Showing posts with label ஒரு தொடர்பதிவின் வழியில். Show all posts
Showing posts with label ஒரு தொடர்பதிவின் வழியில். Show all posts

Thursday, November 5, 2009

பிடிக்கும்...ஆனா...பிடிக்காது!!!


எத்தன சொன்னாலும் கேக்குறாங்களா..ஹ்ம்ம்..
நானும் சிக்கிட்டேன் இந்த தொடர்பதிவில்..
அழைத்த முரளிக்குமாருக்கும், கலாம்மா(புதுகைத் தென்றல்)க்கும் நன்றி..ரெடி ..ஸ்டார்ட்..

1. அரசியல் தலைவர்:

பிடித்தவர்: காமராஜர்.

பிடிக்காதவர்: இப்போதைய எந்த _____ யும் பிடிக்காது..!!

2. எழுத்தாளர்:

பிடித்தவர்: சுஜாதா..(even we both have same Real Name,S.Ranga Rajan)

பிடிக்காதவர்: சாரு நிவேதிதா.(கண்ல படாம இருந்துக்க தம்பி, இல்லன்னா நான் பொறுப்பில்ல)

3. கவிஞர்:

பிடித்தவர்: பாரதியார், வைரமுத்து, கண்ணதாசன், தமிழரசி(அட நம்ம எழுத்தோசை எழுதுறவங்க!!)

பிடிக்காதவர்: டப்பாங்குத்து பாடல் எழுதும் இரண்டாம் தர கவிஞர்..?!கள்..

4. இயக்குனர்:

பிடித்தவர்: ஸ்ரீதர், பாலசந்தர், மணிரத்னம், அமீர், சேரன், பாலா, ஷங்கர்.

பிடிக்காதவர்: பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார்(ஆதவனுக்காக மட்டும்)

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம், சூர்யா

பிடிக்காதவர்: விஜய், அஜீத்.(மக்களை ஏமாத்தும் மவராசனுங்க..நல்லா இருங்கடே!)
6. நடிகை:

பிடித்தவர்: அசின், ஆச்சி மனோரம்மா, ஜெனிலியா(உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதே ஏன்?)

பிடிக்காதவர்:
நமீதா(தண்டம் ஆஃப் தமிழ் சினிமா),
பியா(அழகு முகத்தை குரங்கு மாதிரி வெச்சிகிட்டு நடிக்கிது இது),
த்ரிஷா(நீங்க நடிச்சு நான் பார்த்ததே இல்ல! aaannggg..!!)
நயன்தாரா (என் தாய்மாமனை கூட விட்டு வெக்கலைங்க இவங்க!!)

7 . இசையமைப்பாளர்:

பிடித்தவர்: இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர்

பிடிக்காதவர்: எல்லார் இசையிலும் ஏதாவது ஒரு பாடல் பிடித்திருக்கிறது.

8. பாடகர்:
பிடித்தவர்: விஜய் யேசுதாஸ் (தாய் தின்ற மண்ணை பாட்டுக்காக), கார்த்திக் , எஸ்.பி.பி, மனோ

பிடிக்காதவர்: உதித்..(வேணாம்..தமிழ் பாவம்)

9. பாடகி:
பிடித்தவர்: ஜானகி, சொர்ணலதா, சுனந்தா, ஜென்சி, நித்யஸ்ரீ.

பிடிக்காதவர்: மன்மத ராசா பாடகி.
10. விளையாட்டு வீரர்:

பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த், சக் தே இண்டியா! தன்ராஜ் பிள்ளை.

பிடிக்காதவர்: அம்புட்டு கிரிக்கெட் வீரர்களையும்...
( ball பட்டாலே மேட்ச்சுக்கு லீவ் எடுக்குறானுங்க..இவுனுங்க வீரர்களாம்..ச்சீஈஈ)..

