Wednesday, June 3, 2009

நானும் இந்த வலையில் சிக்கிவிட்டேன்.. !!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இப்போதான் எனக்கும் அந்த யோசனை வருது. இருந்தாலும் சொல்றேன்.
சும்மா திடீர்னு தோணிண பேர்தான் இது. (ஹிஹி.. இதுக்கே இவ்ளோ யோசனையான்னு கேக்ககூடாது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அந்த அறுவை மெகா சீரியலை பாட்டியோடு உக்காந்து பார்த்த போது.. அவ்வ்வ்வ்....!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும்,
ஏனோ தெரியலை மத்தவங்க பிடிக்கலைன்னுதான் சொல்றாங்க..
(இன்னும் பயிற்சி வேணுமோ?!)
4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன் .. அதனால்..
...


கோழிக்குழம்பு நல்லா திக்கா காரமா இருக்கணும். அப்புறம் அந்த முட்டை பொரியல்.
(அதான் சொன்னேன்ல.. நான் - வெஜிடேரியன் என்று.. !!)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெல்லாம் .. ஆமா.. ஏன் வெச்சிக்ககூடாது. பிடிச்சா நண்பர்களா இருப்போம். இல்லியா ப்ரெண்ட்ஸாவே இருப்போம்.. வாங்க பழகலாம்..!!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதலில் குளிக்கவே பிடிக்காது. இருந்தாலும் அருவிதான் எனக்கு பெஸ்ட். சுருளி பால்ஸ்ல கடைசியா குளிச்சேன். ஆகா.. அருமையோ அருமை.. என் ஜாய் பண்ணி குளிச்சேன். நீங்களும் போய் பாருங்க. அருமையா இருக்கு.




7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் , கண்கள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: பிடிக்காத விஷயங்களை மாற்றிகொள்வது.

பிடிக்காத விஷயம் : பிடிக்காத விஷயங்களே இல்லாமல் போனது. அதான் எனக்கு பிடிக்கலை..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் பார்ட் பார்ட்டா பிரிக்க ஆள் வரலை. வந்ததும் சொல்றேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்பா ..............


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெண்ணிற ஆடை நிர்மலாவின் முதல் படத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம்தான்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம். பார்த்துகொண்டும் கேட்டுகொண்டும்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம், கறுப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மணம், சந்தன வாசம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜோசப் பால்ராஜ்- மாரநேரிகாரர்.
சென்ஷி- பின்நவீனத்துவத்தின் பிள்ளை.
சீனா- ஓல்டு ஈஸ் கோல்டு மா

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

தமிழரசியின் கவிதைகள் அத்தனையும் அவ்வளவு அழகு. படிக்கதூண்டுபவை அவை. கலக்கும் கவிதை சோலை அவர்.

17. பிடித்த விளையாட்டு?

கில்லி தாண்டி, நொண்டி குதிர, கண்ணாமூச்சி, அஞ்சாங்கல், ரிங்கா ரிங்கா ரோஸஸ்...

இதெல்லாம் பிடித்த விளையாட்டுகள் அப்போது.

இப்போது ஷட்டில் , புட்பால், ஸ்நோ பவுலிங்க்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


ஆக்ஷன் திரில்லர்,
அறிவியல் புனைவு படங்கள்,
அனிமேஷன் படங்கள்.
ப்ரெஞ் படங்கள் அதிகம் பார்க்க பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, டுவல் என்கிற ஆங்கிலப்படம்.(இரண்டையும் ஒரே நாளில் பார்த்ததால் குறிப்பிடுகிறேன்.)

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழிதான்.

ஏனெனில் அந்த மாதங்களில் இரவின் நீளம் அதிகம். நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.

அதுவும் காலை குளிரில் குளித்து கோவிலுக்கு போனால் அட..அட.. திவ்ய தரிசனம் கிட்டுமே..(கடவுளின்!!)..


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Take it Easy- பாகம் 1.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு நாளைக்கு மூன்று முறை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு, வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை.

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்.(பொய்ய்ய்ய்ங்ங்ங்ன்ங்....!!)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

குஜராத் .. ஒரு சுற்றுலாவிற்காக..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

நல்லா வரைவேன்.
கவிதை எழுதுவேன்.
பாட்டுக்கு தாளம் போடுவேன்.
நன்றாக சமைப்பேன்.
எல்லோருடைய தனித்திறமைகளையும் ரசிப்பேன்.
அதைப்போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உங்களை புத்திசாலின்னு யாரோ சொன்னதை...

(சும்மா உல்லுலாயி.. நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்!!)



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாங்களெல்லாம் அகம் ப்ரம்மாஸ்மிப்பா..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிசர்லாந்து, சிம்லா, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

அவங்க வரட்டும்.. கேட்டு சொல்றேன்..ஓக்கே!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மகிழ்ந்திரு, மகிழ்ச்சிபடுத்து.



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சீனா, ஜோசப், சென்ஷி.

5 comments:

cheena (சீனா) said...

ஹாய் ரங்கா

என்னையே கூப்டிருக்கே

ம்ம்ம் - பதில் சொல்லணுமா - நானு

பாக்கறேன்

Ungalranga said...

சீக்கிரம் சொல்லிருப்பா சீனா..
லேட் பண்ணாதே...!!

வருகைக்கு நன்றி...!!

சென்ஷி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-(

Anonymous said...

2.அழவேண்டியதற்கு தான் அழுது இருக்க ரங்கா...
3.கோழியத் தான் தின்னறயே அது போடற முட்டைய கூட விட்டு வைக்க மாட்டியா?
5. நல்ல பாலிஸி
6.சீ போய் குளி
8. எப்படி இதொல்லாம் அதா வருதா
11.ரொம்பதேன்
16.சீ கள்ளா பொய்யா சொல்றா
18.சீக்கிரம் போடு அப்புறம் தடவிட்டு திரிய போற...
26.VERYGOOD KEEP IT UP
30.உதவி செய்
32.முயற்சிதான் முடியுமா என்பதே ஹிஹிஹிஹி

ஜோசப் பால்ராஜ் said...

வாயக் குடுத்து வம்பில மாட்டிக்கிட்டேன் நானு

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.