆரம்பித்திருக்கிறோம்.

 ஆனாலும், இப்பொழுதே நம்மில் சிலருக்கு எங்கயோ உதைக்க போகுது என்று பட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஆம், வீட்டு பொருட்களின் பயனராய் இல்லாமல், வீட்டு பொருட்களின் காவலாளியாக மாறும் நாட்களை நாம் வேகமாய் நெருங்கிகொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதைவிட, இதனால் ஏற்படும் மன உளைச்சல், சலிப்பு, நேர விரயம், ஓய்வின்மை என இதன் பக்க விளைவுகளால் இப்பொழுதே நாம் அல்லாட துவங்கிவிட்டிருக்கிறோம்.

ஒரு நாளை நமக்கு சரியாக 20 நிமிடங்கள் இருந்தால் நம்மால் ஒரு அமைதியான வீட்டை உருவாக்கிவிட முடியும் என்று ஒரு Interior Designer நண்பர் கூறுகிறார். அது மட்டுமின்றி, பழைய சாமான்களை Sentiment-ஆக சேர்த்து வைக்கும் பழக்கமும் நம்மிடையே காலம் காலமாய் இருக்கிறது, அதை விடுத்து, நாமே ஒரு மொத்த வீட்டையும் நமது பாணியில் உருவாக்குவது இன்னும் இதயத்தை தொடும் விஷயமாகத் தானே நிச்சயம் இருக்க முடியும்..?

அடடா.. Introduction பகுதியே மிகவும் நீண்டுவிட்டது, சரி இனி வரும் தினங்களில் மினிமலிஸம் பற்றி இன்னும் விரிவாக எழுதுகின்றேன்.

 

Thursday, May 10, 2012

தப்பி ஓட்டம்



சரியாத்தானே இருந்துச்சு..என்ன ஆச்சு..?!

ட்ட்டப்ப்..ட்ட்டப்ப்.. மீண்டும் இரண்டுமுறை அவர் அதை இடதும் வலதுமாய் தட்டித்தட்டிப் பார்த்தார். அது வேலைநிறுத்தத்தில் இருக்கிறதா? அல்லது விருப்ப ஓய்வே பெற்றுவிட்டதா? என்று யோசித்துகொண்டே மீண்டும் தட்டி தட்டி பார்த்தார்..ம்ஹீம்..ஒன்றும் பிரயோஜனமில்லை..

அந்த மீட்டரில் முள் சரியாக நூறில் அப்படியே நின்றபடி இருந்தது. நூறுக்கு மேலும் சேர்த்திருக்க வேண்டும் போல, அந்த அளவு அது அப்படியே நூறாம் எண்ணோடு பசைபோட்டு ஒட்டிகொண்டது. ஏனோ இதை பார்த்தவுடன், காலை வாக்கிங் முடித்து வரும்பொழுது, பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அம்மாவின் கால்களை இறுக்கிப்பிடித்துகொண்டிருந்த பெண்குழந்தை நினைவுக்கு வந்தது அவருக்கு.

சரி… மற்ற மீட்டர்களை சரி பார்ப்போம் என்று மற்ற மீட்டர்களை நோக்கி நடந்தார், அந்த சுவற்றில் வரிசையாக இருந்த பல்வேறு மீட்டர்களை பொதுவாக கவனித்தார்.எல்லாமே கொஞ்சம் நகர்ந்தவண்ணமாய் தான் இருந்தது. மயிலின் பைத்தியக்காரத்தனம்- 14 சதவிகிதம், கடல் நண்டின் பைத்தியக்காரத்தனம்- 19 சதவிகிதம், கரடியின் பைத்தியக்காரத்தனம்- 21 சதவிகிதம், நரி- 23 சதவிகிதம்..

எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. அப்படியென்றால்…அப்படியென்றால்.. இந்த மீட்டரும் சரியாகத்தான் இருக்கவேண்டும்..சரிக்கும் மேலாக, நூறுக்கும் மேலாக அது சரியாகத்தான் இருக்கமுடியும்..அப்பொழுது இந்த மீட்டரின் எதுவும் பிரச்சனை இல்லை..

பிரச்சனை..மனிதர்களிடம்தான்..

அவர் அதிர்ந்து போனார்..இதை எப்படி சமாளிப்பது. பகல் நெருங்க நெருங்க.. இன்னும் அந்த மீட்டர் வேகமாய் துடித்துகொண்டிருந்தது.. இன்னும் நேரம் ஆக ஆக, அந்த மீட்டரின் முள் சூட்டில் சிவந்தே விட்டது.. அதிர்ச்சியில் அவரும் மீட்டரைப்போலவே துடித்துகொண்டிருந்தார்.. ஒருவாறாய் ஒரு முடிவுக்கு வந்தார்..

”இனி இங்கு இருக்கமுடியாது.. இது சாத்தியப்படாத ஒன்று, நம் இருப்பு இவர்களுக்கு எளக்காரமாகிவிட்டது, ஒருவகையில் நாம் தான் இந்த அளவு இது வளர்ந்ததற்கு காரணம்கூட. இனியும் இது தொடரக்கூடாது” என்று முடிவுக்கு வந்தார்.

உடனடியாக அவரின் உடைகளை பைக்குள் திணித்துகொண்டார்.அவரின் அறைக்கதவை சாத்துவதற்கு முன் ஒருமுறை அந்த மீட்டரை பார்த்தார், இன்னும் சிவந்து க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் என அதிபயங்கர வேகத்தில் துடித்துகொண்டிருந்தது. மிரட்சியுடன் கதவைப்பூட்டிவிட்டு நடந்தார், காரில் ஏறினார், சில பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரகத்தை குறிப்பிட்டார். ஓய்வாக அவர் சாய்ந்து அமர, அவரைத் தூக்கிகொண்டு அந்த கார் விண்வெளிக்கு விருட்டென கிளம்பியது.


..பூமியில், ஏதோ ஒரு வீட்டு டி.வியில் அன்றிரவு..

…..வானத்தில் தீடீரென பிரகாசித்து மறைந்த பொருள்,.. மேலும் பல முக்கிய செய்திகள், விளம்பர இடைவேளைக்கு பிறகு..!!





Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!

Thursday, March 29, 2012

உன்னால் மட்டும்தான் அழ/சிரிக்க முடியும்..

 
 
 
 
 
உலகை பார், உலக உயிர்களை பார், மரம், செடி, கொடி, மிருகங்கள், பறவைகள்,
பூச்சிகள் இப்படி அனைத்தையும் பார். அவைகளை வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வே
இல்லாது வாழ்கின்றன. அவைகள் அவைகள் தான். அவைகளால் வேறொன்றாய் மாறமுடியாது.
நிச்சயமாய் முடியாது. பழமொழிகளில் மட்டுமே பூனை புலியை பார்த்து சூடு போட்டுகொள்ளும்.
மற்றபடி, எந்த புலியும் பூனையாய் வாழ்ந்ததில்லை. எந்த குருவியும் கழுகாக மாற துடித்ததில்லை.
தான் கழுகாய் இல்லையே என்று ஏங்கியதில்லை. ஏன், தான் ஒரு குருவி என்கிற கவனம் கூட
அதற்கு இல்லை. அவை அனைத்தும், விதிக்கப்பட்ட படி மட்டுமே வாழ தகுதியுடையவை.
ஒரு சிங்கம் பிறக்கும் போதே சிங்கம் தான். ஒரு மாமர விதை, அதை விதையிலிருந்தே மாமரம் தான்.
அதை நீ பலாமரமாகவோ, தேக்காகவோ மாற்ற இயலாது. அதன் விதி, அதன் விதையிலேயே
நிர்யணிக்கப்பட்டாயிற்று. இனி அதற்கு கவலை இல்லை, ஒன்று மாமரமாய் வளரலாம், இல்லையேல் அழிந்துபோகலாம்.
இரண்டே வாய்ப்புகள் தான். மாமரம் இல்லையேல் மரணம். (மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி என்பது போல்)

ஆனால் உன்னை பார், ஒரு மனிதனாய் உன்னை நீயே கவனி, அப்போது ஒரு அதியற்புதமான விஷயம், பளிச்சென்று
உனக்கு புரிபடும். அது நீ அளவுகடந்த வாய்ப்பு கொண்டவன் என்பது. நீ உடலில் மனிதன், ஆனால் உள்ளத்தில்?
நீ யார்? நீ யார்? நீ யார்? சொல்ல தெரியவில்லை தானே. அதுதான் உன் சுதந்திரம், அந்த தடுமாற்றம் இயலாமை அல்ல.
அந்த தடுமாற்றம் உன் முன் விரிந்துகிடக்கும் அளவற்ற வாய்ப்புகளால் உண்டானது. அதை பார்த்து வாயடைத்து போவதால் தான்
உன்னிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. எப்போது நீ யார் என்று கேட்டாலும், நீ தெளிவடைந்த நீ, உனக்குள் விரியும்
வாய்ப்புகளை பார்க்கலாம், இப்போதே நீ கடவுளும் ஆகலாம், அல்லது இப்போதே நீ மிருகத்தைவிட கீழ் நோக்கியும் செல்லலாம்.
அந்த வாய்ப்பு இங்கே உன் முன் நிச்சயமாய் இருப்பது உனக்கு தெரிவதால் தான் உன்னால் “நீ யார்” என்பதற்கு பதிலளிக்கவே முடிவதில்லை.

பொத்தாம் பொதுவாய், நான் ஆண், நான் முகமதியன், இந்து, கிறுஸ்தவன், அந்த ஜாதி, இந்த இனம் என்று சொன்னாலும்,
அந்த உள்ளிருக்கும் ஒன்று நீ இதெல்லாம் இல்லை என்று மென்மையாக சொல்லிகொண்டே தான் இருக்கிறது. அதை நீ மறைக்கலாம்,
அதை நீ மறக்கலாம். அந்த வாய்ப்பும் கூட உன் கையிலேயே இருக்கிறது. இந்த அளவற்ற சுதந்திரத்தை கவனித்தாயா?
எந்த ஒரு மரத்தாலும், மிருகத்தாலும் தன் உள்ளியல்பை மறக்கவோ, மறைக்கவோ இயலாது. எல்லா வகையிலும் மாமரம்,
மாமரமாகத்தான் மிளிரும். எல்லா வகையிலும் ஒரு மல்லிகைப்பூ மல்லிகைப்பூ வாசமே வீசும். அவைகளால் மறைக்கவோ,மறக்கவோ முடியாது.
நிச்சயமாய் முடியாது. 