ஹப்பாடி..ஒரு வழியா தொடர்பதிவு போட்டாச்சு..
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது..(சிக்கவிடுவது!!)
1. ரம்யா(will to live)
2.தமிழரசி(எழுத்தோசை)
3. ரசனைக்காரி(எனது ரசனை)
4. சீனா
5. இயற்கை(இதயப்பூக்கள்)
6.மயாதி(கொஞ்சும் கவிதைகள்)

Wednesday, September 16, 2009

ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னை தேடியே!!

http://www.pawyourheartout.co.uk/resources/ang2-x.jpg
தங்கை கல்யாணம் முடிந்து அப்பாடி என சாய்ந்திருந்த நேரம் ஒரு மெயில் வந்தது..
பார்த்தால்.. நமது தோழி இயற்கை மகள் என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார்..

அகமகிழ்ந்து.. மகிழ்ச்சியோடு என் வேண்டுதல்களை ஏஞ்சலிடம் கேட்க தொடங்கிவிட்டேன்..

முதலில் இந்த ஏஞ்சல் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சேலையிலோ சுடியிலோ வந்து நிக்கட்டும் அப்படின்னு நினைச்சுகிட்டேன்.
உடனே இந்த ஏஞ்செல சேலைக்கு மாறி என் மனதை கொள்ளை கொண்டது..(imagine பண்ணிக்கோங்க.. எனக்கு பிக்சர் கிடைக்கலை..!!)

வெச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டே இருந்தா எப்படி.. என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றது ஏஞ்செல்..

சரி கேக்குறேன்...

1. முதல் வரம்- யாரும் இனிமே இந்த உலகத்துல ஊனமா பிறக்க கூடாது.

2. இரண்டாவது வரம்- எந்த குழந்தையும் தாயில்லாமல் வாட கூடாது.

3. மூன்றாவது வரம்- என்னை சேர்ந்த உறவுகளும், நண்பர்களும் இப்பவும்போல எப்பவும் மகிழ்ச்சியா என்னோடு இருக்கணும்.

4. நான்காவது வரம்- எது வந்தாலும் தைரியத்தையும் நிதானத்தையும் இழக்காத மனசு வேண்டும்.

5. ஐந்தாவது வரம்- பணத்தின் மதிப்பு குறைந்து குணத்தின் மதிப்பு உயரணும்.

6. ஆறாவது வரம்- இயற்கையை (Nature..!!)மேம்படுத்தும் விதமாக மக்கள் செயல்படணும்.

7. ஏழாவது வரம்- நினைச்ச நேரத்தில் நினைச்ச இடத்தில் இருக்கும் சக்தி வேண்டும்..
(பஸ் செலவு, ஃப்லைட் செலவு மிச்சம், அதோட.. என் காதலி பார்க்க விரும்புற இடத்துக்கு
அவளை கூட்டிட்டு சுத்தலாம்ல..)

8. எட்டாவது வரம்- இந்த எட்டாவது வரத்தை என் பதிவை படிக்கிறவங்க கேட்கட்டும்...

9. ஒன்பதாவது வரம்- அப்பா...உனக்குதான் தெரியுமே ஏஞ்செல்.

10. பத்தாவது வரம்- இதை படிக்கிற என் நண்பருக்கு/ நண்பிக்கு இந்த வருஷம் மகிழ்ச்சியான இனிய வருடமா இருக்கணும்.
(அப்போ அடுத்த வருஷம் என்ன பண்றதாம்? மறுபடியும் இங்க வந்து படிங்க!!)

இதுக்கு மேலயும் வேண்டிக்க நிறைய இருக்கு. என்ன பண்றது பத்தே வரம் தானாம்.. இந்த ஏஞ்செல் சுத்த கஞ்சம்..பா.. !
சரி சரி. இன்னும் நாலு பேருக்கு இவளை அனுப்பனுமே!!

நம்ம முரளிக்குமார் பத்மநாபன்..

ரெண்டாவது நம்ம சென்ஷி..

மூன்றாவது நம்ம சுபாஷினி டீச்சர்..

நான்காவது நம்ம சீனா சார்..

இவங்க எல்லாருக்கும் என் இனிய பரிசாய் இந்த ஏஞ்செலை அனுப்பி வெக்கிறேன்..

போய்ட்டு வா தாயி..போய்ட்டு வா..!!