Thursday, May 15, 2014

கனவுகளில் வாழ்க்கை






கனவுகளை என்னால் வெறுமனே கனவுகள் என்று ஒதுக்க முடியவில்லை, ஏனோ கனவுகள் என்னை மிகவும் லைவ்லியாக உணரவைக்கின்றன, அதுமட்டுமல்லாது ஒரு வேளை கனவுகளும் ஒரு சின்ன வாழ்க்கையாக இருக்குமோ என்று தோன்றுகிறது, ஒவ்வொரு கனவின் முடிவிலும் நான் இறக்கிறேன், மீண்டும் இந்த உடலின் வாழ்வை அனுபவிக்க வந்துவிடுகிறேன் என்று சொல்லத் தோன்றுகிறது. கனவுகளைப் பற்றிய ஆய்வுகள் ஏற்கனவே நிறைய நடந்திருந்தாலும், அவைகளினூடே உள்ள ஒரு சுதந்திரத்தை நிஜவாழ்வில் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அங்கே கட்டுகளற்ற கற்பனை வெளியில் பயணித்துவிட்டு, மீண்டும் உடல் சிறைக்குள் வருவது என்பது எனக்கு தினசரி எரிச்சலாக இருந்தது, இப்பொழுது பழகிவிட்டது. பிறப்பின் பொழுது என்னுடைய அழுகைக்கான காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும், இந்த சிறைக்குள் வந்து சிக்கிகொள்கிறோமே என்று (ஹாஹாஹா!!). ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை, கனவோ அல்லது உடல் வாழ்வோ, விழிப்புணர்வின் நிலை எப்பொழுதும் தூயதாய் இருக்கிறது, அதன் முன் உடல் வாழ்க்கையோ கனவோ, எது நிகழ்ந்த போதும் அது, அதாவது என் நிஜம், அசையாது நிற்கிறது. அது அப்படித்தானே இருக்கும். 

No comments:

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.