Wednesday, March 30, 2011

என் உயிரினும் மேலான..femaleக்கு..



நீ தயவுசெய்து சிரிக்காதே..
பொறாமையில் பூப்பதில்லையாம்..
சொர்க்கத்தில் பூக்கள்..

நீ தயவுசெய்து முறைக்காதே..
என்னை விட சூடா என்று
சுருங்கிப்போகிறான் சூரியன்..

நீ தயவுசெய்து அழாதே..
என்னைவிட அதிகம் தண்ணீர்..
நடுங்கிப்போகிறது நயாகரா..

நீ தயவுசெய்து நடக்காதே..
உன் பாதத்தின் மென்மையில்
உருகிவிடுகின்றன சாலைகள்..

நீ எதையும் தொடாதே..
தொட்டதெல்லாம் தங்கமானால்
தங்கத்திற்கும் ஏது மதிப்பு..??

நீ பேசவே செய்யாதே...
வரும் வார்த்தைகளை எல்லாம்
பொருக்கிகொண்டு ஓடுகிறது காற்று..

நீ எதையும் பார்க்காதே..
பார்ப்பதெல்லாம் பாசம்கொண்டு
பின்னால் வருகிறது உன்னோடு..

நீ பிறக்கத்தான் நான் பிறந்தேனாம்..
நாம் சேரத்தான் பூமி வந்ததாம்..
நாம்தானாம்

அந்த ஆசை  ஆதாமும்..
அழகி ஏவாளும்..
....
...
..
.

5 comments:

நிலாமதி said...

அந்த ஆசை ஆதாமும்..
அழகி ஏவாளும்..
...

.நல்லாய் இருக்குங்க. உருவகம். பாராட்டுக்கள்.

Anonymous said...

பயபுள்ள விளங்குது.. நடக்கட்டும் நடக்கட்டும்.,,எப்படியே எங்களுக்கு ஒரு ட்ரீட் மாதிரி கவிதை..

Ungalranga said...

@ நிலாமதி,

பாராட்டுக்கு நன்றிம்மா..!!

Ungalranga said...

@ தமிழரசி,

ம்மா.. எனக்கு ட்ரீட் வைக்க ரொம்ப பிடிக்கும்..

cheena (சீனா) said...

ரங்கா - தேறிட்டெ போல - காதல் கவிதைகள் - கலக்குறியே - ஆமா மென்மையான பாதங்கள் பட்டால் சாலைகள் உருகுமா ? பொருட்குற்றம் .....ஆமா இயறகைக்கு எதிரானவளா உன் காதலி - ம்ம்ம்ம்ம்ம் - நடத்து ராசா - நடத்து - வாழ்க வாளமுடன் - நல்வாழ்த்துகள் - சீக்கிரமே சுப விவாக ப்ராப்தி ரஸ்து ..... நட்புடன் சீனா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.