ஆனால், நீ இந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறாய், நீ மறக்கலாம், மறைக்கலாம், அல்லது நீ உன் உள்ளியல்பை முழுவதுமாய்
வெளிப்படுத்தி, இந்த பாலத்தை கடக்கலாம். பாலமா? ஆம் பாலம் தான். மனிதன் ஒரு பாலம் தான். மனித பிறவி ஒரு பாலம் தான்.
இயற்கைக்கும் இறைமைக்குமான பாலம். மிருகத்திற்கும் கடவுளுக்குமான பாலம். மனிதன் அவனின் உள்ளியல்பு படி வாழ வாழ,
அவன் இறைமையை நெருங்குகிறான். அவன் உள்ளியல்பை வெறுத்தோ,மறைத்தோ, மறந்தோ வாழும்பொழுது மிருகத்திற்கும் கீழே செல்கிறான்.
அதனால் தான் நாம் புத்தரை உயர்த்தியும், ஒரு குடிகாரனை தாழ்த்தியும் பேசுகிறோம். காரணம், குடியில் மனிதன் தான் மனிதன் என்பதையே
மறக்கிறான். அவன் “அது”வாக மாறுகிறான். ஒரு உயர்திணை அஃறிணைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் புத்தன், பாலத்தை கடந்துவிட்டான், அவன்
மனிதனையும் கடந்து மேலே எழுந்துவிட்டான், இனி அவன் மனிதன் என்ற சின்ன சிறைக்குள் இல்லை, அதையும் கடந்து, இறைமைக்குள் குதித்துவிட்டான்.
விழிப்புணர்வே அல்லாத நிலை குடிகாரனுடையது. விழிப்புணர்வின் உச்சகட்டம், புத்தனுடையது. கள்ளுண்டவன் நீரின் 0 டிகிரி என்றால், புத்தன் நீரின் 100 டிகிரி.

நீ ஓவியனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம், அறிஞனாகலாம், அறிவியல் செய்யலாம், ஆராய்ச்சியாளனாகலாம், புத்தனாகலாம் இப்படி
உன்னுடைய சுதந்திரம் அளப்பறியது. நீ உன்னுடைய இயல்பிலிருந்து எழும் எதை செய்தாலும், அது உன்னை இன்னும் மேம்படவே வைக்கும். எனவே,
உனக்குள் ஆழ்ந்து போ, உன்னை, உன் நிஜ உன்னை கண்டுபிடி. அதுதான் நீ மற்றவை எல்லாம், மனதின் சூதாட்டம்.

நன்றி,
ரங்கன்.

Sunday, January 8, 2012

மக்களை பூமிக்கு கொண்டுவர சில வழிகள்


பொதுவாக நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் எந்நேரமும் பூமியிலேயே இருப்பதில்லை..
சிலர் செவ்வாயிலும், சிலர் வெள்ளியிலும், சிலர் வியாழனிலும் இருக்கிறார்கள்..
எதோ ஒரு சிந்தனையில் எதோ இயந்திரம்போல் வேலை செய்துகொண்டிருக்கும் நம் அன்பு மக்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவருவது நம் கடமையல்லவா..அதற்குதான் சில வழிகளை யோசித்திருக்கிறேன்..

1. சாலை போக்குவரத்து அதிகாரி:
சிக்னலில் அவர் அருகே நிற்க நேர்ந்தால்..
“ஏம்பா, நானும் காலைல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.. நடுரோட்டுல நின்னு போற வர்ற பொண்ணுங்களுக்கு கைகாட்டிகிட்டு இருக்க..ஒருத்தனும் ஏன்னு கேக்க மாட்டேங்கறான்.. எந்த ஊருப்பா நீயி? பஸ்ஸ விட்டுட்டியா? காசு எதுனா வேணுமா? “ என்று நலம் விசாரிக்கலாம்.

2. நகை கடை ஊழியர்:
வேகமாக உள்ளே சென்று ஒரு “நல்ல” ஊழியராய் பார்த்து “ ரெண்டு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி, அரை கிலோ ப்ளாட்டினம், அப்படியே கலப்படம் பண்ண கொஞ்சம் கொசுறு செம்பு பார்சல் பண்ணுப்பா.. அப்புறம், நெக்லஸ் முப்பது, அட்டிகை இருபத்தஞ்சு, தங்க மோதிரம் ஒரு நாப்பது..அப்படியே முத்து முந்நூறு..ம்ம்..இப்போதைக்கு இவ்ளோதான்.. என்னப்பா முழிக்கிற..எழுதிக்கோப்பா..”

அப்படியே அங்கே கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் சென்று “ தம்பி, லிஸ்ட் குடுத்துட்டேன்..சாயங்காலம் சரக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாகணும்..இல்லைன்னா அப்புறம் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டு வரலாம்.

3. வங்கி பணியாளர்:
வெகு நேரம் ஒரு க்யூவில் நில்லுங்கள்.. பிறகு பக்கத்து க்யூவிற்கு மாறிவிடுங்கள், பிறகு மீண்டும் அடுத்த க்யூவிற்கு மாறிகொள்ளுங்கள்..வெகு நேரம் நின்றபின் உங்கள் முறை வந்தவுடன் “5 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?” என்று அவசரமாய் கேளுங்கள். உங்களை அவர்கள் வாழ்க்கைக்கும் மறக்கமாட்டார்.

4. கோவில் பூசாரி:
உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவர் வெளியே வந்ததும்.. “அய்யரே, ஒன்னுமே புரியலை.. என்னய்யா மந்திரம் படிச்சீரு.. ஒழுங்கா புரியற மாதிரி இன்னொரு முறை சொல்லும்..போங்க..”  பலமுறை அவரை விரட்டுங்கள். அல்லது.
”நீயும்தான் தினமும் சாமிகிட்ட வேண்டுற, சாமி பக்கத்துலயே இருக்க.. ஆனா என்ன புண்ணியம்? ஒரு சட்டை கூட வாங்க வழியில்லை.. என்னை பார்த்தியா? எப்பவாச்சும் தான் வரேன்..ஒரு 2 நிமிஷம் தான் நிக்கறேன்..சட்டை பார்த்தீல்ல..500 ரூபா.. அதுக்கெல்லாம் குடுப்பணை வேணும்யா..” என்று சொல்லி கடுப்பேத்தலாம்.

5. ஹாஸ்பிடஸ் ரிஷப்ஷனிஸ்ட்:
வேகமாக அவரை அணுகுங்கள், மிக சீரியஸாய்
”இந்த 302ம் ரூம்ல இருக்கற பேஷண்ட் எப்போ சாவார்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்கலாம்.

6. கிஃப்ட் ஷாப் வைத்திருப்பவர்:
நேராக உள்ளே போய் “எடுங்க..எடுங்க..டைம் ஆச்சு..”
அவர் பேந்த பேந்த முழிப்பார்.
“அலோ, கிஃப்ட எடுங்க, என் கிஃப்ட எனக்கு குடுக்க இவ்ளோ யோசிக்கிறீங்க..”
என்று அவரை முழிபிதுங்க வைக்கலாம்.

7. மீன் விற்கும் கடை:
திடீரென சத்தமாக “ஏம்பா. திமிங்கலம் ரெண்டு, டால்பின் ஒண்ணு போடுப்பா, நேரமாச்சு.. அப்படியே ஆக்டோபஸ் அரைகிலோ பார்ஸல் பண்ணிடுஎ ..அப்படியெ கொசுறா கொஞ்சம் விண்மீன் போட்டுடு” என்று சொல்லலாம்.

8. ஜெராக்ஸ் கடை:

நீங்கள் உங்கள் நண்பரையும் இதில் கூட அழைத்துகொள்ளலாம்.
”ஏம்பா, வீட்ல ஏகப்பட்ட வேலை.. ஒரே ஆளா சமாளிக்க முடியலை.. என்ன ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடு, இவரு என் நண்பரு, அப்படியே இவரையும் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டுடு..எவ்ளோ ஆகும்?” என்று பவ்யமாக கேட்கலாம்.

9. திருமண தகவல் மையம்:
நேராக உள்ளே சென்று, ”எனக்கு தெரிஞ்சு பையன் ஒருத்தன் இருக்கான், செவ்வாய் கிரகத்துல மணல் அள்ளுற வேலை, நல்ல் சம்பளம், வருஷம் ஒருக்கா ஒரு பத்து நிமிஷம் டான்னு வீட்டுக்கு வந்துடுவான், நல்ல உயரம்.. ஒரு 17 அடி இருக்கும், படிப்பு கம்மிதான்.. ஆள் ஆனா பூசினாப்படி..ஒரு லாரி சைஸ் இருப்பான்.. நல்ல செவப்பா இருப்பான்.. பொண்ணு எதுனா இருக்கா?” என்று கேட்கலாம்.

10. லேடிஸ் ஹாஸ்டல்:

அங்கே மேனேஜரிடம், அறிவியல் பூர்வமான சொல்லணும்னா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண் இருக்கு. இப்போ எனக்குள்ளயும் ஒரு பெண் இருக்கு, அதனால என்னை இங்கெ தங்க அனுமதிக்கணும், இல்லைன்னா இங்க இருக்குற எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, எனவே எல்லாரையும் உடனே வெளியேற்றியே ஆகணும். ஏன்னா இது லேடிஸ் ஹாஸ்டல்” என்று மிரட்டல் விடுக்கலாம்..

