Sunday, August 22, 2010

கல்யாணமும்,காதலும்,கசப்புகளும்!!


என்ன பாஸ் இது? என்ன இதெல்லாம்? இப்படி ஒரு பொழப்பு தேவையா நமக்கு?
நல்லா இருந்த பையனையும் பொண்ணையும் புடிச்சு கட்டிவெச்சிட்டு..இப்போ அதுங்க போடுற
ஆட்டம் தாங்கலைன்னு புலம்புறதும், அதுங்களை மாதிரி நாங்க ஒன்னும் சண்டை போட்டுக்கலைன்னு
பெருமை பேசிக்கிறதும்..ஏன் ஏன் இந்த வேலை..

..அந்த புள்ள பாட்டுக்கு படிச்சமா வேலைக்கு போனமா, ஒரு நல்ல பையனை லவ் பண்ணினமா,
வாழ்க்கைய சிறப்பா ஆரம்பிச்சமான்னு இருந்திருக்கும்..அத போய் எவனோ ஒரு குடிகாரனுக்கு கட்டிவெச்சி,
அது வாழ்க்கையை வீணடிச்சிட்டீங்க.. இப்போ அந்த நாதாரிய திருத்த அந்த புள்ள எவ்ளோ போராடிகிட்டிருக்கு.
அது மனசுல எவ்ளோ பொறுமும் , வேதனைப்படும்னு யாராச்சும் யோசிச்சீங்களா?
அந்த நாய்க்கு குடிப்பழக்கம் விட்டுபோகணும்னா மறுவாழ்வு மையத்துல சேர்க்க வேண்டியதுதானே..அதை விட்டுட்டு
இப்படியா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிப்பீங்க..த்தூ..

இது கூட பரவால்ல..இந்தா..இந்த பையன பாருங்க..நல்லவன், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை, நல்ல நண்பர்கள்னு
எல்லாம் நல்லதாய் அமைஞ்ச ஒரு மனுஷன். இவனுக்கு ஒரு பொஞ்சாதி. யப்பா.. சும்மா சொல்லக்கூடாது...அடங்காபிடாரி,
இவனுக்கு என்ன கேடுகாலமோ..இப்படி ஒரு பொண்ணை கட்டிகணும்னு தலையெழுத்து. பாவம் நொடிஞ்சி போய்ட்டான்.
எப்ப பாரு, அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தினமும் சண்டை. சம்பளத்துக்கு மீறி வாழ்க்கை நடத்தகூடாதுன்னு நினைச்சவனுக்கு,
கிம்பளம் வாங்கிகூட திருப்திபடுத்த முடியல இந்த மகராணிய. இவனோட அப்பா அம்மா மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இதுங்களுக்கு
பொண்ணு பார்க்க தெரியுமா தெரியாதா? இல்லை..அழகா இருக்காங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வெச்சிடுசுங்களா?! .. பாவம் இந்த பையன்,
இன்னைக்கு இவளால இவன் கடன்காரன், குடும்ப விரோதி, திருடன்னு பட்டம் வாங்கி குவிச்சதுதான் மிச்சம்..
...

ஸோ..மக்களே..மகாஜனங்களே!! எப்பவும் நம்ம அப்பா அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்கனு நினைச்சு..நீங்க கண்ணமூடிகிட்டு சம்மதிச்சா,
98% நீங்க அதலபாதாளத்துல குதிக்கறீங்கன்னுதான் அர்த்தம்..அது மட்டும் இல்லாம, அடுத்து வர 80 வருஷமும் உங்களுக்கு ஆயுள் தண்டனையாகவும்
போகலாம். ஸோ.. ப்ளீஸ்..யோசிங்க.. அந்த பொண்ணுகூடவோ, பையன்கூடவோ பழகி பாருங்க. உங்க குணத்துக்கு சரிவரும்னு முடிவு பண்ணிட்டு அப்புறம்
சம்மதிங்க. அழகுல மயங்கி விழுகுற வேலையே வேணாம். அது பசுத்தோல் போர்த்திய முதலை. ஸோ..ப்ளீஸ்..யோசிங்க. பழகிப்பாருங்க. முடிவுப்பண்ணுங்க.

டிஸ்கி : 
வாழ்ந்து முடிச்சவுங்களுக்காக, வாழப்போறவங்க வாழ்க்கையை தொலைக்கணும்னு எந்த தர்மமும் சொல்லலை!! அது போன்ற அதர்மமும் இல்லை!!

4 comments:

pudugaithendral said...

??????

vinu said...

வாழ்ந்து முடிச்சவுங்களுக்காக, வாழப்போறவங்க வாழ்க்கையை தொலைக்கணும்னு எந்த தர்மமும் சொல்லலை!! அது போன்ற அதர்மமும் இல்லை

நாமக்கல் சிபி said...

I UNDERSTOOD MAPPI. UN AMMAGITTE IDHUPATHI PESUREN!

karthickeyan said...

எனக்கேவா.....

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.