Tuesday, August 25, 2009

காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!


சேர்ந்தே இருந்த நேரத்தில்
சண்டையிட்டே கழித்தோம்..

பிரிந்த சில நொடிகளில்
ஒருவரில் ஒருவரை இழந்தோம்..

ஏந்தான் நாம் பிரிந்தோம் என்று
ஏங்கியே கழித்தோம்.. நம் பிரிவை!

ஏன் இன்னும் சேரவில்லை என்று
எப்போதும் பார்த்தோம்.. நம் சாலைகளை!

ஏன் இன்னும் விடியவில்லை என்று
மாலை ஏழுமணிக்கே மணி பார்ப்போம் நாம்!

இன்னுமா இருட்டவில்லை என்று
மதியத்திலேயே மதி மயங்குவோம் நாம்!

இப்படி நமக்கான காலமும்
நமக்கான நாட்களும்
நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!

நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து!

5 comments:

Anonymous said...

ஒஹ் காதலில் காத்திருப்பு தொடங்கி விட்டதா? இதுவும் சுகம் தான் சேர்வோம் என்ற நம்பிக்கை கரை இருக்கும் வரை காதல் சுகமே!!!

கிளியனூர் இஸ்மத் said...

//இப்படி நமக்கான காலமும்
நமக்கான நாட்களும்
நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!

நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து! //

இளம் காதலை சொல்கிறீர்....நான் இறைக் காதலை பார்க்கிறேன்...!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இப்படியே மணி பார்த்துக் கொண்டிருக்க நாள் ஓடிவிடும். பிறகு ஒன்றுமே நடக்காது. கவனம் ரங்கா!
haa haa haa

S.A. நவாஸுதீன் said...

"மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவுகள் சீக்கிரம் வருமா!." அந்த மாதிரி நல்லா இருக்கு ரங்கா

*இயற்கை ராஜி* said...

நல்லாதான் யோசிக்கறீங்க‌

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.