11. ஹோட்டல் சர்வர்:

டிப்ஸ் கேட்கும்பொழுது:
”முதலில் நீ நன்றாக வேகமாக நடக்க பழகவேண்டும், அப்போதுதான் கஸ்டமருக்கு உன் மீது மதிப்பு வரும். இரண்டாவது, நீ பல்விளக்காது வரவே கூடாது. உன்னால் என் நண்பர் இரண்டுமுறை மயங்கிவிழுந்துவிட்டார். மூன்றாவது, மாதமொரு தடவை எப்பாடுப்பட்டாவது குளித்துவிட வேண்டும்.. எனக்கென்னவோ உன்னால்தான் இந்த ஹோட்டலில் ஒரு கெட்ட வாடை வருகிறதென்று தோன்றுகிறது”
 என்று இப்படி நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கலாம். நிச்சயம் பயன்படும்.
மேற்சொன்ன ஐடியாக்களை செய்து பார்க்கும்பொழுது, ஏச்சுக்களோ, வசவுகளோ வாங்க நேர்ந்தால் அஞ்ச வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக பதிலளிக்க முடியாமல் இருப்பது அவர்களது பிரச்சனை. நமக்கு அவர்களை பூமிக்கு கொண்டுவந்தாயிற்று.. அவ்வளவுதான். :)

Thursday, January 5, 2012

டாக்டரை கொல்ல முடியுமா? - ஒரு செய்தி சார்ந்த சிந்தனை

இது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒரு கூட்டத்தை  நான் பார்த்ததே இல்லை- இதுதான் நேற்று அந்த டாக்டர் பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார், நடவடிக்கை  எடுக்க கோரி டாக்டர்கள் போராட்டம் என்று செய்தி வந்த போது, என் மனதில் தோன்றிய எண்ணம்.
ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது என்கிறீர்களா? சொல்கிறேன்.

 முதலாவதாக
டாக்டரை  யாராலும் கொல்ல முடியாது. ஏனெனில் டாக்டர் என்பது ஒரு கற்பனை பட்டம். உங்களை நல்லவர், வல்லவர் என்று சொல்வது போல (நீங்கள் எவ்வளவு மோசம் என்று அவரவர் மனசிற்கு தெரியும்..அது வேறு விஷயம்). ஒரு பட்டத்தை சுமந்து திரிந்த ஒரு பெண்ணைத்தான் யாரோ ஒருவன் கொன்றிருக்கிறானே தவிர.. டாக்டரை கொல்ல முடியாது. அது ஒரு Abstract Noun.

இரண்டாவதாக,
டாக்டரை கொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனால் கொல்லமுடியாது. கடவுளை கொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் அது ஒரு மனகற்பனை, அதேதான் இங்கும். டாக்டர் என்பதும் உங்களுக்கு பிறரால் கொடுக்கப்பட்ட ஒரு கற்பனை அங்கீகாரம். அவ்வளவே.. எனவே...அந்த கொலையாளி கொன்றது ஒரு பெண்ணைத்தானே தவிர.. டாக்டரை அல்ல.

மூன்றாவதாக,
அப்படி கொன்றதற்கு அவனுக்கு எனது நன்றிகள். இப்போது இவர்கள் போராடுவதன் மூலம் நான் டாக்டருக்கே  படித்திருந்தாலும் முட்டாள்தான், சுயசிந்தனை என்பதே இல்லாமல்தான் நானும் வாழ்கிறென் என்று இத்தனைப்பேர் தங்களை தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிகொண்டனர்.

நான்காவதாக,
இப்போது டாக்டர்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். இதோ, தங்களாலும் கொஞ்சம் சமுதாயம் ஸ்தம்பிக்கத்தான் செய்கிறது. ஹைய்யா ஜாலி என்று உள்ளுக்குள் ஒரே குஷியாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று மூன்றாம்தர அரசியல்வாதிகள்(அரசியலே மூன்றாம்தரம் தான்) போல் இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் என் மனவேதனை.

ஐந்தாவதாக,
யாரோ ஒரு அம்மையார் இறந்ததற்காக போராடுகிறேன் பேர்வழி என்று போய், இருக்கும் நோயாளிகள் இறந்துபோனால் யார் பொறுப்பு? இப்போது அந்த கொலையாளியை விட இவர்கள் கீழே  சென்றுவிட்டனர். அவன் பொறுப்பாய் அவன் கடமையை செய்துவிட்டான். கொல்வது கடமை, கொன்றாயிற்று. ஆனால் காப்பாற்றும் கடமையிலிருந்து நழுவ சந்தர்ப்பம் தேடும் இவர்களை என்ன செய்யலாம்?

ஆறாவதாக,
ஐ.சி.யூ. விற்கு மட்டும் வந்து பார்ப்போம் என்கிறார் ஒருவர். சாதாரண நோயாளிகளை, மருத்தவம் பார்த்து சரிசெய்யாதுவிட்டால், ஐ.சி.யூ. விற்கு தானே  வந்தாக வேண்டும். இதில் என்ன கருணை வள்ளல் போல் ஐ.சி.யூ. விற்கு மட்டும் வருவோம் என்பது.
ஐ.சி.யூ. வில் வைத்துவிட்டால் சிறப்பாக பில்லைத் தீட்ட முடியுமென்பதால், அங்கு மட்டும் Concession-ஆ? சரி புறநோயாளி என்ன பாவம் செய்தான்? பணம் கட்ட வழியில்லாமல், வெளியிலேயே பிணமாய் போனால், கவலை இல்லையா உங்களுக்கு?( அது இருந்தால் ஏன் போராட்டம் அது இது என்று நேரத்தை  வீணடிக்க போகிறீர்கள்?)

..ஒன்று மட்டும் சரியாக புரிகிறது..
இப்போதைய ட்ரெண்ட் போராட்டம்.. பொழுது போகவில்லையா  போராடு, பொட்டி பொட்டியாய் பணம் வேண்டுமா போராடு..
..யப்பா..முடியல..!!

பி.கு: இறந்த அந்த பெண்மணிக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

Friday, December 16, 2011

சுய முன்னேற்ற குப்பைகள்..


த்தனையோ வருடங்களாக நானும் சுயமுன்னேற்ற நூல்களை படித்தவன் தான். ஆனால்..இதற்கு மேலும் என்னால் இந்த குப்பைகளை
சகித்துகொள்ள முடியாது.

காரணம். சுய முன்னேற்றம் என்பதே ஒரு தவறான வார்த்தை. நாம் நம்மை மதிக்காததால் வெளியான வார்த்தை. நாம் நம்மை இன்னும் முழுதாய்
தெரிந்துகொள்ளாததால் வெளியான வார்த்தை இது. இந்த வார்த்தையின் நிஜமான சமுதாய அர்த்தம் : "பிறரோடு ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படு" என்பதே.

இதற்கு மேலும் பொருத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இனியும் இந்த சுயமுன்னேற்ற குப்பைகளில் சிக்கி சின்னாபின்ன படாதீர்கள். அது நரகம்... வெளியே வரவே முடியாத நரகம்.
எப்போது நீங்கள் ஒப்பிட ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் உங்களை அவமானப்படுத்திகொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள் ஒப்புகொண்டுவிட்டீர்கள்
என்றே அர்த்தம். என்னுடைய தாழ்வு மனப்பான்மை சம்பந்தமான பதிவுகளின் அடிப்படை சாரமே.. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு மாயை. அது
பிறரால் உங்களுக்கு உருவாக்கப்பட்டதே ஒழிய..நீங்கள் உங்களையே வெறுப்பது முடியாத காரியம். ஆனால் நாம் எப்படியோ அதனோடு ஒத்துபோய்விட்டோம். ஒரு தேவையே இல்லாத மனநிலையோடு
நாம் ஒத்துப்போய்விட்டோம். அதனால் நாம் இழந்தது,

நிதானத்தை,
எப்படி இழந்தீர்கள்? ஓடும் கூட்டத்தோடு ஓடவே உங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஓட ஓட தூரம் குறையவில்லை. ஆனால் வேகமெடுக்கவேண்டுமென்ற வெறியில் எத்தனையோ மனிதர்களின் கழுத்தில் மிதித்தீர்கள்..
அவர்களின் வேதனையிலும், கண்ணீரிலும் உங்கள் மாளிகைகள் வளர்ந்தன. நிதானித்திருந்தால்..நாம் மதிக்கவேண்டியது பணத்தை அல்ல, நல்ல மனிதர்களை என்று புரிந்திருக்கும்.

தெளிவை,
நம்முடைய குறிக்கோள்கள் எல்லாமே நம்மை நாமே மயக்கிகொள்ள பயன்படுத்தும் போதைவஸ்துக்கள் தான். அப்போதுதான் நாமும் செயல்பட்டுகொண்டே இருக்கிறோம் என்று நமக்கு ஒரு திருப்தி இருக்கும்.
இந்த விஷயத்தை எங்காவது பார்த்திருப்பீர்கள். அதாவது ஒரு வட்ட ஏணியில் ஒரு எலியை ஓடவிடுவார்கள்..அதன் முன்னால் இருக்கும் வெண்ணெய்கட்டிக்காக அது அப்படி ஓடும்..தன் முழு சக்தியையும் செலுத்தும்.
ஆனால் இறுதிவரை அதற்கு அது கிடைக்கப்போவதில்லை. அது வெறும் மாயை என்பது அதற்கு புரியப்போவதில்லை. நாமும் இப்படித்தான் சிக்கிகொண்டோம். நம் குறிக்கோள்கள் அத்தனையுமே அந்த மாய வெண்ணெய்கட்டிப்போல்..
ஒரு சிலரின் சுயநலத்திற்காக நீங்கள் அந்த எலிகளாய், வட்ட ஏணிகளுக்குள் ஓடி ஓடி உயிர்விடுவீர்கள். இது தேவையா? ஏணியை உடைத்துவிட்டு எழுந்துவாருங்கள்.

அமைதியை,
உலகத்திலேயே அமைதியான மனிதன் யார் தெரியுமா? தன்னை தானே எவன் எந்தவகையிலும் சித்திரவதை செய்துகொள்ளாது ஒருவன் இருந்தால், அவன் தான் இந்த உலகில் அமைதியான மனிதன்.
உங்களால், சொல்லமுடியுமா? நீங்கள் அமைதியான மனிதரென்று?

தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும் தன்மையை,
ஊரிலிருக்கும் சுயமுன்னேற்ற சொக்கர்களின் பேச்சில் மயங்கியே வாழ்வை ஓட்டிகொண்டிருந்தால், நீங்கள் எப்போது உங்களின் பேச்சை கேட்பது?

சுயமதிப்பை,
இரண்டாவது பேராவின் முதல் வரியை படியுங்களேன். ம்ம்.. இப்போது நம்மை நாம் மதித்திருந்தால், நம் திறமைகளை, நம் கற்பனைத்திறனை, நம் சக்தியை நாம் மதித்திருந்தால்,நாம் இப்படி அடுத்தவனின் கைப்பாவையாக ஆடவேண்டிய
சூழ்நிலை உருவாகி இருக்காது. இனியேனும் உங்களை நீங்கள் மதிக்க பழகுங்கள்.

