Saturday, June 18, 2011

காதலிப்பவனா நீ..? கொஞ்சம் இங்கே கவனி..!!





உடல்தேடும் பெண்ணோடு
ஒருபோதும் ஒட்டாதே..
பொருள்தேடும் பெண்ணோடு
பொடியேனும் சேராதே..
மணம்தேடும் பெண்ணோடு
மணித்துளியும் செல்லாதே..

சொல்லாலும் செயலாலும்
சொல்லாத செயலாலும்
சொல்லொனா துயரம் சேரும்
நான் சொல்லியும் இவரோடு 
சேர்ந்தால்..

வாழ்க்கை என்னவென
வழியெங்கும் தேடிடும் நீ
வீணாய் தொலைப்பாய் அஃதை..
வீண் வீணை இடைதனில்
மயங்கி சேர்ந்தால்..

மண்ணோடு மண்ணாய்
தூசோடு தூசாய் 
காற்றில் கரைந்தே போவாய்
வீண் கரியாய் எரிந்து சாவாய்..

உன்னை ஒட்டி ஒட்டி
உன்னை உறிஞ்சிட கண்டால்
இடப்பாகம் போனாலும் போ - என
உடன்வாழாதே உடனே வா..!!

உயிர்தேடி உயிர்தேடி
தன் உளம்காட்ட துடிக்கின்ற
உத்தமப் பெண்ணோடு சேர்..
இல்லேல் துணிந்து நீ
துறவறம் பூண்...

அன்பும் காதலும்
ஆழியாய் இன்பமும்
மண்ணில் பூத்திடும் பார்..
உளகாதலியவளை நீ சேர்..

உன்னில் தன்னை ஊற்றிட
விண்ணில் உன்னை சேர்த்திட
உனக்காக தன்னை தந்தால்
அவள் துகில்துவை 
துகில்துவை
தப்பேதும் இல்லை...

தாய்க்கு நிகராய் உன்னை
தரணிக்கு ஏற்ற துடிக்கும்
இன்னொரு தாயாவாள் உனக்கு 
இவளே உன் விடியற்கிழக்கு..!!
,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
,,,,,
,,,
,

8 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
பதிவுலகில் எங்கு நோக்கினும்
காதல் குறித்தும் காதலி குறித்தும்
கவிதைகள் மலிந்து கிடக்கின்றன
இதுபோல் ஒரு கவிதை இருந்தால்
நல்லது என நானே நினைத்திருந்தேன்
மிகச் சரியான அருமையான தேவையான பதிவு
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

mee the first.

vAalthukkal.

Migavum karuthula Kavithai.

Ungalranga said...

@Ramani,

நன்றி ரமணி ஸார்..

மீண்டும் சந்திப்போம்...!!

Ungalranga said...

@siva,

Thank u Siva..!!

Meet u soon..!!

சேலம் தேவா said...

//தாய்க்கு நிகராய் உன்னை
தரணிக்கு ஏற்ற துடிக்கும்
இன்னொரு தாயாவாள் உனக்கு
இவளே உன் விடியற்கிழக்கு..!!//

சரியா சொன்னீங்க ரங்கன்..!!

இராஜராஜேஸ்வரி said...

தாய்க்கு நிகராய் உன்னை
தரணிக்கு ஏற்ற துடிக்கும்
இன்னொரு தாயாவாள் உனக்கு
இவளே உன் விடியற்கிழக்கு..!!
,,,,,,,,,,,,,,,,,,//

வாழ்த்துக்கள் விடியலுக்கு.

மாய உலகம் said...

உடல்தேடும் பெண்ணோடு
ஒருபோதும் ஒட்டாதே..
பொருள்தேடும் பெண்ணோடு
பொடியேனும் சேராதே..

உயிர்தேடி உயிர்தேடி
தன் உளம்காட்ட துடிக்கின்ற
உத்தமப் பெண்ணோடு சேர்..
இல்லேல் துணிந்து நீ
துறவறம் பூண்...

வரிகள் அல்ல உன்னதங்கள்... rajeshnedveera

www.maayaulagam-4u.blogspot.com

தனி காட்டு ராஜா said...

Simply Super :)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.