Tuesday, November 9, 2010

வாழ்ந்துவிடு..!!


ஓடியாடி விளையாடு..
இந்த ஓய்வற்ற வாழ்க்கை விளையாட்டை..

யாரும் போடவில்லை சட்டம்..
இது யாருக்கும் புரியா திட்டம்..

பத்தாது இந்த வாழ்வு
பத்து நூறாயிரம் வாழ்க்கை வாழ்..
வாழும் கணமெல்லாம்..
வாழ்வை உறிஞ்சி வாழ்!!

விட்டுவிடாதே..
சொட்டுவிடாதே..
முழுதாய் குடி..
மிச்சம் விடாதே..!!

நீ மிச்சத்தில் 
பிறந்த மிருகம்..
நீ எச்சத்தில் 
பிறந்த சொச்சம்..
ஆனால் உச்சம்
என்பதெல்லாம் உனக்கு
துச்சம்..

அனுமதி நதியை
உன்னை அள்ளிகொண்டுபோக
அனுமதி வாழ்வை
உன்னுள் தன்வழிபோக..

துளியாய் துள்ளாதே..
துடித்தே  ஆவியாவாய்..
கடலில் குதித்துவிடு..
கடலாய் மாறிவிடு..

நீ நின்ற இடம் 
நாளை உனக்கில்லை..
நீயே யாதுமானால்
நிறைவை தவிர வேறெதுவுமில்லை.


No comments:

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.