Thursday, May 21, 2009

அவளின் சிவந்த உதடுகளுக்கு!!





உன்னை பற்றி எழுதும் வார்த்தைகளை கவிதை என்கிறார்கள்..
நீயோ யாரை நினைத்து எழுதினாய் என்று என்னை முறைக்கிறாய்.
என்ன செய்வது என்று தெரியாமல்...
எழுத்தோடு நான் ஏக்கமாய் காத்திருக்கிறேன்..உன் வரவுக்காக.

*******************

என்னை தூண்டிவிட்டு விடுகிறாய்..
என் தவிப்புகள் தீயாய் எறிந்து ..
என்னை தீர்த்துவிடும்போது..
என்னோடு இருப்பதில்லை.. நீ.. :(

**********************

என்ன வேண்டும் என்று கேட்காதே இனிமேல்...
என்னிடம் எப்போதும் இருக்கும் ஒரே பதில்..
“நீ மட்டும் போதும்”..

**************************




பாட்டி சொல்கிறார்..
மற்றவரின் எச்சில் பண்டத்தை உண்ணகூடாதாம்..

அவர்களுக்கு எப்படி தெரியும்...
உன் உதடுகளின் சுவை.

****************************

காலெல்லாம் ரத்தம்..
நம் காதலின் கால் தடங்களின் மீது
ஒற்றையாய் நான் நடந்த போது..

********************************

வெள்ளி மழையின்.. ஒவ்வோரு துளியும்..
உன் முத்தங்களாய் சேர்கிறது..
என் மேனியில்..

5 comments:

நாமக்கல் சிபி said...

//வந்தது வந்துட்டீங்க.. வாழ்த்திட்டு போங்க.
அது என் வளர்ச்சிக்கு உதவும்.//

மாப்பி,
அப்படியே காம்ப்ளானும் சாப்பிடு!

Anonymous said...

ஹைக்கூ கவிதைகள் அட்டகாசம்...மோகமுள்ள தாகம் கொண்ட கவிதைகள்

Anonymous said...

superb

சென்ஷி said...

:-))))

//என்ன வேண்டும் என்று கேட்காதே இனிமேல்...
என்னிடம் எப்போதும் இருக்கும் ஒரே பதில்..
“நீ மட்டும் போதும்”..//

இது ரொம்ப பிடிச்சுருக்குது!

சென்ஷி said...

//Labels: கவிதை, கவுஜ, காதல், சிந்தனை, புதுமை//

:-))

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.