Wednesday, April 8, 2009

என் அன்பு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!




அட.. !! என்ன இன்றைக்கு உனக்கு அழகு கூடி விட்டது?

என்ன உன் நடையில் ஒரு கம்பீரம் மிளிர்கிறது?

உன் கண்ணில் காந்தம் எதும் வைத்துவிட்டான கடவுள்
இப்படி ஈர்க்கிறது என்னை?

அடிக்கடி என்னை அழைத்து சிரிக்கிறதன் அர்த்தம் என்னவோ?

எதோ சொல்ல வருகிறாய்.. காபி கொடுக்கும் போது புதியதாய் புன்னகை வேறு...?

"கல்யாண நாளா?" என்று அப்பாவின் காதோரம் கேட்டேன்.

அந்த துக்க தினம் இன்று இல்லை என்று அப்பா கிண்டலடிக்கிறார்.

வேறென்ன..

உன் மாமியார் கிளவியிடம் கேட்டேன்.."ம்ம்கும்" ..என்று முகத்தை திருப்பிகொள்கிறது.

அட.. என்னம்மா ஆச்சு... உனக்கு..

அட.. இன்று ஏப்ரல் எட்டா?

நேராக சென்றேன்... கையை பிடித்து நிறுத்தி சொன்னேன்.

"ஹாப்பி பர்த்டே மா"

"அடடா....!! இரு மேட்டூர் போகலாம் அங்கே அழு.. அணையாவது நிரம்பட்டும்."

"சிரிக்காதே கள்ளி.. !! சொல்லாமல் சொன்ன உனக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என் இதயத்தில்."

நகரு.. இன்று நான் சமைக்கிறேன் என்றேன்.

நான் நீண்ட நாள் வாழ பிடிக்கவில்லையா என்று கலாய்கிறாய் நீ.

எதாவது செய்ய வேண்டுமே ..ஆசையோடு நின்றேன்.

"நீ வாழ்வில் சிறப்பானவனாக வா.. அது போதும்." என்றாய்.

"நிச்சயமாக மா.. நிச்சயமாக"

"இப்போது இருவருமே மேட்டூர் கிளம்புங்கள்" என் கண்ணீர் துடைத்துவிட்டார் அப்பா.



பாட்டு பாஸ்கி : மம்மீ.. ஹாப்பி பர்த்டே..வாழ்த்துக்கள் அம்மா.
இவன் என்னா இப்படி உருகறான். அடக்கிவைங்க அவனை.

6 comments:

சென்ஷி said...

தங்களின் தாயாரின் பிறந்த நாளிற்கு எனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன் :-)

நாமக்கல் சிபி said...

ஹாப்பி பர்த்டே மை டியர் சிஸ்டர்!

நாமக்கல் சிபி said...

மாப்பி, சாயங்காலமா ஃபோன் பண்ணுறேன்!

இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன்!

Ungalranga said...

@ சென்ஷி,

நன்றி தலைவா!!

Ungalranga said...

@நாமக்கல் சிபி,

நன்றி தல.. சீக்கிரம் போன் பண்ணுங்க. வெயிட்டிங்.

Thamiz Priyan said...

தங்களின் தாயாரின் பிறந்த நாளிற்கு எனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன் :-)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.