Saturday, October 24, 2009

மீண்டும் சில காதல் கவிதைகள்!!

காதல் சொன்னபோது
தந்த ரோஜா
இறந்துவிட்டது அவள்
தூக்கி எறிந்தபோது..
கொல்லப்பட்டது அவைகள்
ஏறி சென்றபோது..

***************************

இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை
நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை
தூரங்கள் அதிகப்பட மனமில்லை

இருந்தாலும் வேறு வழியில்லை..
விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!!

******************************


செல்லாதே என்னை விட்டு
சில தூரம் போனாலும்
தொடர முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில அடிகள் கடந்தாலும்
பிரிய முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில மணித்துளிகள் நடந்தாலும்
மறக்க முடியவில்லை உன்னை..

இப்படி எல்லாம் புலம்புகிறேன்..
நீ விடிகாலையில் கட்டில் விட்டு
கடந்து போன போது..!!

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

காதல் கவிதைகள் எழுதுகிறாய் என்றால் காதல் வசப்படுகிறாய் எனப் பொருள்

கவிதைகள் நல்லாவே இருக்கு

விடிகாலையில் கட்டில் விட்டுக் கடந்து போவது காதலில் வேண்டாம் - கல்யாணத்துக்கு அப்புறம் வச்சிக்கலாமே

கப்படிக்குது - போய்ப் பல்ல வெளக்குடா - கனவு கண்டது போதும்

ரோஜா செத்துப்போச்சா - ம்ம்ம்ம் - பாவம்டா

மங்களூர் சிவா said...

/
இப்படி எல்லாம் புலம்புகிறேன்..
நீ விடிகாலையில் கட்டில் விட்டு
கடந்து போன போது..!!
/

யார் மச்சி அது உங்கவூட்டுக்காரம்மா வேற ஊருக்கு போயிருக்க நேரம்
ம் நடத்து
:)))))))))

ஊடகன் said...

உங்கள் நடை அருமையாக இருந்தது........

நன்று தொடருங்கள்...........

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.