அன்பை,
அன்புதான் நீங்கள்..நீங்கள் தான் அன்பு. அது தனியே வெளியிருந்து வருவது இல்லை. நீங்கள் முதலில் உங்களிடம், முதலில் உங்கள் உடலிடம் அன்பாய் இருங்கள்.. பிறகு உங்கள் உணர்வுகளுக்கு அன்பாய் இருங்கள். பிறகு பாருங்கள்..உங்களிடம் பொங்கும் அன்பை
அள்ளிப்பருக ஆயிரம் பேர் கூடிவிடுவர்..!!

மகிழ்ச்சியை,
அன்பென்று ஒன்று வந்துவிட்டால், மகிழ்ச்சி என்பதும் வந்தே தீரும். அது அன்பின் அடுத்த நிலை.

நட்புணர்வை,
மகிழ்ச்சியின் வழியில் பகிர்தல் துவங்கும். நீங்கள் மகிழ்ச்சியை, அன்பை, எதாவது ஒருவகையில் சகமனிதருக்கு கொடுக்கும்போது நட்புணர்வே அதன் முதல் சாத்தியம். பிறகென்ன..தினம் தினம்..நண்பர்கள்..
அமைதியான, தெளிவானதொரு வாழ்க்கை.

Saturday, November 19, 2011

நாமும், நமது வாழ்க்கையும்..!!








வாழ்க்கை..சிலர் என்னிடம் என்னடா வாழ்க்கை இது ? என்கிறார்கள்.
சிலர் என்னவொரு வாழ்க்கை அடடா!! என்கிறார்கள்.

இப்போது இவர்களில் யாரை நான் நம்புவது.? வாழ்க்கை கொடுமையும்
கசப்புமானதா? அல்லது இனிமையும் நிறைவுமானாதா? இப்படி
வாழ்க்கை எதன் பக்கம் என்று எண்ணிகொண்டிருந்த போது..

பட்டென மனதில் பட்டது ஒரு பொறி..வாழ்க்கை வெறுமனே வாழ்க்கை
மட்டுமே.. நம் மனத்தை கொண்டு அதை நல்லது என்றும் புகழ்ந்து பாடலாம்
..மோசம்..சுத்த மோசம் என்று ஏசவும் செய்யலாம்.

ஆனால்..போற்றுவார் போற்றட்டும்..தூற்றுவார் தூற்றட்டும் என்று
வாழ்க்கை அதன் வழியை பார்த்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமென்றால்.. பொதுவாக நம்மில் பலர்
கல்லை இடித்துவிட்டு, ”என் காலில் கல் இடித்துவிட்டது” என்று சொல்லும் ஆட்கள் தான்.
வெகு வெகு சிலரால் மட்டும்.. “தெரியாமல் நானே போய் இடித்துகொண்டேன்” என்று
நிதானித்து சொல்ல முடியும்.

ஆனால் கல் உங்களை இடிப்பதற்காகத்தான் அங்கே இருந்தாதா?
இல்லை கல்லில் இடிப்படுவதுதான்
உங்கள் நோக்கமா? இரண்டுமே இல்லை.
கல்லில் கால் மோதி கொண்டு வலியெடுக்கிறது. அதற்கு நம் மனதின்
விளக்கமே இடித்துவிட்டது என்பதும்..இடித்துகொண்டேன் என்பதும்.

நான் சொல்லவருவது மூன்றாவது வழி. வெறுமனே கால் கல்லில் இடித்துவிட்டது. அவ்வளவே..!!
Fact. Thats all. அதை நான் இடித்துகொண்டேன் என்றாலும், அது இடித்துவிட்டது என்றாலும்..
கல்லில் கால் மோதிகொண்டது என்பது மட்டுமே Fact.

வாழ்க்கையும் அப்படித்தான்.. உங்களை குஷிப்படுத்தவும் அது இங்கே இல்லை..உங்களை அழவைக்கவும்
அது இங்கே இல்லை. நீங்களே குஷியாகிகொள்கிறீர்கள்..நீங்களே வருத்தப்படவும் செய்கிறீர்கள்..மற்றபடி..
ரங்கராஜனுக்கோ, ஒபாமாவுக்கோ, பில்கேட்ஸுக்கோ, என் தெருவோர பிச்சைக்காரருக்கோ அது எந்த வகையிலும்
Commit ஆகவில்லை..ஆகப்போவதும் இல்லை.

நாளை காலை மனித இனமே இல்லாமல் போய்விட்டாலும்.. சூரியன் உதிக்கத்தான் போகிறது, நதிகள் ஓடத்தான்
போகிறது..கடலலைகள் கரைத்தொட்டு விளையாடத்தான் போகின்றன..நாம் ஒரு (.) புள்ளி அளவுக்குக்கூட இந்த பூமிக்கோ,
சூரியக்குடும்பத்திற்கோ முக்கியமானவர்கள் அல்ல. நாமும் ஒரு Accidental உயிரனங்கள் தான்.

அதனால், வாழ்க்கை அப்படி, வாழ்க்கை இப்படி என்று ஓவராக அலட்டிகொள்ளாமல், வந்த வாழ்க்கை நிறைவாய், அன்பாய்,இந்த
கட்டுரையை படித்துமுடிக்கும்வரை + அதற்கு மேலும் நம்மை உயிரோடு வைத்திருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லி நலமாய் வாழுங்கள்..!!

Monday, October 10, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 4


இன்று நான் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையை என்னால் கவனிக்க முடிகிறது. அதுதான் ”பிறரோடு தன்னை ஒப்பிட்டு வருந்துதல்”.

அவரை போல் தான் இல்லையே.. அந்த நடிகனைப்போல் எனக்கு கட்டுடல் இல்லையே..அந்த நடிகைப்போல் நான் சிகப்பாக, ஒல்லியாக இல்லையே.. அந்த எதிர்வீட்டுக்காரரைப் போல் தன்னால் ஒரு கார் வாங்க முடியவில்லையே..அந்த பெண்மணிபோல் உயர்ந்த பதவிகளில் இருந்துகொண்டு பிறரை ஆள நமக்கொரு வாய்ப்பில்லையே.. என் பிள்ளைகள் அவர்களைப்போல் அறிவுஜீவிகளாக இல்லையே..இப்படி எதற்கெடுத்தாலும் பிறரோடு நம்மை ஒப்புநோக்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது.

எப்படி வந்தது?

பள்ளியில் நீங்கள் படிக்கும்போது இந்த Comparision உங்களுக்கு போதிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் உங்களைவிட சிறப்பாக படிக்கும் மாணவரோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுப்பார்த்துகொள்ள முதலில் உங்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. இப்படி செய்வதால், உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டு, அதாவது மாடு தன்னைத்தானே சவுக்கால் அடித்துகொண்டு வேகமாய் ஓடுவதுபோல்.. நீங்கள் உங்களை காயப்படுத்திகொண்டு மேலும் நன்றாய் படிக்க முயற்சி செய்கிறீர்கள். இப்படி கொஞ்சம் மேலே வந்ததும்..இன்னும் மேலே இருப்பவனோடு கம்பேர் செய்கிறீர்கள். பத்தாவது, பன்னிரெண்டாவது  வரும்போது.. காயங்களே உங்கள் உடம்பாய், கம்பேர் செய்வதொன்றே உங்கள் முழுநேர வேலையாகிவிடுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மனம் கம்பேரிங் இயந்திரமாய் மாறிவிடுகிறது. உங்களை விட மெத்த படிப்பவன் 4 நண்பர்கள் வைத்திருந்தால், நீங்கள் 6 நண்பர்களை சேர்த்துகொள்வீர்கள். அவனை முந்தவே உங்கள் முழுநேரப்பொழுதும் செலவழிந்திருக்கும். இப்படி.. முப்பொழுதும் முழுமூச்சாய் போட்டி மனப்பான்மையில் வாழ நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

இப்போது கல்லூரி வந்ததும், காதல் மலர்கிறது. அவன் அவளை காதலிக்கிறானே..நம்மை ஒருத்தியும் பார்ப்பதில்லையே..இவளுக்கு இவ்வளவு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களே..நம்மை ஒருவன்க்கூட பார்ப்பதில்லையே.. அவள் அவ்வளவு அழகாய் இருக்கிறாளே நாமில்லையே.. என்று..மீண்டும் மீண்டும் கம்பேரிங் குழியில் விழுகிறோம். தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறோம்.

சரி.. பிறகு திருமணம்.. அங்கேயும் நகை, சீர்செய்வது, என்று மீண்டும் ஒரு கூட்டம் நம்மை கம்பேர் செய்து கேலி செய்கிறது. அல்லது மெச்சுகிறது. அடுத்து குழந்தை பேறு. அங்கேயும், அவள் உடனே பெற்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் இழுத்தடிக்கிறாய் என்று கம்பேர் செய்கிறது. அடுத்து நம் பிள்ளை படிப்பு முதல், நம் செல்வ செழிப்புகள் வரை அந்த கூட்டம் நம்மையும், நாம் அந்த கூட்டத்தையும் பார்த்து கம்பேர் செய்தபடியே வாழ்க்கையை வீணடிக்கிறோம்.

ஒருநாளாவது, அந்த இளைஞன் 20லேயே இறந்துவிட்டாரே.. நாம் இன்னும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாரும் கம்பேர் செய்ததில்லை. ஏன்? அதையும் முயன்று பாருங்களேன்.. நாட்டில் ஜனத்தொகையாவது குறையும்.

சரி இதற்கு தீர்வு என்ன?

முதலில் கம்பேரிஸனால் பொருள் சேருமே தவிர நிம்மதி சேராது என்பதை தெளிவாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் உழைத்து சேர்த்ததுதான் பொருளே தவிர, பிறரை பார்த்து, நீங்கள் சேர்த்தது உங்கள் பொருள் இல்லை அது அவர்களின் பொருள்.. காரணம் அவர்கள்தானே உங்களை வாங்க ஊக்கப்படுத்தியது. எனவே மனநிம்மதி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை..நல்ல எண்ணங்களை, நல்ல சுபாவங்களை, நல்ல மனிதர்களை சேர்ப்பதில்தான் இருக்கிறது...இதை புரிந்துகொண்டாலே..இதை வாழ்வில் கொண்டுவர துவங்கினாலே போதும்..வாழ்வு நிறைவு பெறும்..!!

