Monday, January 25, 2010

சிகப்பாய் சில பூக்கள்!!


முதல் புன்னகை,
சின்ன அறிமுகம்,
நயமான பேச்சுக்கள்,
பூத்தன அவர்களிடையே
கண்ணியமாய் வெள்ளை பூக்கள்..;

தொடும் தூரத்தில் விரல்கள்,
தொட அஞ்சும் நெஞ்சம்,
கண் பார்த்த பேச்சு,
பூத்தன அவர்களிடையே
நட்பாய் மஞ்சள் பூக்கள்..;

பார்த்த கணம் புன்னகை,
பேச்சில் தொடும் அக்கறை,
பிரியும் போது மென்வருத்தம்,
பூத்தன அவர்களிடையே,
பாசமாய் நீலப் பூக்கள்..;

மறந்து விட்ட கர்ச்சீப்,
ரசித்து பார்த்த புத்தர் சிலை,
சருகான மல்லிப்பூ,
பூத்தன அவர்களிடையே,
நேசமாய் ஊதா பூக்கள்..;


மன்னித்துவிடு
நான் உன்னோடு அப்படி
பழகவில்லை;
இனிமே நான் சந்திக்க வேண்டாம்..

சில கணங்களில்
செத்து போயின
சிகப்பாய் சில பூக்கள்..!!

4 comments:

கனிமொழி said...

:-) good...

சுசி said...

ஒத்துக்கிறேன் ரங்கன்..

நீங்க ரொம்ப புதுமையானவ்ர்தான் :)))

pudugaithendral said...

:))) ரொம்ப நல்லாயிருக்கு

ரோகிணிசிவா said...

supera iruku ,
nalla creativity boss

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.