Tuesday, March 8, 2011

நில்.. கவனி... செல்..!

            

  

தினமும் சாலைகளையும் மனிதர்களையும் பார்க்கிறோம்.. போக்குவரத்து நிறுத்தங்கள்,
சிகப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள், பிறகு மீண்டும் பயணம்.. இப்படி இருக்க..ஒரு
நாள்.. இந்த சிகப்பு, பச்சை, மஞ்சள் என விளக்குகள் எறிய.. என் மனதிலும், இவைகளை சார்ந்து ஒரு விளக்கு எரிந்தது.

நில்..

நில்.. அதாவது.. வேகம் குறை. சில நேரங்களில் ரொம்ப கடுப்பா இருப்பீங்க. இல்ல ரொம்ப டென்ஷனா குழப்பத்தோட இருப்பீங்க. இப்போ கொஞ்சம் கவனிச்சு எல்லாத்தையும் நிறுத்துங்க.
அந்த இடத்தை விட்டு வெளியே வாங்க. வானம் பாருங்க. தண்ணி குடிங்க. உங்களுக்கு பிடிச்ச பாடலை கேளுங்க. வேகத்தையும் கோபத்தையும் விட்டுட்டு நிதானமாக, அமைதியா கூலா இருங்க. இப்போ அடுத்த கட்டம்.

கவனி..

கவனி.. மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது? ஏன் இந்த சூறாவளி? எதனால்? எக்ஸ்க்யூஸ்மி,
எதனால் என்று யோசியுங்கள். யாரால் என்று அல்ல. அப்படி யோசிப்பதில் பயனே இல்லை. மீண்டும் வெறுப்பும் கடுப்புமே கிளம்பும். எனவே எதனால்.. உங்கள் மனதில் நீங்களே எடுத்துவைத்துகொண்ட எந்த முடிவால் இந்த அவதி? அது தேவையானதா? சூழ்நிலையை சரியாக்க என்ன செய்யலாம்.. இப்படி வரிசையாக பொறுமையாக கவனியுங்கள். வரிசைப்படுத்தி திட்டமிடுங்கள்.

செல்..

அடுத்து செல்வது..விருட்டென்று கிளம்புவதல்ல... கொஞ்சமாக.. கொஞ்சம்கொஞ்சமாக..
0... முதல்.. 10.., 10 முதல் 20.., 20 முதல் 40.. இப்படி.. போட்ட திட்டங்களை நிதானமாக
ஒன்றொன்றாய் செயல்படுத்துங்கள்.. அவசரமே வேண்டாம்.. அதிவேகமாக செயல்பாடுகள்,
உடனடி தோல்விகளில் முடியும். எனவே நிதானமாய் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.





 ************************************

இவையனைத்தும் என் சொந்த அனுபவத்தில் கண்டது. உங்கள் அனுபவங்கள் வேறுபடின் அதையும் பகிருங்கள்.
நன்றி..!!


1 comment:

டக்கால்டி said...

அருமையா சொல்லி இருக்கீங்க. பின்பற்ற முயற்சிக்கிறேன்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.