Friday, August 26, 2011

உனக்குள் ஒரு சப்தம்


அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை

ஒன்று: பிறரின் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்,

இரண்டு:தன்னுள் எழும் சப்தங்களைகொண்டு வாழ்பவர்கள்.

பிறரின் சப்தங்களுக்காக என்றால், அதாவது, நீங்கள் திறமைசாலி, நீங்கள் பெரிய மேதை, நீங்கள் எங்கள் நிறுவனித்தின் தூண், நிலைத்தாங்கி, இடிதாங்கி..இப்படி பிறரின் புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும், பாராட்டு தரும் மயக்கத்திற்குமே ஏங்கி ஏங்கி, தன்னுடைய உழைப்பை வாரி இரைக்கும் நபர்கள், இவர்களால் உலகில், உலகுக்காக சிறப்பாய் வாழமுடியுமே தவிர, தன்னுள் ஆழ்ந்து சென்று தனக்கானதை தேடி செய்ய இயலாது.
இவர்களால் ஒரு நாளும் ஓய்வாய் அமர்தல் முடியாது. காரணம், இவர்கள் இயந்திரமானவர்கள். நான் பழி சொல்லவில்லை. அவர்களை அறியாமல் அவர்களை அவர்களே அப்படி செய்துகொண்டார்கள். I feel sorry for those people. அப்படி மெல்ல மெல்ல தன்னை இயந்திரமாய் மாற்றிகொண்டு, எதோ ஒரு மனிதனின் என்றோ கண்ட கனவை நினைவாக போராடிகொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் வாழ்க்கை இயந்திரதனமாய்
மாறிவிட்டதாய் புலம்புவதற்கு காரணம் இவர்களை போன்றோர் தான். இவர்களால் தான் வாழ்க்கை ஒரு வெறித்தன்மையும், போட்டித்தனும், போலித்தனமுமாய் மாறி நிற்கிறது. நான் சொல்வதை செய், இல்லையேல் ஓடிவிடு என்பது இவர்கள் கொளகை. இயந்திரத்தனமான, அன்பில்லாத, நிம்மதியில்லாத இவர்களின் தலைமையின் கீழ் 98% சதவிகத உலகம் சிக்கி சின்னப்பட்டுகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? இவர்களிடம் இருந்து உலகை யார் காப்பாற்றுவது என்கிறீர்களா?


இப்போது இரண்டாவது வகை ஆட்கள், அதாவது, தன்னுள் எழும் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்.
தன்னுள் எழும் சப்தம் என்றதும், உடனே, நம் மனதின் வெற்று கூச்சல்களையே, வெறித்தன கூச்சல்களையே நாம் நம்முடைய சப்தம் என்று நினைத்திகொண்டிருக்கும். இல்லை. இல்லவே இல்லை. அது மனம். இயந்திரத்தனமானவர்கள் உங்களுக்குள் ஏற்படுத்திய நோய் மனம். அது எப்போதும் இயந்திரத்தனமானவர்களுக்கு உதவுமே தவிர உங்களுக்கு உதவாது. நீங்கள் அந்த மனமும் கிடையாது. நீங்கள் ஆன்மா. பெயரில்லா, மதமில்லா, சாதியில்லா ஒரு பிரபஞ்ச குழந்தை. உங்கள் தாய் பிரபஞ்சம், தந்தை வானம். நீங்கள் யாரென்று தெரிந்துகொள்ள முயல்வதே உங்கள் சப்தங்களை நீங்கள் கேட்டு உணரும் கணம். உங்கள் ஆன்மாவின் சப்தம், உங்கள் இதயத்தின் மூலமே கேட்கும். ஆம். உங்களில் இதயம், ஆன்மாவின் உதடுகள். இதயத்தை கவனியுங்கள்.
உங்களை திருப்திபடுத்த இதயத்தால் தான் முடியும். அதனால்தான் காதலின் சின்னம் இதயம். அன்பின் சின்னம் இதயம். இதயத்தின் படி வாழ மாபெரும் தைரியம் வேண்டும். அதுவும் இதயத்திலேயே இருக்கிறது. அப்படி வாழ்ந்தவர்கள் தான் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்து சென்றனர். அவர்களாலே உலகம் உய்கிறது.
அவர்களே, அந்த பிரபஞ்ச குழந்தைகளே, புத்தனாய், இயேசுவாய், கிருஷ்ணராய், ஐன்ஸ்டீனாய், ரமணராய், ஷெல்டனாய், ஷேக்ஸ்பியராய், பாரதியாய், பட்டினத்தாராய், விவேகானந்தராய், இப்படி நம்மால் பைத்தியமாய் பார்க்கப்பட்ட பலராய் நம்மிடையே வந்து, நம் இயந்திரத்தனத்திலிருந்து இதயத்தில் வாழ நமக்கு வழி செய்தவர்கள். இன்னும் காலமிருக்கிறது. நீங்கள் இதயம் திறந்து நிறைவாய் வாழப்போகிறீர்களா? இல்லை  ஆட்டுகூட்டத்தில் ஆடாய், வாழாத வாழ்க்கைக்காக அழுதபடி இறக்கப்போகிறீர்களா? இல்லை சிங்கமாய், கம்பீரமாய், தனித்தன்மையோடு வாழ்ந்தோம் என்கிற நிறைவோடு புன்னகையோடு வாழ்வை முடிக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்..

நன்றி..!!

Saturday, August 6, 2011

எப்போ ம்மா வருவீங்க?





நேரம்: 7.08 மணி

இதோ.. வேகமாய்.இன்னும் வேகமாய்.. அடுத்த கணமே என் தங்கத்தை அடைந்துவிடக்கூடாதா?
இன்னும் எதற்கு அவளுக்கும் எனக்கும் 7 நிமிட இடைவெளி.. அன்பில் காலம் கரைவதில்லை..கூடுகிறது..
கணமொன்று கடக்கையில் யுகம்கடந்த வலி..ச்சே..மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்லாதா?
இல்லை இந்த ஆட்டோகாரன் மெதுவாக செல்கிறானா? வேகமாகத்தான் திருகுகிறான்.. இத்தனை பேர் சாலையில்
என்ன செய்கிறார்கள்.. ச்சே.. அசமஞ்சங்கள்..நகரவே நாள் செய்கின்றன. எருமைகள்...
சீக்கிரம் போங்க ..ப்ளீஸ் .. மீண்டும் ஆட்டோகாரனுக்கு கெஞ்சலாய் உத்தரவிட்டேன்.

போறேன்மா..போறேன்..ன்னு கொஞ்சம் உறுமலாய் சொல்லிவைத்தான்.

அட..சொல்ல மறந்துவிட்டேனே..நான் அஞ்சலி.. என் வீட்டிற்குதான் இவ்வளவு வேகமாய் போய்கிட்டு இருக்கேன்..
காரணம்.. என் மகள் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கா..!! சந்தோஷமாய் இருக்கா? எனக்கும்தான்..ஆனால்..

நேரம் 6.45 மணி
ஹையா..ஹையா..யய்யய்..ஹையா.. !! கூச்சலுடன் வீட்டிற்குள் ஓடிவந்தாள் இந்திரா.

வந்துடுச்சு பிஸாஸு.. இன்னைக்கு என்ன கிழிச்சிதோ? புகைந்தபடி வெளிவந்தாள் கற்பகம் பாட்டி.

குழந்தையை ஏன் திட்ற..எதுவா இருந்தாலும் என்னை நேரா சொல்லிட்டு போ.. மாடிப்படியிலிருந்து கூவினாள் லட்சுமி.

பாட்டி பாட்டி.. இன்னைக்கு நான் ஸ்கூல்ல..

வந்தது லேட்டு.. இதுல கதைவேற அளக்கறியா.. ஃபங்ஷன் முடிச்சமா..புள்ளைய அனுப்பினமான்னு இல்ல..
இவ்வளவு நேரமா பண்ணுவனுங்க.. என்ன ஸ்கூலோ..?!

உங்கம்மா இருக்காளே.. அவளை அப்படியே உரிச்சி வெச்சிருக்க.. அதே துள்ளல், அதே திமிரு.. அதே அடம்..

பொக்கென்று போனது இந்திராவிற்கு.

அப்பா எங்க பாட்டி..? என்று சோகமாய் கேட்டாள்.

அவன் உள்ளதான் இருக்கான்.. ஏன் அவனை வேறு வம்பிழுக்கணுமா நீ.?
என்னை படுத்தும் இம்சை போதாதா? என்றவண்ணம் அவளுக்கு கவுன் மாட்டிவிட்டாள்.

பேக்கை தன்னோடு தூக்கிகொண்டு..அறைக்குள் நுழைந்தாள்.
சர்ரென்று ஒரு பேனா அவள் கன்னம் உரசி வெளியே விழுந்தது.

எங்க.ஒரு பேனா கூட இல்லை.. ச்சை..வீடா இது.. ஒரு நம்பர் நோட் பண்ண பேனா கூட இல்லை...
இருய்யா இருய்யா..இரு லேப்-ல ஸ்டோர் பண்ணிக்கிறேன்.. |
என்கிட்ட மட்டும் எல்லாம் சொல்லு..என்று செல்லில் எவனையோ எகிறிகொண்டிருந்தான் பாலு.

அப்..பாஆஆஆ..

திரும்பி பார்த்தான் பாலு. செல் தவறி கீழே விழுந்தது.. இணைப்பு துண்டிக்கப்பட்டது.. செல்போன் அணைந்தது.

கோபம் குழந்தைமேல் பாய்ந்தது.

ஏய்..எந்த நேரத்துல கூப்பிடறதுன்னு தெரியாது.. ச்சை.. பிஸாஸே..போ..போ வெளியே என்று அலறியபடி
செல்போனை பொறுக்க போனான்.

..குழந்தை மிரண்டே போனது..6 வயது பெண் என்னதான் செய்வாள்.. மலங்க மலங்க விழித்தாள்..
கலங்கி போனாள்.. துக்கம் தொண்டைக்குள் தள்ள..

மெதுவாய் நடந்தாள்.. லேண்ட் லைனில் அம்மாவின் ஆபிஸ்க்கு அழைத்தாள்..

