Saturday, June 6, 2009

நீ வருவாய் என..!!


என்னமோ வரவர.. கவிதைகள் தான் அதிகமாய் பதிவேறுகிறது என் வலைப்பக்கத்தில்.இருந்தாலும் இதை ரசிக்கவும் சிலர் என்னை பின் தொடருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சிதான்.
சரி.. இப்போது கவிதை உலகத்துக்கு போவோம்.


அடடே!! வந்துவிட்டாயா
வந்தமைக்கு என் நன்றி;


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

மயில்கள் எனக்கு தோகையில்

சைகை சொன்னதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

காற்று என் கன்னம் வருடாமல்

அறைந்துவிட்டு சென்றதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

சாலை செல்லும் வாகனங்கள்

சடுதியில் மறைந்ததோ..?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

குருவிகளும் காக்கைளும் தங்கள்

கூடுவந்து சேர்ந்தனவோ...?!


நீ "வருவாய்" எனத் தெரிந்துதான்

என் விவசாயியின் உதடுகள்

புன்னகை பூக்களை சிந்துகிறதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்
மரங்களெல்லாம் மகிழ்ந்து

மலர்களை உதிர்க்கிறதோ...?!

...என்ன இருந்தாலும்.. ...எப்படி இருந்தாலும்.. ...எதுவாக இருந்தாலும்..
உனக்காக நான்
இயற்கையை
நான்
வன்மையாக கண்டிக்கிறேன்.



ஏனெனில்.. நீ
அழுதுதானே நாங்கள்
மகிழ வேண்டி இருந்தது,
மகிழ வேண்டி இருக்கிறது,

மகிழ வேண்டி இருக்கும்.

முக்காலும் உன்னை அழவைத்தானே

அவனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
எனினும் நீ வந்தமைக்கு நன்றிகள் கோடி..!!

4 comments:

மயாதி said...

mmmm..

Ungalranga said...

mmmmmmm...

என் கீபொர்டுலயும் M key இருக்குங்கோவ்வ்வ்!!

நாணல் said...

சிலரோட அழுகையில தான் பலரோட சிரிப்பு அட்ங்கி இருக்கு.. என்ன செய்ய?

கவி அழகன் said...

அடடே!! வந்துவிட்டாயா
வந்தமைக்கு என் நன்றி;

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.