Tuesday, November 3, 2009

நீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா? -Are u a good Friend?

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!

உங்கள் நட்பை பலமாக்க சில டிப்ஸ் இதோ...


http://s165.photobucket.com/albums/u73/cyarena/comments/friend-is/images/friendIs952.jpg


1.உங்கள் நண்பருக்கு என்ன கொடுக்க முடியும் என்று பாருங்கள், என்ன பெறலாம் என்பதை விடுங்கள்.
“உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது”

2. ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

“நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாக, துடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

3.மன்னிக்க பழகுங்கள்..!!

”சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்ன? மன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.”
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

4. தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

”சிலர் இருக்கிறார்கள், இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் மன்னிப்பதுபோல் மன்னித்துவிட்டு,குத்திகாட்டுவார்கள்.
அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஆதிக்க மனப்பான்மையின்
வெளிப்பாடு குத்திகாட்டுதல். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில், இந்த வகையில்
சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொன்னால்..
ஆஹா..அதுதான் உங்கள் நட்பை மிகவும் உயர்த்தும்.”

5.சொன்னதை செய்யுங்கள்..!!

“நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு ”டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.”

6. நட்புக்கேது கட்டுபாடு..!!

”உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.”

7. நல்லதுக்கும், கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

“நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும், என்கிற பழமொழி
இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை
அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும்.
இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

8. அவர் அவராகவே இருக்கட்டும்..!!

“நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை
செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது.
அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி.
என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

9. ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

“நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதா? முடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது
பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு
நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம்
மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

10. பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி
என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர்
சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை.
எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சா? இனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்கோங்க..!!

விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!

17 comments:

pudugaithendral said...

நல்ல நண்பனா இருக்க சொல்லிக்கொடுத்திருக்கும் நண்பருக்கு நன்றி

Ungalranga said...

@புதுகைத் தென்றல்,

எனக்கு சொல்லிகுடுத்ததை தான் நான் இங்கே சொல்லி இருக்கேன்..!!

நன்றி மா..உங்கள் வருகைக்கு!!

Iyappan Krishnan said...

நல்லா இருக்குங்கண்ணே!!

Ungalranga said...

@jeeves,

ங்ணா...நன்றிங்கண்ணா..!!

வால்பையன் said...

நல்ல நண்பனாக இருக்க இன்னோரு தகுதி, இருவரும் செத்து செத்து விளையாடுவது!

சும்மா சொன்னேன் தல!

பதிவு நல்லாயிருக்கு!

Ungalranga said...

@வால்பையன்,

வாங்களேன்..நீங்களும் நானும் விளையாடுவோம்..!!

நீ முதல்ல குதிச்சு..அடுத்து நான் ஒரு டீ சாப்டு வந்து குதிப்பேனாம்.சரியா..??

ஹாஹாஹா!!
நன்றி வால்ஸ்!!

S.A. நவாஸுதீன் said...

நல்ல பதுவு நண்பரே

கலையரசன் said...

இன்று முதல் நீ என் நண்பன்...
இதையெல்லாம் நீ எனக்கு செய்யனும்.. என்ன?

Ungalranga said...

//S.A. நவாஸுதீன் said...

நல்ல பதுவு நண்பரே//

ஆமாங்கோவ்.. அப்படிதான்கோ நீங்க சொல்றீங்க..!!

Ungalranga said...

//கலையரசன் said...

இன்று முதல் நீ என் நண்பன்...
இதையெல்லாம் நீ எனக்கு செய்யனும்.. என்ன?//

எதையெல்லாம்?

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு ரங்கன்!

*இயற்கை ராஜி* said...

நல்ல பதிவு

Ungalranga said...

@ராமலக்ஷ்மி,

நன்றி ராமலக்ஷ்மி..!!

Ungalranga said...

@இயற்கை,

நன்றி இயற்கை!

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

நல்ல நண்பனுக்கு அழகு இடுகையில் சொன்னது அத்தனையும்

கடைப்பிடிக்கப் பழக வேண்டும் - பழகு நீயும்

நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

நல்லது.
பதிவு அருமை.

Anonymous said...

அட ரங்கா எப்படி இதெல்லாம்..உண்மையாகவே நெகிழ்வா இருந்தது பதில்கல்..ஆம் உண்மையான நட்புக்கு இவை அடையாளங்களே....

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.