அலோ..எம்.கே. அஸோஸியேட்ஸ்..

அம்மா இருக்காங்களா? அம்மாட்ட பேசணும்..

எந்த அம்மா.. இங்க நிறைய பேர் இருக்காங்களே குழந்த.. பேர் சொல்லு மா..

அம்மா பேர் அஞ்சலி.. என்றாள்.

அஞ்சலி மேடம்.. உங்களுக்கு போன்..

ஹல்லோ..

ம்மா.. ம்மா..

சொல்லும்மா..

மா..குரல் உடைந்தது.. அழ துவங்கினாள்..

மா..ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் மா...கதறி அழுதாள்..

அழுகையில் நடுவே..

எப்போ ம்மா வருவீங்க..?

அழுகை தொடர்ந்தது

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Friday, June 3, 2011

எழுந்திரு, விழித்துக்கொள்.. கொண்டாடு!!




கண்ணை திறந்துகொண்டிருந்தால் மட்டும் ஒருவர் தூங்கவில்லை என்று அர்த்தமில்லை- பழமொழி

காலையில் வாக்கிங் போகிறீர்கள்.

மெதுவாக பாதங்கள் தரையில் படுகிறது. காற்று மெல்ல மேனியெங்கும் வீசுகிறது.
இன்றைய நாளில் முதல் பூவாய் சூரியன் உங்களை பார்த்து புன்னகைக்கிறது. வாழ்வு இன்று உங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்திருக்கிறது. நேற்றைய குப்பைகள் களைந்து சுத்தமாய் பரிசுத்தமாய் இருக்கிறீர்கள். மனம் தெளிவாய்
இறைவன் கருவறையாய் தெளிந்து நிற்கிறது. பூக்கள் வரவேற்கிறது. மரங்கள் உங்கள் வரவை கொண்டாடுகிறது.
இப்படி தினமும் தினமும் உங்கள் வாழ்வு திருவிழாவாய் திகழ்கிறது.

ஆனால்..

அது உங்களுக்கு தெரிவதே இல்லை..ஹாஹாஹா!! காரணம்.. கண் திறந்தும் தூக்கத்திலேயே காலம் செல்வதால்.
இதோ இந்த பதிவை படிக்கும்போது கூட உங்களின் குறட்டை சத்தத்தை என்னால் கேட்கமுடிகிறது. என்ன செய்ய..
நீங்கள் தூக்கத்தில் இருக்கும் வரைதான் இந்த சமுதாயம்.. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் சின்ன சின்ன கவலைகள்.
நீங்கள் தூங்கும் வரை தான் உங்களுக்கு துக்கமான ஒரு வாழ்க்கை. நீங்கள் தூங்கும்வரை தான் உங்கள் வாழ்க்கை விதியின்
கையில்.


இப்போது விவேகானந்தர் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொல்கிறேன். எழுந்திருங்கள்.. போதும் உறக்கம். உங்கள் கனவுகளுக்காக
வாழ்க்கை இங்கில்லை. உங்கள் சுயத்தின் முடிவுக்கு மட்டுமே இயற்கை வளையும். உங்களின் மனமென்னும் ஓட்டைபாத்திரத்தின்
தாகத்திற்கு வாழ்வு வளையாது. வளைக்க முயல்வதில் வீணாவது உங்கள் வாழ்க்கைதான்.

விழித்துகொள்ளுங்கள். உங்களுக்கு தாலாட்டு தேவை இல்லை. அலாரங்களே தேவை. தவறி தூங்கிவிடும் ஒவ்வொரு கணமும்
அடித்து எழுப்ப எப்போதும் உங்களோடு ஒரு அலாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். மனம் உங்களை எப்போதும் தூங்கவைக்கவே முயற்சிக்கும்.அப்பொதுதான் உங்கள் வீட்டில் திருடி.. தன்னை பணக்காரனாய் காட்டிகொள்ளமுடியும். போதும் உங்கள் திருடனை அனுமதித்தது. ஏற்கனவே
பாதி சொத்தை கொள்ளையடித்துவிட்டான். இன்னும் நீங்கள் படுக்கையில் புரண்டது போதும். விழித்துகொள்ளுங்கள். அவனை வெளியேற்றுங்கள்.


கொண்டாடுங்கள்..!! இங்கே போராட்டம் என்ற ஒன்று இல்லவே இல்லை..!! விழித்துக்கொள்ளாதவரை போரும் உண்டு..போராட்டமும் உண்டு.
விழித்துகொண்டபின் கொண்டாட்டம் தான். துக்கத்திற்குதான் நீங்கள் பெரிதும் முயற்சிகள் செய்யவேண்டும். மகிழ்ச்சி என்பது உங்கள்
அடிப்படை இயல்பு. பிறக்கும் போது நீங்கள் அழுதது துக்கத்தால் அல்ல..மகிழ்ச்சியால்.. ஆனந்தில் விட்ட கண்ணீர் அது. உன் தந்தையும் தாயும்
உங்களை முதலில் கண்டதும் அழுதார்களா என்ன? பூரித்துபோனார்கள்...மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். கொண்டாட்டமும் மகிழ்ச்சியுமே உங்கள்
சுயம். அதுவே வாழ்வை வாழச்சொல்லும் சக்தி.

தூக்கம் போதும்... வாழ்க்கை கணத்திற்கு கணம் நழுவுகிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு இல்லை. இன்றே கடைசி..இக்கணமே கடைசி..

வெற்று கனவுகளுக்காக அழுதது போதும்.. விழிப்பில் வாழுங்கள்.. எழுந்திருங்கள்..விழித்துகொள்ளுங்கள்..கொண்டாடுங்கள்..!!

Monday, May 23, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 2


உன் தந்தை தாயை கொல்லாமல் நீ சுதந்திரம் அடைய முடியாது - புத்தர்

என்ன இப்படி சொல்லிட்டாரு.. பயப்படாதீங்க. இந்த கொலைக்கு வழக்கு கிடையாது.
கைது கிடையாது. போலீஸ் இல்லை. ஏன் குற்றவாளிக்கூட இல்லை. சொல்லப்போனால்
குற்றவாளியை திருந்த வைக்கத்தான் இப்படி புத்தர் சொன்னார்.

அப்படியா? அப்போ யார் அந்த குற்றவாளி..?






நீங்க தான். வேற யாரு.. ம்ம்..உண்மைதான். எல்லா தாயும் தந்தையும் உங்களை
குற்றவாளிகளாகவே வளர்க்கிறார்கள். எப்படி? சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எவரும்
குற்றவாளிதானே.. எனவே உங்களை முடமாக்கி, சிறகுகளை அறுத்து, இந்த சமுதாய
சிறைக்குள் சரிவர பொருந்த வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதால் நீங்கள் உங்கள் தனித்தன்மையை
கொன்றுவிடுகிறீர்கள். உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்கள் உண்மை அன்பை
நீங்களே உதாசீனம் செய்துவிட்டீர்கள். உங்கள் சுயத்தை பாதுகாப்பு தேடும் கோழைத்தனத்திற்காக கொன்றுவீட்டீர்கள்.
எனவே நீங்கள் குற்றவாளிதான்.

சரி இந்த குற்றவாளி திருந்த முடியாதா? முடியும்.

எப்படி? என் தந்தை தாயை கொல்லணுமா?

கண்டிப்பா.
 ஆனா...வெளியில் இருக்கும் அவர்களை சொல்லவில்லை. உங்களுக்குள் இருக்கும் அவர்களின் குரல்களை கொல்லவேண்டும். அவைகள் தான் உங்களுக்குள் இருந்து உங்களையே அழிக்கும்
விஷம்.அவைகள் உங்கள் சிறுவயது முதலே உங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வளரவைக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களின் வார்த்தைகளில் 85% அவர்களின் வார்த்தைகள் தான். உங்களின் எண்ணங்களின் 95% அவர்களின் எண்ணங்கள் தாம்.
இப்படி நீங்கள் வெறுமனே அவர்களின் நகலாக இருக்கிறீர்கள்.வெறும் தாளாய் இருந்த உங்கள் மனத்தில்
இப்போது முழுக்க முழுக்க அவர்களின் கிறுக்கல்கள். உங்களை நீங்கள் வெறும் தாளாய் கண்டெடுக்க முடியாதபடி மொத்தமாக
கிறுக்கி தள்ளி இருக்கிறார்கள்.

இளம் வயதில் உங்களை நீங்கள் உணர ஆரம்பிக்கும்போது, மெல்ல அந்த கிறுக்கல்கள் உங்களை உறுத்துகிறது.அது இன்றைய
சூழலுக்கு சம்பந்தமில்லாமல், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு கட்டளையாய் உங்களை துன்புறுத்துகிறது. என்ன செய்வீர்கள் பாவம்..
உங்கள் மனமே இரண்டாய் பிளந்து ஒன்று சூழ்நிலைக்கேற்ப செயல்பட துடிப்பதும், ஒன்று உங்கள் பெற்றோரின் கட்டளைகளுமாய்
குழம்பி நிற்கிறது. இதனால் இயலாமை பிறக்கிறது. தாழ்வு மனப்பான்மை துவங்குகிறது.

இப்படி சிறுக சிறுக சறுக்கி தாழ்வு மனப்பான்மையில் புதை சேற்றில் மாட்டிகொண்டீர்கள்.
போதும், இனிமேலும் நம்மை நாமே துன்புறுத்திகொள்ளுதல் ஆகாது. தாயும் தந்தையும் பாதைகள்.
ஆனால் கொஞ்சம் பேதைகள். அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாத பேதைகள்.
சாவி கொடுத்த பொம்மைகளாய் சமுதாயத்திற்காக ஆடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை.
அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களும் உங்களை போல் அவர்களின் பெற்றோரின் குப்பைகளை
சுமந்து நிற்கிறார்கள். அவர்களை மன்னிப்போம், அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்.

