Monday, August 9, 2010

ஹைக்கூ என்கிற பேரில்!!

பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!

ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.

வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!

வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!

கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?

இலவசம் : 
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!

12 comments:

Mohamed Faaique said...

superb....

Cable சங்கர் said...

ரைட்டு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அத்தனையும் அருமை...

மழலைகளின் புன்னகைக்கு... ஈடில்லை

Ungalranga said...

@Mohamad Faaique,

நன்றி நண்பரே!!

Ungalranga said...

@Cable Shankar,

வெல்கம் ஷங்கர் ஸார்..!!

க.பார்த்திபன் said...

இன்றைய கணவர்களின் நிலை பரிதாபமாகத்தான்
இருக்கின்றது.

புன்னகை இலவசம் சொல்றீங்க பார்த்து அரசியல்வாதிங்க எடுத்துக்கிறப்போறாங்க!!!!

கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்.

க.பார்த்திபன்
சிங்கப்பூர்.

Ungalranga said...

@வெரும்பய,

உண்மை பாஸ்!! மழலைகள் சிரிப்பிற்கு விலையேது..!!

நன்றி தங்கள் வருகைக்கு!!

Ungalranga said...

@க.பார்த்திபன்,

ஒத்துகிட்டீங்க தைரியமா..!! இந்த ”தில்”லை பாராட்டுறேன்..!!

அரசியல்வாதிகள் எடுத்துகொள்ளாதது அது ஒன்றுதான்..!!

:)

வருகைக்கு நன்றி பார்த்திபன் சார்!!

நாமக்கல் சிபி said...

கவித..கவித..!!

'பரிவை' சே.குமார் said...

அத்தனையும் அருமை...

cheena (சீனா) said...

நல்லாருக்கு ரங்கா

பிச்சைக் காரன் - கணவன் - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா - அனைத்து குறுங்கவிதைகளும் அருமை - பங்கு, ஆத்திரம், வன்முறை, வலை, கவித கவித, இலவசம் - அத்தனை தலைப்புகளும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.