Monday, March 28, 2011

உன் பார்வையில்...!




புரட்டும் புத்தகம் பிடுங்கி எறிந்து
புதிதாய் பார்த்தாய் என்னை..

சீவி முடித்த தலை கலைத்து
சிரித்து பார்த்தாய் என்னை..

ஒரு கால் ஷூவை ஒளித்துவைத்து
ஒருமாதிரி பார்த்தாய் என்னை..

வெறும் தட்டை வெட்டென வைத்து
வெகுளியாய் பார்த்தாய் என்னை..

சட்டைபை நிறைய சில்லரை கொட்டி
சின்னதாய் பார்த்தாய் என்னை..

கைப்பையை காலியாக்கி
காளியாய் பார்த்தாய் என்னை..

நான் வாசல் நெருங்க
நீ ஓடிவந்து
கோபமாய் கிட்டே வந்து
காதோரம் சொன்னாய் நீ..

“லூஸே..இன்னைக்கு ஞாயிற்றுகிழமை”..


:))))

No comments:

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.