முதலில், எங்கெங்கு அச்சம் எழுகிறதோ, அங்கங்கே போய் நில்லுங்கள். பெண்ணை கண்டால் பயமா?
பேச துணிச்சல் இல்லையா? உலகை கண்டால் நடுக்கமா? ஓடும் நதியில் நீந்த பயமா? எங்கும் எதிலும்
அச்சம் தெரிந்தாலும் அதை துணிந்தே செய்யுங்கள். தவறுகளின் கற்பவனே தன்னம்பிக்கைக்கு உறியவன்.
உங்கள் தவறுகளில் தேர்ச்சி பெருங்கள். கல்லடி பட்ட மரமே பழுக்கும். இது புதுமொழி.அடிபடுங்கள்.
அடிகள் படிகளாகட்டும். அவை உங்கள் சுயத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கட்டும். பெற்றோர்
பெற்றோராய் மட்டும் இருந்தால் போதும். வளர்த்தோராய் நமக்கு நாமே இருப்போம்.

அப்படி வளர்வதே வளர்ச்சி. இப்போதுதான் உங்கள் காலில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்கள் தோள்கள்தான்
உங்கள் சுமை சுமக்கிறது. உங்களின் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கட்டும். இனி நீங்கள் வாழும்
வாழ்க்கை உங்களுக்கானதாய் இருக்கட்டும்.

Tuesday, May 17, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு...



பொதுவாகவே மேலைநாட்டு அறிஞர்களுக்கும், ஏன் நமது நாட்டு அறிஞர்கள் சிலருக்குமே ஒரு கருத்து உண்டு.
அதாவது இந்தியா ஒரு இறந்த நாடு என்று. அட..!! ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்?
காரணம் உண்டு. அது நாம் நமக்குள் சுமக்கும் அழுத்தமான ஆழமான தாழ்வுமனப்பான்மை. அது ஒரு நாடு
முழுக்க பரவி பரதிபலிப்பதால் இந்தியா தாழ்வுமனப்பான்மை கொண்ட மக்கள் நிறைந்த இறந்த நாடாக இருக்கிறது.

 அடிப்படைகள் புரிந்த எந்த விஷயமுமே
சீக்கரம் சரிசெய்யக்கூடியதாய் மாறிவிடும் இல்லையா.. சரி தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படைகள் என்ன?

முதலில் பால்ய பருவம்:

நம் நாட்டில் குழந்தைகளை மிகவும் குழந்தைத்தனமாக வளர்க்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் வெறுமனே தாய் தந்தையரோடு மட்டும் வளராமல் அவர்களின் சொந்தகளோடும் வெளிவட்டார நட்புகளோடும்
இருக்க அனுமதிக்க வேண்டும். வெறுமனே தாய் தந்தையே உலகம் என்றிருந்தால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைவது
மட்டுமில்லாமல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமில்லாமல் இருக்கும். அதிகமான நட்புறவு கொண்ட குழந்தைகள்
வேகமாகவும், விவேகமாகவும் இருப்பார்கள். சுறுசுறுப்பும், எல்லாரிடமும் எளிதில் பழகும்விதமாகவும் இருப்பார்கள்.
இதனால் அவர்களின் தாழ்வு மனப்பான்மை அளவு குறைவாகவே இருக்கும்.

முதலில் நாம் குழந்தைகளின் அங்க அடையாளங்களை சுட்டிக்காட்டி அவர்களை குறைகூறுதல் கூடாது. அது முதல்கட்ட
தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படை.

அடுத்து குழந்தைகளை யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். அது மிகவும் மோசமான வழக்கம். அப்படி பேசுவதால்
குழந்தைகள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா குழந்தையும் சச்சினாகவோ, விஸ்வநாதன் ஆனந்தாகவோ பிறப்பதில்லை.
பிறக்காது. எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவனை/அவளை வளர்ப்பதே சிறந்தது. பிறரின் ஜெராக்ஸ்
காப்பியாக உங்கள் குழந்தையை வளர்க்கும் பாவத்தை தவறியும் செய்துவிடாதீர்கள்.

மூன்றாவது முக்கியமான விஷயம். குழந்தைகளை அடிப்பது. இது மிகவும் மோசமான, மனிதத்தன்மையற்ற செயல்.
ஏன் குழந்தையை அடிக்கிறீர்கள். திருப்பி அடிக்கமாட்டான்/மாட்டாள் என்கிற தைரியம் தானே... இதே கோபத்தை உங்களைப்போன்ற
சக வயதினரிடமோ, அல்லது ஒரு இளைஞரிடமோ காட்டிப்பாருங்கள். பற்கள் நொறுங்கிவிடும். குழந்தைகளை அடித்துதான் வளர்க்கவேண்டும்
என்று எவரேனும் சொன்னால், அவர்கள் அறிவு இன்னும் வளரவே இல்லை என்றுதான் அர்த்தம். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எப்போது
நாம் நம் குழந்தைகளின் நண்பனாக மாறுகிறோமோ அப்போதே அவர்கள் மாற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அன்பை சொல்லிக்கொடுங்கள். அரவணைப்பை தாருங்கள். அவனை/அவளை அவனாக/அவளாக இருக்கவிடுங்கள். நீங்கள் பாதுக்காப்பை மட்டும்
தந்தால் போதும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் பாசமாய் கூட்டைத்தேடி வரும். தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் நண்பர்களாகட்டும்.

தாழ்வு மனப்பான்மை ஒழிந்து வாழ்வு மனப்பான்மை மலரட்டும்..

தொடரும்....

Monday, May 9, 2011

தியானமும் நானும்..!!




எவ்ளோ நாள் ஆச்சு.. அடடா.. என் வலைப்பக்கத்தை பார்க்க எனக்கே சங்கடமாய் இருக்கிறது.
இருந்தாலும்.. பிஸியாக இருந்த அளவுக்கு அது இப்போது ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறது என்று ஒரு ஆறுதல்
சொல்லிகொள்கிறேன்..

நான் தியானம் பயில்கிறேன்.. ஆமாம்...உண்மைதான்..அட நிஜமாப்பா, ஆனால் பொதுவாக எல்லாரும் பயில்வது
போல் பத்மாசனம் போட்டு அமர்ந்து கண்ணை மூடி, முதுகை நிமிர்த்தி, மூச்சை இழுத்து இழுத்துவிட்டு, இப்படி
எதுவுமே செய்வது இல்லை. அதே போல் தியானம் செய்தே ஆகவேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்திகொண்டதும்
இல்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது உண் என்பது போல எப்போது மனம் ஓய்வாய் அமைதியாய் இருக்க ஏங்குகிறதோ
அப்போதெல்லாம் தியானம் செய்ய தயாராகிவிடு என்பது எனது கொள்கை.

பொதுவாக எல்லாரும் மனம் அலைபாயும்போதும், கோபத்தில், ஆசையில், ஏக்கத்தில் கொதிக்கும்போதும் மட்டுமே தியானத்தை
நினைவுபடுத்தி மனதை கட்டுபடுத்தும் ஒரு முயற்சியாக அதை செய்கிறார்கள். ஆனால் மனதை கட்டுபடுத்தினால் மட்டும்
மனம் எதையும் சாதித்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஓடும் ரயிலை ட்ராக்கில் நின்றுகொண்டு
இரண்டு கையால் தடுக்க முடியும் என்று முயற்சிப்பதை போல.

ஒரு ரயிலை நிறுத்த அதன் அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த லிவரை இழுத்தால் ரயில் வேகம் குறையும்,
எந்த லிவர் ப்ரேக்காக செயல்படுகிறது என்று முழுமையாக ஒரு ரயில் என்ஜினை புரிந்தவருக்கே ரயிலை நிறுத்துவது சாத்தியம்.

உன் மனதை பற்றி நீ சரியாக புரிந்துகொண்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்து கவனித்து அதன் அடிப்படைகளை
புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்ட பின் அதை நிறுத்துவது, அதை உனக்கேற்றவாறு செயல்பட வைப்பது,
என அது சுலபமாக உன் கைக்குள் வந்துவிடும்.

மனம் ஓய்வை தேடும் நேரத்தில் அதை புரிந்துகொள்வது சுலபம். ஆனால், உனக்கு மனம் எப்போது ஓய்வை தேடுகிறது என்பதும்
தெரியாதே!!, இருக்கட்டும், எப்போதெல்லாம் உன் மனம் நிதானமாய் நிம்மதியாய் இருப்பதாய் உணர்கிறாயோ,
அதாவது உனக்கு பிடித்தவரோடு பேசும்போது, நடக்கும்போது, உனக்கு பிடித்த புத்தகம், பாடல், கவிதைகள் படிக்கும்போது
இப்படி பல்வேறு சமயங்களில் மனம் ஓய்வாய் இருக்கும். அந்த சமயங்களில் அதை கவனி.

வெறுமனே கவனி. நீ அதனிடம் பேச முயற்சி செய்யவே செய்யாதே. இது தவறான போக்கு. அப்படி பேசுவது அர்த்தமற்றது.
வெறுமனே கவனித்தல் போதுமானது. அப்படி கவனித்து வர வர அதன் அடிப்படைகள் புரிந்துவிடும்.

அப்போது அதை தாண்டி செல்வது சுலபமானது.

மனதை தாண்டி என்ன இருக்கிறது? எல்லாம் மனதை தாண்டிதான் இருக்கிறது. மனம் வெறும் காவலாளி. சொர்க்கத்தின் காவலாளி.
அவன் அவ்வளவு சீக்கிரன் உன்னை உள்ளே விடமாட்டான். அவனை தாண்டி நீ சென்றுவிடு. சென்றுவிட்டால், அப்போது புரியும்
அந்த சொர்க்கமே உன்னுடையது என்று.

நன்றி,
ரங்கன்.

Monday, April 4, 2011

நீ காதலின் புன்னகை..!




உண்மைதான் புரிகிறது..
உன் பாசம் தெரிகிறது..

காதல் கொண்ட கண்ணில்
கோபம் கொட்டிக் கிடக்கிறது..

ஆசை சொல்லும் இதழில்
ஆத்திரம் பொங்கி வழிகிறது..

புன்னகை பூக்கும் முகம்
பூகம்பமாய் என்னை பார்க்கிறது..

தென்றல் வீசும் பேச்சு
இன்று இடியென இடிக்கிறது..

சாரல் வீசும் சொற்கள்..
கற்கள் வீசி செல்கிறது

வண்ண கண்களை கத்தியாக்கி
என் இதயத்தில் கீறாதே..

சொற்களின் சூரிய சுட்டீல்
என்னை சுட்டுவிடவும் பார்க்காதே..

தாமதம் தவறுதான்..
தயவுசெய்து என்னை மன்னி..

நாம் காதல்செய்யும் நேரமிது
புரிந்துகொள்ளடி என் கன்னி..

கண்கள் மெல்ல பார்த்து
காற்றாட காலாட நடந்து
காதல் செய்வதை விட்டுவிட்டு..

அட..
இதோ.. வருகிறது..
இன்னும் கொஞ்சம்..


அட வந்துவிட்டதே புன்னகை..!!
என் அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் நகை..!!



Monday, March 28, 2011

உன் பார்வையில்...!




புரட்டும் புத்தகம் பிடுங்கி எறிந்து
புதிதாய் பார்த்தாய் என்னை..

சீவி முடித்த தலை கலைத்து
சிரித்து பார்த்தாய் என்னை..

ஒரு கால் ஷூவை ஒளித்துவைத்து
ஒருமாதிரி பார்த்தாய் என்னை..

வெறும் தட்டை வெட்டென வைத்து
வெகுளியாய் பார்த்தாய் என்னை..

சட்டைபை நிறைய சில்லரை கொட்டி
சின்னதாய் பார்த்தாய் என்னை..

கைப்பையை காலியாக்கி
காளியாய் பார்த்தாய் என்னை..

நான் வாசல் நெருங்க
நீ ஓடிவந்து
கோபமாய் கிட்டே வந்து
காதோரம் சொன்னாய் நீ..

“லூஸே..இன்னைக்கு ஞாயிற்றுகிழமை”..


:))))

Wednesday, March 23, 2011

நான் இந்தியனில்லை.. நான் இந்துவுமில்லை..!!




எனக்கு இன்னைக்கு காலைல தாங்க தோணிச்சு..
அட.. நாம இந்த நாட்டுல பிறந்தது நம்ம தலையெழுத்தா?
இல்லை எதேச்சையான ஒரு விஷயமா? ம்ம்ம்..
எனக்கு நல்லா தெரியும் இது தலையெழுத்து இல்லைன்னு.. எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும்..
ஜூம் பண்ணி பண்ணி பார்த்தேன்.. ”இந்தியனாய் பிற”ன்னு எதுவும் எழுதலை.. ஸோ..நோ தலையெழுத்து..

அப்போ.. எதேச்சையா நடந்த ஒரு விஷயம்.. ஓ.. அப்போ நான் இந்தியனெல்லாம் இல்லை..
இங்க பிறந்ததால இந்தியன்னு மெச்சிகலாம்.. அப்போ இதுல என்ன பெருமை இருக்கு?
நிறைய பேரை பாருங்க.. நான் இந்தியன்.. நான் ஆரியன்.. நான் திராவிடன்.. நான் அது.. நான் இது..
ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ”..ன்”கள்.. முடியல..

இந்தியா ராக்கெட் விட்டா.. ஆஹா..இந்தியனாய் இருப்பதில் பெருமை.. அதே இந்தியா வேற நாட்டுகிட்ட
(முக்கியமா பாகிஸ்தான்)கிட்ட தோத்துட்டு வந்தா.. அந்த விளையாட்டு வீரர்கள் வீட்டை இடிக்கிறது.. பொம்மை எறிப்பு, அப்புறம்
இந்தியனாய் இருப்பதே அவமானம்னு புலம்பல்.

ஏன் இந்த வெட்டி பந்தா..ஏன் இந்த வீண் சோகம், வெறுமனே லாஜிக்கா யோசிச்சாலே போதும் இந்த எல்லா “..ன்”களும்
காணாம போய்டும். அப்படி என்னத்த இழந்துட்டீங்க.. அப்படி என்னத்த சாதிச்சிட்டீங்க.. ஒன்னுமில்லை..
இன்னும் இமயமலைதான் உசரமா இருக்கு.. இன்னும் கடலன்னை உங்களை மீறி சுனாமியா வரத்தான் செய்யுது..
Then what is the point in all the "ians"?

ஸோ..யாருக்கும் அவங்க அவங்க நாட்டை நினைச்சு பெருமைப்பட்டுக்கவோ, கேவலப்பட்டுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை!!

..அடுத்து வருவது மதம்..

ஸேம் லாஜிக்.. எதேச்சையா ஒரு இந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறக்கவேண்டியதா போச்சு.... உடனே நானும் இந்துவாம்..
என்ன நியாயம் இது? நான் இந்துவாக இருப்பதும் வேறுமதத்தினனாய் இருப்பதும் என் தனிப்பட்ட உரிமை. இவங்களா எப்படி என் முதுகுல
இந்துன்னு சீல் குத்தலாம்? முதுகுலனா கூட பரவாயில்லை..தெரியாது ..சட்டை போட்டு மறைச்சிடலாம்.. ஆனா
நெத்தில விபூதி, குங்குமம், அப்புறம் அதென்னது..ஆங்..சந்தனம்.. ஃபர்பெக்ட்.. தேசிய கொடி கணக்கா எங்கப்பா வெச்சிவிட்டு அனுப்புவாரு..
அவருக்காக அதை ஏத்துக்குட்டேன்..அவரோட மதத்துக்காக அல்ல!! அதை ஒரு கிறுஸ்துவ டீச்சர் அழிச்சப்போ ஒரு இந்துவா எனக்கு
கோபமே வரலை.. என் தந்தையின் பாசமான பிள்ளையா எனக்கு செம கடுப்பு.

இப்படி சின்னவயசுல இருந்தே மதம் என்னை எப்பவும் பாதிக்காம தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைச்சேன்.. இன்னும் நினைக்கிறேன்..
பட்..உலகம் அப்படி இல்லை.. எப்போ பாரு மதபீத்தல்கள். என் கடவுள்தான் பெருசு, உன் கடவுள் டம்மி பீசுன்னு அடிச்சுக்கறாங்க.
ஏன்.. இந்துகளுக்குள்ளயே.. மூணுகண்ணன் சிவன் பெருசா? நாலுகை நாராயணன் பெரிசான்னு இன்னும் சண்டை....
(சின்னவயசுல அம்மா மூணுகண்ணன் வரான்னு சொல்லி சோறு ஊட்டுவாங்க.. ஒருவேளை இவராத்தான் இருக்குமோ?!)

இப்படி.. மதம் சம்பந்தமா அடிச்சிக்கிறது அர்த்தமே இல்லாத ஒரு வேளை. (எனக்கு சாமி கும்பிடுவதே அர்த்தமில்லாத வேலை)
எதேச்சையா ஒரு இந்து குடும்பத்திலோ, ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ குடும்பத்திலோ பிறந்துவிட்டதால்..
நம்மை நாமே இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிருத்துவன் என்றோ நினைத்துகொண்டால் அது முட்டாள்தனம்.

சோ.. நம்மை பற்றி எதுவும் (கடவுள் உள்பட) எதுவும் கவலைப்படவில்லை. நாம் தான் தேவையே இல்லாமல் எல்லாவற்றையும்
பற்றி கவலைப்பட்டு, நேரத்தை வீணாக்கி மனநோயாளிகளாய் திரிகிறோம்.

மதமும், நாட்டு பற்றும் போலி வேஷங்கள். ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க.. நான் மனிதன்ன்னு பெருமைப்படுங்க.. உலக உயிரங்களிலேயே தன்னை தனக்குள் தேடும்
ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே.
வாழ்வை ரசித்துவாழ, நம்மால் மட்டுமே முடியும். அன்பும், அரவணைப்பும், கவிதையும், காதலும், பாட்டும், ஓவியமும்,
கலையும், நயமும், ஆடலும் பாடலுமாய்.. மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழும் ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே..!!

Tuesday, March 8, 2011

நில்.. கவனி... செல்..!

            

  

தினமும் சாலைகளையும் மனிதர்களையும் பார்க்கிறோம்.. போக்குவரத்து நிறுத்தங்கள்,
சிகப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள், பிறகு மீண்டும் பயணம்.. இப்படி இருக்க..ஒரு
நாள்.. இந்த சிகப்பு, பச்சை, மஞ்சள் என விளக்குகள் எறிய.. என் மனதிலும், இவைகளை சார்ந்து ஒரு விளக்கு எரிந்தது.

நில்..

நில்.. அதாவது.. வேகம் குறை. சில நேரங்களில் ரொம்ப கடுப்பா இருப்பீங்க. இல்ல ரொம்ப டென்ஷனா குழப்பத்தோட இருப்பீங்க. இப்போ கொஞ்சம் கவனிச்சு எல்லாத்தையும் நிறுத்துங்க.
அந்த இடத்தை விட்டு வெளியே வாங்க. வானம் பாருங்க. தண்ணி குடிங்க. உங்களுக்கு பிடிச்ச பாடலை கேளுங்க. வேகத்தையும் கோபத்தையும் விட்டுட்டு நிதானமாக, அமைதியா கூலா இருங்க. இப்போ அடுத்த கட்டம்.

கவனி..

கவனி.. மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது? ஏன் இந்த சூறாவளி? எதனால்? எக்ஸ்க்யூஸ்மி,
எதனால் என்று யோசியுங்கள். யாரால் என்று அல்ல. அப்படி யோசிப்பதில் பயனே இல்லை. மீண்டும் வெறுப்பும் கடுப்புமே கிளம்பும். எனவே எதனால்.. உங்கள் மனதில் நீங்களே எடுத்துவைத்துகொண்ட எந்த முடிவால் இந்த அவதி? அது தேவையானதா? சூழ்நிலையை சரியாக்க என்ன செய்யலாம்.. இப்படி வரிசையாக பொறுமையாக கவனியுங்கள். வரிசைப்படுத்தி திட்டமிடுங்கள்.

செல்..

அடுத்து செல்வது..விருட்டென்று கிளம்புவதல்ல... கொஞ்சமாக.. கொஞ்சம்கொஞ்சமாக..
0... முதல்.. 10.., 10 முதல் 20.., 20 முதல் 40.. இப்படி.. போட்ட திட்டங்களை நிதானமாக
ஒன்றொன்றாய் செயல்படுத்துங்கள்.. அவசரமே வேண்டாம்.. அதிவேகமாக செயல்பாடுகள்,
உடனடி தோல்விகளில் முடியும். எனவே நிதானமாய் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.





 ************************************

இவையனைத்தும் என் சொந்த அனுபவத்தில் கண்டது. உங்கள் அனுபவங்கள் வேறுபடின் அதையும் பகிருங்கள்.
நன்றி..!!